Pages

Sunday, March 30, 2014

பெண்களுக்கு வரும் பொதுவான உடல் பிரச்சினைகள்

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.

அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.

மாதவிலக்கு பிரச்சினைகள்:

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்: 

இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

கருப்பை கட்டிகள் (நார்த்திசுக்கட்டிகள்):

நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும்.

பெரும்பாலான பெண்கள் இவ்வகை நார்த்திசுக்கட்டிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரக நோய்த்தொற்று: இது ஆண்களை விடவும் பெண்களை அவர்களது மாதவிலக்கானது முற்றிலும் நின்று விட்ட பிறகு தாக்குகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபட முடியும்
உடல் பிரச்சினைகள்


இரத்த சோகை:

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் முக்கியத்துவம் தரும் பெண்கள் தங்களுடைய உணவைச் சரியாக எடுத்துக் கொள்ளாததாலேயே இந்நோய் அவர்களை தாக்குகின்றது. இரும்புச் சத்துள்ள இயற்கை, உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மார்பக மற்றும் கர்ப்பபை வாய்ப்புற்றுநோய்:

பெரும்பாலும் பெண்களை அச்சுறுத்தும் நோய் என்று இதைச் சொல்லலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தாமதமான திருமணம், மோசமான உணவு, அதிகமாக புகையிலை மற்றும் மது அருந்துதல் இவற்றின் மூலம் இந்நோய் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தில் கட்டியோ அல்லது தோல் தடித்து இருந்தாலோ, மார்பக காம்பிலிருந்து திரவம் போன்ற பொருள் வெளியேறினாலோ கட்டாயம் அவை மார்பக புற்றுநோயின் அறிகுறி என்று சொல்லலாம்.

பாலியல் தொடர்பு, குழந்தைப்பேறில் இடைவெளி இல்லாமல், சுகாதாரமின்மை இவை அனைத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணங்களாகும். இந்நோய் பெரும்பாலும் முற்றிய பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றது என்று சொல்லலாம்.

இதய நோய்கள்:

இப்பொழுது இளம் பெண்களையும் இந்நோய் தாக்குகின்றது. மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் இந்நோய் தோன்றக் காரணமாக இருக்கின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ்:

எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. கீலவாதம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களும் பெருமளவில் பெண்களை தாக்குகின்றன.

Saturday, March 29, 2014

கருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்


மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

• கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு
முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

• முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.

• ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

• ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

காலை நேர உணவு அவசியம் !

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Friday, March 28, 2014

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்-2

உலர் திராட்சை
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.

மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

கொய்யா
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Thursday, March 27, 2014

உலக சித்தர் தினம்: நோயின்றி வாழ உறுதி கொள்வோம்


சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவு கொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

இவர்கள் இன்னும் இவ்வுலகில் பல வடிவங்களில் மனித உருவில் கலந்து மனிதர களின் துயரை களைந்து தங்களின் மகா சக்தியை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர் சித்தர்கள். எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.

எளிய நோய்களான காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புண்கள், கழிச்சல், தலை வலி, கைகால் மூட்டு வலிகள், சோகை, கடின நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், காச நோய், பிறப்புறுப்பு நோய்கள், தொழுநோய், புற்று நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளையும், உலோகங்களையும், தாது உப்புக்களையும், உபரசங்கள் பாடா ணங்களையும் மருந்தாக்கி கொடுத்துதான் மேற்கண்ட நோய்களில் இருந்து மக்களை காத்து வந்தனர் சித்தர்கள்.

அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சோதனைக்கான ஆய்வுக்கூட வளர்ச்சி, அயல் நாட்டு சிகிச்சை, புதிய வகை ரசாயன மருந்துகள், கண்டுபிடிப்புகள் போன்ற இத்தனை வந்த பிறகும், வளர்ச்சிகளை நாம் அடைந்த பிறகும் நோய்களை கண்டு நாம் இன்னும் பயந்து கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம்.

அதிக நேரம், அதிக பணம், அதிகமான மருந்துகள், ஆலோசனைகள் தந்த

பேராசைகளை துறந்து கடமையை சரியாக செய்ய வேண்டும். அயல்தேச நவீன கலாச்சாரங்களை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். பணமே பிரதானமாக எண்ணி உடலை வருத்தி சம்பாதித்து மருந்துக்கு செலவழிப்பதை விட உடலே பிரதானமாக உணவை மருந்தாக எண்ணி உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழை முதல் பணக்காரர் வரை பாரபட்சமின்றி அனைத்து நோய்களும் அனைத்து தரப்பினருக்கும் வந்து விட்டது. கூலி தொழிலாளி முதல் உயர் படிப்பு படித்த, ஏன் மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் வந்து விட்டது சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய். இதற்கு யார் காரணம். எங்கிருந்து வந்தது. எதனால் வந்தது. தீர்க்க வழி உண்டா, இல்லையா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் 15 குழந்தைகள் வரை பெற்றெடுத்த தாய்மார்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அன்று தடுப்பூசி இல்லை. மகளிர் மருத்துவர் ஆலோசனை, தொடர் கண்காணிப்பு இல்லை. சத்து ஊசி இல்லை. சத்து மாத்திரை இல்லை. ஆனாலும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் சுகப் பிரசவம்.

இன்று எல்லாம் இருந்தும் மனித இனம் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம். மருத்துவராலும், மருந்தினாலுமே நோயிலிருந்து நம்மை காக்க முடியாது. நாம் மனது வைத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை காத்து ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழமுடியும். உண்ணும் உணவுதான் மருந்து.

ஒவ்வொரு உணவு பொருட்களுமே ஒவ்வொரு உடல் உறுப்புகளை வளர்க்கிறது, பாதுகாக்கிறது. உணவு பொருட்களான தானியங்கள், காய்கள், கனிகள், கீரைகள், பயிறு வகைகள் இவைகள் அனைத்தும் தான் நோய் தீர்க்கும் மருந்துகள். இவைகள் போக நம் வீட்டிலும், தோட்டத்திலும் இருக்கும் மூலிகை தாவரங்கள் தான் நோய் தீர்க்கும் மருத்துவர்கள். எந்த நோயை கண்டும் பயப்பட தேவையில்லை.

உணவு பொருட்களாலும், மூலிகைகளாலும், சித்தர்கள் சொன்ன வழி முறைகளை கடைபிடித்து சித்த மருந்துகளை சித்த மருத்துவர்கள் (உண்மையான பட்டம் பெற்ற, உண்மையான பாரம்பரிய மருத்துவர்கள்) ஆலோசனை பெற்று எடுத்துகொள்ள நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்.

சர்க்கரை நோய்க்கும் சகல நோய்க்கும் ஒரே மருந்து........

வெந்தயம்-600 கி.
கொள்ளு-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன் நிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீருக்கு 2 டீஸ்பூன் பொடியை கலந்து அடுப்பில் கொதிக்க வைத்து 100 மில்லியாக (1 டம்ளராக) சுண்டக்காய்ச்சி வடிகட்டி நோயின் தீவிரத்திற்கு ஏற்ப 6 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆகாரத்திற்கு முன்பு (குறைந்தது 45 நிமிடம்) குடித்து வர சர்க்கரை நோய் மட்டுமல்ல, சகல நோயும் தீரும், இது அதிசயம் ஆனால் உண்மை.

உடல் பருமனால் வயிற்று பிரச்சினையா?

கொள்ளு ரசம்-கொள்ளு கசாயம் கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், இன்சுலின் ஊசி வேண்டாம்........

வரகொத்துமல்லி-500 கி.
வெந்தயம்-250 கி.

இவற்றை தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்பு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 2 டீஸ்பூன் பொடியை கலந்து கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்டக்காய்ச்சி பின்னர் அதனை வடிகட்டி 2 அல்லது 3 வேளை சாப் பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் போயே போச்சு.

முதுமை வராமல் இளமையோடு இருக்க..........

 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்து பொடியை தினமும் 2 வேளை 5 கிராம் தேனில் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் (சாப்பாட்டிற்கு பிறகு) முதுமையின்றி இளமையோடு வாழலாம். திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திÛரை (காலை 2, இரவு 2) சாப்பிடலாம். இதனை சாப்பிட முதுமை வராது.

ஆண்மையுடன் அழகாக இருக்க...........

அமுக்கரா சூரணம் 5 கிராம்,
2 வேளை (அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி கலந்தது) பாலில் கலந்து சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடலாம். அல்லது அமுக்கரா சூரண மாத்திரை காலை 2, இரவு 2 சாப்பிட ஆண்மை வலுவடைந்து மேனி அழகுபெறும்.

மலம் தினசரி கழிக்க......

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) பொடியை அல்லது மாத்திரைகளை காலை, மாலை 5 கிராம் (2-0-2) வெந்நீரில் கலந்து பருகினால் பலன் உண்டு.

சித்த மருத்துவம்

பிறகும் நோய் பயம் இன்னும் தீரவில்லையே. மனிதன் மாறவேண்டும், தன்னுடைய உணவு முறையை மாற்றவேண்டும். பழக்க வழங்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உறங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழ் கலாச்சாரம் சொன்ன ஆலய வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.

Wednesday, March 26, 2014

திராட்சை:சத்துப்பட்டியல்

திராட்சை
கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு உண்டு. சிறு உருண்டைகளாக திரண்ட கொத்தாக இருக்கும் திராட்சையை, 'சத்துக்களின் கொத்து' என்று புகழ்ந்தால் மிகையில்லை. அந்த அளவிற்கு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது. அவற்றிலுள்ள சத்துக்களின் பட்டியல்...

* திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் 'ரெஸ்வரடிரால்' எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. 'கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.

*'ரெஸ்வரடிரால்' ஆன்டி-ஆக்சிடென்ட்டிற்கு முடக்குவாதத்தை முடக்கும் குணமும் உண்டு. ரத்தத் தட்டுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரிப்படுத்தும். ரத்தத்தட்டுகள் சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் உற்பத்தியை பெருக்குகிறது.

* ஆன்தோசயனின் எனும் நோய் எதிர்ப்பு பொருள், சிவப்பு திராட்சையில் அதிகமுள்ளது. இது ஒவ்வாமை வியாதிகளுக்கு எதிராக செயல்படும். நோய்த் தொற்றை தடுப்பது, புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களிலும் பங்கெடுக்கும்.

* கேட்சின் எனும் டேனின் குழும ஆன்டி-ஆக்சிடென்ட், வெள்ளை-பச்சை திராட்சையில் காணப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும்.

* நுண் ஊட்டச்சத்துக்களான தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. தாமிரமும், மாங்கனீசும் நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணை புரியும். உலர் திராட்சையில் அதிக அளவு இரும்புத்தாது கிடைக்கிறது. மேலும் 100 கிராம் திராட்சையில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது.

* 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது.

சாப்பிடும் முறை......... திராட்சைகள் அப்படியே சாப்பிட ஏற்ற கனி வகையாகும். கோடைகாலத்தில் மிகுதியாக உண்டால் உடல் ஆற்றல் இழப்பை ஈடுகட்டும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

உலர்ந்த திராட்சை கேக் வகைகள், ரொட்டி வகைகள், கேசரி வகைகள் மற்றும் பாயாசம் போன்ற இனிப்பு பானங்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் உணவுத் தொழில்துறையில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் ஒயின் தயாரிப்பில் திராட்சை பயன்படுகிறது.

நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!

கண்கள்
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது மாதிரி, உடல் நோய் பாதிப்புகளை கண்கள் எடுத்துக்காட்டி விடும். அவ்வாறு கண்கள் விடுக்கும் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை இங்கு காணலாம்...

கண்கள் உப்பியிருப்பது....... உடல் பாதிப்பு: சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை இது குறிக்கும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து   கழிவுப்பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவரச் செயல்படவில்லை என்றால் உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். அது கண்களைச் சுற்றித் தேங்குவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

செய்ய வேண்டியது: உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட உதவும்.

கண் இமைகளில்....... வலி உடல் பாதிப்பு: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் உடலில் மக்னீ சியம் குறைவதால் உடல் சோர்ந்து கண் இமைகளில் வலி ஏற்படுகிறது.

செய்ய வேண்டியது: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்..... உடல் பாதிப்பு: அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பது. இந்த நெருக்கடியால் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென்று அதிகப்படியான வெளிச்சமும், புள்ளிகளும் தெரிகின்றன.

செய்ய வேண்டியது: எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது....... உடல் பாதிப்பு: ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடும்போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் கண்கள் உலர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன.

செய்ய வேண்டியது: அன்றாடம் குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் அசைப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒருநாளில் இரண்டு முறை செய்ய வேண்டும். கண்கள் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடியாக உடம்பைக் கவனிப்பது, பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும்!

Tuesday, March 25, 2014

துரியன் பழம் - சத்து பட்டியல்

துரியன்
பழங்களின் அரசன்' என்ற பெயர் துரியன் பழத்திற்கு உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் துரியன் பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்...

* வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல துரியன் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* சாப்பிட்ட உடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* கொழுப்புச்சத்து நிறைய அளவில் உள்ளது. நிறைவுறா கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி துரியன் பழத்திற்கு உண்டு.

* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கிறது.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான 'வைட்டமின் சி' துரியன் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது நோய்த் தொற்றுகளை தடுக்கும். தீமை தரும் 'பிரீ-ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும்.

* நியாசின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் தயமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

* தாது உப்புக்களான மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மக்னீசியம் துரியன் பழத்தில் குறிப்பிட்ட அளவு உள்ளது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு நொதிகள் துரிதமாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக துணைபுரியும். துடிப்புள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு இன்றியமையாதது இரும்புத்தாது.

* பொட்டாசியம் தாது மிக அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இத யத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

* டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் துரியன் பழத்தில் உள்ளது. இதனை 'உறங்கும் மருந்து' என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும். இவை நரம்புகள் நலமாக இருக்க அவசியமான ரசாயனமாகும். தூக்கத்தை தூண்டுவதி லும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

சாப்பிடும் முறை.......... துரியன் பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம். ஐஸ்கிரீம், மில்க்ஷேக் ஆகியவற்றில் துரியன் பழம் சேர்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் 'சாயர்' எனப்படும் துரியன் சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள துரியன் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படு கிறது. 'துரியன் சாஸ்' செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் 'இகான் பிரெங்கஸ்' என்ற பெயரில் துரியன் சாஸ் பிரபலம்.

பழுக்காத துரியன் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.

வயிற்று வலி


வயிற்று வலி
உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம்பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய் சேர்த்தோ அல்லது இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இதனால் உஷ்ண சம்பந்தமான வயிற்றுக் கோளாறு நீங்கும். மூலச்சூட்டினால் அவதியுறுவோர் மாங்கொட்டையை உடைத்து அதனுள்ளிருக்கும் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வயிறு உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்து பின் அந்நீரை அருந்தலாம். அதுபோலவே வயிற்றுக் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் போதும். சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதனால் சரிவர பசிக்காது.

இதற்கு அன்னாசிப் பழம் நல்ல மருந்தாகும். அன்னாசி பழச்சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளது. அதுபோன்றே மாங்கொட்டை பருப்பும் பூச்சிகளை ஒழிக்கும். மாங்கொட்டையை உலர்த்தித் தூள் செய்து சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சித் தொல்லை ஒழியும்.

மேலும் பித்தத்தினால் ஏற்படும் தொல்லையை நீக்க இஞ்சி சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் பெறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தேசிக்காய்ச் சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வயிற்றுளைச்சலுக்கு சூடான பாலில் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து பால் முறிந்த பின் தெளிந்து வரும் நீரைப் பருகினால் போதும்... உளைச்சல் கட்டுப்படும்.

Saturday, March 22, 2014

கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்

கிவியின் நன்மைகள்: கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில்

போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.

மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.

மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.


கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

உணவகங்களில் சாப்பிட விரும்பும் நாகரீகம்

உணவகங்கள்
உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு தான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான். பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்பட்ட மாற்றம் இது.

வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாகவோ, களைத்தோ வீடு திரும்பும்போது, ‘குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளியே சாப்பிட்டால் என்ன?’ என்ற சிந்தனை எழுகிறது. திடீர் விருந்தாளிகள் வரும்போதும், திருமணநாள்,   பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பும்போதும் உணவுக்காக ஓட்டல்களை நாடுகிறார்கள். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்க, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டையடிக்கவும் உணவகங்கள் பயன்படுகின்றன.

பெண்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் ஆண்களும் சுவையாக சமைக்கிறார்கள். காரணம் உணவகங்கள். ஒரு பொருளை சாப்பிடும் போதே, இது எதனால் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சாப்பிடும் போது அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கமும், செய்முறையும் தெரிந்துவிடும். பிறகு அதை வீட்டில் செய்துபார்க்கிறார்கள்.

எதிர்பார்த்த சுவை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ஓரளவு அதில் வெற்றிபெற்று மகிழ்ச்சிஅடைகிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் புதிய வகை உணவுகளை சமைக்க கற்றுக் கொள்கிறார்கள். இதனால் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு படிப்பினையாகிவிடுகிறது. ஒரு சில உணவகங்களில் தங்களது சுவைமிகுந்த ரெசிபிகளை, எப்படி தயாரிப்பது என்று வாடிக்கையாளர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள்.

ஒரு உணவுக்கு பல ஓட்டல்களில் ஒரே பெயர்தான் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தான் சேர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுவை அதிகமுள்ள உணவகங்களில்தான் கூட்டம் சேருகிறது. சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் உணவகங்கள் வித்தியாசமான உணவுவகைகளை தயாரிக்கின்றன.

பாரம்பரிய உணவுகள், கான்டினென்டல், சைனீஷ், கிரேக்கம், இத்தாலி என்று பல்வேறு நாட்டு உணவுகள் இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. வட இந்திய, தென் இந்திய உணவுகளும் மக்களை கவர்கிறவே செய்கிறது. ‘உணவுத் திருவிழா’வை பல்வேறு உணவகங்கள் நடத்துகின்றன. அப்போது சிறப்புக்குரிய உணவுகள் பலவற்றை சுடச்சுட தயாரித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உணவுப்பிரியர்களாக மாற்றிவிடுகிறது.

உணவு மட்டும் சுவையாக இருந்தால் போதாது. அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தின் சூழ்நிலையும், அழகும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கவேண்டும். அதோடு உணவு பரிமாறுகிறவர்களும் இதமாக   நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் திருப்திபடுத்தும் உணவகங்களே மக்கள் நாவில் மட்டுமல்ல, மனதிலும் இடம் பிடிக்கின்றன. நீங்கள் உணவுப்பிரியர் என்றால், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்...

* உங்கள் பகுதியை சுற்றியிருக்கும் தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

* ஷாப்பிங் முடிந்து அந்தப் பகுதியிலுள்ள உணவகத்திற்கு செல்லதிட்டமிட்டிருந்தால், அவசரப்படாமல் சரியான உணவகங்களை தேர்ந்தெடுத்து உணவருந்துங்கள்.

* பிரபலமான ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன் கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.

* முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள்.   ஏன் என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரீகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.

* குழுவாக சாப்பிடச் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தால், பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப்படுத்திவிடுங்கள்.

* எந்த உணவகத்திற்குச் சென்றாலும் அங்கு பணிபுரியும் ஊழியர் களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.

* நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஒரு முறை ஆர்டர் செய்து விட்டு, பாதியில் ஆர்டரை மாற்றாதீர்கள். நீங்கள் ஆர்டர் செய்த உணவு பாதி தயாராகிவிட்ட நிலையில் மாற்றினால், உணவகத்தினருக்கு அது அசவுகரியம் ஆகிவிடும்.

* குழந்தைகளை அழைத்துச் செல்வதாக இருந்தால், உணவகங்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது   என்று கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.

* பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீகரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* பசியோடு நிறைய பேர் காத்திருக்கும் போது வெறும் டீ, காபி ஆர்டர் செய்துவிட்டு மணிக்கணக்காக இடத்தை பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம்.

* ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.

* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.

* உங்களுக்காக வரவழைக்கப்பட்ட உணவுகளையே நீங்கள் சாப்பிட வேண்டும். உடன் இருப்பவர்கள் என்றாலும், அவர்களுக்கான உணவை நீங்கள் பங்கிடுவது அவர்களுக்கு அசவுகரியத்தை உருவாக்கிவிடும்.

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்
உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.
இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மனித உடலுக்கு தண்ணீர் கட்டாயம் தேவை

தண்ணீர்
தண்ணீரையும், மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியமானது. தண்ணீர் தான் ஜீரணத்துக்கு உதவுகிறது. வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை எடுத்துச் செல்கிறது.

உடலின் சேரும் திட மற்றும் திரவக் கழிவுனை வெறியேற்றவும், உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் அவசியம். நமது உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீரில் தான். இதில் இருந்து 5 முதல் 10 சதவீதம் நீர் உடலில் இருந்து வெறியேறினாலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுவே 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் மரணம் வந்து சேரலாம். ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சிறிது நாட்களை ஒட்டலாம். தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கு ஒரு காதுகாப்பு போர்வை போலவும். மெத்தை போன்றும் தண்ணீர் செயாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும் ரத்தத்தின் அடிப்படைக்கும் மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம்,தண்ணீர்,கோழைவடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாக திகழ்கிறது.

உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கும் உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.

வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவே தான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் 75 முதல் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குழந்தைகளின் தோல் மென்மையானதாக காணப்படுகிறது.

அதுவே 65-70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாக குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் கட்டாயம் தேவை.

Friday, March 21, 2014

தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது

தயிர்
சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் , சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும்.

தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான். அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு பக் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம். மெனோபாஸ் எட்டப் போகும பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன.

கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.

தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அதிகம் சேர்த்துக கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்.

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து. குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.

மிளகின் மருத்துவ குணங்கள்

மிளகு
நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.

கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது.

மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம். உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது.

ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 19, 2014

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி

செம்பருத்தி
மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பழைய சோற்றில் இருக்கு சத்து

பழைய சோறு
கியாஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆராய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்.

தொப்பையை குறைக்கும் அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழம்
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..

மேனியை மினு மினுக்க வைக்கும் வழிகள்

ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும். தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

அழகு
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.

Tuesday, March 18, 2014

பல்வலி நீங்க எளிய வைத்தியம்

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

Monday, March 17, 2014

துளசியின் மருத்துவ குணம்

துளசிதுளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன. 

துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். 'திருத்துழாய்' என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது.

துளசியின் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவருவதன் மூலமாக இதனை தடுக்க முடியும். குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, வெண்குஷ்ட நோய்க்கு, நீரிழிவு நோய், களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாராக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள்.

Sunday, March 16, 2014

மூட்டு வலியால் முடக்கம்

மூட்டு வலி
பொதுவாக மூட்டுகள் மூன்று வழிகளில் பாதிக்கப்படுகின்றன. முதலாவது தேய்மானத்தால் வருவது. சர்க்கரை நோய் இளமையிலேயே முதுமையை கெடுக்கும். சாதாரணமாக 65-70 வயதுகளில் வரக்கூடிய தேய்மானம் 40-50 வயதில் வந்து விடும். இரண்டாவது வகை. நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படுவது.

காசநோய் கிருமிகள் போன்ற கிருமிகளால் வரக்கூடியது. மூன்றாவது வகை மூட்டு பாதிப்பு தன்னைத்தானே தாக்கும் நோய்களில் ஒன்றால் வருவது. இந்த பாதிப்பு திடீரென வரலாம். விரைந்து சரியாகி விடும் அல்லது படிப்படியாக தீவிரமாகிப் பொருத்த தொல்லைகள் தரலாம். இரண்டு எலும்புகள் இணையும் பகுதி மூட்டு இரண்டையும் இணைப்பது மூட்டு உறை.

இரண்டு எலும்புகளின் நுனிப்பகுதிகளை ரப்பர் போன்ற குருத்தெலும்பு மூடி இருக்கும். இது மெத்தை போன்று மிருதுவானதாகவும் அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் உள்ளது. மூட்டுகளில் பசை போன்ற திரவம் உள்ளது. இதை சைனோவியல் திரவம் என்கிறார்கள். இது குருத்தெலும்பை மசகுத்தன்மை கொண்டாக வைத்துள்ளது.

மூட்டுகள் பாதிப்பு அடையும் போது எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேய்ந்து விடுகின்றன. தேய்ந்த எலும்புகள் உரசும் போது வலி உண்டாகிறது. ஆரோக்கியமான உணவு முறை நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. கொழுப்பு, உப்பு, இனிப்பு சத்துகள் அதிகமுள்ள உணவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், காய்கறிகள் பருப்பு வகைகள், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றை வேண்டிய அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சி மூட்டுகள் ஒரே நிலையில் இறுகி விடாமல் தடுக்கிறது. சரியாக இயங்க வைக்கிறது.

மூட்டு வலி
மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி மூட்டுகளுக்கு வலிமையை உண்டாக்கி வலியை குறைக்கும். வழக்கமான பணிகளை செய்ய உதவும். இதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். முழங்கால்களை மடக்கி கைகளை நீட்டி உள்ளங்கைகள் தரையில் படுமாறு படுத்துக்கொள்ளவேண்டும். இதனால் முதுகுப் பகுதியில் அழுத்தம் குறையும்.

இளநீரில் உள்ள சத்துக்கள்

இளநீர்
* இளநீரின் அறிவியல் பெயர் கோகோஸ் நூசிபெரா. இளநீரானது 200 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை, இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நொதிகள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்கள் பலவற்றை பாதுகாத்து வழங்கும் பெட்டகமே இளநீர் என்று சொல்லலாம்.

* புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கோடையின் கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சியூட்டும்.

* இளநீரில் ஒற்றைச்சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது.

* சைடோகின்கள் எனும் தாவர ஹார்மோன்கள் இளநீரில் நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும். புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும் வழங்கும்.

* இளநீரிலுள்ள அமினோ அமிலங்கள், நொதிகள்,   தாதுஉப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ இழப்பை உடனே ஈடுகட்டும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட இளநீர் வழங்குவார்கள். இதற்காக அளிக்கப்படும் ஓ.ஆர்.எஸ். எனும் சிகிச்சை முறைக்கு இளநீரைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் (டபுள்யு.எச்.ஓ.) அங்கீகாரம் வழங்கி உள்ளது.

* நொதிகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் நொதிக்காரணிகள் இளநீரில் நிறையவே உள்ளன. பாஸ்பாடேஸ், கேட்டலேஸ், டிஹைட்ரனேஸ், டயஸ்டேஸ், பெராக்சிடேஸ், ஆர்.என்.ஏ. பாலிமரெசஸ் போன்ற நொதிகள் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கும்.

* பழ வகைகளுக்கு ஈடாக கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புகள், அதிகமாகவே உள்ளது.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோபிளே வின், நியாசின், தயமின், பைரிடாக்சின், போலேட்ஸ் ஆகியவை மிகுதியாக இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்சியாக வைப்பதில் இவற்றின் பங்கு அதிகம்.

* பொட்டாசியம் இளநீரில் மிகுந்துள்ளது. 100 மில்லி இளநீரில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 150 மில்லிகிராம் சோடியம் உள்ளது. இவை உடலுக்குத் தேவையான மின்சக்தி வழங்கும் பொருளாக பயன்படும். பேதியின்போது ஆற்றல் இழப்பை தடுப்பதிலும் பங்கு வகிக்கும்.

* ‘வைட்டமின்’ சி, இளநீரில் குறைந்த அளவு (2.4 மில்லிகிராம்) உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.

Saturday, March 15, 2014

கண்களை பாதுகாக்கும் கீரைகள்

கீரை
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.

இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Friday, March 14, 2014

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

• இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

•  அவோகேடோ ஸ்கரப் பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

•  அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.

• பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.

கைகளை பராமரிப்பது எப்படி?

பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம்.

கைகளை பராமரிப்பது எப்படி?

கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்
ஹேண்ட் லோஷன்
ஸ்க்ரப்பர்
சின்ன சைஸ் பேபி பிரஷ்
ஒரு கப்பில் தண்ணீர்
சிறிது லிக்விட் சோப்

முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும்.

பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள்.

இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம்

தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்


கோவைக்காய்கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்

Thursday, March 13, 2014

கூந்தல் உதிர்வதை தடுக்கும் வழிகள்!!

இன்றைய காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள்.  ஆனால் அதற்கு ஒரே வழி இயற்கை முறையை கடைபிடிப்பது தான்.

இயற்கை பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

 கூந்தல் உதிர்வதை தடுக்கும் வழிகள்!!


*  எண்ணெய் குளியல் ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.

*   தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.

* வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீத்தாப்பழம்

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
* சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பழுத்து உடையும்.
* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
*  விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
* சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
* சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
* சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
* சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.
* சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
* சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.

கேரட் மருத்துவ பயன்கள்

கேரட்
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.

வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.  100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:    

*சக்தி 41 கலோரிகள்   
*கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்   
*சர்க்கரை 5 கிராம்    
*நார்சத்து 3 கிராம்    
*கொழுப்புச் சத்து 0.2 கிராம்    
*புரோட்டின் 1 கிராம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.

வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

Wednesday, March 12, 2014

இளநரையா?

பலரையும் சங்கடப்பட வைக்கும் விஷயம், இளநரை. இளவயதிலேயே வயதான தோற்றத்தை இளநரை ஏற்படுத்திவிடும். இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இளவயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறையச் சேர்க்க வேண்டும்.

பசு வெண்ணைக்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கிறது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வர வேண்டும். வெண்ணையுடன் சிறிது கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதே வெண்ணையை தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும், கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.


இளநரை


* நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணையில் வறுக்க வேண்டும். காய் நன்றாகக் கருகும் வரை வறுத்தால், எண்ணை நன்றாகக் கருநிறமாகிவிடும். இந்த எண்ணை தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓர் இரவு ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை தலையில் தேய்க்கலாம். இது இள நரைக்கு நல்லது.

* சுத்தமான தேங்காய் எண்ணையில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கக்கூடிய லோகபஸ்மம் இவற்றைச் சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலைக்குப் பயன் படுத்தலாம்.

* கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணையில் கலந்து, அதன் சத்து முழுவதும் எண்ணையில் இறங்கும்வரை காய்ச்சி, அந்த எண்ணையைத் தினசரி உபயோகிக்கலாம். இது 'ஹேர் டை' போல பயன்படும. கடுக்காய் காய்ச்சிய நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தலாம்.

* மருதாணி இலையை நன்கு அரைத்து, அதை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சிஅந்த எண்ணையையும் பயன்படுத்தலாம். இது நரை முடிக்கான சாயமாகப் பயன்படும். சிலமணி நேரம் கழித்து அலசினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.

* செம் ப  ரு த் தி ப்பூக்களை நிழலிலும், வெயிலிலும் காயவைத்து தேங்காய் எண்ணையில் இட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதை, நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி, அதிக அடர்த்தியான தேயிலை நீரால் தலைமுடியை அலசுவதுதான். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

Tuesday, March 11, 2014

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்

முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்கள் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், ப்ளீச்சிங் செய்யும் போது அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு சில சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ப்ளீச்சிங் அனைவருக்குமே சரியானதாக இருக்காது.

ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள், வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே எப்போது முகத்தை அழகுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், செயற்கை முறையை கடைபிடிக்காமல், இயற்கை முறையில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ப்ளீச்சிங் செய்தால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. 

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்


• ஆலிவ் ஆயிலில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளன. எப்படி அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ, அதே போல், சருமத்திற்கும் சிறந்தது. அதற்கு அந்த ஆலிவ் ஆயிலில், சிறிது சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கு முகம் பொலிவடையும்.

• சிட்ரஸ் பழத்தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது சருமத்தைப் பொலிவாக்க மிகவும் சிறந்தது. எனவே சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பளிச்சென மாறுவதை பார்க்கலாம்.

• தக்காளி போன்ற நிறம் வேண்டுமென்றால், தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் பொன்று மின்னும்.

• வெள்ளரிக்காயின் சிறிது துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

• சருமம் மந்தமாக எந்த ஒரு பொலிவுமின்றி பருக்களுடன் காணப்பட்டால், அதற்கு வெள்ளை வினிகர் ப்ளீச் சிறந்ததாக இருக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளிச்சென்று, எந்த ஒரு பிரச்சனையுமின்றி பொலிவாக்கும். அதற்கு வினிகரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்க வேண்டும். இதனால் சருமம் இயற்கையாக பக்கவிளைவுகளின்றி பொலிவாகும்.

Sunday, March 9, 2014

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்

உணவு
உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.
ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.
ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்.