Pages

Showing posts with label தலைவலி. Show all posts
Showing posts with label தலைவலி. Show all posts

Saturday, March 19, 2016

மன குழப்பமா? வேண்டவே வேண்டாம்


இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை கிடைப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. இதனால் அதிக நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்ளாமல், நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அலுவலக வேலைகளையும், டென்சனையும் அலுவலகத்திலேயே விட்டு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயும், வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக பணியில் சாதிக்கும் நகர்ப்புற பெண்களையே இந்த மன அழுத்தம் அதிகம் பதிக்கிறது.எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொண்டால் வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம். படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, நெஞ்சுவலி, மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு உள்ளன. உடல் நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் ஒருவர் அதிகம் பதிக்கபட்டால் அது மன அழுத்தம் எனலாம். நேரத்தை சரியாக பயன்படுத்தாதது, பணியிடத்தில் சக பணியாருடன் அனுசரித்துப் போகாதது, வேலை மற்றும் இல்லற வாழ்க்கை இரண்டையும் கையாளத் தெரியாதது. தாழ்வு மனப்பான்மை ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. மன அழுத்தத்தால் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டால், தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள 'சிம்பாலிக் நரம்பு' மண்டலம் அதிகம் தூண்டப்படும். 'அட்ரீனல் கார்டி சோல் ஹார்மோன்' அதிகம் சுரக்கும். இந்நிலை தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பதிக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதளவில் மகிழ்ச்சியாக இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மன அழுத்த பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினால் இரண்டு நிமிடம் கண்களை மூடி, மூச்சு காற்றில் கவனம் செலுத்தினால் உடலுக்கு நல்லது. உடலில் மொத்தமாக மன அழுத்தம் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


Saturday, July 25, 2015

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?


அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளைக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.

உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.

தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

Friday, August 8, 2014

இயற்கை தரும் ஆரோக்கியம்! - 300th Post

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 மூட்டு வலி குறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

 காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

 கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

 வாய்ப்புண் குறைய: பலா இலையை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

Monday, July 21, 2014

தும்பைப்பூவில் ஜலதோஷ மருந்து!


சின்ன சீக்கு வந்தாலும் பரயில்லை... இந்த ஜலதோஷம் மட்டும் வரவே கூடாதுப்பா... ச்சூ! மனுசனை என்ன பாடுபடுத்துது.... மூக்கை கர்ச்சீப்பால் அழுந்த துடைத்தப்படி, இந்த டயலாக்கை கூறதவர்கள் மிக சிலரே. அந்தளவுக்கு ஜலதொஷம் வந்து தங்கி செல்லலும் வரை ஒரு வழி செய்து விடுகிறது.

இப்பேர்பட்ட ஜலதோஷத்தையும், தலைவலியையும் பாடாய் படுத்த ஒரு வழி இருக்கின்றது. தும்பைப்பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பூவை பாலில் போட்டுக்க் காய்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடிவிடும்.

தலைவலி போக்கும் சாறு;

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும். காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப்ப் பூக்களுக்கு உண்டு. தலைவலி போக்கும் சாறு, தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைபூக்களைப் பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும். சகலவிதமான காய்ச்சலுக்கு தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீ ஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேலை கொடுத்து வந்தால், காய்ச்சல் குணமடையும். சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்:

கால் டீஸ்பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிது வெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து, தினம் இருவேளை சாப்பிட்டால் குளிர் ஜுரம், வாத ஜுரம் குணமடையும்.

பாம்புக்கடி குணமடையும்:

பம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு, உடனடியாக தும்பைபூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன் பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.
கண்கோளாறுகளுக்கு மருந்து:

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப்பூவை  சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து, தேக்கரண்டியளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் குணமடையும்.