Pages

Showing posts with label டென்ஷன் குறைக்க வழி. Show all posts
Showing posts with label டென்ஷன் குறைக்க வழி. Show all posts

Saturday, October 4, 2014

மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்

 மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்
டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா? அப்ப இதை படிங்க.. தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.

போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு. 

ஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும்.

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே, 'மறப்போம் மன்னிப்போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள்.

உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.
அப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.

இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக்கும். மனக்கசப்பு நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும். 

Friday, July 18, 2014

டென்ஷன்... டென்ஷன்... குறைக்க என்னதான் வழி?

இன்று வேலைக்கு செல்வோரில் பெரும்பாலனவர்கள் டென்ஷனால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு மற்றும் வேலையை திட்டமிட்டு செய்யாமல் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டவதோடு, எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்யமுடியாமல் தவிப்பர்.

மன அழுத்தம், வேலை பளுவால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரியும் நபர்கள் செய்யும் சில வெறுக்கத்தக்க செயல்கள்,எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மூத்த அதிகாரிகளாலும் ஏற்ப்படுகிறது. அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி கொண்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும். மேலும் டென்ஷன் ஏற்படும் போது அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அதை மெதுவாக வெளியே விட வேண்டும். இதனால் மனமும் உடலும் அமைதியாகும். ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை பளு இருக்கும் போது, பதற்றத்துடன் இருக்காமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது தூரம் வாக்கிங் சென்று வரலாம். நல்ல இசை மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு பிடித்த இசையை, உங்கள் மொபைல் போனில் கேளுங்கள் அல்லது விடியோவை பாருங்கள். டென்ஷன் குறைய வேண்டுமானால், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. காபி குடிப்பது டென்ஷனை குறைக்கும் என்பது தவிறு.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் டென்ஷனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை, தியானம் கண்டிப்பாக குறைக்கும். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் அமைதியடைகிறது. மனம் அமைதி இழந்து காணப்படும் போது, உங்கள்ளுக்குப்பிடித்த நல்ல உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம், ஆரஞ்சு உள்ளிட்டவை டென்ஷனை குறைக்கும் உணவுகள் என்று கூறலாம். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.


குறிப்பாக ஆரஞ்சு,சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் ரக பழங்களை, வேலையின் போது உண்ணலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இது , உடலில் உள்ள தசைகளை அமைத்யடயச் செய்கிறது. இது தவிர, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாகவும், நல்ல வாசனை இருக்கக் கூடியதாகவும் அமைத்துக் கொள்ளவதால்,நமக்கே நம் மீது நம்பிக்கை பிறக்கும். டென்ஷன் தானாக விலகும்.