Pages

Wednesday, November 30, 2016

தலைமுடியை சீவும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கணுக்கால் வலியைப் போக்கும் வழிகள்

எலும்பு வளர்ச்சிக்கு உதவும் பிரண்டைத் துவையல்

Tuesday, November 29, 2016

முகத்தைப் பளிச்செனக் காட்ட, பயத்தம் மாவு பயன்படுத்துங்க!

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?

Monday, November 28, 2016

குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளிக்கும் பீட்ரூட் கீர்

தேங்காய்ப்பால் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்

Sunday, November 27, 2016

வாழைக்காயின் மருத்துவப் பயன்கள்

குழந்தைகள் எதையும் தாமதமாக புரிந்து கொள்பவர்களாக இருந்தால்

தோல் வியாதிகள் ஏற்படாமல் இருக்க....

How to get coconut milk?

Saturday, November 26, 2016

சோப்பிற்குப் பதிலாக கடலைமாவு உபாயகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டிலேயே இருக்கு முடிக்கான இயற்கை கண்டிஷனர்

ஷாம்புக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் இயற்கைப் பொருட்கள்

ஷாம்பு தினமும் உபயோகப்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

Friday, November 25, 2016

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்

அரிசி கழுவிய தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை சாப்பிடாதவங்க இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கங்க!

கேரட் இட்லி

மூட்டுவலியைக் குணப்படுத்தும் கை வைத்தியம்

மூலநோயைக் குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்

Thursday, November 24, 2016

கத்திரிக்காயின் மருத்துவப் பயன்கள்

சோயா பால் தயாரிப்பது எப்படி?

சோயா மொச்சை சாப்பிட்டால்...

சில எளிய மருத்துவக் குறிப்புகள்

கழுத்துக் கருமை மறைய...

விந்தணு குறைபாட்டை சரி செய்யும் இயற்கை வழிகள்

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்

Wednesday, November 23, 2016

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

வீட்டிலேயே நெய் தயாரிப்பது எப்படி?

கொய்யா இலையின் மருத்துவப் பயன்கள்

முடி உதிர்வைத் தடுக்கும் கொய்யா இலை!!

பிசுபிசு தோல் பாதுகாப்பிற்கு......

ஒரு சிறிய பவுலில் 3 டீஸ்பூன், அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1
டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முதல் நாள் இரவு 10 பாதாமை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் ஆக செய்து, சிறிது தேன் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தக்காளி சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ராகி ரொட்டி

ragi rotti க்கான பட முடிவு

 தேவையானவை:

  • ராகி மாவு - அரை கிலோ

  • சாம்பார் வெங்காயம் - 100 கிராம்

  • முருங்கைக்கீரை - அரை கட்டு (ஒரு கப்)

  • தேங்காய் - அரை முடி (துருவியது)

  • பச்சைமிளகாய் - 3

  • உப்பு - தேவைக்கு

  • எண்ணெய் - தேவைக்கு
செய்முறை

கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் கீரையை போட்டு வதக்கவும். அகலமான பாத்திரத்தில் மாவு, வதக்கிய கீரை, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு பாலித்தீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் தட்டிய ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் திருப்பி போட்டு சுடவும். ( ரொட்டியின் நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் அப்போது தான் உள்ளேயும் சீக்கிரம் வேகும்)ரொட்டி வெந்ததும் எடுத்து விடவும். சுவையான முருங்கைக்கீரை ராகி ரொட்டி ரெடி. தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

கூந்தல் பளபளப்பாக இருக்க....

சாப்பிடும்போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தூதுவளையின் மருத்துவப் பயன்கள்

Tuesday, November 22, 2016

சில சமையலறைக் குறிப்புகள்

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்!!

பாலைக் காய்ச்சும்போது...

பாகற்காய் வறுவல்

Monday, November 21, 2016

ஒற்றைத் தலைவலியா திராட்சை சாப்பிடுங்க!


 grapes க்கான பட முடிவு
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் திராட்சை. அபரிதமான சத்துக்களை கொண்டுள்ள இந்த பழம், எளிதில் ஜீரணமாகக்கூடியது. உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவிலோ இருக்கும் இந்த பழம் பச்சை, கருப்பு, நீலம் ஆகிய கலர்களில் இருக்கும்.\ குளூக்கோஸ் வடிவிலான, சர்க்கரை அதிகம் உள்ள பழம் இது. குறுகிய காலத்தில் உடம்புக்கு தேவையான வெப்பத்தையும், சக்தியையும் திராட்சை வழங்கும். பழ மருத்துவ முறையில் திராட்சையின் பங்கு சிறப்பானது. திராட்சைக்கு மலச்சிக்கலை போக்கும் சக்தி உண்டு. 

350 கிராம் திராட்சை உண்பதால், உடலில் சக்தி கூடுவதோடு, வயிறு, குடல் பகுதிகளை வலுப்படுத்துகிறது. திராட்சை லேசான உணவு என்பதால், அஜீரணத்தை போக்குவதோடு, வயிறு எரிச்சலையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை உண்பதன் வாயிலாக, சிறுநீரக கற்கள், உள்ளிட்ட பிரச்னைகள் எளிதில் குணமாகின்றன. 

ஒற்றைத்தலைவலிக்கு திராட்சைபழ ஜூஸ் சக்தி வாய்ந்த மருந்தாகும்.

பருவை அப்படியே விடு, கிள்ளினால் வரும் வடு!


 pimples க்கான பட முடிவு

முகப்பருக்களால் ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அதை போக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுவும், பருக்கள் ஏற்படுத்திச் சென்ற வடுக்களை போக்க, இளம் வயதினர் படும் பாடு சிறிதல்ல. பரு வந்தால் சிறிது நாட்களில் போய் விடும். "டிவி' பார்க்கும் போது அதை நகத்தால் கிள்ளி பாடாய்படுத்துவதால், வடுக்களை நிரந்தரமாக விட்டுச் செல்கிறது. சிறிது நாட்களில் தானாக மறையும் பருவை கிள்ளாமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்கும்.

சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கும்போது முகப்பருக்கள் வருகின்றன. இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முகப்பருவை போக்க முடியும். குறிப்பாக, சுத்தமான தேனை பயன்படுத்தி முகப்பருக்களைப் போக்கலாம் என்பது தெரியுமா?

கற்றாழை மற்றும் தேன் மாஸ்க்: கற்றாழையுடன், தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகப்பருக்களை தடுக்கலாம். அவகேடோவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

சர்க்கரை மற்றும் தேன்: சர்க்கரையுடன் தேன் கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கிரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, எண்ணெய் பசையின் சுரப்பும் குறைந்து, பருக்கள் வருவது தடுக்கப்படும்.

ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: ஓட்ஸ், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேனை ஓட்ஸ் பொடியுடன் சேர்த்து, முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், அவை பருக்களை போக்குவதோடு, அதனால் ஏற்படும் வடுக்களையும் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் மாஸ்க்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறும். அதிலும், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் தேன் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பால் மற்றும் தேன் மாஸ்க்: பாலுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. எனவே தேனுடன் பாலை சிறிது சேர்த்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் மறையும்.

பட்டை மற்றும் தேன் மாஸ்க்: தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மையும், பட்டையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும் இருப்பதால், இவற்றைக் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் மறையும். பட்டை பொடியுடன் தேனை கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் காணாமல் போய்விடும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

இரத்த சோகையைக் குணமாக்குவது எப்படி?

இரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

இரத்த சோகை என்றால் என்ன? ஏன் வருகிறது?

வெந்தயக்கீரை சப்பாத்தி

டீ சுவையாகவும், மணமாகவும் இருக்க......

செம்பருத்தி இலையின் மருத்துவப் பயன்கள்

சப்பாத்தி மிருதுவாக இருக்க...

Sunday, November 20, 2016

கம்பின் மருத்துவப் பயன்கள்

முடி நன்றாக வளர...

சாம்பார் வைக்கும்போது...

சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்....

புடலங்காய் கூட்டு

அவரைக்காய் பொரியல்

Saturday, November 19, 2016

சென்னை மட்டன் தொக்கு


 mutton gravy க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

மட்டன்  1/2 கிலோ

வெங்காயம் 200 கிலோ

தக்காளி 200 கிலோ

இஞ்சி பூண்டு விழுது

ப. மிளகாய்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

எலுமிச்சை சாறு

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

தனியா தூள்  - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகு தூள்

உப்பு

எண்ணெய்

சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை

செய்முறை :


• குக்கரில் மட்டன், வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்,

• கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த மட்டனை போட்டு வதக்கவும்.

• தொக்கு நன்கு சுண்டியதும் மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழியவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தூவி இறக்கவும்


  

கொத்தமல்லி சூப்


 coriander soup க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

பச்சை கொத்தமல்லி - 2 கட்டு,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
பிரெட் துண்டு - 2,
தண்ணீர் - 4 கப்.

செய்முறை :

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும்.

• அதில் 4 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

• கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.

• வெண்ணெயும் சேர்க்கவும்.

• கார்ன்ஃப்ளார் சேர்த்ததும், கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.

•  ரொம்பவும் கெட்டியாவதற்குள், அதில் கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கி, உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பரிமாறவும். 

வெந்நீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்

துளசியின் மருத்துவப் பயன்கள்

ராகி தோசை

Friday, November 18, 2016

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?

வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

தேங்காயின் மருத்துவப் பயன்கள்!!

Wednesday, November 16, 2016

ராகியின் மருத்துவப் பயன்கள்

வெண்டைக்காய் வதக்கல்

செம்பருத்திப் பூவின் மருத்துவப் பயன்கள்

நகங்களைப் பராமரிப்பது எப்படி?

Monday, November 14, 2016

Sunday, November 13, 2016

பனீர் தயாரிக்கும்போது கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்...

பனீர் தயாரிக்கும்போது கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்...

பனீர் தயாரிப்பது எப்படி?

இயற்கை கொசு விரட்டி

முளை கட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

வீட்டிலேயே முளை கட்டிய தானியங்களை தயாரிப்பது எப்படி?

Saturday, November 12, 2016

துளசி டீ - Tulsi Tea

கொத்தமல்லித் தழையின் மருத்துவப் பயன்கள்

கொத்தமல்லித் துவையல்

அகத்திக்கீரையின் மருத்துவப் பயன்கள்

உள்ளங்கை மென்மையாக இருக்க...

Friday, November 11, 2016

எளிய அழகுக் குறிப்புகள்

எளிய அழகுக் குறிப்புகள்

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்

மைசூர் பாகு

அத்திப்பழம் மில்க் ஷேக்

Wednesday, November 9, 2016

வீட்டிலேயே குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

முகத்திற்குத் தேவையான சில பயிற்சிகள்

முருங்கைக் காயின் மருத்துவப் பயன்கள்

குழந்தைகளை எப்படிக் குளிப்பாட்ட வேண்டும்?

காய்கறிகளை உபயோகப்படுத்துவது பற்றி சில குறிப்புகள்!

Monday, November 7, 2016

இதய நோயாளிகளே...காளான் சாப்பிடுங்க!


காய்களின் ராஜாவாக கேரட்டையும், ராணியாக காளானையும் குறிப்பிடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரத சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் உள்ளது, அதில் கொழுப்பும் இருக்கிறது.

ஆனால் அவை கொலஸ்ட்ராலை ரத்தத்தில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் காளானில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே காளானை பயமின்றி சாப்பிடலாம். இதனால்தான் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய வியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி முதலியவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியை தந்துவிடுகின்றன. புரத சத்து அதிகம் உள்ள காளானில் மிக முக்கியமான இரும்பு சத்தும், பல வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் 'ஏ' அதிகளவில் இருக்கிறது. காளானில் உடல் வளர்ச்சிக்கு தேவையான எட்டு வகையான அமிலோ, அமிலங்கள் உள்ளன.

காலரா, அம்மை நோய், விஷக் காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாக காளான் சூப் நல்ல பலன் தரும். காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை பெற்றுள்ளது. வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் சமைத்து சாப்பிடலாம்.

பிரியாணி செய்தால் காளான், முட்டை, பச்சைப் பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல் சேர்க்க வேண்டும். இது சத்தான உணவு. இது உடல் ஆரோக்கியத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும். உடல் நலத்தில் அக்கறை உள்ள அனைத்து தரப்பினரும் வாரத்தில் ஒரு முறை காளான் சூப் வைத்து சாப்பிடுவது நல்லது.

ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தை விட 12 மடங்கும் முட்டைகோசைவிட2 மடங்கும் புரதச்சத்தும், மருத்துவ குணங்களும் நிரம்பியது காளான். நமது நாட்டில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொட்டு காளான், சிப்பி காளான், வைக்கோல் காளான் என மூன்று வகை காளான்களை உற்பத்தி செய்து நாம் பயன்படுத்துகிறோம். இதய நோயாளிகள் வலி குறைந்து உற்சாகமாக  இருக்க காளான் உணவுக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி!


பழங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையாகும். உணவில் பழங்களையும், காய்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் நம்மை விட்டு தூர போய்விடும். அந்த அளவுக்கு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும், சத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக,  லிச்சிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.

லிச்சிப்பழம் பற்றி தென் மாநில மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வடமாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. லிச்சிப்பழம் சிவப்பு நிறத்தில், கெட்டியான தோலுடன் இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில், பழத்தின் சுளை முட்டை போல் இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் அப்பழத்தில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

லிச்சி, அதிக கலோரி கொண்ட பழமாகும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி, குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராமும், எலும்பு, பல் வலிமை பெற உதவும் கால்சியம், 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்புச்சத்து, 0.7 மி.கி., உள்ளன.

உடலில் முக்கிய உறுப்புகளாக செயல்படும், இதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க லிச்சிப்பழம் உதவும். லிச்சிப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு, ஈரலுக்கு உரம் ஊட்டும்; தாகத்தை தணிக்கும். இதில் வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இது சிறந்த பழம். தினமும் ஒரு லிச்சிப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி அதிகமாகும்.  ஏனெனில், சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் போலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.

வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்புச் சத்துகளை உறிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினம் ஒரு லிச்சிப்பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்...வாருங்கள்!

தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்


 தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்

ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை. பெண்கள் தொப்பையை குறைக்க தினமும் 20 நிமிடம்  செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும்.

கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.

தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

பலன்கள்:
தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும். 

சர்க்கரைக்கு பதிலாக என்ன பொருட்களை நாம் உபயோகப்படுத்தலாம்1

குழந்தைகள் சர்க்கரை உட்கொள்வதை எப்படி குறைப்பது?

குழந்தைகளுக்கு சர்க்கரை அதிகம் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Sunday, November 6, 2016

தலைவலியை குணமாக்கும் வீட்டு வைத்தியம்

சிக்கன் லாலிபாப்

உருளைக் கிழங்கு கட்லெட்

வாய் நாற்றத்தைத் தவிர்க்க...

சுத்தமான தேனைக் கண்டறியும் வழிகள்

Saturday, November 5, 2016

கர்ப்பிணிப் பெண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் அவசியம்

தாளிப்பதற்கு க‌றிவே‌ப்‌பிலை ஏன்?

இருமல், சளிக்கு அருமருந்து கற்பூரவல்லி!!

இருமல், சளிக்கு அருமருந்து கற்பூரவல்லி!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனத்திற்கு

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகள்

Thursday, November 3, 2016

ரசகுல்லா

கார கொழுக்கட்டை

பூண்டை எளிதில் உரிக்க....

இட்லிக்கு மாவு அரைக்கும்போது...

சருமத்தில் எண்ணெய்ப் பசை நீங்க !

துணிகளில் படிந்த கறைகளை நீக்க

தழும்புகள் மறைய....

Wednesday, November 2, 2016

தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள்

தலைவலி வராமல் தடுக்க சில யோசனைகள்

ஸ்கிப்பிங் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்

ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டியவை

தொப்பையைக் குறைக்கும் அன்னாசி

Tuesday, November 1, 2016