Pages

Showing posts with label பாதாம். Show all posts
Showing posts with label பாதாம். Show all posts

Tuesday, April 5, 2016

உறக்கத்தை தரும் உணவு பொருள்


நம்மில் பலர் தூக்கத்தை மறந்து இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருகின்றனர். உண்ணும் உணவும், வாழும் சூழ்நிலையும் ஒருவனின் நிம்மதியான தூக்கத்தை தொலைத்த துரதிர்ஷ்டசாலிகளாய் உள்ளனர்.

உறக்கம் வருவதில் பிரச்சனை இருப்பவர்கள், முதலில் உணவு கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சரியான உணவினை உட் கொள்ளுவதன், மூலம் நல்ல உறக்கத்தைப் பெறலாம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீர் : உறங்கச் செல்வதற்கு முன் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியானைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைபழம் தான். இது அதிக தசை இறுக்கத்தை தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும்  உள்ளது. ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும். 

ஓட்ஸ் : ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம், உறக்கம் வருவதற்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைகின்றன . ஆனால் ஒட்சில் அதிக சீனி சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை  சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

 

பால்: பால், யோகர்ட், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியள்ள கால்சியம், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன், நரம்பிழைகளின் உறுதி தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே உறங்க செல்வதற்கு முன்னர் யோகர்ட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

 

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்கும் போது, ரத்தத்தில் சர்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

செர்ரிபழம்: படுத்தவுடன் உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப் பழரசம் ஜூஸ் அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Thursday, May 7, 2015

கேசர் பாதாம் குல்ஃபி



kesar padam kulpi க்கான பட முடிவு

தேவையானவை:

  • பால் - ஒரு லிட்டர்

  • க்ரீம் (Fresh Cream) - 4 தேக்கரண்டி

  • பாதாம் - 5

  • பிஸ்தா - 5

  • முந்திரி - 4

  • குங்குமம் பூ - ஒரு தேக்கரண்டி

  • சர்க்கரை - ஒரு கப்
செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலிலிருந்து 5 தேக்கரண்டி அளவு பாலை எடுத்து அதனுடம் ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவை கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பாலை அடிபிடிக்க விடாமல் நன்கு கிளறிக் கொண்டேயிருக்கவும்.

சிறு தீயில் வைத்துக் காய்ச்சவும். பாலில் 4 தேக்கரண்டி க்ரீம்மை கலக்கவும். பால் கெட்டியாகி பாதி அளவு வந்தவுடன், பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய், பொடி செய்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதன் பின்னர் தனியாக கலந்து வைத்துள்ள குங்குமப்பூ பாலை சேர்த்து நன்கு கிளறி கலவை சற்று திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.

கேசர் பாதாம் கலவையை தனியாக வைத்து நன்கு ஆற விடவும். ஆறியதும் குல்ஃபி மோடில் ஊற்றவும். இந்த கலவையை சிறிய பானையில் ஊற்றி மேலே பாயில் பேப்பர் சுற்றி இரண்டையும் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்ஃபி நன்கு கெட்டியாகி செட்டானதும் எடுத்து பரிமாறவும். சுவையான கேசர் பாதாம் குல்ஃபி ரெடி.