Pages

Wednesday, April 27, 2016

யோகாசனத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும் தோப்புக்கரணம்

யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும்
கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.


சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகzககுறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.


மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும்.  மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும் கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.  வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.


இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.


சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி


தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது  காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும்


இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.  உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு


தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.


உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க  வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -  சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.  இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம்  சீராகும்.


மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.


ஸ்பைசி ஓட்ஸ் மோர்


தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - அரை கப் (வறுத்து கொள்ளவும்)

ஸ்பைசி ஓட்ஸ் மோர்

தயிர் - அரை கப்

ப.மிளகாய் - 2

இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்

புதினா இலை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை பழம் - பாதி

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

•  ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

• அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

• இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

உடற்பயிற்சியை நிதானமாக செய்யுங்க

 udarpayirchi க்கான பட முடிவு

உடற்பயிற்சிகளை மிகவும் அதிக முறை செய்யும்போது தான் பிரச்சனைகள் உண்டாகின்றன.

நல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் மேனி அழகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, சில விதிமுறைகளை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, ஓட்டம், பளு தூக்குதல், விளையாட்டுப் பயிற்சிகள் என எதுவாயினும், முதலில் சிறியதாகத் தொடங்கி, உடல் மற்றும் மனம் உறுதிபட தொடங்கியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த பகுதிக்கு முன்னேற வேண்டும். அப்போதுதான் இதய-நுரையீரல்களின் உறுதி, தசை மண்டலங்களின் உறுதி, எலும்பு மற்றும் எலும்பு இணைப்பில் உறுதி ஆகியவை கிட்டும்.

சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).

நம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).

மெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).

அளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.

தேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி.

ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

– மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்… முடிந்தால் சற்று கூடுதலாக – சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume) கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன.

குழந்தை பிறக்க போவதற்கான 6 அறிகுறிகள்


 delivery pain க்கான பட முடிவு
பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்..

1. பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

2. கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

3. கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

4. சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

5. ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

6. ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

- மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்

 தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்


இந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம். இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது.

அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும்.

அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும். இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது.

வாசனைத் திரவியங்கள்


 
வாசனைத் திரவியங்கள்
சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை
கொண்டவையாக உள்ளன. பலருக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை இருக்கும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது.

பழங்காலத்தில் இருந்தே உலகமெங்கும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள், பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனைத் திரவியங்களை உபயோகித்து வந்தனர்.

பொது வைபவங்கள், விழாக்களுக்கு செல்லும்போது மட்டுந்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்குவதற்கு முன் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர்.

பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமணப் பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டு விதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மணம் கொண்டதாக அமையும். விதவிதமான வாசனைகளில், நிறங்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்துப் பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம்.

அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிப்பது நல்லது. வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். சிறிதளவு தெளிக்க வேண்டுமே தவிர அதிகம் தெளிக்கக் கூடாது. வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபலமானது, பிரான்ஸ் தான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதயநோய் வருவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். அது என்ன? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ளது கணையம் (பன்ச்ரியஸ்). இந்த உறுப்பு தான், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான். ஒரு வேலை, இன்சுலின் சுரப்பது குறைந்து போனாலோ அல்லது நின்று போனாலோ, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியளர்கள் சர்க்கரை நோய்க்கும், இதயம் தொடர்பான நோய்க்கும் (cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, ரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுகோசாக மாறிய பின்னர் தான் ரத்த செல்களுக்குள் செல்லும்.


ஆனால் குளுகோசின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பண்படுத்த முடியாமல், உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதய நோய் (CVD) போன்ற நோய்கள் வருகின்றன. இன்சுலின் அளவும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும் போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும், இதய நோய் வரலாம் என்கிறார்கள.

மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடைள்ள வர்களுக்குத்தான் (over வெயிட்) இன்சுலின் சுரப்பதி தடையும், ரத்தத்தில் அதிகளவு குளுக்கோசும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குதான் ஆரோகியம்ற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy  cholesterol)


  உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய், இதய நோய், இதயத்தாக்கம் போன்றவறிற்ககான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

கிழே உள்ள  சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்து போராடி சரி செய்ய உதவும். அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். இதனைக் கட்டுப் படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்தவழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்கு பிறகு 8 சதா வீதம் கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடி வயிற்றில் உள்ள கொழுப்பு குலைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுப்பிடிதர்கள். ஒரு வேளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள், ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையை குறைக்க முடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களை விட இதய நோய் அபாயம் மிகமிகக் குறைவு.

வாய் நாற்றமா? தீர்வு இருக்கு

காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைப்பது பல் துலக்குதலே. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், வாய் நாற்றத்தையும் தவிர்க்கும்.

பல் துலக்குவதன் நோக்கம்: 

பல் துலக்குவது வாயிலும், பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். பல் ஈறுகளில் இருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்கலும் சேர்ந்த கலவையே இந்த அழுக்கு. பல் துலக்கி இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளேயே இந்த அழுக்கு படியத் துவங்கும். இவை பற்களுக்கு மட்டுமில்லாமல், பல் ஈறுகளுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு பல் இழப்பிற்கும் காரணமாகிறது. எனவே தினமும் இருமுறை பல் துலக்குதலும், உணவு உண்டவுடன் வாய் கொப்பளிப்பதும் இன்றியமையாத ஒன்று. இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ பயன்படுத்தலாம்.

பல் துலக்கும் முறை:

பல் துலக்குவதற்கான நிலை, வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ளதை பொருத்து மாறுபடும்.

பெரியவர்கள்:

பல் துலக்கியின் குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பல் துவங்கி முன் பற்கள் வரை மூன்று மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின், வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும் அதே போல், கீழ் தாடையிலும் இடது, வலது, உள், வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.

இந்த சுழற்சியினை சுமார், 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் தேய்க்க வேண்டும். முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக 45 டிகிரி கோணத்தில் பிடித்து மேலும், கீழும் நகர்த்தி, உள்ளும், வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பகுதியில் மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதியில் பல் துலக்கியின் குச்சுகளை நன்றாக அழுத்திப் பிடித்து தேய்க்க வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று, முடித்து விடாமல் மறவாமல் நமது நாக்கின் புற பகுதியில் பல் துலக்கியால் முன்னும், பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்:

சிறார்களை பல் முற்றும் ஈறுகளில், பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். பச்சிளம் பல் முளைக்காத பாலகர்களுக்கும், பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுவது மிகவும் சிறந்தது. 

பிரஷ் முக்கியம்:

முருதுவான, கூர் முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய, பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர்முனை குச்சுகளை தவிர்ப்பது நல்லது. கடினமான, மற்றும் விரைப்பான குச்சுகை கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதபடுத்திவிடும்.

Tuesday, April 5, 2016

மழைக்காலத்தில் நுரையீரல் பத்திரம்


நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுக்காப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.


நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா, உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமிண்ட் உள்ளிட்ட தொழில் பணிபுரிவோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரம் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.

பனிகாலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, 'மாஸ்க்' அணிந்து  கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்
நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்க அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்ப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால் "கண்ட்ரோலர் " மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியம்.

உங்களுக்கு ஏற்ற காலணிகள்

நகை, உடைகள் வாங்குவதை போல செருப்புவாங்கும் போதும், அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகால்களை அழகாக்குவதுடன் பாதங்களின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது. கால மாற்றத்திற்கு தகுந்தபடி செருப்பு அணிவதால், நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செருப்பு வாங்க கடைகளுக்கு செல்லும் போது, டிசைன்களை, குறி வைத்து தேடுவதை விட அளவு பொருத்தமாக இருக்கும் படியும் பார்த்துக் கொள்ளவேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து நான்கைந்து அடி நடந்து பார்த்துதான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணிய கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட, விலைகுறைவான பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுளும் குறையும். கால்களுக்கு பொருத்தமானதாகவும் இல்லாம அழகு கெட்டுவிடும்.

செருப்பு தரையில் வழுக்காமல், கிரிப் உள்ளபடி, அழுத்தம் இல்லாமலும், அதிக கணம் இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடது. ஏனெனில் அது வழுக்குவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்துவிடும்.

வயதான பெண்களும், வாத நோய் உள்ளவர்களும் குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மிருதுவானது என்பதால், இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷுக்கலுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு அடைவதோடு, அதிக வியர்வை வெளியேறி, கண் எரிச்சல் ஏற்படும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷுக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என பார்த்து அணிய வேண்டும். செருப்பு மற்றும் ஷுக்களை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.

உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும்

 உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும் என்பதற்காக, உணவை வெறுத்து பட்டினி கிடக்கக் கூடாது.

  * உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க, உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.

* நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  சாப்பிட்டவுடன் ஒரு போதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டு முடிந்த பின், இரண்டு மணி நேரம் கழித்தே     படுக்கச் செல்ல வேண்டும்.


* குண்டானவர்கள், பால் சாப்பிடுவதை தவிர்த்து, ஆடை நீக்கிய பால், சூப், போன்றவற்றை பருகலாம்.

* எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

நண்பர்களிடம் பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, "டிவி' பார்த்துக் கொண்டோ உணவுப் பொருட்களை கொறிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்.

* கூல்டிரிங்ஸ், காபி, டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

செம்பட்டை முடியை கருமையாக்க!


*வறட்சியான, செம்பட்டை முடியை உடையவர்கள், ஆமணக்கு  எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தலையில் தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால், நாளடைவில் செம்பட்டை சரியாகும்.

* நிலா ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

* தலைக்கு குளிப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன், ஆமணக்கு எண்ணெய் தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.

* ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எலும்பு பாதிப்பா? உணவில் கவனம்

எலும்பு முறிவு, தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, குணமாகும் கால கட்டத்தில், உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

கால்சியம் சத்து மிகுந்த பால் சார்ந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகள், கொட்டை வகைகள், பயிறு வகைகள் போன்றவை, நல்ல எலும்பை உருவாக்க உதவும்.


தவிர எலும்பு பாதிப்பு உள்ளவர்கள், சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவைகளை தவிர்த்து விட வேண்டும். வைட்டமின் 'டி' சத்து இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம். மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள், முட்டை போன்றவை, இதற்கு பேருதவியாக இருக்கும்.

மிகச் சூடான சூரிய ஒளி, கெடுதலை தரும். புரதச் சத்து உணவுகள், நல்ல சதையை உருவாகும். கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளான சோயா உணவு வகைகள் நல்லது.

இதய பரிசோதனையில் இத்தனை வகைய...!


இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய இன்று பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால், பலரை காப்பாற்றி விட முடிகிறது.

ஈ. சி. ஜி. (இதய மின் வரைபடம்): இதயம் சுருங்கும் போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுதும் பரவுகின்றன. இந்த மின் அலைகள் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. யில் மாறுபாடுகள் இல்லாமல் கூட இருக்கும்.

மார்பு எக்ஸ்ரே: இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையும் கண்டறியலாம்.

ரத்த பரிசோதனைகள்: அடிப்படையான ரத்த  பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் குறைபாடுகளையும் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.  
சிறப்பு ரத்த பரிசோதனைகள்: ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிய 'சி. பி. கே - எம். பி. (cpk -mv -creatine  phoshokinase myocardial band) என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் பச்ச்போகைநேஸ் என்ற என்சைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும். ட்ரோ போனின் 'டி பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான மாறுதல்களை உள்ளனவா என்பதை கண்டறிய உதவும்.

எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை : இதயத்தின் அமைப்பு, அதன் செயல்திறன், இதன் வாயிலாக கண்டு பிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றை கண்டுப்பிடித்துவிடலாம்.


டிரட்மில் பரிசோதனை: சில நோயாளிகள் இதயத்தில் உள்ள அடைப்புகளை, அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் இயந்திரத்தில் நோயாளியை நோயாளியை செயற்கையாக நடக்க வைத்து, இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை.

ஆஞ்சியோகிராம் பரிசோதனை: ரத்த குழாயில் ஏற்ப்பட்டுள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது. கை அல்லது தொடை பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனை குழாயை செலுத்தி, இதயத்துக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் செய்யப்படுகின்றது.

கதிர் இயக்கப் பரிசோதனை (நியூக்ளியர் ஸ்கேன் ):
இதய நோயாளிகளுக்கு கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதய தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும்  முடியும். ரத்த குழாய் அடைப்பால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விடலாம். 

நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி

கவனமான பார்வை, ஆர்வம், அக்கறை, புதிய சிந்தனை இவைகள் தான் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகள். இம்மூன்றுக்குமே சிறப்பான பயிற்சிகள் தேவை.

எளிய பயிற்சி முறைகள்:

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,,4,,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாக குறைத்து எண்ணுங்கள். பின்பு நான்கு நான்காக குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி எழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால்,உங்களுடைய நினைவு திறன் நல்ல அளவில் வளர்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் ஒரு பத்தியில் 'எஸ் என்ற எழுத்தையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால்எதனை 'எஸ்' அல்லது 'ஏ' எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை தெரிந்து கொள்ளலாம்.புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.


'டிவி' யில் வரும் விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள். இதே இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை நீகளே ஆறு அறைகளாகப் பிரிததுக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப்போடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையை திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்து நான்கு அறைகளிலும் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்தும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆறு புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனால்லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவு திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஒய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஒய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்து நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.

உறக்கத்தை தரும் உணவு பொருள்


நம்மில் பலர் தூக்கத்தை மறந்து இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருகின்றனர். உண்ணும் உணவும், வாழும் சூழ்நிலையும் ஒருவனின் நிம்மதியான தூக்கத்தை தொலைத்த துரதிர்ஷ்டசாலிகளாய் உள்ளனர்.

உறக்கம் வருவதில் பிரச்சனை இருப்பவர்கள், முதலில் உணவு கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சரியான உணவினை உட் கொள்ளுவதன், மூலம் நல்ல உறக்கத்தைப் பெறலாம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீர் : உறங்கச் செல்வதற்கு முன் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியானைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைபழம் தான். இது அதிக தசை இறுக்கத்தை தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும்  உள்ளது. ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும். 

ஓட்ஸ் : ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம், உறக்கம் வருவதற்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைகின்றன . ஆனால் ஒட்சில் அதிக சீனி சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை  சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

 

பால்: பால், யோகர்ட், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியள்ள கால்சியம், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன், நரம்பிழைகளின் உறுதி தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே உறங்க செல்வதற்கு முன்னர் யோகர்ட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

 

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்கும் போது, ரத்தத்தில் சர்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

செர்ரிபழம்: படுத்தவுடன் உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப் பழரசம் ஜூஸ் அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கைகளை நன்கு கழுவி நோயை 'கை கழுவலாம்'


நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடை பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. கைகளை கழுவுவதாலேயே, பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கலாம். காரணம், காற்றின் மூலமும் நீரின்  மூலமும், மற்றப் பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள் தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5  லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும் போதும், கை கால்களில் பக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.

இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே, அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு, அடிப்படை காரணம், அவர்கள் கைகளை ஒழுங்காகக் சுத்தம் செய்யாமல் இருப்பதே. தவிர ஸ்டேபை 'லோகாக்கஸ் ஆரியஸ்' என்ற கிருமி, நகங்களில் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு, உணவருந்தும் சமயம் உட்சென்று, குடலில் பல்கிப் பெருகி நோயை தோற்றுவிக்கிறது.

கைகழுவும் முறை:
* காலையில் படுக்கையில் எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின், சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட, பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஒட்டி வந்தபின் கைகளை கழுவுவது நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே, கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை, அவர்கள் சீராக கடைபிடிக்கும்படி, செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, 2-3 வினாடிகளில் கழுவக்கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை, பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம்.

தண்ணீர் குடிங்க... ஹெல்த்தியா இருங்க!

வெறும் வயிற்றில்1.5 லிட்டர் தண்ணீரைக் குடித்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இதற்கு பெயர் தான் வட்டார் தெரப்பி. இந்த தெரப்பியில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில் தண்ணீரை குடிப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும், எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரப்பியை கடைபிடிப்பவர்கள், தண்ணீரை குடிப்பதற்கு முந்தய நாள் இரவில் மது அருந்தக் கூடாது. தேவைப்பட்டால், வாட்டர் தெரப்பிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலி 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு, மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். வாட்டர் தெரப்பியை தொடங்கும் போது, முதலில் 4 டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியை தொடங்கும் புதிதில் தண்ணீரை குடித்த 1 மணி நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.


வாட்டர் தெரபியின் நன்மைகள்:
* மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
* நாள் முழுதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* வாட்டர் தெரப்பி உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்று இனிப்பு     ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
* உடல் ஆரோக்கியத்தையும், தொழில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
* உடல் சூட்டை தணிக்கிறது. 
* வாட்டர் தெரபியை முறையாகப் கடைபிடித்து வந்தால், ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ஏழு நாட்களில் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்; இரு நாட்களில் அசிடிட்டியை கட்டுப்படுத்தும்; நான்கு வாரங்களில் புற்றுநோயை கட்டுப்படுத்தும்; நான்கு வாரங்களில் உயர் ரத்தஅழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். மூன்று மாதங்களில் டி.பி. யைக் கட்டுப்படுத்தும்.


தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டு வலி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியால் ஏற்படும் பிரச்சனைகள், காது, மூக்கு, மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.