Pages

Tuesday, June 28, 2016

பயத்தம்பருப்பு தோசை

 பயத்தம்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்: 

பயத்தம்பருப்பு 3 கப்
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
தயார் செய்யும் முறை: 
பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.  ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றிமெல்லிசாக வார்க்கவேண்டும். இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம். தக்காளி சட்னி, வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் ஆபத்து

 processed foods க்கான பட முடிவு
பெரும்பாலும் உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பொருள் உள் சேர்க்கப் பட்டிருக்கும். இதனால் உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது நீரழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கின்றது. உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது.

இது உடலுக்கு தீங்கான கொழுப்பு சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாய் கெட்டு போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப் பட்டிருக்கும். இதனால் ரத்த கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதால் கணைய புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கெட்டுபோகாமல் நீண்ட நாட்கள் இருக்க பல வகையான ரசாயனங்கள் உணவோடு சேர்க்கப் படுகிறது. இதன் காரணமாக வாந்தி, நெஞ்சுவலி, தலைவலி, மயக்கம், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படுகிறது.

குழந்தை ஏன்அழுகிறது?


குழந்தை
பள்ளி செல்லும் குழந்தைகளை கவனிக்க, இப்போதெல்லாம் பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பச்சிளங்குழந்தைகள் அழுவதற்கான காரணங்களை புரிந்து கொள்வது சிரமம். குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம். அதை எப்படி கண்டுபிடிப்பது? பசியால்தான்  பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டுப்பிடித்து விடலாம்.

குழந்தைகள் பால் குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பது போல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தைப் பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின் வெளிப்படும்.
பசி  தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரன்று அழுதால் சிறுநீர் கழிந்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்க தொடங்கிவிடும்.

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்னநிலை மாற்றமோ ஏற்ப்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தைப்  பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும்,. குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், துங்கமுடியாமல் குழந்தை தவிக்கும். சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை துக்கி கொஞ்ச வேண்டும் என்பதற்க்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுப்பும், அரவணைப்பும் வருடலும் குழந்தைக்கு எப்போதும் தேவைப்படுகிறது. 

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு.  பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3,4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில்   போட்டு தட்டி கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும். பால் புகட்டியதும் குழந்தை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்ப்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும்.

குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்கவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும். குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்து விடும். குளிர்ந்த நீரிலும் சுடு நீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக் கூடாது. குளிப்பட்டும் நீரில் டெட்டொல் போன்ற எதயும் கலக்கவும் கூடாது. பேபி சோப், பேபி லோசன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். பல் முளைக்கும் பொது சில குழந்தைகள் வழியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது இரை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

பாதாம் பருப்பில் புரதம் இருக்கிறது

பாதாம் பருப்பு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஜீரண சக்தியும் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதம் பருப்பை வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து, சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, 10 ரூபாய்க்கு, வறுத்த பாதாம் பருப்பு, பாக்கெட் போட்டு பேக்கரிகளிலும், பெட்டிக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. டீ சாப்பிடும் போது அதை வாங்கி ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பாதாமுக்கு உண்டு. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். ரத்தத்துக்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும், 25 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுதல் தவறில்லை. ஆனால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கமாக இருப்பது அவசியம்.

நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு, நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெற்றவர்கள், உடல் மெலிந்தவர்கள், பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ரத்தத்தில் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பை அதிகரித்து விடும் என பயப்பட வேண்டாம். தைரியமாக பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

Wednesday, June 22, 2016

நரை பரவுவதை தடுக்க...



நெல்லிக்காய் மற்றும் சீயக்காயை காய
வைத்து, பொடி செய்து, தலைக்கு
தேய்த்துக் குளித்து வந்தால், நாளாக
நாளாக நரை பரவுவது நீங்கும்.
நெல்லிக்காய்

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!


வெந்தயம்

வெந்தயத்தை, அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவ காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 80 - 110 வரை இருக்கலாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து, இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரியுள்ள உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற, வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும், வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும். வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக் கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும்.

அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது அசிடிட்டி எனப்படும் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உணவின் மூலம் உடலுக்குள் சேரும், அமில,- காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து, சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும்.

வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட்டால், உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய் ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்பெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும். வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும், வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் போன்ற நோய்களுக்கு வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும்.

வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும், சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் கோளாறுகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. உடல் சூட்டைத் தணித்து கர்ப்பப்பையைப் பலப்படுத்தும், மூலநோய்க்கும் நிவாரணம் தரும்.

உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம்!

 jeerakam க்கான பட முடிவு

உடலை சீராக வைக்க பயன்பட்டதால், சீரகத்துக்கு சீரகம் என பெயர் வந்தது என பெரியவர்கள் கூறுகின்றனர். சீரகத்தின் மருத்துவ குணத்தை அறிந்தவர்கள், குடிநீரில் சீரகத்தை ஊற வைத்து சீரகத் தண்ணீரை பருகுவது வழக்கம்.

சிலர் அதில் எலுமிச்சம் பழத்தை அறுக்காமல் முழுதாக போட்டு, அந்த தண்ணீரை பருகுவார்கள். தொடர்ந்து சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல் நீங்கும். திராட்சை ஜூசுடன் சீரகம் கலந்து பருகினால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மனநோய் குணமாகும்.

நல்ல ஜீரண சக்தி கொண்டது சீரகம். இதனால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் மோரில் கலந்து, குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் நீங்கும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேக பளபளப்பும் கிடைக்கும்.
சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பருகி வந்தால், கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடிகள் தயாரிப்பில், சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயு தொல்லைக்கு மாமருந்து. சீரகம், நல்ல மிளகு பொடித்து, எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நிற்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மெலிந்து போனவர்கள், சீரகத்தை தூள் செய்து லேகியமாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.