Pages

Saturday, March 19, 2016

நோய் எதிர்ப்புக்கு பீட்ரூட்

பீட்ரூட்

தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது, டாக்டர்கள் கூறும் அறிவுரை. குளிர்காலத்தில் தாகம் அதிகம் எடுக்காததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையே மறந்து விடுகின்றனர். அது பல தீங்குகளை விளைவிக்கும். மலச்சிக்கல், கிட்னி பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதில் மலச்சிக்கலுக்கு பீட்ரூட் சிறந்த உணவாக பயன்படுகிறது.  இதோ பீட்ரூட்டின் மருத்துவக் குணங்கள்.

பீட்ரூட்டில் உள்ள கார்போஹைடிரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் எளிதில் கரைந்து ஜீரணமாகிவிடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் 87.7 சதவீதம் தண்ணீர், கொழுப்பு 0.1 சதவீதம், தாதுக்கள் 0.3 சதவீதம், நார்ச்சத்து 0.9 சதவீதம், கார்போஹைடிரேட் 8.8 சதவீதம் இருக்கிறது. இத்துடன் கால்சியம், பொட்டாசியம், சோடியம்,சல்பர், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. ரத்தம் குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். கல்லிரல் குறைபாடுகளுக்கும் , பித்தத்தினால் ஏற்படும் வந்திக்கும் பீட்ரூட் சிறந்த டானிக்.


பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகளைப்போல் சமைத்துசாப்பிட்டுவந்தால் அல்சர், மற்றும் மஞ்சள்காமாலை போன்ற  நோய்களும் குணமாகும். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் சிரமப்படுபவர்களும், மூல நோயால் பாதிக்கப்படுபவர்களும் பீட்ரூட் சாறை நீருடன் கலந்து இஇரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் பருகி வந்தால் பலன் கிடைக்கும். கிட்னி கற்கள் உருவாவதையும் தடுக்கும்.


சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு மடங்கு பீட்ரூட் சாருடன் ஒரு மடங்கு தண்ணீர் கலந்து தடவினால் விரைவில் குணமாகும். புற்று நோய் உள்ளவர்கள் தினமும்  பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் மேலும் புற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். புற்று நோயின் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

  • பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
  • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் தடுக்க முடியும்.
  • பீட்ரூட் கஷாயம் மூல நோயை குணப்படுத்தும்.
  • பீட்ரூட் சாருடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் சுத்திகரிக்கப்படும்.
  • குழந்தைகளும் இதன் இனிப்பு சுவையை விரும்புவர். 

மன குழப்பமா? வேண்டவே வேண்டாம்


இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை கிடைப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. இதனால் அதிக நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்ளாமல், நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அலுவலக வேலைகளையும், டென்சனையும் அலுவலகத்திலேயே விட்டு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயும், வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக பணியில் சாதிக்கும் நகர்ப்புற பெண்களையே இந்த மன அழுத்தம் அதிகம் பதிக்கிறது.எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொண்டால் வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம். படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, நெஞ்சுவலி, மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு உள்ளன. உடல் நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் ஒருவர் அதிகம் பதிக்கபட்டால் அது மன அழுத்தம் எனலாம். நேரத்தை சரியாக பயன்படுத்தாதது, பணியிடத்தில் சக பணியாருடன் அனுசரித்துப் போகாதது, வேலை மற்றும் இல்லற வாழ்க்கை இரண்டையும் கையாளத் தெரியாதது. தாழ்வு மனப்பான்மை ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. மன அழுத்தத்தால் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டால், தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள 'சிம்பாலிக் நரம்பு' மண்டலம் அதிகம் தூண்டப்படும். 'அட்ரீனல் கார்டி சோல் ஹார்மோன்' அதிகம் சுரக்கும். இந்நிலை தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பதிக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதளவில் மகிழ்ச்சியாக இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மன அழுத்த பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினால் இரண்டு நிமிடம் கண்களை மூடி, மூச்சு காற்றில் கவனம் செலுத்தினால் உடலுக்கு நல்லது. உடலில் மொத்தமாக மன அழுத்தம் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


மணம் வீசும் கூந்தல்

மணம் வீசும் கூந்தல் அழகான நீண்ட கூந்தல் மட்டும் இருந்தால் போதாது. அது நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். அப்படி கூந்தலை நறுமணத்துடன் வைப்பது அவ்வளவு எளிதல்ல.

பொதுவாக கூந்தலை சரியாக அலாசாவிட்டால் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஏனெனில் வியர்வையானது நீண்ட நாட்கள் தலையில் தங்கினால் அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, கூந்தல் நுனியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். 
அதுமட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு ஹேர் பேக்குகள் கூட காரணமாக இருக்கலாம். உதாரணமாக முட்டை கூந்தலுக்கு நல்லது என்று பயன்படுத்தியபிறகு கூந்தலில் இருந்து முட்டையின் துர்நாற்றமானது வீசும்.
ஆகவே இந்த மாதிரி ஹேர் பேக்குகளை போட்ட பிறகு கூந்தலின் நறுமணத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களை கொண்டு கூந்தலின் நறுமணத்தை அதிகரிப்பதுதான் நல்லது.

  • செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதனை தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்க்கால்களும் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணையில் நல்ல நறுமணம் இருப்பதால், கூந்தலின் மனம் அதிகரிக்கும்.
  • ஹென்னா பொடியை பயன்படுத்தினால் நரை முடியானது நிறம் மாறுவதுடன், கூந்தலும் நல்ல நறுமணத்துடன் இருக்கம்.
  • கொதிக்கும் நீரில் தேயிலையை போட்டு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரை கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
  • எலுமிச்சையை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நறுமணமாக இருப்பதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவி ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
  • ரோஸ் வாட்டர் கூந்தலுக்கு பெரிய நன்மையை அளிக்கவிட்டாலும், இதை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். அதோடு ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்தது.
  • நறுமணமிக்க எண்ணையை பயன்படுத்தினால் கூந்தல் வாசனையை அதிகரிக்கலாம். அதிலும் மல்லிகை எண்ணையை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால் கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • வெப்பத்தை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் இருப்பதும் கூந்தல் நறுமணத்திற்கு வழிவகுக்கும்.

வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம்நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும பொருட்களை நன்றாக சுத்தபடுத்தி பயன்படுத்தினாலே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதில் இப்பொழுது வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை பயன்படுத்துவது மிகவும் குறைவுதான். வெந்தயத்தை நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தினால் சுத்தமாகிவிடும். இந்த வெந்தயத்தை வாயில் போட்டு நீர் அல்லது மோரை குடித்தல் உடல் சூடு தணியும். பேதி, வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல் இருந்தாலும் உடனே குணமாகும். தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் குணமாகும்.


கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயம் மற்றும் சீரகத்தை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி வயிறு வலி, வயிற்றில் புண் இருந்தால் இளநீரில் ஓட்டை போட்டு அதில் சிறிது வெந்தயத்தை போட்டு அதை அப்படியே மூடி இரவு  முழுவதும் வைத்து காலையில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு இளநீரையும் குடித்து வந்தால் பிரச்சனை தீரும்.
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை 
வெந்தயம் சாப்பிட பிடிக்கலைனா வெந்தய தோசையாகவோ, களி செய்தும் சாப்பிடலாம். வெந்தயத்தில் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனாலும் பலன் கிடைக்கும்.

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வரும்.  

கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும். 


கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும். 



மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும். தினமும் இரவில் படுக்க போகும் முன்னால் எண்ணெய் தோய்த்து கூந்தலை நன்றாக வாரி சடை போட்டு கொள்ள வேண்டும். சீப்பு தலையில் நன்றாக பதியும் படி தலையை வார வேண்டும். 

சேர்கோசைஸ் உடற்பயிற்சி


சேர்கோசைஸ் உடற்பயிற்சி


இப்போது பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து பார்க்கிற வேலைதான் அதிகம். 'எப்படா ஓய்வு கிடைக்கும், கொஞ்ச நேரம் உட்காரலாம்’ என்று ஏங்கிக்கிடந்த காலம் மாறி இன்றோ, எழுந்து நடக்கக்கூட இடம் அளிக்காத வகையில் வேலை. நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்களுக்கு, மூட்டுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். 


இதை ஆர்.எஸ்.ஐ (Repetitive strain injury) என்கிறோம். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே அதைத் தவிர்க்கலாம்' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 'உட்கார்ந்த இடத்தில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளும் சேர்கோசைஸ் முறை, வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால் ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாகவும், அதைத் தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கும் முறையையும் கேட்டு, அதற்கேற்ப ஸ்டெப்ஸ் அமைத்திருக்கிறார்கள். 



தினமும் இரண்டு முறை 10 நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியைச் செய்தால் போதும், நிச்சயம் உடல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதேமாதிரி உற்சாகமான இசையுடன் 10 நிமிடங்கள் உட்கார்ந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். 



ஆபீஸில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என எல்லோருக்கும் இந்த முறையைப் பயன்படுத்தி பயிற்சி பெறலாம். இப்போதுள்ள காலகட்டத்தில் பலருக்கும் பல மணி நேரம் கம்ப்யூட்டரில்தான் வேலை. இதனால் என் எனர்ஜி லெவல் ரொம்பவே குறையுது. முதுகு வலி, கழுத்து வலி, கண் பார்வை பாதிப்புனு நிறையப் பிரச்சனைகள். 



ஆனா, உட்காந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி தினமும் இப்படி எக்சர்சைஸ் பண்றதால் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு. உடல்ரீதியாவும், மனரீதியாவும் புத்துணர்ச்சியா இருக்கும் என்கிறனர் வேலை பார்க்கும் பெண்கள். ஆபீஸ் நேரத்துல வேலையோட, மியூசிக் கேட்டுக்கிட்டே ரிலாக்ஸா மூவ்மென்ட்ஸ் பண்றது ரொம்பவே ஜாலியா, யூஸ்ஃபுல்லா இருக்கும். மன அழுத்தம் குறையும்.

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்


tomato க்கான பட முடிவு
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட்  புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு  வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ  தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய்  ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.


உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப்படுகிறது. பிரிட்டனில்  மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய்  காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள்  மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும்  குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு  செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில்  பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500  கிராம் தக்காளியை உணவில் சோத்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம்  வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர். 

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும்,  பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும்  இவர்கள் கண்டறிந்தனர். புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு  கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம்,  இதை உறுதி செய்ய வேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித  செல்களில் மரபணு  மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க  வல்லது. அதன் மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமாக கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக  உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து  தயாரிக்கப்படும் ரொட்டி , பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து  தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும்  கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட்  புற்றுநோயைத் தடுக்க வல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து  தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட்  புற்றநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுபடுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Thursday, March 17, 2016

குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்


 குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்
* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.

* ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.

* ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.

* வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.

* உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.

* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.

* சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

நீர்க்கடுப்பா? இதோ மருந்து


வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். 

சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.

ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்னைகள் எதுவும் வராது.

பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள்

valaipoo க்கான பட முடிவு
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கவும் ஸ்லிம்மாக இருக்கவும், இயற்கையாக கிடைக்கும் கீழ்க்கண்ட பொருட்களை உணவாக அடிக்கடியோ, தினமுமோ சேர்த்து வரலாம்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம். வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.இதன் மூலம் கொழுப்பு குறைந்து தேவையற்ற சதைகளை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும்.

அன்னாசி பழ பச்சடி

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் இலை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.

சிறுநீரகத்தின் பணி என்ன?

சிறுநீரகத்தின் பணி என்ன?

kidney க்கான பட முடிவு

உடலுக்குத் தேவையான குளூக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் உள்ள யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து, வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது. வீட்டுக்கு எப்படி கழிப்பறை முக்கியமோ, அதுபோல் நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.


1) சிறுநீரகம் பாதிப்படைவது எதனால்?
கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் வலி நிவாரண மாத்திரைகளின் பக்க விளைவுகள், உணவு நச்சுகள், உடற் பருமன் உயிரணுக்கள் உற்பத்தியாகும் பையில் வீக்கம் போன்ற காரணங்களால், சிறுநீரகம் பாதிக்கப்படைகிறது.

2) சிறுநீரகம் செயலிழந்ததற்கான அறிகுறிகள்?
திடீர் சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என, இருவகை உண்டு. உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து போனால் அல்லது மருந்து ஒவ்வாமையினால், திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோர்த்து உடல் பருமன் ஆவது போன்றவையே, திடீர் செயலிழப்பின் அறிகுறிகள்.

3) நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்?
சிறிது சிறிதாக, சிறுநீர்ப் பிரிவதில் சிரமம், குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது. பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் அரிப்பு, முகம் மற்றும் கை, கால்களில் வீக்கம் தோன்றுவது போன்றவையே, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

4) சிறுநீரில் ரத்தம் வருவதற்கான காரணம்?
சிறுநீர் வெளியேறும் குழாய் மற்றும் சிறுநீர் பையில் கற்கள் அடைத்திருந்தால், சிறுநீரில் ரத்தம் வரும்; அது ஆபத்தான அறிகுறி.

5) சிறுநீரக பாதிப்பை கண்டறிய எப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்?
நாற்பது வயதை கடந்தோர், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தை சேர்ந்தோர், சிறுநீரகத்தில் கல் உள்ளோர், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளோர், ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான, 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' செய்து கொள்வது நல்லது.

6) உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. தொடர்ந்து ரத்த அழுத்தம், 140/ 90 மி.மீ., பாதரச அளவு இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

7) சிறுநீரக பாதிப்பு ஏற்படாமலிருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்?
ஒருவருக்கு தினமும், 5 கிராம் உப்பே போதுமான அளவு. ஆனால் தென்னிந்தியாவில், 20 கிராம் உப்பை தினம் எடுத்துக் கொள்கிறோம். இதை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சமையல் சோடா, சிப்ஸ், ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

8) சிறுநீரக பாதிப்பு உள்ளோர் புரத உணவுகளை தவிர்க்க வேண்டுமாமே?
சிறுநீரக செயலிழப்பு உள்ளோர், தாங்கள் உட்கொள்ளும் புரத உணவுகளில், கவனமாக இருக்க வேண்டும். புரத உணவின் வகையிலும், அளவிலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக விலங்கின் இறைச்சிகள், மீன், கோழி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும், புரதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

9) புகைப்பிடிப்போருக்கு, சிறுநீரக பாதிப்பு இருக்குமாமே?
சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால், உடலுக்குள் நுழையும் நிகோட்டின் ரத்தக்குழாய்களை சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம், சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

Tuesday, March 15, 2016

ஸ்கிப்பிங் மிக சிறந்த வார்ம் அப் பயிற்சி

ஸ்கிப்பிங் மிக சிறந்த வார்ம் அப் பயிற்சி

உடலினை உறுதிசெய்ய உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்று, பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும்.

கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும்.

இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். வார்ம் அப் பயிற்சிகள் முடிந்ததும், ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஸ்டிரெச்சிங் பயிற்சிகள், இறுக்கமான தசைகளைச் சற்று தளர்வடையச் செய்து, உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும்.

இந்தப் பயிற்சிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், தசை நார்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் துணைபுரியும். உடல் உள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யப்படும் வார்ம் அப் பயிற்சிகளில், மிகவும் முக்கியமானது ஸ்கிப்பிங். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான, ஸ்கிப்பிங் ரோப் கடைகளில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் ரோப் இருக்கும்படி, ஸ்கிப்பிங் கட்டைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளைச் சுழற்றி, ரோப்பை முன்புறம் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மெதுவாகக் குதித்தபடி, ரோப் கால்களில் மாட்டிக்கொள்ளாமல் பின்பக்கம் கொண்டுவர வேண்டும். இப்படி, மித வேகத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி செய்ய எளிதில் தயாராக முடியும்.

எடை தூக்கும் பயிற்சியின் நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியின் நன்மை, தீமைகள்


எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 


தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 



• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 



• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 



• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 


• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல - டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 



• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்.


வேதனை தரும் வேர்க்குரு


உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதை வழியாக நம் உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள், ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்து விடுகின்றன. அவற்றின் கழிவுகள், தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அவை, வியர்வை துவாரங்களை அடைத்து, கட்டிகளை உருவாக்குகின்றன. 


அதுமட்டுமின்றி, தோலின் வழியாக உட்செல்ல முற்படும் நுண் கிருமிகள், ரத்தத்தின் உள் செல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு, தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்த கட்டிகள், நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து உடைந்து சீழாக வெளியேறி, நச்சுநீர்கள் பட்ட இடங்களில் புண்ணாக மாறி, பின் ஆறி விடுகின்றன. இந்த கட்டிகள், வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் எனப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், தோலை சுத்தமாக வைக்காததால், தோலுக்கடியில் பலவிதமான அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேருவதால், தோல் கடினமாகி, அதிலுள்ள செல்கள் பாதிப்படைந்து, பாதிக்கப்பட்ட செல்களிலுள்ள நுண் கிருமிகள் வெளியேற முடியாமல், தோல் மற்றும் தோலின் வெளிப்புற பகுதிகளில் கட்டிகளை உண்டாக்குகின்றன. இதுபோன்ற கட்டிகள், லேசான வீக்கமாக வந்து, பின் கட்டியாக மாறும். 
இக்கட்டிகள் வந்தால், நெரி கட்டுதல், நமைச்சல் போன்ற பல தொல்லைகளை ஏற்படுத்தும். வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் வராமல் இருக்க, கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க, இளநீர், மோர், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரம் மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். திட உணவுகளை குறைத்து, திரவ உணவுகள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.

Saturday, March 12, 2016

சருமத்தை மிருதுவாக்கும் வாட்டர் மெலன் ஃபேஸ் பேக்

தர்பூசணி உடலுக்கும் மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை அளிக்கிறது. இது சருமத்தை மென்மையாக்கி சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் கறைகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது. 


வாட்டர் மெலன் ஃபேஸ் பேக் 



வாட்டர் மெலன் ஜூஸ் - 2 ஸ்பூன் 
வெள்ளரிக்காய் ஜூஸ் - 2 ஸ்பூன் 
பால் பவுடர் - 1 ஸ்பூன் 
தயிர் - 1 ஸ்பூன் 


செய்முறை :



மேலே சொன்ன அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை இளமையாகவும், அழகாகவும் காட்டும். வெள்ளரிக்காய் வெயிலால் சருமத்தில் கருமை அடைவதை தடுத்து சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தர்பூசணி சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும். 

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்


பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்சனையை தீர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

மருதாணி மற்றும் தயிரையும் கலந்து தலையில் தேய்த்து பின்பு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

கழுத்தில் தெரியும் உங்கள் வயது


 கழுத்தில் தெரியும் உங்கள் வயது
பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கருத்து போயிருக்கும்.

இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும்.

இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது. கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்-அப் செய்துகொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து காணப்படும். 

உங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்:

கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். சிலருக்கு ஜீவனே இல்லாமல் இருக்கும். அவர்கள் முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கருக்கவைத்துவிடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும். சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும். சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கருப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும்.

முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கருத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும். முகத்துக்கு ஏற்ற அழகை கழுத்தும் பெற்றிருந்தால் மட்டுமே பெண்கள் முழு அழகுடன் திகழ முடியும். 

ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

 ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

‘ஹேர் டை’ எல்லாருக்குமே சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும், காப்பிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்து இருக்கிறார்கள்.

ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை. இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான ஹேர் டை’கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் ‘ஹேர் டை’களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம், எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும். இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பை தவிர்த்து மாற்று ‘ஹேர்டை’யை பயன்படுத்த வேண்டியதுதான்.

அலர்ஜி மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஹெர்பல் ‘ஹேர் டை’கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன. அதற்காக ‘ஹேர் டை’ உபயோகிக்கவே கூடாது என்றில்லை.

ஆனால் அளவாக உபயோகிக்க வேண்டும். ‘ஹேர் டை’ போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு தள்ளிப் போடலாம். எந்த ஒரு ‘ஹேர் டை’ வாங்கினாலும் அதில் இருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா? என்று பார்த்து ஒரு பிரச்சினையும் இல்லையெனில் உபயோகிக்கலாம்.

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடர்ந்து வீட்டில் உடற்பயிற்சி செய்தவர்கள், உடலை மேலும் ஃபிட்டாக வைத்திருக்க, சில மெஷின் பயிற்சிகள் செய்வது நல்லது. இந்த வகையில் லையிங் ஸ்குவாட் பயிற்சி தொடைக்கு உறுதியை தரும் பயிற்சியாகும். இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் அழகான கவர்ச்சியான தொடையை பெறலாம். 


இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் ஸ்குவாட் கருவியில் அமர வேண்டும். இந்த நிலையில் மேடையில் எடை எதுவும் இருக்காது. பின்னர், கால்களில் எடையைத் தாங்கிக்கொள்ளும் வகையில் லாக்கை அகற்ற வேண்டும். 



இப்போது மேடையின் முழு எடையும் கால்களில் இருக்கும். மூச்சை வெளியே விட்டபடி கால் முட்டியை மடக்கி, மேடையைக் கீழே கொண்டுவர வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு, மூச்சை நன்கு இழுத்து, மேடையை மேலே உயர்த்த வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். 



பலன்கள்: தொடைகள் உறுதியாகும். அழகான தோற்றம் கிடைக்கும்.

Friday, March 11, 2016

ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி


ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி

உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்ற பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். 


வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும். இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி உடலுக்கு வார்ம் அப் பயிற்சியே. இதை மட்டும் தனியாகவும் செய்யலாம். 



ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி என்பது வேறு ஒன்றும் இல்லை. நின்று கொண்டே ஜாக்கிங் செய்வது போன்றது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாக்கிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். 



பின்னர் படிப்படியாக நிமிடங்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம். வார்ம் அப் பயிற்சியாக செய்வதாக இருந்தால் 10 விநாடிகள் மட்டும் செய்தால் போதுமானது. பயிற்சியாக செய்வதாக இருந்தால் தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த பயிற்சி உடல் முழுவதிற்கும் பலன் தரக்கூடியது. 



பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை


அபான வாயு முத்திரைமாரடைப்பை தடுக்க தினம் 10 நிமிடம் செலவு செய்யுங்கள். நண்பர்களே, இது அபான வாயு முத்திரை. தினமும் ஒரு 10 நிமிடங்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.


ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள், பின்பு கட்டை விரலையும், நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். 


வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், 
கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை - 10, 
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5. 



இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.