Pages

Showing posts with label மனஅழுத்தத்தை விரட்டியடிக்க. Show all posts
Showing posts with label மனஅழுத்தத்தை விரட்டியடிக்க. Show all posts

Tuesday, May 12, 2015

மனஅழுத்தத்தை விரட்டியடிக்கலாம்!


 

காலம், நேரம் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் மனிதனின் லட்சியத்திற்கான பாதையும் மாறி வருகிறது. இப்படி, பம்பரமாய் சிலர் ஒருபுறம் சுற்ற, மறுபுறம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் போரடித்து, தனிமையால் மன அழுத்தத்தில் உள்ளாகுபவர்கள் அதிகம்.

வேலைக்கு சென்றால் ஒரு விதமான மன அழுத்தம் என்றால், வேலைக்கு செல்லாமல் தனிமையில் வாடும் மனஅழுத்தம், சிலரை மனநோயாளியாக்கி விடுகின்றன. சிலரை, அய்யோ பைத்தியம் பிடிச்சிரும் போல் இருக்கிறதே என்று புலம்பவும் வைக்கின்றன. காலை எழுந்தவுடன், வீட்டில் இருக்கும் அனைவரையும் வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டின் அனைத்து வேலையையும் முடித்து, அதற்கு மேல் "டிவி' பார்த்து சலிப்பவர்களே அதிகம்.
இப்படி வீட்டில் இருந்தபடியே, தனிமையை தவிர்த்து, மன அழுத்தம் விடுபட பல வழிமுறைகள் உண்டு. எப்படி?

வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்யலாம். அதாவது இத்தொழில் அதிக லாபம் இல்லாமலும், மனதிற்கு அமைதியை தருவதாகவும் இருந்தால் சரி என நினைப்பவர்கள், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை முதலில் தேர்ந்தெடுங்கள். அது ஓவியம் வரைதல், பெயின்டிங், பூச்செடிகள் வளர்த்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதலில், நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் சென்றபின், பணியில் கவனம் செலுத்த துவங்குங்கள். மாலை அவர்கள் வரும் வரையில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், நேரம் போவதும் தெரியாது; வாழ்வை வீணடிப்பதாகவும் தோன்றாது.

தனிமை, சில நேரத்தில் கோபத்தை உண்டாக்கலாம். நம்மிடம் வந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லக்கூட பிடிக்காது. இப்படி இருப்பவர்கள், வீட்டுப் பக்கத்தில் இருக்கும், மரங்களில் அமரும் கிளி, குருவிகளின் ஓசையை பதிவு செய்து சேகரித்து வைக்கலாம்.

* வீட்டில் தோட்டம் உருவாக்கி, செடிகளை பதியம் போட்டு, செடி, மரங்கள் விற்பனை செய்யலாம்.
* பானை, பிளாஸ்டிக் பெட்டிகள், கண்ணாடிகளில் நவீன தொழில்நுட்பம் கற்று, அதில் சாதிக்கலாம்.
* உபயோகம் இல்லாமல் வீணாகும் பொருட்களை வைத்து, வீட்டு அலங்கார பொருட்களை செய்யலாம். இதனை சந்தைபடுத்தினால் கிடைக்கும் லாபம், வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பிடிப்பையும் தரும்.
* கற்று கொடுப்பதில், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, வித்தியாசமான முறையில், செய்முறை விளக்கத்துடன் சொல்லி தரலாம்.

இதை படிக்கும் போதே, வீட்டில் இருப்பவர்கள் மனதில், அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். இன்றே புறப்படுங்கள். வித்தியாசமான முறையில், ஒவ்வொன்றையும் செய்து அசத்துங்கள்... தனிமைக்கு குட்பை சொல்லி...

சுவாரஸ்யத்துக்கு வெல்கம் சொல்லலாம்.