Pages

Showing posts with label வெந்தயம். Show all posts
Showing posts with label வெந்தயம். Show all posts

Saturday, March 19, 2016

வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம்நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும பொருட்களை நன்றாக சுத்தபடுத்தி பயன்படுத்தினாலே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதில் இப்பொழுது வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை பயன்படுத்துவது மிகவும் குறைவுதான். வெந்தயத்தை நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தினால் சுத்தமாகிவிடும். இந்த வெந்தயத்தை வாயில் போட்டு நீர் அல்லது மோரை குடித்தல் உடல் சூடு தணியும். பேதி, வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல் இருந்தாலும் உடனே குணமாகும். தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் குணமாகும்.


கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயம் மற்றும் சீரகத்தை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி வயிறு வலி, வயிற்றில் புண் இருந்தால் இளநீரில் ஓட்டை போட்டு அதில் சிறிது வெந்தயத்தை போட்டு அதை அப்படியே மூடி இரவு  முழுவதும் வைத்து காலையில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு இளநீரையும் குடித்து வந்தால் பிரச்சனை தீரும்.
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை 
வெந்தயம் சாப்பிட பிடிக்கலைனா வெந்தய தோசையாகவோ, களி செய்தும் சாப்பிடலாம். வெந்தயத்தில் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனாலும் பலன் கிடைக்கும்.

Wednesday, April 8, 2015

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

venthayam க்கான பட முடிவு

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

* 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

* இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

* வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

* தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

* வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அடுக்களையிலுள்ள வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும்.  

Saturday, September 6, 2014

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்


சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.