Pages

Wednesday, May 13, 2015

சுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது!


 Image result for sundakkai



சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை உண்டு. சுண்டக்காயை மோரில் ஊற வைத்து, வற்றல் போட்டு வறுத்தும், வற்றல் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்க நல்ல மருந்தாகும்.

உணவில் மாதம் ஒரு முறை, கசப்பு சுண்டைக்காய் சேர்த்துக் கொண்டால், கிருமித் தொந்தரவு இருக்காது. அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவுக்கும், கிருமிகளுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்தாகும். கசப்பாக இருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி, உடலை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளை கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உண்டு. இதனால், உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும்; உடல் சோர்வு நீங்கும்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை, சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்களை போக்கும்.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி, சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி, மோரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு, தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்தி வந்தால் பாதிப்பு குறையும். 

ஊறுகாய்க்கு மட்டுமில்லீங்க.... உடல் நலத்துக்கும் நல்லது!


 narthangai க்கான பட முடிவு

நார்த்தங்காயை தமிழகத்தில் ஊறுகாய் போட மட்டுமே பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது.

இதன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கி, பசியை அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வரலாம்.

உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் உப்பி விடும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டால், நீண்ட ஆயுளோடு வாழலாம்.

Tuesday, May 12, 2015

உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி?


 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. ஆனால் அதை மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து, சில பெற்றோர் பிரயத்தனம் செய்கின்றனர். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.

சில குழந்தைகள் உணவை விழுங்காமல், அப்படியே வெளியே தள்ளி விடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை, சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி

உள்ளிட்ட உணவுகளும், ஜூஸ், பால் போன்றவற்றையும் கொடுப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என அவர்களுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது, உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்க வேண்டும்.

பிரட், ஆப்பிள், சூப், போன்றவற்றை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள். குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவுக்கு உணவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்க வேண்டும்.

அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக, எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி விடும். புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்து, பின்னர் அதிகமாக அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட, நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்ட வேண்டும். குழந்தையின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப, உணவை ருசியாக தயாரித்து அளித்தால், குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு, முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவூட்டுவது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் போது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில், ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையாக, லாவகமாக, மென்மையாக உணவூட்டுவதே சரியானது.

மனஅழுத்தத்தை விரட்டியடிக்கலாம்!


 

காலம், நேரம் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் மனிதனின் லட்சியத்திற்கான பாதையும் மாறி வருகிறது. இப்படி, பம்பரமாய் சிலர் ஒருபுறம் சுற்ற, மறுபுறம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் போரடித்து, தனிமையால் மன அழுத்தத்தில் உள்ளாகுபவர்கள் அதிகம்.

வேலைக்கு சென்றால் ஒரு விதமான மன அழுத்தம் என்றால், வேலைக்கு செல்லாமல் தனிமையில் வாடும் மனஅழுத்தம், சிலரை மனநோயாளியாக்கி விடுகின்றன. சிலரை, அய்யோ பைத்தியம் பிடிச்சிரும் போல் இருக்கிறதே என்று புலம்பவும் வைக்கின்றன. காலை எழுந்தவுடன், வீட்டில் இருக்கும் அனைவரையும் வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டின் அனைத்து வேலையையும் முடித்து, அதற்கு மேல் "டிவி' பார்த்து சலிப்பவர்களே அதிகம்.
இப்படி வீட்டில் இருந்தபடியே, தனிமையை தவிர்த்து, மன அழுத்தம் விடுபட பல வழிமுறைகள் உண்டு. எப்படி?

வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்யலாம். அதாவது இத்தொழில் அதிக லாபம் இல்லாமலும், மனதிற்கு அமைதியை தருவதாகவும் இருந்தால் சரி என நினைப்பவர்கள், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை முதலில் தேர்ந்தெடுங்கள். அது ஓவியம் வரைதல், பெயின்டிங், பூச்செடிகள் வளர்த்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதலில், நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் சென்றபின், பணியில் கவனம் செலுத்த துவங்குங்கள். மாலை அவர்கள் வரும் வரையில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், நேரம் போவதும் தெரியாது; வாழ்வை வீணடிப்பதாகவும் தோன்றாது.

தனிமை, சில நேரத்தில் கோபத்தை உண்டாக்கலாம். நம்மிடம் வந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லக்கூட பிடிக்காது. இப்படி இருப்பவர்கள், வீட்டுப் பக்கத்தில் இருக்கும், மரங்களில் அமரும் கிளி, குருவிகளின் ஓசையை பதிவு செய்து சேகரித்து வைக்கலாம்.

* வீட்டில் தோட்டம் உருவாக்கி, செடிகளை பதியம் போட்டு, செடி, மரங்கள் விற்பனை செய்யலாம்.
* பானை, பிளாஸ்டிக் பெட்டிகள், கண்ணாடிகளில் நவீன தொழில்நுட்பம் கற்று, அதில் சாதிக்கலாம்.
* உபயோகம் இல்லாமல் வீணாகும் பொருட்களை வைத்து, வீட்டு அலங்கார பொருட்களை செய்யலாம். இதனை சந்தைபடுத்தினால் கிடைக்கும் லாபம், வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பிடிப்பையும் தரும்.
* கற்று கொடுப்பதில், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, வித்தியாசமான முறையில், செய்முறை விளக்கத்துடன் சொல்லி தரலாம்.

இதை படிக்கும் போதே, வீட்டில் இருப்பவர்கள் மனதில், அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். இன்றே புறப்படுங்கள். வித்தியாசமான முறையில், ஒவ்வொன்றையும் செய்து அசத்துங்கள்... தனிமைக்கு குட்பை சொல்லி...

சுவாரஸ்யத்துக்கு வெல்கம் சொல்லலாம்.

Friday, May 8, 2015

ஃபிரைடு ரைஸ்


 fried rice க்கான பட முடிவு
 தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 ஆழக்கு
கோஸ் - 1 கை
கேரட் - 1
பன்னீர் - 50 கிராம்
பட்டாணி - 1 கை
வெங்காயம்
வெங்காய தாள் - 2
மிளகாய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
தக்காளி - 1
கறிமசாலா - 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிறிதளவு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 / 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது

செய்முறை :

* பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.

* வெங்காயம் , கேரட், பன்னீர், வெங்காய தாளை பொடியாக நறுக்கவும்.

* தக்காளியை விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும்.

* கடையில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து கோஸ், கேரட், பன்னீர், பட்டாணி, வெங்காய தாள் போட்டு வதக்கவும்( கலர் மாற கூடாது ).

* அடுத்து மிளகாய் பேஸ்ட் சேர்க்கவும் (மிளகாயை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து ).

* பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* கடைசியாக சாதம், மிளகு தூள், தக்காளி, சீரக தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்• தனியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது அலுப்பாக இருப்பின், குடும்ப உறுப்பினரையோ அல்லது தோழியையோ துணையாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஜிம்மிற்கு செல்லும் போது உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நன்றாக கவனித்து, உற்சாகமூட்டி ஆலோசனை அளிக்கக்கூடியவரை துணைக்கு வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

• எந்த ஒரு உடற்பயிற்சியையும் துவங்கு முன்னர், உடலின் இறுக்கத்தை தளர்த்தி, தசைகளை நெகிழ்வூட்டும் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வது மிக அவசியம். இவை திசுக்களில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க உதவுகின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்முறைகளை மிதமான வேகத்தில் துவங்கி, பின்னர் படிப்படியாக அதிகரித்துக் கொள்வது சிறந்தது.

• எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அது எடையைக் கூட்டுவதில் தான் போய் முடியும். மாறாக, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுமுறை ஆகியவற்றின் மூலம் உடற்கட்டை ஒரே சீராக வைத்திருப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

• எனர்ஜி பார் போன்ற நவீன சத்து தின்பண்டங்களை உடற்பயிற்சிக்கு முன்னதாக சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை போன்றவை நிறைந்துள்ளன. மிகவும் பசியாக உணர்ந்தால் வாழைப்பழம் சாப்பிடலாம். இது உடனடியாக செரிமானமாகி சக்தியை தரக்கூடியது.

• இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருந்தால், உடலுக்கு தேவையான அளவு உடற்பயிற்சி இல்லை என்று அர்த்தம். அதே சமயம் மிக அதிகமான அளவில் இருந்தால், அது உடற்பயிற்சி மிதமிஞ்சி இருப்பதை குறிப்பிடுகிறது. எனவே ஒரு இதயத்துடிப்பு கருவி மூலமோ அல்லது நாடி பார்த்தோ, இதயத்துடிப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

• சிரிக்கும் போதோ, புன்னகைக்கும் போதோ, உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரந்து கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்களை அழிக்கின்றன. எனவே சிரித்து மகிழ வைக்கும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வாய்விட்டு சிரிப்பது முகத் தசைகளுக்கும் நல்ல பயிற்சியை அளித்து முகத்தை அழகாக்குகிறது. வாய்விட்டு சிரித்த பின் கண்ணாடியை பார்த்தால், உங்களுக்கே உண்மை புரியும்.

• மனம் தளராமல் ஒரே சீராக பொறுமையுடன் ஆரோக்கிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

Thursday, May 7, 2015

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

* பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு.

* சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள். இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது.

* சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது. ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்.

* பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.   ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை.

* உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்.

* ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.

* இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம்.

* பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.

பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி?


 gold jewellery designs க்கான பட முடிவு

தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும். அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள். குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.

குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்.

மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.

அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.சிவப்பு நிறம் உள்ளவர்கள்: ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.

கறுப்பு நிறம் உள்ளவர்கள்: வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்! முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும். அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில்

பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும். முத்து செட்டும் அம்சமாக இருக்கும். தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள். ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.

பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும். சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம்.  இது எல்லோருக்குமே பொருந்தும். 

டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.

கேசர் பாதாம் குல்ஃபி



kesar padam kulpi க்கான பட முடிவு

தேவையானவை:

  • பால் - ஒரு லிட்டர்

  • க்ரீம் (Fresh Cream) - 4 தேக்கரண்டி

  • பாதாம் - 5

  • பிஸ்தா - 5

  • முந்திரி - 4

  • குங்குமம் பூ - ஒரு தேக்கரண்டி

  • சர்க்கரை - ஒரு கப்
செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலிலிருந்து 5 தேக்கரண்டி அளவு பாலை எடுத்து அதனுடம் ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவை கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பாலை அடிபிடிக்க விடாமல் நன்கு கிளறிக் கொண்டேயிருக்கவும்.

சிறு தீயில் வைத்துக் காய்ச்சவும். பாலில் 4 தேக்கரண்டி க்ரீம்மை கலக்கவும். பால் கெட்டியாகி பாதி அளவு வந்தவுடன், பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய், பொடி செய்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதன் பின்னர் தனியாக கலந்து வைத்துள்ள குங்குமப்பூ பாலை சேர்த்து நன்கு கிளறி கலவை சற்று திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.

கேசர் பாதாம் கலவையை தனியாக வைத்து நன்கு ஆற விடவும். ஆறியதும் குல்ஃபி மோடில் ஊற்றவும். இந்த கலவையை சிறிய பானையில் ஊற்றி மேலே பாயில் பேப்பர் சுற்றி இரண்டையும் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்ஃபி நன்கு கெட்டியாகி செட்டானதும் எடுத்து பரிமாறவும். சுவையான கேசர் பாதாம் குல்ஃபி ரெடி.

Wednesday, May 6, 2015

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?


 இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?
உங்கள் தோலுக்கு பொருத்தமாக இந்த இரவு கிரீமை தேர்வு செய்தல் மிக முக்கியமானது ஆகும். கீழே ஒரு சில குறிப்புகள் உள்ளன: நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்ந்தெடுக்கும் போது, கிரீம் மிகவும் அடர்த்தியாக இல்லாமால் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஒரு தடித்த இரவு கிரீம் உங்கள் தோலின் துளைகளை திணற வைக்கிறது. இதனால் உங்கள் தோல் மூச்சு விடுவதற்கு கடினமாகிறது. நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்வு செய்யும் போதெல்லாம், அது அதிக‌ வாசனை இல்லாமலும் மற்றும் ஒவ்வாமை குறைவானதாக இருப்பதையும் உறுதி செய்யுங்கள். எப்படி இதை உபயோகப்படுத்துவது? நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்ய வேண்டாம்.

அது ஒரு பயனுள்ள தாக்கம் இல்லாமல் இருக்கலாம். கீழே உங்கள் முகத்தில் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கான செயல்முறை எப்படி என்பதை பார்ப்போம்.

1. நீங்கள் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

2. கிரீமை ஒரு நாணயத்தின் அளவு எடுத்து. உங்கள் முகம் மீது அதை துடைக்கவும்.

3. உங்கள் தோலில் கிரீமை மேல்நோக்கி, வட்ட திசையில் மசாஜ் செய்யவும்.

4. உங்கள் கண் இமைகளுக்கு இரவு கிரீமை போட வேண்டாம்.

நீங்கள் வீட்டிலேயே உங்கள் இரவு கிரீமை செய்ய முடியும். நீங்கள் அரை ஆப்பிள் எடுத்து. அதன் தண்டை நீக்கி மசித்து கொள்ளவும். பின்னர் ஆலிவ் எண்ணெய் 1 கப்பில் எடுத்துக் கொண்டு இந்த கலவையை நன்றாக கலக்கவும். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்றி. ஒரு இரட்டை கொதிகலனில் அதை வைத்து அது சூடாக மாறும் வரை கலவையை வெப்பத்தில் வைத்து, கலவை சூடான பிறகு, கொதிகலனில் இருந்து எடுத்து அதை குளுமையாக்க வேண்டும்.

இது பசை போல ஒட்டும், அதனால் தண்ணீர் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். உங்கள் இரவு கிரீம் இப்போது தயாராக இருக்கிறது! இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்த‌ முடியும். 

பப்பாளி செய்யும் மாயம் என்ன?




பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பப்பாளி க்கான பட முடிவு
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.  

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்


 பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்

தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது.

தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம். பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.  


முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும்.

நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.

ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள். 

பலன்கள் :

பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.

கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்


 கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்

சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே கருவளையங்களைப் போக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

• தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்.

• உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்.

• க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும். 

Tuesday, May 5, 2015

தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை


 தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை

பொதுவாகவே தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர் டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இங்கே நான் சொல்லும் வழிகளை சரியாகப் பின்பற்றினாலே உங்கள் கூந்தல் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.  

முதலில், கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும். அதற்கான சிகிச்சை இது... டீயை வடிகட்டி... அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள்.

இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து உபயோகியுங்கள். இது போல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையா
கும்.

அடுத்தது, அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்! டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

தேங்காய்க்கீற்று - 2
வெள்ளை மிளகு - 1 டீஸ்பூன்...


இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன், பொடுகுத் தொல்லையும் ஓடிப் போகும்.

மூன்றாவது சிகிச்சை, கூந்தல் கருகருவென்று வளருவதற்கு...

இளம் மருதாணி இலை - 50 கிராம்,
நெல்லிக்காய் - கால் கிலோ,
வேப்பங்கொழுந்து - 2 கிராம்...
 

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்தத் தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

உங்கள் கூந்தலுக்கான இயற்கை கலரிங் முறை ஒன்றையும் சொல்கிறேன்.

சீயக்காயவுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் தலை மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு நீங்கள் ஹேர் டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.  


Sunday, May 3, 2015

ஆரோக்கியத்தை தூக்கி வீசாதீங்க!


 கறிவேப்பிலை க்கான பட முடிவு
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை, அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து, சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து, இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து, நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்ததுள்ளது. தாளிக்கும் போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும், புற்றுநோய் உருவாக்கும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில், கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால், குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்


 
நேரத்தை வீணாக்க வேண்டாம்; காலம் பொன் போன்றது' என்ற பழமொழிகள் எல்லாம், நாம் அடிக்கடி கேட்டவை; . 'நேரத்தை வீணாக்காமல், ஏதாவது செய்தால், நல்லது' என்று அந்த பழமொழிகளுக்கு இப்போது அர்த்தம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும், எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு.

உண்மை என்ன? : செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டும். மாற்றியோ, நேரம் தவறியோ, காலம் தாழ்த்தியோ செய்வதால், எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. படிப்பதில், பொருள் ஈட்டுவதில், திருமணம் செய்துகொள்வதில், அர்த்தம் மற்றும் நோக்கம் இருக்கின்றன. அவற்றை உரிய காலத்தில் செய்யும் போதுதான், பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். தண்டனை கூட உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். உரிய நேரத்தை தவறவிட்டோர், மகிழ்ச்சியையும் நல்ல அனுபவத்தையும் பெறும் வாய்ப்பு மிகமிக குறைவு தான்.

இன்றைய நிலையில், நேரத்தை வீணாக்காமல் ஏதாவது செய்தால், நேரத்தை பயனுள்ளதாக மாற்றிவிட்டதாக கருதுகின்றனர். இத்தகைய கருத்திற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. நேரத்தை வீணாக்க வேண்டும் என்பதற்கு அர்த்தமே, காலம் தவறி செயல்பட வேண்டாம், என்பதுதான். எனவே, காலத்தை புரிந்து செயல்படுங்கள். பலபேர், மிகுதியான காலத்தை வைத்துக்கொண்டு வீணாகிப் போகின்றனர். காலத்தை பொன்னாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்


 vodka facial க்கான பட முடிவு

பேஷியல் என்பது நம் சருமத்தை பொலிவாக மட்டுமின்றி மிருதுவாகவும் வைப்பதற்காகவும் செய்யப்படுவதாகும்.

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன.

ஆனால் மற்ற மதுபான பேஷியல்களை ஒப்பிடுக்கையில் வோட்கா பேஷியல் சற்று வித்தியாசமானது.

இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன

உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.

இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து.

வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

இந்த பேஷியலை முடித்துவிட்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளபளப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.