Pages

Friday, October 7, 2016

நடந்து... நடந்து... உடல் நலம் காப்போம்!

உணவுப்பழக்கத்தில் எல்லோருக்கும் கவனம் எடுத்துக் கொள்கிறோம். அது போல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நகரத்து மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் பலர், வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வத்யோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்தது தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். தினமும் நடை பயிற்சி செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. நுரையீரல் சுவாசம் புத்துணர்ச்சியாக்குகிறது. பிறரிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கி.மீ., வரை செல்வதாகவும். நான்கு மணி நேரம் நீந்துவதும் நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்கு சமமானதே.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், லிப்டை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்துக்கொள்ளலாம். நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் உள்ள எல்லா தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைகிறது. இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சி உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக்குகிறது, நாள்தோறும் நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.

அலுவலகம், வேலை, உறக்கம், மீண்டும் அலுவலகம், வேலை உறக்கம் என்று கரம் போல தினசரி வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு, உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம் மாற்ற வேண்டுமெனில் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே, நடைப்பயிற்சியை மேற்கொள்வோம்! ஆரோக்கியம் காப்போம்.

No comments: