Pages

Monday, October 31, 2016

குங்குமப்பூ பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

வேனிட்டி பாக்ஸ்: டோனர் (toner)



vanity box toner க்கான பட முடிவு
அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப சரியான டோனர்களை பார்த்துத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம்.  டோனர் உபயோகிக்கும் முறை டோனர் என்பதை தண்ணீர் மாதிரி நிறைய எடுத்து உபயோகிக்கக் கூடாது. 6 முதல் 10 துளிகள் எடுத்து சுத்தமான பஞ்சில் விட்டு, பிழிந்த பிறகே உபயோகிக்க வேண்டும். இப்போது சில வகை டோனர்கள் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. நார்மல், ஆயிலி, ட்ரை மற்றும் காம்பினேஷன் சருமங்களுக்கேற்ப, அதையும் தேர்ந்தெடுத்து, கிளென்ஸ் செய்த பிறகு ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

வெளியில் டோனர் வாங்க விருப்பமும் வசதியும் இல்லாதவர்கள், வீட்டிலேயே எளிய முறையில் டோனர் தயாரித்தும் உபயோகிக்கலாம். சிறிதளவு வெள்ளரித் துருவலுடன், தயிரை கலந்து கொள்ளவும். கிளென்ஸ் செய்யப்பட்ட சருமத்தில் இந்தக் கலவையைத் தடவி, 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த தயிர், சருமத்தின் கருமையைப் போக்கும். வெள்ளரிக்காய் மைல்டான பிளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதுடன், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையையும் நீக்கும்.

இது எண்ணெய் பசை சருமத்துக்கு உகந்த டோனர். ஒரு கைப்பிடி புதினாவை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் இரவில் கிளென்ஸ் செய்த சருமத்தில் தடவிக் கொள்ளலாம். பஞ்சில் நனைத்து, கண்களுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம். இது சருமத்தின் களைப்பை நீக்கி, ஊட்டம் தரும்.

100 கிராம் கிளிசரினில் 6 டீஸ்பூன் பன்னீரும் கால் டீஸ்பூன் படிகாரத் தூளும் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் டோனராக உபயோகிக்கலாம். இது எல்லா வகையான சருமங்களுக்கும் ஏற்றது.

100 மி.லி. வினிகரில் 50 மி.லி. பன்னீர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, டோனராக உபயோகிக்கலாம். இதில் கலக்கப்படுகிற வினிகர், டீப் கிளென்சராகவும் செயல்படும்.

அரை கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறும் 1 டீஸ்பூன் பன்னீரும் கலந்து உடனடியாக நெற்றி, கழுத்து, கன்னங்களில் தடவவும். இந்த டோனர், சருமத்தின் கருமையைப் போக்கி, பருக்களையும் விரட்டும். மிக அதிகமாக எண்ணெய் வடிகிற சருமத்துக்கு உகந்தது.

லெமன் ஆயில், லேவண்டர் ஆயில் இரண்டும் தலா 2 சொட்டுகள் எடுத்து 2 சொட்டுகள் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து, உள்ளங்கைகளில் தேய்த்து, சட்டென முகத்திலும் கழுத்திலும் தடவித் துடைக்கவும். இது சருமத்தின் அழுக்குகளை நீக்கி, அதன்  ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

சிலருக்கு சருமத்தின் துவாரங்கள் பெரிது பெரிதாகத் தெரியும். இவர்கள் ரோஸ்மெரி மற்றும் மின் ஆயில் இரண்டிலும் தலா 2 துளிகள் எடுத்து 2 துளிகள் டிஸ்டில்டு வாட்டரில் கலந்து முகத்தில் தடவினால், சருமத் துவாரங்கள் உடனடியாக சுருங்கும்.

டோனர் என்பது தினசரி உபயோகப்படுத்த வேண்டியது. டோனர் மாஸ்க் என்பதையும் வீட்டிலேயே தயாரிக்கலாம். சருமத்தை டைட் ஆக்கக் கூடிய இதை வாரம் ஒரு முறை  உபயோகித்தாலே போதும். 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சைச்சாறு, 1 முட்டை ஆகிய மூன்றையும் கலந்து, முகத்திலும் கழுத்திலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது சருமத் தசைகளை டைட் ஆக்குவதுடன், களைப்பையும் நீக்கும். தேன் பிளீச் செய்யவும், எலுமிச்சைச்சாறு புத்துணர்வு தரவும், முட்டை சருமத்தை டைட் ஆக்கவும் உதவும்.

டோனரில் 3 வகைகள்!

ஸ்கின் பிரேஸர்ஸ் அல்லது ஃப்ரெஷ்னர்ஸ்...


மிகவும் மைல்டானது இது. கிளிசரின் மற்றும் மிகக் குறைந்த அளவு ஆல்கஹால் (10%) கலந்திருக்கும். ரோஸ்வாட்டர் எனப்படுகிற பன்னீர் இதற்கான சரியான  உதாரணம். மிகவும் வறண்ட சருமத்துக்கு உகந்தது.

ஸ்கின் டானிக்...

முதல் வகையைவிட சற்றே ஸ்ட்ராங்கானது. 20% ஆல்கஹால் கலந்திருக்கும். ஆரஞ்சுப் பூ தண்ணீர் இந்த வகையைச் சேர்ந்தது. நார்மல், காம்பினேஷன் மற்றும் எண்ணெய்பசையான சருமத்துக்கு உகந்தது.

அஸ்ட்ரின்ஜென்ட்...

முதல் இரண்டையும் விட இன்னும் ஸ்ட்ராங்கானது. 20 முதல் 60% வரை ஆல்கஹால் கலந்திருக்கும். சட்டென உலர்ந்துவிடக் கூடியது என்பதால் எண்ணெய் பசையான சருமத்துக்குப் பரிந்துரைக்கப்படும்.

இதயம் காக்கும் பிளம்ஸ் பழங்கள்!

Image result for plums
சிவந்த கவர்ச்சியான நிறமும், மிகுந்த இனிப்பு சுவையும் கொண்டவை பிளம்ஸ் பழங்கள். ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது. சிவப்பு நிற பழங்கள் அனைத்தும் அதிக சத்து நிறைந்தவை.

ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிற பழங்கள் என்பதால், அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை விருத்தி செய்யும்; ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும்.
சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்; டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண் பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. எலும்பு மஜ்ஜைகளை பலப்படுத்துகிறது. இதயத்துக்கு சிறந்த டானிக்காக, சிவப்பு நிற பழங்கள் விளங்குகின்றன.

பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடிய. 100 கிராம் பழத்தில், 46 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழத்தில் உள்ள சார்பிடால், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள், ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும்.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். பிளம்ஸ் பழத்தில், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், "வைட்டமின் சி' யின் பங்கு முக்கியமானது. "வைட்டமின் ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள், பிளம்ஸ் பழத்தில் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-வுக்கு உள்ளது.

கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு, இரும்புத் தாது மிக அவசியம். பொட்டாசியம், உடலை பளபளப்பு தன்மையுடன் வைப்பதிலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.

பி -காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில், இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது. பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே உள்ளது. இது ரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.

அத்திப்பழம் ஜூஸ் - Fig Juice

Friday, October 28, 2016

Wednesday, October 26, 2016

வேர்க்கடலைத் துவையல்

வத்தல் குழம்பு

தட்டு வடை செட்

சேலம் தட்டு வடை

Monday, October 24, 2016

மிளகாய் சட்னி

கொள்ளு ரசம்

முருங்கை கீரை சாம்பார்

கார சட்னி

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த செர்ரி

கீரைகளை சமைக்கும்போது....- When you cook greens

ஆவக்காய் ஊறுகாய் - Avakkai Pickle

எலுமிச்சை ஊறுகாய் - Lemon Pickle

Friday, October 21, 2016

முட்டையை சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை

தினம் ஒரு முட்டை சாப்பிடுங்க!

சளியை விரட்டும் கண்டங்கத்திரி!

தக்காளி சூப் - Tomato Soup

Thursday, October 20, 2016

முருங்கை கீரை மசியல்

பீட்ரூட் சூப் - Beetroot Soup

பால் அல்வா - Milk Halwa

கேரட் அல்வா - Carrot Halwa

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் - Health Benefits Of Neem

Wednesday, October 19, 2016

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்


முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

திடமான தலைமுடிக்கு…

தேவையான பொருட்கள்: – முட்டைகள் – எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ்

எண்ணெய் தயாரிக்கும் முறை:

* இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 3-4 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.

* இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி, தட்டிக் கொடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்


 shiny hair க்கான பட முடிவு

இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி வந்தாலே விரைவில் கூந்தல் உதிர்வை தடுத்து பளபளப்பான கூந்தலை பெறலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைகள்
எலுமிச்சை சாறு

தயாரிக்கும் முறை:

* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும்.

பின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 15 நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள்.

* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும். - இந்த முறையை வாரம் இருமுறை செய்து வர வேண்டும்.  

Monday, October 17, 2016

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா?

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா? 

 ண்டிப்பாக சாத்தியமே. ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் அருகே தூசு, குப்பை தொட்டி, அழுகிப் போன உணவுகள் போன்றவை இருக்கக் கூடாது. வீட்டில், தூசு, ஒட்டடை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய ஆடைகளை சலவை செய்யாமல், மீண்டும் பயன்படுத்த கூடாது. படுக்கைகள், தலையணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமில்லாத பொருட்களில், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.

குளிரூட்டப்பட்ட அறைகளை தவிர்ப்பது நல்லது. மின்விசிறிக்கு நேரே படுக்கக் கூடாது. மேலும் வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள், கொசுவிரட்டிகளின் புகை போன்றவற்றின் அருகே கூட, ஆஸ்துமா நோயாளிகள் செல்லக்கூடாது. இவை யாவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரி. செல்லப்பிராணிகள் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்

 எனக்கு கணைய பாதிப்புள்ளது என, மருத்துவர் கூறுகிறார். கணையம் என்பது என்ன? கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா?

உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீரை சுரக்கின்ற நாளமுள்ள சுரப்பியாகவும், ஹார்மோன்களை சுரக்கின்ற நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படும் ஒரே உறுப்பு கணையம்.

பொதுவாக, உணவு உள்ளே செல்லும்போது, உடலுக்கு தேவையான இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சர்க்கரை நோய் வரும். கணையத்தை காக்க, மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.   

அஜீரண கோளாறு என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன? 

பொதுவாக எளிதில் செரிக்காத உணவுகளாகிய, இறைச்சி, மீன், கீரை வகைகளால், அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரம், மாவுப் பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை, அளவுக்கு அதிகமாக உண்பதாலும், அஜீரணம் வரும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என, யாருக்கு வேண்டுமானாலும் அஜீரணம் வரலாம். இது பொதுவான பிரச்னையே. வயது காரணமாக வரும் பிரச்னை அல்ல. மேலும் குடல் புண், பித்தப்பை கற்கள், உணவு குழாய் தசைகளில் ஏற்படும் பிரச்னைகள், கணைய பாதிப்பு, பெருங்குடல் புற்று நோய் போன்ற காரணங்களால், அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.

KITCHEN TIPS - கிட்சன் டிப்ஸ்

Sunday, October 16, 2016

பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் - How to prepare Nellikaai Oorugai

சிறிய நீர் நெல்லிக்காய் ஊறுகாய் - How to Prepare Nellikaai Oorugai

இத செஞ்சு பாருங்க "பளிச்சுன்னு" இருப்பீங்க!

  வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். 

     அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். 

     இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். 

     இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும். பழக்கூழ் பேஷியல் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும். 

     பிசுபிசுப்பு நீங்க முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.

Thursday, October 13, 2016

கண் நோய்களுக்கு உணவும் காரணம்

உடலில் உள்ள நோய் ஏற்ப்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், ப்ரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும் பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும் பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும். அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும்.

சரியான அளவில், சத்தான உணவு அமையாவிடில் கண் சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு, ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும். உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ரத்த நாளங்களும், தசைகளும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடை பெறாது. மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகி கடினத்தன்மையை பாதித்து விடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறையை ஏற்படுத்தி விடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படுகிறது. மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும். அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வை குறைவு ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுகோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவால் தான், இன்று 40 வயதைக் கடந்தவர்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்படக் காரணம். இவர்கள் தங்கள் உணவு முறையை சரி செய்து கொண்டு எளிமையான சில பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.

Friday, October 7, 2016

ஷாப்பிங்: பெண்கள் கில்லாடிகளா? ஏமாளிகளா?


பெண்களுக்கு ஷாப்பிங் போவதைப் போன்ற மகிழ்ச்சியான விஷயம் வேற எதுவும் இருந்துவிட முடியாது. தங்களுக்குத் தேவையான விஷயத்தை நேரடியாகத் தொட்டு உணர்ந்து தேர்வு செய்து வாங்குவதையே பெரிய மகிழ்ச்சியாக பெண்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் பெரும்பாலான பெண்கள் ஷாப்பிங் செய்ய ஆண்களைத் துணைக்கு அழைப்பதில்லை. காரணம் ஆண்கள் அவசரக்காரர்கள். எதையும் பொறுமையாக தேர்வு செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளை அல்லது சகோதரிகளைத்தான் ஷாப்பிங் செல்லத் துணையாக அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு தலைக்க மேல் வேலை இருக்கிறது.

யாரும் என்னை கூப்பிடாதீர்கள் என்று கறாராகப் பேசும் பெண்கள் கூட ஷாப்பிங் என்றதும் துள்ளிக் குதித்துத் தயாராகி விடுகிறார்கள். அவர்களுடைய மனநிலை அப்படிப்பட்டது. ஷாப்பிங் போவது மட்டுமல்ல மற்றவர் வாங்குவதைப் பார்ப்பதும் கூட பெண்களுக்கு மகிழ்ச்சிதான். இது அவர்களின் பிறவிலேயே ஏற்பட்ட குணம்.

பெண்கள் எப்போதும் எதையாவது வாங்குவதில் பிரியமுடையவர்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் கடைக்குத்தான் அழைத்துப்போக வேண்டும். மற்றவர்கள் வாங்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இந்த அனுபவம் தனக்கும் பயன்படும் என்ற வகையில் கடைகடையாக ஏறி இறங்க பெண்கள் தயங்க மாட்டார்கள்.

கடைத்தெரு அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதிலும் பெண்களுக்கு அலாதி பிரியம். கையில் இருக்கும் பணத்துக்கு என்ன வாங்குவது என்றுதான் எப்போதும் கணக்குப்போடுவார்கள். இந்த கணக்கை தெளிவாகப் புரிந்துகொண்டு தான் வியாபாரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்களும் ஷாப்பிங்கும் என்ற தலைப்பில் சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கு பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அந்த கருத்தரங்களில் வெளியான சில சுவாரசியமான விஷயங்கள்.....

தள்ளுபடி :

இந்த தள்ளுபடி, இலவசம், ஆபர் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் வேறு யாருக்கும் இருந்துவிட முடியாது. தள்ளுபடியின் பின்னே மறைமுகமாக என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கின்றன என்று யோசிக்காமல் பெண்கள் கடைக்கு ஒடுவார்கள். அதே போல் ஸ்டாக் கிளியரன்ஸ் என்று வந்துவிட்டால் அங்கே குவிவது பெண்கள் மட்டுமே.

சமீபத்தில் லண்டன், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி போடப்பட்ட ஸ்டாக் கிளியரண்ஸ் விற்பனையில் எழுபந்தைந்து சதவீதம் பெண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். குறைந்த விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்து கணவருக்கு சேவை செய்யும் பெரிய தியாகத்தை உலக அளவில் பெண்கள் மட்டுமே அதிகமாக செய்கிறார்கள்.

தள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் பின்னால் செல்லுபடியாகுமா என்பதை பற்றியெல்லம் அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களின் ஒட்டுமொத்த மேதாவித்தனத்தை வியாபாரிகள் புரிந்து கொண்டு பிழைப்பை நடத்துகிறார்கள்.

பேரம் - வியாபராம் :

எந்தப்பொருளானாலும் பேரம் பேசி பத்து ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி. இதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். கடைக்காரர்களும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கி காட்டி குறைத்து வியாபாரத்தை சாமர்த்தியமாக முடித்துக் கொள்வார்கள்.

பேரம் இல்லாத வியாபாரம் பெண்களுக்கு ஆகாது. பணம் - மிச்சம்..... தன்னுடைய ஷாப்பிங்க சாமர்த்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஓர் அலதியான சுகம் பெண்களுக்கு. குறைந்த விலையில் வாங்கி பணத்தை மிச்சம் பிடித்த சாமர்த்தியத்தை எல்லோரிடமும் பகிர்ந்த கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டு தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இது ஷாப்பிங் செய்ததால் வந்த பாராட்டு, மற்றவர்கள் தன்னை பார்த்து கற்றுகொள்ள வேண்டும். தன்னை பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையான பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்குவது தான் இவர்களுடைய சாமர்த்தியம்.

மற்றவர் அபிப்பிராயம் :

தான் வாங்கிய பொருட்களை பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்பிராயம் பெண்களுக்கு நிச்சயம் தேவை தான். தான் வாங்கிய   பொருள் வாங்கிய விதம் அதன் சிறப்பு எல்லாமே எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொது இடங்களில் பெரும்பாலும் அவர்களுடைய பேச்சு இதை பற்றியதாகதான் இருக்கும்.

மற்றவர்  அபிப்பிராயம்தான் இவர்களுடைய அனுபவம். அந்த அனுபவம் வருங்கால ஷாப்பிங்கில் பயன்படும். விலை வித்தியாசம்.... தான் வாங்கிய பொருள் மற்றவர்கள் வாங்கிய பொருளைவிட விலை கூடுதலாக இருந்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். பொருளின் தரம் கண்ணில் படாது.

விலை வித்தியாசம் மட்டுமே மனதை உறுத்தம். இதற்காக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் போய் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள். விலை வித்தியாசம் அவர்களின் ஷாப்பிங் சந்தோஷத்தை குலைத்து விடும. இதை புரிந்து கொண்டு சிலர் வேண்டுமென்றே விலையை வித்தியாசப்படுத்தி கூறி மற்றவரை எரிச்சல் படுத்துவார்கள்.

சரியான தேர்வு :

தான் தேர்வு செய்திருக்கும் பொருள் சரியானது தானா? தனக்கு பொருத்தமானதுதானா? என்று நெருங்கிய தோழியின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். தனக்கு பிடித்தமான பொருளாக இருந்தாலும் குறை நிறைகளை பார்த்து சொல்ல ஒருவர் அருகில் இருப்பது இவர்களின் ஷாப்பிங் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

அதனால் பெண்கள் எப்போதும் ஒருவரை (கணவரையல்ல) தன்னோடு அழைத்து கொண்டு போக விரும்புவார்கள். இந்த நிறம் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் விலை, தரம், எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இல்லாவிட்டால் கடைசிவரை நான் தேர்வு செய்தது சரியா தவறா என்றே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

விளம்பரம் :

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே வெளிவருகின்றன. கவனிப்பது பெணகள் தானே, விளம்பரங்களால் பெரிதும் கவரப்படுவது பெண்களே என்ற முடிவுக்கு விளம்பரதாரர்கள் வந்ததால் தான் பெண்கள் எல்லா விளம்பரங்களிலும் இடம் பெறுகிறார்கள்.

விளம்பரத்தை பின் தொடர்நது போய் பொருட்களை கேட்டு வாங்குவதில் பெண்களே அதிகம். விளம்பரத்தில் வரும் விஷயங்களை உண்மை என்று நம்புபவர்களிலும் பெண்கள் தான் அதிகம்.

ஆன்லைன் ஷாப்பிங் :

இதுவும் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே வருகிறது. இதில் வாங்கும் பொருட்கள்பெரும்பாலும் நாம் பார்ப்பது போல இருப்பதில்லை. நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்துவிட்டால் அதை மாற்றுவதும் கஷ்டம். பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் மனது பெண்களுக்கு இருப்பதால் மற்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை.

ஏமாந்து போனால் வெளியே சொல்வதும் இல்லை. புதிய ரகம்... புதிய ரகம், புதுமையான விஷயம் என்றால் அது முதலில் நம்மிடமிருக்க பேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை புதுமையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிய விஷயம் தனக்கு தேவைப்படுமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

தான் ஒரு புதுமைப்பெண் என்பதை எந்த விதத்திலாவது மற்றவர்களுக்கு நிரூபிக்க புதிய ரகங்கள் பெரிதும் விரும்பி வாங்குவது பெண்களே.

ஷாப்பிங் :
ஆண்களுக்கான ஷாப்பிங்கையும் சேர்த்து பெண்களே செய்ய விரும்புவார்கள். வீட்டையும், குடும்பத்தையும் நான்தான் நிர்வாகம் செய்கிறோம் என்பதில் பெண்களுக்கு நிறைய பெருமை உண்டு. அந்த பெருமைக்கு துணை நிற்பது இந்த ஷாப்பிங். ஷாப்பிங் செய்வதை பெரிய வேலையாக நினைக்கும் ஆண்களுக்கு ஷாப்பிங் திறமையுள்ள பெண்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.

நடந்து... நடந்து... உடல் நலம் காப்போம்!

உணவுப்பழக்கத்தில் எல்லோருக்கும் கவனம் எடுத்துக் கொள்கிறோம். அது போல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நகரத்து மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் பலர், வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வத்யோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்தது தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். தினமும் நடை பயிற்சி செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. நுரையீரல் சுவாசம் புத்துணர்ச்சியாக்குகிறது. பிறரிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கி.மீ., வரை செல்வதாகவும். நான்கு மணி நேரம் நீந்துவதும் நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்கு சமமானதே.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், லிப்டை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்துக்கொள்ளலாம். நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் உள்ள எல்லா தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைகிறது. இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சி உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக்குகிறது, நாள்தோறும் நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.

அலுவலகம், வேலை, உறக்கம், மீண்டும் அலுவலகம், வேலை உறக்கம் என்று கரம் போல தினசரி வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு, உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம் மாற்ற வேண்டுமெனில் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே, நடைப்பயிற்சியை மேற்கொள்வோம்! ஆரோக்கியம் காப்போம்.

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்


 சின்ன வெங்காயம் க்கான பட முடிவு
பெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்
பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்ட பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி கடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.

தூக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பு



எந்த சந்தேகமும் வேண்டாம். தூக்கமின்மை மூளை  சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காவிட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத்திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.

தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்கமுடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். துங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

எது அசல் தேன்?


அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.

அசல் தேன், கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

அல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.
ஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

மூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்? மூளையை பாதுகாப்பது எப்படி?



பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும் போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, நிரந்தர ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.

மூளையை பாதுகாத்தல்: அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் அன்றாட உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் தவிர்த்தல், புகை புகையிலை போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.

தலை சுற்றல், மயக்கம் வந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.

போதையேற்றினால் மூளை சுறுசுறுப்பாக இருப்பதாக, 'குடி'மகன்கள் கூறுகின்றனரே ?



முற்றிலும் தவறான தகவல். 12 முதல் 30 வயது வரை உள்ளோர், மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த வயதில் ஏற்படும் பழக்கம், 65 வயதிற்கு மேல் தான் குறைகிறது.

கல்லூரி மாணவர்கள், மதுவை ஒரு நாகரிக பானமாக கருதி, குடிக்கின்றனர். மது மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையற்ற மனக் குழப்பத்தை உருவாக்கும். வேலை திறன் மற்றும் படிப்பாற்றலைக் குறைக்கும்.

Wednesday, October 5, 2016

உதடுக்கு மேல கருப்பா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க....

சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். எனவே அத்தகைய கருமையான தோற்றத்தை ஏற்படுத்தும் முடியை நீக்க சிலர் த்ரெட்டிங் செய்வார்கள். இதனால் கடுமையான வலி தான் ஏற்படும். மேலும் இந்த கருமை நிறம் ஏற்படுவதற்கு அதிக சூரிய வெப்பம் சருமத்தில் படுவதும், ஆரோக்கியமற்ற சில உணவுகளும் தான் உதட்டிற்கு மேல் கருமையை ஏற்படுத்துகிறது. ஆகவே அத்தகைய வலி ஏற்படாமல், ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை போக்க சில டிப்ஸ்...

உடனடியாக போக்குவதற்கு...

* உதட்டிற்கு மேலே ஃபேஸ் ப்ளீச்சை தடவி, பின் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதிலுள்ள பொருள் உடனடியாக கருமை நிறத்தை போக்கிவிடும்.

வீட்டு மருந்துகள்...

* உதட்டின் மேல் பகுதியை எலுமிச்சை, தேன் அல்லது தயிரால் நன்கு ப்ளீச் செய்து வந்தால், நாளடைவில் அந்த இடத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

* முகத்தை ஆப்ரிகாட், பாதாம் அல்லது கடலை மாவால் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாக, பளிச்சென்று காணப்படும்.

* இல்லையெனில் பீட்ரூட் அல்லது மாதுளையின் ஜூஸை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தின் நிறம் சற்று அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கருமை நிறத்தை வராமல் எப்படி தடுக்கலாம்?

* ஆல்கஹால், காஃப்பைன் மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உதட்டின் நிறத்தை மாற்றுவதோடு, பற்கள் மற்றும உதட்டிற்கு மேலேயும் கருமையை உண்டாக்கும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும். மேலும் சருமம் நன்கு சுத்தமாக, பொலிவோடு காணப்படும்.

* உதட்டிற்கு கெமிக்கல் கலந்த மிகவும் அடர்ந்த நிற லிப்ஸ்டிக், லிப் பாம் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இயற்கை லிப் பாம்களான நெய், வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால், உதடு வறட்சி அடையாமல் இருக்கும்.