Pages

Friday, October 24, 2014

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்

பொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.  


ஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் :

* நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது.

* முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த பிறகே இவற்றை முகத்தில் தடவ வேண்டும்.

* இந்த க்ரீமை உள்ளங்கையில் எடுத்துகொண்டு முகத்தில்பொட்டு வைப்பது போல் வைத்து முகம் கழுத்து போன்ற இடங்களில் பரவலாக தடவ வேண்டும்.

* இது உலர்ந்த பிறகு நாம் உபயோகிக்கும் பௌடரை முகத்தில் போட வேண்டும்.

* முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம் என எல்லா இடமும் சீராக இருப்பது போல் தடவும் பொழுது முகம், கழுத்து எல்லாமே ஒரே நிறத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.

* அலுவலக உணவு இடைவெளியில் கூட இவற்றை போட்டு கொள்வது நல்லது.

ஹேர் சீரம் :

நாம் வெளியில் செல்லும் பொழுது நம் தேசத்தில் நிறைய தூசுகள் சேர்ந்து விடுகின்றன. அதிலும் வண்டியில் செல்லும் பொழுது நம்முடைய கூந்தல் கலைந்து நம் மயிர்க்கால்களில் நேரிடையாகவே அழுக்குகள் படிந்து விடுகின்றன.

இதனால் கூந்தல் உதிர்வு, பொடுகு, மண்டையில் மேற்புறத்தோல் வறண்டுவிடுவது என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தடவும் பொழுது தலை வறண்டு போகாமல், கூந்தலை பளபளப்பாகவும், பிசுக்கில்லாமலும் வைத்துக்கொள்கிறது. தலைமுடி டேமேஜகாமலும் காப்பாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற ஹேர் சீரம் உபயோகிப்பது சிறந்தது.

காஜல் :

இப்போது வரும் காஜல்கள் பல மணி நேரங்கள் வரை கண்களில் இருந்து அழியாமல் இருக்கின்றன. அழகிய பென்டைப்களில், சிறிய பென்சில்கள் போன்றும் வெளியில் செல்லும் பொழுது எடுத்துச்செல்வதற்கு வசதியாக வந்து விட்டன. மை கைகளில் ஒட்டிக்கொள்ளும் என்ற கவலையே இல்லை.

Sunday, October 19, 2014

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்
தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது...

வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,
பயத்தமாவு-2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்...


இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை து
ர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்...

வேப்பிலை-1 பிடி,
சீயக்காய்-5,
தோல் நீக்கிய கடுக்காய்-1,
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3,
செம்பருத்தி இலை-1 பிடி...


இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.

Saturday, October 4, 2014

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

  முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கிரீம்கள் உடனடி பயன்பாட்டுக்குத்தான் ஏற்றது. ஓரிரு நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால்கூட, அது சரி வராது. உடனடியாக பயன்படுத்தும் வகையிலான பவுடர் மற்றும் பேர்னெஸ் கிரீம் தயாரிக்கும் முறைகளை சொல்கிறேன்.

• முல்தானி மட்டி, சந்தன பவுடர்... இரண்டும் தலா 5 கிராம் எடுத்து, வட்டமான கிண்ணத்தில் போடுங்கள். இதன் ஓரத்தில் 10 துளிகள் ரோஸ் வாட்டரை விட்டு காற்று போகாத மூடியால் இறுக மூடி விடுங்கள். இந்தக் கலவை ஒரு மணி நேரத்தில் `கேக்' போன்று மாறிவிடும்.

முகத்தை நன்றாக கழுவி, ஒரு ஸ்பாஞ்ச்சினால் இந்த `கேக்'கைத் தொட்டு, இதை முகத்துக்குப் பூசுங்கள். கிரீம் போட்டது போல், முகம் பளிச்சென்று இருக்கும். விரும்புகிறவர்கள் இதற்கு மேல் பவுர் பூசிக் கொள்ளலாம். 

• முல்தானி மட்டி-ஒரு கிராம், சந்தன பவுடர்-10 கிராம், சிவப்பு சந்தன பவுடர்- 2 கிராம்... இவற்றுடன் தேவையான அளவு ரோஸ் பவுடர் கலந்து வையுங்கள். வெளியில் செல்லும் போது இந்த பவுடரை பூசிக் கொள்ளலாம்.

கூடுதல் நேரம் முகத்தில் பவுடர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சிறிது வெண்ணெயை கையில் தடவி, அதே கையால் இந்த பவுடரை தேய்த்து முகத்தில் பூசலாம். நார்மல் மற்றும் உலர்ந்த சருமத்தினருக்கு ஏற்ற அலங்காரம் இது.

• எண்ணெய் பசை சருமத்தினர், முல்தானி மட்டிக்கு பதில், வெட்டிவேரை நைஸாக அரைத்து, சேர்த்து இந்த பவுடர் மற்றும் கிரீமை தயாரித்துக் கொள்ளலாம். வெட்டிவேர், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை ஈர்த்து, முகத்தை பிரகாசமாக்கிவிடும். 

மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்

 மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்
டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா? அப்ப இதை படிங்க.. தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.

போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு. 

ஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும்.

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே, 'மறப்போம் மன்னிப்போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள்.

உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.
அப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.

இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக்கும். மனக்கசப்பு நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும். 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் 
உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது. 

பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.