Pages

Showing posts with label உடல் சோர்வு. Show all posts
Showing posts with label உடல் சோர்வு. Show all posts

Wednesday, June 18, 2014

இளமை காக்கும் தேன்

தேன்
அடிக்கடி தேன் உட்கொண்டு வந்தால் இளமை காக்கப்படும் என்பது பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்து. தேன் வழங்கும் பிற நன்மைகளையும் பார்க்கலாம்...

* உடல் ஆரோக்கியத்துக்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச்சதை குறையும், உடல் உறுதி அடையும்.

* தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜல தோஷம், தலைவலி குணமாகும்.

* தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

* தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

* இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

* தேனுடன் மாதுளம் பழச் சாறை சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் தீரும்.

* உடம்பில் ரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

* தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச, கட்டிகள் பழுக்கும்.

* மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறி விடும்.

* கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்துசாப்பிட, கீல் வாதம் போகும்.

Tuesday, March 25, 2014

துரியன் பழம் - சத்து பட்டியல்

துரியன்
பழங்களின் அரசன்' என்ற பெயர் துரியன் பழத்திற்கு உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் துரியன் பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்...

* வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல துரியன் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* சாப்பிட்ட உடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* கொழுப்புச்சத்து நிறைய அளவில் உள்ளது. நிறைவுறா கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி துரியன் பழத்திற்கு உண்டு.

* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கிறது.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான 'வைட்டமின் சி' துரியன் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது நோய்த் தொற்றுகளை தடுக்கும். தீமை தரும் 'பிரீ-ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும்.

* நியாசின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் தயமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

* தாது உப்புக்களான மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மக்னீசியம் துரியன் பழத்தில் குறிப்பிட்ட அளவு உள்ளது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு நொதிகள் துரிதமாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக துணைபுரியும். துடிப்புள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு இன்றியமையாதது இரும்புத்தாது.

* பொட்டாசியம் தாது மிக அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இத யத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

* டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் துரியன் பழத்தில் உள்ளது. இதனை 'உறங்கும் மருந்து' என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும். இவை நரம்புகள் நலமாக இருக்க அவசியமான ரசாயனமாகும். தூக்கத்தை தூண்டுவதி லும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

சாப்பிடும் முறை.......... துரியன் பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம். ஐஸ்கிரீம், மில்க்ஷேக் ஆகியவற்றில் துரியன் பழம் சேர்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் 'சாயர்' எனப்படும் துரியன் சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள துரியன் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படு கிறது. 'துரியன் சாஸ்' செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் 'இகான் பிரெங்கஸ்' என்ற பெயரில் துரியன் சாஸ் பிரபலம்.

பழுக்காத துரியன் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.

Friday, February 28, 2014

தூக்கமின்மையில் இந்தியர்கள்

தூக்கமின்மைஇந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.

இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.

பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.

58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான  பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.

ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும்  தூங்க வேண்டும்.  8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.