Pages

Showing posts with label மன அழுத்தம். Show all posts
Showing posts with label மன அழுத்தம். Show all posts

Saturday, March 19, 2016

மன குழப்பமா? வேண்டவே வேண்டாம்


இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை கிடைப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. இதனால் அதிக நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்ளாமல், நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அலுவலக வேலைகளையும், டென்சனையும் அலுவலகத்திலேயே விட்டு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயும், வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக பணியில் சாதிக்கும் நகர்ப்புற பெண்களையே இந்த மன அழுத்தம் அதிகம் பதிக்கிறது.எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொண்டால் வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம். படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, நெஞ்சுவலி, மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு உள்ளன. உடல் நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் ஒருவர் அதிகம் பதிக்கபட்டால் அது மன அழுத்தம் எனலாம். நேரத்தை சரியாக பயன்படுத்தாதது, பணியிடத்தில் சக பணியாருடன் அனுசரித்துப் போகாதது, வேலை மற்றும் இல்லற வாழ்க்கை இரண்டையும் கையாளத் தெரியாதது. தாழ்வு மனப்பான்மை ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. மன அழுத்தத்தால் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டால், தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள 'சிம்பாலிக் நரம்பு' மண்டலம் அதிகம் தூண்டப்படும். 'அட்ரீனல் கார்டி சோல் ஹார்மோன்' அதிகம் சுரக்கும். இந்நிலை தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பதிக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதளவில் மகிழ்ச்சியாக இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மன அழுத்த பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினால் இரண்டு நிமிடம் கண்களை மூடி, மூச்சு காற்றில் கவனம் செலுத்தினால் உடலுக்கு நல்லது. உடலில் மொத்தமாக மன அழுத்தம் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


Tuesday, December 9, 2014

நோய் தீர்க்கும் வாழைப்பழம்

வாழைப்பழம்


வாழைப்பழம், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மருத்துவர்களை சந்திக்காமல் இருப்பதற்கு உதவும். வாழையின் பூ, தண்டு, இலை முதல் நார் வரை அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம்.

இன்றும் நமது இல்லங்களில் சாதாரணமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. வாழையால்  உடல் பருமன் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் இந்த வாழையின் பக்கம் போவதில்லை. ஆனால், வாழை பல நோய்களை தீர்க்கும் குணமுள்ளது.

வாழைப்பழத்தில், சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுகோஸ், என மூன்று இயற்க்கை சர்க்கரை உள்ளது. இதில் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமான பைபரும் பெருமளவு இணைந்துள்ளது. ஒரு வாழை ஏராளமான ஆற்றல் உடையது. இரண்டு வாழைப்பழங்கள், விறுவிறுப்பான 90 நிமிட நடைபயிற்சிக்கு போதுமான ஆற்றலை கொடுக்கவல்லது. ஆனால், வாழைப்பழத்திலிருந்து நமக்கு கிடைப்பது ஆற்றல் மட்டுமல்ல. அன்றாட வாழ்வுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொண்டுள்ளதுடன், சில நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள்  மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சமீபத்திய  ஆய்வின்படி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதற்கு காரணம், வாழைப்பழங்களில் உள்ள டிரிப்தோபன் என்ற புரதம் ஆகும். இது நம் உடலில், உடலை  நிலைப்படுத்தும்  தன்மை  கொண்ட , செரொடொனினாக மாறுகிறது.

ரத்த சோகை
வாழையில் அதிகமாக மற்றொரு சத்துப் பொருள், இரும்பு, இது ரத்த ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுவதுடன், ரத்த சோகைக்கு பெரும் நிவாரணம் தரக்கூடியது. எனவே ரத்த சோகைக்காக பேரிச்சையை மட்டும் நாடாமல், எளிதாக கிடைக்கும் வாழையையும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்


வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு உப்பும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வளரும் இளம் மூளையை மேம்படுத்துவதில் இன்றியமையாதது. எனவே, வாழைப்பழம் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப்பழமாகும்.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழங்கள் இயற்கையான ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது. எனவே அடுத்த முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வெறும் வாழைப்பழம் போதும்.

Friday, July 18, 2014

டென்ஷன்... டென்ஷன்... குறைக்க என்னதான் வழி?

இன்று வேலைக்கு செல்வோரில் பெரும்பாலனவர்கள் டென்ஷனால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு மற்றும் வேலையை திட்டமிட்டு செய்யாமல் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டவதோடு, எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்யமுடியாமல் தவிப்பர்.

மன அழுத்தம், வேலை பளுவால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரியும் நபர்கள் செய்யும் சில வெறுக்கத்தக்க செயல்கள்,எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மூத்த அதிகாரிகளாலும் ஏற்ப்படுகிறது. அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி கொண்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும். மேலும் டென்ஷன் ஏற்படும் போது அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அதை மெதுவாக வெளியே விட வேண்டும். இதனால் மனமும் உடலும் அமைதியாகும். ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை பளு இருக்கும் போது, பதற்றத்துடன் இருக்காமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது தூரம் வாக்கிங் சென்று வரலாம். நல்ல இசை மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு பிடித்த இசையை, உங்கள் மொபைல் போனில் கேளுங்கள் அல்லது விடியோவை பாருங்கள். டென்ஷன் குறைய வேண்டுமானால், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. காபி குடிப்பது டென்ஷனை குறைக்கும் என்பது தவிறு.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் டென்ஷனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை, தியானம் கண்டிப்பாக குறைக்கும். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் அமைதியடைகிறது. மனம் அமைதி இழந்து காணப்படும் போது, உங்கள்ளுக்குப்பிடித்த நல்ல உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம், ஆரஞ்சு உள்ளிட்டவை டென்ஷனை குறைக்கும் உணவுகள் என்று கூறலாம். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.


குறிப்பாக ஆரஞ்சு,சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் ரக பழங்களை, வேலையின் போது உண்ணலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இது , உடலில் உள்ள தசைகளை அமைத்யடயச் செய்கிறது. இது தவிர, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாகவும், நல்ல வாசனை இருக்கக் கூடியதாகவும் அமைத்துக் கொள்ளவதால்,நமக்கே நம் மீது நம்பிக்கை பிறக்கும். டென்ஷன் தானாக விலகும்.