Pages

Showing posts with label தூக்கமின்மை. Show all posts
Showing posts with label தூக்கமின்மை. Show all posts

Friday, October 7, 2016

தூக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பு



எந்த சந்தேகமும் வேண்டாம். தூக்கமின்மை மூளை  சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காவிட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத்திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.

தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்கமுடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். துங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

Saturday, July 25, 2015

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?


அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளைக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.

உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.

தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

Thursday, March 5, 2015

தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் பரமபிதா ஆசனம்



தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் பரமபிதா ஆசனம் 
பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும்.  

செய்முறை :

முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக (வஜ்ராசனம்) எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ளவும்.

இதனால் வானத்தில் உள்ள லட்சக் கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும். மிகக் குறுகிய நேரத்தில் மன அமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும். வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம்.

உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.

Friday, February 28, 2014

தூக்கமின்மையில் இந்தியர்கள்

தூக்கமின்மைஇந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.

இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.

பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.

58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான  பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.

ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும்  தூங்க வேண்டும்.  8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.