Pages

Showing posts with label ஆண்மையுடன் அழகாக இருக்க. Show all posts
Showing posts with label ஆண்மையுடன் அழகாக இருக்க. Show all posts

Thursday, March 27, 2014

உலக சித்தர் தினம்: நோயின்றி வாழ உறுதி கொள்வோம்


சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவு கொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

இவர்கள் இன்னும் இவ்வுலகில் பல வடிவங்களில் மனித உருவில் கலந்து மனிதர களின் துயரை களைந்து தங்களின் மகா சக்தியை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர் சித்தர்கள். எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.

எளிய நோய்களான காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புண்கள், கழிச்சல், தலை வலி, கைகால் மூட்டு வலிகள், சோகை, கடின நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், காச நோய், பிறப்புறுப்பு நோய்கள், தொழுநோய், புற்று நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளையும், உலோகங்களையும், தாது உப்புக்களையும், உபரசங்கள் பாடா ணங்களையும் மருந்தாக்கி கொடுத்துதான் மேற்கண்ட நோய்களில் இருந்து மக்களை காத்து வந்தனர் சித்தர்கள்.

அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சோதனைக்கான ஆய்வுக்கூட வளர்ச்சி, அயல் நாட்டு சிகிச்சை, புதிய வகை ரசாயன மருந்துகள், கண்டுபிடிப்புகள் போன்ற இத்தனை வந்த பிறகும், வளர்ச்சிகளை நாம் அடைந்த பிறகும் நோய்களை கண்டு நாம் இன்னும் பயந்து கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம்.

அதிக நேரம், அதிக பணம், அதிகமான மருந்துகள், ஆலோசனைகள் தந்த

பேராசைகளை துறந்து கடமையை சரியாக செய்ய வேண்டும். அயல்தேச நவீன கலாச்சாரங்களை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். பணமே பிரதானமாக எண்ணி உடலை வருத்தி சம்பாதித்து மருந்துக்கு செலவழிப்பதை விட உடலே பிரதானமாக உணவை மருந்தாக எண்ணி உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழை முதல் பணக்காரர் வரை பாரபட்சமின்றி அனைத்து நோய்களும் அனைத்து தரப்பினருக்கும் வந்து விட்டது. கூலி தொழிலாளி முதல் உயர் படிப்பு படித்த, ஏன் மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் வந்து விட்டது சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய். இதற்கு யார் காரணம். எங்கிருந்து வந்தது. எதனால் வந்தது. தீர்க்க வழி உண்டா, இல்லையா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் 15 குழந்தைகள் வரை பெற்றெடுத்த தாய்மார்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அன்று தடுப்பூசி இல்லை. மகளிர் மருத்துவர் ஆலோசனை, தொடர் கண்காணிப்பு இல்லை. சத்து ஊசி இல்லை. சத்து மாத்திரை இல்லை. ஆனாலும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் சுகப் பிரசவம்.

இன்று எல்லாம் இருந்தும் மனித இனம் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம். மருத்துவராலும், மருந்தினாலுமே நோயிலிருந்து நம்மை காக்க முடியாது. நாம் மனது வைத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை காத்து ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழமுடியும். உண்ணும் உணவுதான் மருந்து.

ஒவ்வொரு உணவு பொருட்களுமே ஒவ்வொரு உடல் உறுப்புகளை வளர்க்கிறது, பாதுகாக்கிறது. உணவு பொருட்களான தானியங்கள், காய்கள், கனிகள், கீரைகள், பயிறு வகைகள் இவைகள் அனைத்தும் தான் நோய் தீர்க்கும் மருந்துகள். இவைகள் போக நம் வீட்டிலும், தோட்டத்திலும் இருக்கும் மூலிகை தாவரங்கள் தான் நோய் தீர்க்கும் மருத்துவர்கள். எந்த நோயை கண்டும் பயப்பட தேவையில்லை.

உணவு பொருட்களாலும், மூலிகைகளாலும், சித்தர்கள் சொன்ன வழி முறைகளை கடைபிடித்து சித்த மருந்துகளை சித்த மருத்துவர்கள் (உண்மையான பட்டம் பெற்ற, உண்மையான பாரம்பரிய மருத்துவர்கள்) ஆலோசனை பெற்று எடுத்துகொள்ள நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்.

சர்க்கரை நோய்க்கும் சகல நோய்க்கும் ஒரே மருந்து........

வெந்தயம்-600 கி.
கொள்ளு-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன் நிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீருக்கு 2 டீஸ்பூன் பொடியை கலந்து அடுப்பில் கொதிக்க வைத்து 100 மில்லியாக (1 டம்ளராக) சுண்டக்காய்ச்சி வடிகட்டி நோயின் தீவிரத்திற்கு ஏற்ப 6 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆகாரத்திற்கு முன்பு (குறைந்தது 45 நிமிடம்) குடித்து வர சர்க்கரை நோய் மட்டுமல்ல, சகல நோயும் தீரும், இது அதிசயம் ஆனால் உண்மை.

உடல் பருமனால் வயிற்று பிரச்சினையா?

கொள்ளு ரசம்-கொள்ளு கசாயம் கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், இன்சுலின் ஊசி வேண்டாம்........

வரகொத்துமல்லி-500 கி.
வெந்தயம்-250 கி.

இவற்றை தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்பு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 2 டீஸ்பூன் பொடியை கலந்து கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்டக்காய்ச்சி பின்னர் அதனை வடிகட்டி 2 அல்லது 3 வேளை சாப் பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் போயே போச்சு.

முதுமை வராமல் இளமையோடு இருக்க..........

 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்து பொடியை தினமும் 2 வேளை 5 கிராம் தேனில் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் (சாப்பாட்டிற்கு பிறகு) முதுமையின்றி இளமையோடு வாழலாம். திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திÛரை (காலை 2, இரவு 2) சாப்பிடலாம். இதனை சாப்பிட முதுமை வராது.

ஆண்மையுடன் அழகாக இருக்க...........

அமுக்கரா சூரணம் 5 கிராம்,
2 வேளை (அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி கலந்தது) பாலில் கலந்து சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடலாம். அல்லது அமுக்கரா சூரண மாத்திரை காலை 2, இரவு 2 சாப்பிட ஆண்மை வலுவடைந்து மேனி அழகுபெறும்.

மலம் தினசரி கழிக்க......

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) பொடியை அல்லது மாத்திரைகளை காலை, மாலை 5 கிராம் (2-0-2) வெந்நீரில் கலந்து பருகினால் பலன் உண்டு.

சித்த மருத்துவம்

பிறகும் நோய் பயம் இன்னும் தீரவில்லையே. மனிதன் மாறவேண்டும், தன்னுடைய உணவு முறையை மாற்றவேண்டும். பழக்க வழங்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உறங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழ் கலாச்சாரம் சொன்ன ஆலய வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.