Pages

Friday, February 28, 2014

முருங்கையின் மருத்துவ பயன்கள்

மூலிகைத் தாவரங்களில் ஒன்று முருங்கை 'டிரம்ஸ் டிக்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கைக்காயின் அறிவியல் பெயர் மொரிங்கா ஆலிபெரா. முருங்கையின் கீரையும், காயும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பூக்களும் ஆரோக்கியம் தரும். இதிலுள்ள சத்துக்களை இந்த வாரம் அறிந்து கொள்ளலாம்...

முருங்கை

* உலர்த்தப்பட்டு, பவுடராக தயாரிக்கப்பட்ட கீரையில் நிறைய அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன.

* முருங்கைக் காய் மற்றும் விதைகள் ஆலிக் அமிலம் நிறைந்தது. ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புச்சத்து இதிலுள்ளது.

* முருங்கை விதைகள் எண்ணைச்சத்து மிக்கது. உயிரμ உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது.

* பசுமையான முருங்கை கீரையில் 'வைட்டமின் ஏ', நிறைய அளவில் உள்ளது. 100 கிராம் கீரையில் டி.ஆர்.எல். முருங்கை 52 சதவீதம் உள்ளது. அதாவது உடலுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய வைட்டமின் தேவையைவிட 2 1/2 மடங்கு அதிகமாகவே கிடைக்கச் செய்கிறது கீரை.

* மேலும் 'வைட்டமின் ஏ', ஆனது கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. சிறந்த நோய் எதிர்ப் பொருளாகவும் செயல்படும். பார்வைத்திறன், சருமப்பொலிவு ஆகிய வற்றிற்கும் உதவுகிறது.

* முருங்கைக் காய்களில் அதிக அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. 100 கிராம் பூவில் 235 சதவீதம் டி.ஆர்.எல். அளவில் 'வைட்ட மின் சி' உள்ளது. இது உடலுக்கு நோய் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை வழங்குகிறது. பிரீ-ரேடிக்கல் உடலில் சேராமலும் தடுக்கிறது.

* பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான வைட்டமின் பி-6, தயமின், ரிபோ பிளேவின், பான்டோதெனிக் அமிலம், நியாசின் போன்றவை உள்ளன. இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு இவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு துணைக் காரணியாக உதவுகிறது.

* கால்சியம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், மக்னீ சியம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும், கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவும்.

* முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.

தூக்கமின்மையில் இந்தியர்கள்

தூக்கமின்மைஇந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.

இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.

பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.

58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான  பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.

ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும்  தூங்க வேண்டும்.  8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

முள்ளங்கிபச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.

மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது. முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.

குளிர்கால நோய்களை தடுக்கும் வழிமுறைகள்



குளிர்கால நோய்
குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும் என்கிறார் அமிர்தாஞ்சன் கேர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரேம் ஆனந்த்.  

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.  

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  

குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும். வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும்.  

இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.  

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை' கட்டி வைக்க வேண்டும்.  

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.  

நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.  

அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.  

தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.  

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம்.  

பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைசாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம்.  

இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊற விட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.  

குளிர்கால நோய்தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.  

உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.  

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:-  

வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.  

குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம். இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும்.  

சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.  

சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தைகளின் அழுகை
குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’

பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை   தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு   ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’

சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில்   டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

'அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’

பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.

Thursday, February 27, 2014

மார்பகத்தில் கட்டி இருக்கிறதா என நீங்களே பரிசோதிக்கலாம்

மார்பகத்தில் கட்டி
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே அது கேன்சர் தான் என்பது போல், பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விடுவது தான் காரணம். ஆனால், எவ்வளவு அறிவுறுத்தினாலும், மார்பகத்தில் திண்ணமாக இருப்பது, தானாகவே சரியாகி விடும் என்றும், பல பெண்கள் கருதுகின்றனர். அறியாமை, பயம் ஆகிய காரணங்களால், தகுந்த மருத்துவரிடம் காண்பிக்க, பெண்கள் தயங்குகின்றனர்.

மார்பகப் புற்றுநோய், இந்திய பெண்களிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில், ஒரு லட்சம் பெண்களில் 8 பேருக்கும், நகர்புறங்களில் 27 பேருக்கும், மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புள்ளி விவரம் தவறாகவும் இருக்கக் கூடும். எனினும், கட்டி தென்படும்போது, அதை மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கம், கிராம பெண்களிடையே மிகவும் குறைவு.

ஒரு சென்டி மீட்டர் விட்ட கட்டி இருந்தாலே, கைகளுக்கு தென்படும். மார்பக சதையில் மாற்றம் தென்படும் போது, இதை உணரலாம். மற்ற சதைகளை விட, இது உறுதியாகவும், கடினமாகவும் காணப்படும். வலி இருக்கும். பின்னாளில், அந்த கட்டி மீது உள்ள தோல் நிறமிழக்கும்; தடிமனாகும். காம்பு உள்ளிழுக்கப்படும். காம்பிலிருந்து நீரோ, ரத்தமோ கசியும்.

மார்பகத்தில் கட்டி தோன்றினால், உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. எந்த கட்டியுமே கேன்சர் தான் என கருதக் கூடாது. மாதவிடாய் காலங்களில், சிலருக்கு மார்பில் கட்டி தோன்றலாம். மாதவிடாய் துவங்கும் முன் பெரிதாக தோன்றும்; மாதவிடாய் நின்றதும் காணாமல் போகும். எனினும், எந்த கட்டியையும் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வரும்; எந்த வயதிலும் வரும். "வயதானவர்களின் நோய் இது' என்று கருதி, அலட்சியப்படுத்த வேண்டாம்.

மார்பில் கட்டி இருந்தால், "அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' செய்து, எந்த வகையான கட்டி என டாக்டர்கள் கண்டறிவர். எந்த இடத்தில் கட்டியுள்ளது என்பதை, இந்த "ஸ்கேனர்' கண்டுபிடிக்கும். மெல்லிய ஊசியின் மூலம் கட்டியிலுள்ள செல்கள் மற்றும் திரவங்கள் எடுக்கப்பட்டு, "பயாப்சி' பரிசோதனை செய்யப்படும். கேன்சர் நோய் இருந்தால், தெரிந்து விடும். சாதாரண கட்டியாக இருந்தாலும், இப்பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிலருக்கு இது, வெறும் நீர் கட்டியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால், மெல்லிய ஊசி மூலம், அந்த திரவத்தை வெளியில் எடுத்ததும், கட்டி காணாமல் போய்விடும்.

கட்டி, திண்ணமாக இருந்தால், "மேமோகிராம்' செய்ய வேண்டும்.

சிலருக்கு மட்டும் மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பரம்பரை காரணங்கள், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவை:

* பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே பருவம் எய்தி, 50 வயதுக்கும் மேலாக மாதவிடாய் ஏற்படுவது.

* ரத்த சம்பந்த உறவினர்களில் யாருக்காவது, மார்பகம் அல்லது கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது. இந்த வகையில், பி.ஆர்.ஏ.சி., 1, 2 மற்றும் 3 ஆகிய மரபணுக்கள் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன என்று, கண்டறியப்பட்டுள்ளது.

* கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவது.

* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது அல்லது, மெனோபாஸ் பிரச்னைக் காக, "ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்' சிகிச்சையை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து கொள்வது.

* அதிக வயதுக்கு பின் மகப்பேறு அடைவது, அதை தொடர்ந்து ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்காமை.

* அதிக உடல் பருமன்.

* மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக டீ, காபி, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, புகை பிடிப்பது.

சுய பரிசோதனை மூலம், துவக்கநிலை மார்பகப் புற்றுநோயை கண்டறியலாம். இந்த பரிசோதனை மிக எளிதானது. இந்த பரிசோதனையில், ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஒரே நாளில் இந்த பரிசோதனை மேற்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும், குழப்பங்களை தவிர்க்கலாம்.

நிலை 1: கண்ணாடி முன் நின்று, கைகளை இடுப்பில் வைத்து கொண்டு, மார்பகங்களை உற்று நோக்குங்கள். மார்பகத்தின் அளவு, தோற்றம், நிறம் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். மார்பகத்தில் குழி விழுதல், தோல் திடீரென சுருங்குதல், தோலில் திடீர் தடிமன் ஏற்படுதல், சிவப்பாகி போதல், உலர்ந்து போதல், வீக்கம், காயம் ஏற்பட்டது போன்ற தழும்பு, காம்பு இடம் பெயர்தல் ஆகியவற்றை கண்காணிப்பது.

நிலை 2: கைகளை மேலே உயர்த்தி, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணித்தல்.

நிலை 3: காம்பை அழுத்தி பார்த்து, அதில் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

நிலை 4: இடதுபுறமாக படுத்து, வலது கையால், இடது மார்பகத்தின் அனைத்து பகுதியையும் மெலிதாக அழுத்தி, கட்டி ஏதும் தென்படுகிறதா, வலி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதேபோல், வலது பக்கமாக படுத்து, இடது கையால், வலது மார்பகத்தை பரிசோதித்தல்.

நிலை 5: நிலை 4ல் குறிப்பிடப்பட்ட பரிசோதனையை, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செய்து பார்த்தல்.

இந்த பரிசோதனைகளை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும்.

நாற்பத்தைந்து வயதானதுமே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, "மேமோகிராம்' செய்வது அவசியம். சிறிய கட்டிக்கு கூட, தகுந்த மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கேன்சர் வராமல் பாதுகாக்க முடியும்.

துவக்க நிலை கேன்சரை சிகிச்சை மூலம், சரி செய்து விடலாம். முற்றிலும் குணமடைந்து, நீண்ட நாள் உயிர் வாழலாம்.

நொறுக்குத் தீனிக்கு பதில் பழத்துண்டுகள்


* நன்கு பழுத்த பழங்களில் மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் உள்ளன.

* தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.

* பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ண வேண்டும்.

* நீரிழிவு நோய் இருந்தால் அதிகம் மாவுச் சத்துள்ள வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.

* அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல என்ஸைம்கள் உள்ளன. தினமும் 400 கிராம் பழத்தை மூன்று நான்கு முறையாக சாப்பிடலாம்.

* அளவுக்கு அதிகமான உடல் பருமனை குறைக்க விரும்புவோர் வாரம் 2 நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

Monday, February 24, 2014

வெப்பம் தணிக்கும் வெண்டை

வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.

கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. 

மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.

இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். 

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. 

முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. 

முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். 

பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். 

சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். 

பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். 

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்.

Friday, February 21, 2014

"சம்மரை' சமாளிப்பது எப்படி? - சில டிப்ஸ்

ஒவ்வொரு ஆண்டும், வெயில் 41 டிகிரி செல்ஷியஸ் அடிக்கும்போது, நம்மால் தாங்க முடிவதில்லை. வெயில் தாக்கத்தை தாங்கி கொள்ள, மின்விசிறி, ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவற்றின் உதவியை நாடுகிறோம். ஆனால், இவற்றை இயக்க மின்சாரம் தேவை. அது இல்லாமல் போகும்போது, எந்த கருவியும் நமக்கு பயன் தராது.

நம் உடல் இயங்க, 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹீட் சூடு தேவை. நம் சருமத்திலுள்ள 40 லட்சம் வியர்வைத் துளைகளுடன், சீரான ரத்த ஓட்டத்துடன் நம் உடல் இயங்குகிறது. சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரித்தால், நம் உடல் சூடாகிறது. இதனால், உடலில் ரத்தத்தின் திரவத்தன்மை அதிகரித்து, வெளிசூட்டுடன் உடல் வெப்பம் சமன் செய்யப்படுகிறது. வெளிச்சூடு அதிகமானால், உடலின் இந்த மாற்று ஏற்பாடு, வேலை செய்யாமல் போகும்.
பருத்தி ஆடை தவிர்த்து மற்றவை அணியும்போது, உடல் சூடு வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால் அதிகம் வியர்க்கிறது. வியர்வை ஆவியாகும்போது, உடல் சூடு தணிகிறது. இயற்கையாவே நம் உடலில் அமைந்துள்ள ஏர் கண்டிஷனர் இது. அதிக வெப்ப நாட்களில், இந்த மாற்று ஏற்பாடு சரியாக வேலை செய்யவில்லையெனில், பிரச்னை ஏற்படும். காற்றிலுள்ள ஈரப்பதம், உடலின், "ஏர் கண்டிஷனர்' வேலை செய்யாமல் தடுக்கும். அடிக்கடி நீர் குடித்தால், வியர்வை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படாது.

காற்றூட்டப்பட்ட பானங்கள், ஆல்கஹால், டீ, காபி பருகினால், உடல் சூடு குறையும் என்று கணக்கிடக் கூடாது. இளநீர், சிறிதளவு உப்பு சேர்த்த நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை குடித்தால், வியர்வை வெளியேறுவது சீராக இருக்கும்.

நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கும் வியர்வை அதிகம் வெளியேறாது. இந்த இருபிரிவினரும், அதிக வெப்பத்தால் எளிதில் பாதிப்படைவர். தசை அதிகமுள்ள கால்பகுதி முதலில் பாதிக்கப்படும். கவனிக்காமல் விட்டால், அதிக உடல் சோர்வு, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் ஏற்படும்.

உடல் சூடு 40 டிகிரி செல்ஷியசுக்கு அதிகரித்தால், கடும் விளைவுகள் ஏற்படும். தோலில் சூடு ஏறி, வறண்டு விடும். இதனால் மூளை பாதிப்பு, குழப்பம், கோமா ஆகியவை ஏற்பட்டு, சிலருக்கு மரணம் சம்பவிக்கலாம்.

உடல் சூடு அதிகமாகி விட்டால்

* இருட்டான, "ஜில்' அறையில் அவர்களை அமர வைக்க வேண்டும்.
* அவர்களின் கடின ஆடைகளை களைந்து, மெல்லிய பருத்தி ஆடை அணிவிக்க வேண்டும்.
* மின் விசிறி, "ஏசி' யையும், அவர்கள் மீது நன்கு காற்றுபடும்படி இயக்கலாம்.
* அடர்த்தியான துணியை தண்ணீரில் நனைத்து, அவர்களை துடைத்து விட வேண்டும்.
* ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் உப்பு கலந்து அவர்கள் குடிக்க கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கையாண்டால், அவர்கள் உயிரை காப்பாற்றலாம். வெயிலில் உடலில் அரிப்பும், அதை சொறியும்போது சிவப்புக் கோடுகளும் ஏற்பட்டு, உடல் முழுதும் பாவற்காயாகி விடும். வியர்வை நாளங்களில், அழுக்கு அடையும்போது, அரிப்பு ஏற்படுகிறது. "டிவி'க்களில், அரிப்பை தவிர்க்க, "கூல்' டால்கம் பவுடர் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த பவுடரை பூசிக் கொண்டால், நீங்கள் இமயமலையிலிருப்பது போல் உணர்வீர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவை விற்பனையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் யுக்தியே தவிர, உண்மையில், உங்கள் உடலுக்கு இந்த பவுடர்கள் கேடு விளைவிப்பவை.

சிங்க் ஸ்டிரேட் மற்றும் சிலிகேட் பவுடர்களை கொண்டு, தயாரிக்கப்படும் இந்த வகை டால்கம் பவுடர்கள், உங்கள் உடல் அரிப்பை இன்னும் அதிகரித்து விடும். இந்த பவுடர்கள் உடல் வியர்வையுடன் சேரும்போது, வெள்ளை நிறத்தில் நீர் வழிந்து, உங்கள் வியர்வை நாளங்கள் மேலும் அடைத்து போகும்.
தொடை மற்றும் பிறப்பு உறுப்புகளில் இந்த பவுடர்களை போட்டால், அவை கருப்பை பாதை, கருப்பை, பெலோப்பியன் குழாய் வழியே, சினைப்பையை அடைந்து விடும். அங்கு புற்றுநோயை உருவாக்கும்.

மிக நுண்ணிய பவுடராக தயாரிக்கப்படும் இவை, காற்றில் பறந்து நம் மூக்கில் நுழைந்து, நுரையீரலின் மிக நுண்ணிய பகுதியை அடைகின்றன. இதனால் நிமோனியா, நுரையீரல் வீக்கம், காற்று பாதை வீக்கம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. மிகச் சிறிய குழந்தைகளுக்கு, இதுவே நச்சாக அமைந்து, குழந்தையின் உயிரையே பறிக்கும். 

உடல் சூடு, அரிப்பை தவிர்க்க மிகச் சிறந்த வழி, தினமும் இரண்டு முறை குளிப்பது தான். சோப்பை உடலில் நேரடியாக தேய்க்காமல், உடல் தேய்ப்பானில் தோய்த்துத் தேய்த்து கொள்வது நலம்.

தெருவோரங்களில் விற்கப்படும், துண்டாக்கப்பட்ட தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் மற்ற ஜூஸ் வகைகள், சுகாதாரமற்றவையாக உள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீர், ஐஸ் கட்டிகள் சுத்தமானவையாக இருப்பதில்லை; பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...

* டைபாய்டு நோய் தடுப்பு ஊசி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* "ஹெப்பாடைட்டிஸ் ஏ' நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு ஊசிகள் என இரண்டு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* காலராவை தவிர்க்க, வாய்வழி மருந்துகள் வந்துவிட்டன.

வெளியில் எங்கு சென்றாலும், வீட்டிலிருந்து குடிநீர் எடுத்து செல்வதே நல்லது. காற்றூட்டப்பட்ட பானங்கள், பார்க்க கவர்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை அனைத்திலும் காபின் பொருளோ, ரசாயனமோ அதிகம் கலக்கப்பட்டிருக்கும். தாகத்தை தணிப்பதற்காக நீங்கள் இதை குடித்தாலும், உண்மையில் இவை, உங்கள் தாகத்தை அதிகரிக்க செய்யும்.

வெயில் நேரங்களில், வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெளியில் செல்ல தீர்மானித்தால், "சன்ஸ்கிரீன் லோஷன்' போட்டு கொள்ளலாம். 

குடை எடுத்து செல்வதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

டை அடிப்பது எப்படி?

முதலில் தலை முடியைச் சுத்தமாக நன்றாக அலச வேண்டும். ஷாம்பூ போட்டு தலையை அலசினால், முடியிலிருக்கும் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் போய்விடும். முடி நன்கு காய்ந்த பின், சீப்பு மற்றும் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, டை அடிக்க வேண்டும்.

டை அடித்தபின், குறைந்தது இருபது நிமிடம் தலையைக் காய விட வேண்டும். தலை, விரைவாக காய வேண்டும் என்பதற்காக, டிரையர் போடக் கூடாது. மின் விசிறி மூலம் காய விடுங்கள்.

தலை முடியை கண்டிஷனர் ஷாம்பூ மூலம் அலச வேண்டும். அலசும் பொது, டையின் பிசிறுகள் போய் விடும். ஷாம்பூக்குப் பதிலாக சோப்பை பயன்படுத்தி தலையை அலசக் கூடாது.

நரை பரவுவதைத் தடுக்க...

நெல்லிக்காய் மற்றும் சீயக்காயை காய வைத்து, போடி செய்து, தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், நாளாக நாளாக நரை பரவுவது நீங்கும்.

Thursday, February 20, 2014

Aloo Dum

Ingredients    

    Potato small and round- 1/2 kg.
    Dhara Oil - for frying
    Salt - to taste
    Onion Paste - 125 gms.
    Ginger Paste - 30 gms.
    Curd - 50 gms.
    Red Chilli Powder - 1 1/2 tsp.
    Clove - 6 Nos.
    Cinnamon - 2 sticks
    Cardamom - 5 Nos.
    Cummin Seed - 1 tsp.
    Turmeric Powder - 1 1/2 tsp.
    Garam Masala Powder - 1/2 tsp
    Sugar - 1/2 tsp.
    Lemon Juice - 1 lemon
    Green Chilli - 5 Nos.
    Fresh Coriander Leaves - 25 gms.

   
Method of cooking    

Peel the small and round potatoes and keep in salty water for 1/2 hour. Fry in oil till golden brown and firm. Keep aside. 

Take oil in a handi and crackle the cloves, cinnamon and cardamom. Add the onion paste. 

Stir for about 5-6 minutes till oil comes to the sides. Add the ginger paste and stir for another 2 minutes. 

Add red chilli powder and turmeric powder. Bhunno, simmer. Broil cummin seeds in a dry pan and grind them to a powder. 

Add sugar and broiled cummin powder and stir for 2 minutes. Beat the curd and add to the handi. Lower the temperature and immerse the fried potatoes for simmering. 

Cook till potatoes are tender by covering the top of the handi. Do not let the steam escape. Add garam masala powder and close the lid. Take off the fire.

Method of Serving    

Serve hot garnished with slit green chillies and chopped coriander leaves.

Wednesday, February 19, 2014

மணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும்

மணமகள் அலங்காரம்

மணமகள் 'மேக்கப்' இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முகம் பளபளப்பாகவும் மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும் முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களைக் கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.

மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட, தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட வேண்டும். சிலருக்கோ முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்யும் விதமாக, ஹேர் ஸ்டைல் செய்வது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றைக் கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.

குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.

முடியைத் தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில், முகத்தின் முன்பகுதி அமைப்புக்கு ஏற்ப, மொத்த முடியையும், பின் நோக்கி இருப்பது போல், பின் பக்கமாக சீவுவதோ அல்லது நாடு வகிடு எடுத்து, இரண்டு புறமும் பின்புறமாக சீவி, முகத்தின் வடிவத்துக்கு ஏற்றார் போல் உயர்த்திக் காட்டலாம்.

நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு பின்புறமாக தலையை சீவ வேண்டும். இதில், நெற்றிச் சுட்டி வைக்க முடியாது.இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும்போது, முன் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்துப் பொருத்திக் கொள்ளலாம்.

மாலை, ரிசெப்சன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் போட்டு பின்னிவிட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முது, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

Tuesday, February 18, 2014

குழந்தைக்கு ஏன் நல்லது? - பாட்டி வைத்தியம்

*****காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

*****தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

*****நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

*****சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.

*****குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

*****குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

*****பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

*****குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

*****குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.

*****தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.

*****குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

Akki Roti

Akki Roti
Ingredients    

    Bell Pepper ‘Green capsicum’ 1 large
    Methi Leaves small bunch
    Dill small bunch
    Rice flour 1 1/2 cup
    Green chillies 1 ‘finely chopped’
    Coriander ‘finely chopped’
    Steamed rice - 2 tblsp
    Cumin seeds 1 tsp
    Salt to taste
    Water for mixing.

   
Method of cooking      

Grate bell pepper and add to the rice flour.

Add chopped dill and methi leaves.

Then add chillies, coriander, salt, jeera and mix well. The consistency of the mixture should be such that it can be patted on a girdle.

Then take a ball of mixture and pat it on a greased tawa in a circular pattern with your fingers.

Then pour some oil around and heat until the bottom of roti turns golden brown.

Turn and repeat the same.

Method of Serving    
Serve this hot with chutney or Yogurt.

Sunday, February 16, 2014

Bandhgobhi Ghughras

Bandhgobhi Ghughras
Ingredients    

For the dough

    250 Grams Whole-Meal Flour
    2 Tablespoons Ghee
    1/2 Teaspoon Salt

For the stuffing

    4 Teacups Finely Chopped Or Grated Cabbage
    2 Tablespoons Chopped Coriander
    2 Teaspoons Raisins
    2 Tablespoons Grated Fresh Coconut
    2 Teaspoons Lemon Juice
    2 Teaspoons Sugar
    Salt To Taste
    To Be Ground Into A Chilli-Ginger Paste
    4 Green Chillies, Chopped
    12 Mm. 1 inch Piece Ginger

Other ingredients

    Oil For Deep Frying

   
Method of cooking    
For the dough

Mix the flour, ghee and salt. add enough water to make a semi-stiff dough and knead well.
For the stuffing

Sprinkle salt on the grated cabbage and keep aside for 15 minutes. Then squeeze out the water by pressing with the hands.

Add the coriander, raisins, coconut and chilli-ginger paste and mix well. Check the taste. Add the lemon juice, sugar and salt if required.
How to proceed

Divide the dough into 25 balls and roll out into small rounds. Put the stuffing in the center of a round, gather the edges on the top and press well to close the round. Repeat with the remaining rounds.

Deep fry in oil.

Method of Serving    
Have hot with chutney.

Achari Mutton Recipe

Ingredients    

    1/2 Cup Coriander Leaves Chopped
    1/2 Tsp Fenugreek Seeds
    1 Tsp Fennel Seeds
    1/2 Tsp Cumin Seeds
    800 Gms Mutton
    1 Tsp Turmeric Powder
    8 Red Chillies Whole
    1 Tsp Red Chilli Powder
    4 Medium Tomatoes
    5 Cloves
    1 Tsp Onion Seeds
    7 Tblsp Mustard Oil
    2 Tblsp Ginger Chopped
    4 Medium Onions
    Salt To Taste
    1 Tblsp Garlic Chopped
    1 Tsp Mustard Seeds

   
Method of cooking    

Wash And Cut The Mutton Into 11/2'' Cubes.
Take Off And Cut The Onions.
Cut The Tomatoes.
Roast The Whole Spices Separately And Grind Everything Coarsely.
Heat Up Oil In A Thick-Bottomed Pot To Smoking Point, Cool And Again Heat Up The Oil And Stir Fry The Onions Till Brown.
Mix In The Cut Ginger-Garlic.
Mix Well.
Mix In Coarsely Ground Masala Powder.
Stir Fry For Half A Minute, Stirring All The Time.
Mix In Mutton, Stir Fry On High Flame Heat Up Till Mutton Pieces Are Well Browned.
Mix In The Tomatoes, Turmeric Powder, Red Chilli Powder And Salt And Mix Well.
Stir Fry Till Oil Leaves The Masala.
Mix In Sufficient Quantity Of Water ‘About 21/2 Cups’, Bring It To A Boil And Cover.
Stir Fry Till The Mutton Is Fully Done.
Adjust The Flavor And Serve Hot Decorated With Coriander Leaves.

Method of Serving    
Serve Hot.

  

Saturday, February 15, 2014

Aloo Ke Masaledar Lacche Recipe

Ingredients    

1/2 Tsp Red Chilli Powder
Oil For Frying
Salt To Taste
8 Big Size Potatoes
1/2 Tsp Cumin Powder
1/4 Tsp Dry Mango Powder
1/2 Tsp Chaat Masala

   
Method of cooking    

Take Off The Potatoes, Wash And Cut Into Fine Matchsticks Or Grate.
Soak In Cold Water For At Least 1 Hour, Changing The Water Twice.
Remove And Pat Dry On A Towel.
Heat Up The Oil In A Kadhai Over Moderate Heat.
Mix In A Handful Of Potato Matchsticks At A Time And Fry, Stirring Constantly To Keep Them Separate.
Remove When They Are Pale Golden And Spread On An Absorbent Paper To Take Off Excess Oil.
Mix Everything Salt, Red Chilli Power, Cumin Powder, Dry Mango Powder And Chaat Masala.
Sprinkle This Masala Mixture Over The Fried Potatoes While They Are Still Hot.
Serve Like That Or Cool And Store In An Airtight Container.
It Will Keep For A Week.

Method of Serving    
Serve Chilled.

Thursday, February 13, 2014

Potato Croquettes

Ingredients    

    1/2 Potatoes
    1 Onion
    1tsp Chilli Powder
    Left Over Rice
    Salt

   
Method of cooking    

Boil The Potatoes Mash Them Along With The Left Over Rice.
Chop The Onions Finely. Add Chilli Powder And Salt.
Make It Into Cylinderical Shape And Fry It In Oil.

Method of Serving    
Serve Hot With Tomato Sauce.

Important for your health…. Please go through…

v     Reduce volume of tea intake;

v     Do not eat bread which has JUST been toasted;

v     Stay a distance from your charger;

v     Drink more water in the morning, less at night;

v     Do not drink coffee twice a day;

v     Reduce your volume of oily food;

v     Best sleeping time is from 10 at night to 6 at the morning;

v     Do not have HUGE meals after 5pm;

v     Do not take alcohol more than a cup daily;   J J J ..

v     Do not take capsules with cold water;

v     Do not lie down immediately after taking medicine before sleeping;

v     Have 8 hours sleep. Lack of it will make a person stupid;

v     People who get used to napping will not get old easily;

v     When battery left last grid, do not answer the phone. The
radiation is 1000 times;

v     Answer the phone with your left ear. It'll spoil your brain
directly if you use your right ear;

v     Do not use earphone for long time. Rest your ear a while after 1 hour.

Wednesday, February 12, 2014

Poha Cutlets


Poha Cutlets
Ingredients    

    1 Cup Poha
    1 Boiled Potato
    2 Tbsp Sooji
    2 Bread Slice
    2 Green Chillies Finely Chopped
    Red Chilli Powder
    Salt
    Lemon Juice
    Turmeric Powder
    Garam Masala
    Fresh Coriander Leaves
    Oil
   
Method of cooking    


Wash The Poha In Running Water And Then Take It In A Bowl And Add Water It As Much That It Can Soak And Poha Becomes Soft, Then Mash It.
Mash The Boiled Potato In It And Crush The Bread Slice In It.
Add Rest Of The Ingredients To It Keep Aside Little Bit Of Sooji.
Make Small Balls Of It And Flatten It Then Wrap It In Sooji And Deep Fry It On Med High Flame.

Method of Serving    
Serve Hot With Green Chutney Or Tomato Ketchup.

அரசு வேலை பெற தயாராவது எப்படி?

அரசு வேலை
ரயில்வே, யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., மாநில தேர்வாணைய தேர்வுகள் என போட்டித் தேர்வுகள் நிறைய உள்ளன. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த தேர்வுகளில் உங்களாலும் வெற்றி பெற முடியும்.

கல்லூரி முடித்ததும் மேலே படித்தாலும் சரி, வேலையில் இருந்தாலும் சரி, போட்டி தேர்வுகளைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. விடாமல் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இதற்கென உள்ள கோச்சிங் கிளாசில் சேர்ந்தால் நல்லது. அங்கு கிடைக்கும் மெட்டீரியல்ஸ், டிப்ஸ்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோச்சிங் செல்லாதவர்கள் தினமும் ஆறு மணி நேரம் தேர்வு தயாரிப்புக்கு ஒதுக்குவது சிறந்தது. அதிகாலை, மாலை, இரவு என நேரத்தை பிரித்துக் கொண்டு திட்டமிடுவது சிறந்தது.

பெரும்பாலும் அப்டிட்யுட், பொது அறிவு, நடப்பு நிகழ்வு ஆகியவற்றில் இருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இத்தகைய கேள்வி-பதில் புத்தகங்களை வாங்கி பயிற்சி செய்யலாம். சம்பத்தப்பட்ட தேர்வானையங்களில் பழைய கேள்வித்தாள்களையும் வாங்கிப் படிக்கலாம்.

நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களைப் படிப்பது மிக முக்கியம். எல்லா முன்னணி நாளிதழ்களையும் தினமும் படிப்பது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் அரசின் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளியாகலாம். தினமும் செய்தித்தாள்களி படிக்கும்போது முக்கியமான நிகழ்வுகளை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. தவிர போட்டித் தேர்வுக்கென்றே சில பத்திரிகைகள் வெளியாகின்றன. அவற்றையும் படித்து பயன் பெறலாம். அவற்றில் வரும் மாடல் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது அவசியம்.

அரசு வேலையில் போட்டிகள் தவிர்க்க முடியாது. தொடர்ச்சியான பயிற்சி இருந்தால், குறுகிய காலத்திலேயே வேலை கிடைத்து விடும்.

Tuesday, February 11, 2014

மட்டன் மிளகு பிரட்டல்

மட்டன் மிளகு பிரட்டல்
தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 3
இஞ்சி - 1 1/2 அங்குலத் துண்டு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி

பொடித்துக் கொள்ள:
 
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை -  1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

இஞ்சியையும் பூண்டையும் மைய அரைக்காமல் பிசிறாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

சூடான குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்நிறமானதும் ஆட்டுக் கறியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

கறி சற்று வெந்து, அதன் நிறம் மாறத் துவங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் உப்பு சேர்த்துக் கலந்து சிறிதுநேரம் மூடி வைக்கவும். கறி சற்று வெந்ததும் பொடித்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், மிளகு, கொத்தமல்லி, சீரகக் கலவையை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி வேக விடவும்.

3 அல்லது 4 விசில் வந்தவுடன் இறக்கவும். குக்கரில் அதிகம் தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்து, கலவை கெட்டியாகி, மசாலா கறியுடன் சேரும் வரை வதக்கவும். கிரேவியாகவே வேண்டுமானால் அப்படியேவும் வைத்துக் கொள்ளலாம். வித்தியாசமான வண்ணத்துடன் சுவையும் அமர்க்களமாய் இருக்கும்.


Monday, February 10, 2014

நொறுங்கத் தின்றால் ஆரோக்கியம்

ஆரோக்கியம்
நாம் ஆரோக்கியமாக வாழ, நம் உடலில் வாத, பித்த, கப நாடிகள் முறையாக இயங்க வேண்டும். இதற்கு, இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் சிறு வயதில் மாங்காய், புளியங்காயும், உப்பு தொட்டு களாக்காய், வெள்ளரிக்காயும், சாப்பிடுவோம். பழைய சாதத்தை உறுகாய் தொட்டு சாப்பிடுவோம். இதில் உப்பு, புளி, காரம் ஆகிய மூன்றும் உள்ளன. பாகற்காய், சுண்டைக்காயில் கசப்பும், வாழைத்தண்டு, வாழைப்பூ, நெல்லிக்காய், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் துவர்ப்பு சுவை உள்ளது. அதிகம் சுவைக்காத கசப்பும், துவர்ப்பும், போதிய அளவு கிடைக்காத போது, தோல் வியாதி வர வாய்ப்பு உள்ளது.

பேசிக் கொண்டே சாப்பிட்டால், 'பேசாம வாயை மூடிகிட்டு சாப்பிடுங்கடா' என்று பெற்றோர் கூறுவது வழக்கம். படித்துக் கொண்டோ, 'டிவி' பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. வாயில் போட்ட உணவை, உதடுகளை மூடிக் கொண்டு, பற்களால் நன்கு அரைக்க வேண்டும். அப்போது உமிழ் நீருடன் கலந்து பாதி செரிமானம் ஆகும். அவை உணவுக் குழாய், வழியாக இரைப்பைக்குச் சென்று, ஹைட்ரோ குளோரிக் அமிலம், பித்த நீர், கணைய நீர் உள்ளிட்ட பல வேதிப் பொருட்களுடன், கலந்து கூலாகிறது. சிறு குடலில் தேங்கி நிற்கும் கூழ் உறிஞ்சப்பட்டு, மண்ணீரல் வழியாக கல்லீரலுக்கு ரத்தமாக செல்கிறது. "நொறுங்கத் தின்றால் 100 ஆண்டுகள்' என முன்னோர்கள் கூறுவது வழக்கம். அதனால், எந்தப் பொருளை சாப்பிட்டாலும், நொறுங்க மென்று கூழ் செய்து விழுங்க வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், கீரைகளில் 'மெக்னீசியம் சத்து' அதிகம் உள்ளது. இதை சாப்பிடும்போது, உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை. முளைத்த பயறு வகைகள், கொள்ளு, கேரட், வாழைப்பூ, தண்டு, வெள்ளரி ஆகிய உணவு வகைகள், உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தரும். நொறுக்குத் தீனிகளையும், எண்ணையில் தயாரித்த பொருட்களையும், பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்ததையும், புளி சேர்த்த உணவு வகைகளையும், மீண்டும் சூடு செய்த உணவு வகைகளையும், டீ, காபி ஆகியவற்றையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும், முகத்தில் உள்ள உறுப்புகளுக்கும், ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது. மண்ணீரல் உதடுகளுடனும், கல்லீரல் கண்களுடனும், நுரையீரல் மூக்குடனும், சிறுநீரகம் காதுகளுடனும் தொடர்புடையவை. மண்ணீரல் மாவுப் பொருட்களையும், கல்லீரல் புரதம் மற்றும் கொழுப்புப் பொருட்களையும் ஜீரணிக்கின்றன. மண்ணீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. கல்லீரல் அதை சுத்தம் செய்து இதயத்திற்கு அனுப்புகிறது. எனவே, நாம் சாப்பிடுவதற்கு முன், கை, கால், காது, முகம் ஆகியவற்றை நன்கு கழுவ வேண்டும். வெளியே செல்லும் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். நோய், தொற்றுக்கு காரணமான இடங்களை நம்மை அறியாமலே தொடுகிறோம். சாப்பிடுவதற்கு முன் கைகளையும், முகத்தையும் சுத்தமாக கழுவுவதன் வாயிலாக, நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Sunday, February 9, 2014

Onion Poha

Onion Poha
Ingredients     

Thick Poha ‘Flaked Rice’ 2 Cups
Chopped Onion 1
Chopped Green Chillies 1 Tsp
Hing 1 Pinch
Haldi 1/2 Tsp
Mustard Seeds 1/2 Tsp
Peanuts 2-3 Tsp
Chopped Coriander
Grated Coconut For Garnish
Oil For Seasoning
Salt To Taste
Sugar A Pinch
Lemon Juice 1 Tsp

   
Method of cooking    

Wash Poha And Drain Water Completely And Leave Aside For 5 Minutes.
To This Poha Add A Pinch Of Sugar And Salt To Taste.
Heat Oil In A Pan Add Mustard Seeds, Hing, Green Chillies, Haldi, Onion Cook For 5-Minutes And Then Add Peanuts Stir For A Second.
Add Poha And Mix Well And Cover It For A Minute.
Garnish With Coriander, Coconut And Sprinkle Lemon Juice Just Before Serving Coconut And Sprinkle Lemon Juice.

Method of Serving    
Serve with Coconut And Sprinkle Lemon Juice.

Saturday, February 8, 2014

Onion Pakoras

Onion Pakoras
Ingredients    

1 Cup Besan
2 To 3 Onions
3 Green Chillies
4 Curry Leaves
5 Red Chilli Powder
6 Salt
7 Oil

Method of cooking    

Cut Onions Into Thin Long Pieces, And Green Chillies Into Small Thin Pieces In A Bowl, Add Besan, Onions, Green Chillies And Curry Leaves.
Add Red Chilli Powder And Salt To Taste.
Heat Oil In A Frying Pan.
Add 2 Tsp Hot Oil To The Above Mix.
Add Required Amount Of Water To Mix Into A Thick Batter.
Drop Small Amounts Of The Batter Into Hot Oil Carefully.
Deep Fry On Medium Till The Pieces Turn Golden Brown In Colour.

Method of Serving    
Serve Hot With Tomato Sauce.

Friday, February 7, 2014

Potato Noodle Cutlet



Ingredients    

6 Medium Size Potatoes
1 Instant Noodle Packet
Coriander Leaves
100 Gms Maida
4-5 Green Chillies
Oil To Deep Fry
Salt To Taste

   
Method of cooking    

Mash Boiled Potatoes, Add Coriander Leaves, Chopped Green Chillies And Salt. Make The Paste Into Cutlet Shapes.
Cook The Noodles According To The Instructions And Keep Aside.
Batter Maida In Water Into A Running Consistency. 

Roll The Cutlets In Maida And Again Roll In Cooked Noodles.
Deep Fry In Oil.

Method of Serving    
Serve Hot With Tomato Sauce.

Thursday, February 6, 2014

Dal Ka Seera

Dal Ka Seera
Time of preparation :     6 Hours 30 Minutes

Ingredients 
  

500 Gm Moong Dal 'Green'
500 Gm Sugar
500 Gm Ghee
Saffron Soaked In A Little Milk
Elaichi Powder
Water About 250 Ml.



Method of cooking
   
Soak the dal for 5-6 hours, wash and remove the skins well, grind dal fine either in a stone grinder or electric grinder or mixie.

Use as little water as possible.

Put sugar and water in a pan and put to boil, once sugar dissolve add a few tblsp. Of milk.
As the syrup boils the scum will rise.

Remove with a strain.

Further boil till the syrup become sticky between the fingers.

'One thread should fall when poured from a tilted spoon' keep aside.

Heat the ghee in a heavy kadai 'vessel' and add dal.

Keep stirring rigorously to avoid burning.

Once the dal stops sticking to the vessel, stir gradually till golden brown, and ghee begins to separate.

Pour the hot syrup, add elaichi and dissolved saffron.

Stir very carefully, not allowing hand to be scalded.

Cook slowly till all water is absorbed.

Decorate with chopped dry fruit.

Method of Serving   

Serve Hot Especially On A Cold Day.

 

Wednesday, February 5, 2014

வளம் சேர்க்கும் வால்நட்

வால்நட்
உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. மனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் சாப்பிடலாம். ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.

இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். முதல் கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான  அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Idli Moong Dal Upma

Time of preparation :     25 Minutes
Serves                      :     2

Ingredients    

Steamed Idli               4
Moong Dal                 1/4 Cup
Green Chiles              2
Turmericpowder A Big Pinch
Lemon Juice              1 Tsp
Salt To Taste
Talimpu-
 Mustard Seeds          1/4 Tsp
 Cumin Seeds             1/4 Tsp
 Urad Dal                    1/4 Tsp
 Broken Dried Red Chiles 3 - 4
 Asafoetidaa Big Pinch
 Curry Leaves5
 Oil 2 Tsps
Method of cooking    

Wash Moong Dal With Water And Boil In A Cup Of Water Till It Turns Translucent, Soft But Whole. Remove Stems, Wash And Slice The Green Chiles.
Break The Idli Into Pieces And Crumble The Idli.
Heat Oil In A Pan, Add All Other Talimpu Ingredients In Order.
When Mustard Seeds Start Spluttering, Add Green Chiles.
Fry Briefly, Add Boiled Moong Dal, Mashed Idli, Turmeric Powder And Salt.
Mix Thoroughly And Cook For A Minute And Remove From Heat.

Monday, February 3, 2014

Hariyala Rava Uttapam

Time of preparation :     30 Minutes
Serves                      :     4

Ingredients      

2 Cups - Rawa
1 Tbsp - Maida
2 Tbsp - Besan
1 Cup - Spinach 'Finely Shredded'
1 - Onion'Finely Chopped'
1-2 - Green Chillies
Salt To Taste
1.5 Cups - Water
Oil

Method of cooking      

In A Bowl Mix Rawa, Besan And Maida.
Soak In Water And Leave For 15 Minutes.
Add Finely Shredded Spinach, Onions, Green Chilies, Salt.
Mix Well. If Consistency Is Thick Add Some Water To Make Batter.
Heat And Grease A Non Stick Tava.
Pour 2 Serving Spoons Of The Batter On The Tava And Spread Evenly Giving It A Round Shape.
Cook On Medium Flame. Put Two Drops Oil On The Upper Side And Turn.
Cook On Both The Sides Till Pink.

Method of Serving    
Serve Hot With Coriander/Coconut Chutney.    

Sunday, February 2, 2014

Beetroot Urad Dosa

Beetroot Urad Dosa
Time of preparation :     30 Minutes
Beetroot Urad Dosa

Ingredients    

Beetroot 1/2 Of Medium Size
Urad Dal1/2 Cup
Rice Flour1 Cup
Green Chiles 2 - 3
Cumin Seeds1 Tsp
Cilantrofew Leaves
Salt To Taste
Oil As Required

Method of cooking    

Soak urad dal in water for around 3 hours. Refresh the urad dal in fresh water and grind it into fine paste adding enough water. 


Remove the urad dal onto a mixing bowl, add rice flour and salt. 


Mix everything thoroughly and keep covered in a dark place for 6 - 8 hours. 


Wash and finely chop cilantro leaves. 


Peel, remove ends, wash and roughly chop beetroot. Remove stems, wash and roughly chop green chiles. 


Grind chopped beetroot, green chiles and salt into paste using a grinder. 


Mix the fermented dosa batter with ground beetroot mixture and keep aside. 


Heat a flat pan on medium - high heat. 


Pour a ladle full of beetroot dosa batter and spread with back of the ladle in circular motion into thin dosa. 


Layer the dosa with chopped cilantro and cumin seeds. 


Pour few drops of oil around the dosa and fry till it turns golden brown in color. 


Turn the dosa on other side, fry for couple more seconds and carefully remove the dosa from heat. 


Repeat the same with remaining beetroot dosa batter for more dosas. 


Also, store the dosa batter covered in a refrigerator for couple more days if required. 


Serve beetroot dosa with coconut chutney or with chutney of your choice or with sambar.


Method of Serving    
Serve Beetroot Dosa With Coconut Chutney.