Pages

Showing posts with label Healthy Tips. Show all posts
Showing posts with label Healthy Tips. Show all posts

Saturday, March 22, 2014

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்
உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.
இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Thursday, February 13, 2014

Potato Croquettes

Ingredients    

    1/2 Potatoes
    1 Onion
    1tsp Chilli Powder
    Left Over Rice
    Salt

   
Method of cooking    

Boil The Potatoes Mash Them Along With The Left Over Rice.
Chop The Onions Finely. Add Chilli Powder And Salt.
Make It Into Cylinderical Shape And Fry It In Oil.

Method of Serving    
Serve Hot With Tomato Sauce.

Important for your health…. Please go through…

v     Reduce volume of tea intake;

v     Do not eat bread which has JUST been toasted;

v     Stay a distance from your charger;

v     Drink more water in the morning, less at night;

v     Do not drink coffee twice a day;

v     Reduce your volume of oily food;

v     Best sleeping time is from 10 at night to 6 at the morning;

v     Do not have HUGE meals after 5pm;

v     Do not take alcohol more than a cup daily;   J J J ..

v     Do not take capsules with cold water;

v     Do not lie down immediately after taking medicine before sleeping;

v     Have 8 hours sleep. Lack of it will make a person stupid;

v     People who get used to napping will not get old easily;

v     When battery left last grid, do not answer the phone. The
radiation is 1000 times;

v     Answer the phone with your left ear. It'll spoil your brain
directly if you use your right ear;

v     Do not use earphone for long time. Rest your ear a while after 1 hour.

Monday, February 10, 2014

நொறுங்கத் தின்றால் ஆரோக்கியம்

ஆரோக்கியம்
நாம் ஆரோக்கியமாக வாழ, நம் உடலில் வாத, பித்த, கப நாடிகள் முறையாக இயங்க வேண்டும். இதற்கு, இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் சிறு வயதில் மாங்காய், புளியங்காயும், உப்பு தொட்டு களாக்காய், வெள்ளரிக்காயும், சாப்பிடுவோம். பழைய சாதத்தை உறுகாய் தொட்டு சாப்பிடுவோம். இதில் உப்பு, புளி, காரம் ஆகிய மூன்றும் உள்ளன. பாகற்காய், சுண்டைக்காயில் கசப்பும், வாழைத்தண்டு, வாழைப்பூ, நெல்லிக்காய், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் துவர்ப்பு சுவை உள்ளது. அதிகம் சுவைக்காத கசப்பும், துவர்ப்பும், போதிய அளவு கிடைக்காத போது, தோல் வியாதி வர வாய்ப்பு உள்ளது.

பேசிக் கொண்டே சாப்பிட்டால், 'பேசாம வாயை மூடிகிட்டு சாப்பிடுங்கடா' என்று பெற்றோர் கூறுவது வழக்கம். படித்துக் கொண்டோ, 'டிவி' பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. வாயில் போட்ட உணவை, உதடுகளை மூடிக் கொண்டு, பற்களால் நன்கு அரைக்க வேண்டும். அப்போது உமிழ் நீருடன் கலந்து பாதி செரிமானம் ஆகும். அவை உணவுக் குழாய், வழியாக இரைப்பைக்குச் சென்று, ஹைட்ரோ குளோரிக் அமிலம், பித்த நீர், கணைய நீர் உள்ளிட்ட பல வேதிப் பொருட்களுடன், கலந்து கூலாகிறது. சிறு குடலில் தேங்கி நிற்கும் கூழ் உறிஞ்சப்பட்டு, மண்ணீரல் வழியாக கல்லீரலுக்கு ரத்தமாக செல்கிறது. "நொறுங்கத் தின்றால் 100 ஆண்டுகள்' என முன்னோர்கள் கூறுவது வழக்கம். அதனால், எந்தப் பொருளை சாப்பிட்டாலும், நொறுங்க மென்று கூழ் செய்து விழுங்க வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், கீரைகளில் 'மெக்னீசியம் சத்து' அதிகம் உள்ளது. இதை சாப்பிடும்போது, உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை. முளைத்த பயறு வகைகள், கொள்ளு, கேரட், வாழைப்பூ, தண்டு, வெள்ளரி ஆகிய உணவு வகைகள், உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தரும். நொறுக்குத் தீனிகளையும், எண்ணையில் தயாரித்த பொருட்களையும், பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்ததையும், புளி சேர்த்த உணவு வகைகளையும், மீண்டும் சூடு செய்த உணவு வகைகளையும், டீ, காபி ஆகியவற்றையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும், முகத்தில் உள்ள உறுப்புகளுக்கும், ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது. மண்ணீரல் உதடுகளுடனும், கல்லீரல் கண்களுடனும், நுரையீரல் மூக்குடனும், சிறுநீரகம் காதுகளுடனும் தொடர்புடையவை. மண்ணீரல் மாவுப் பொருட்களையும், கல்லீரல் புரதம் மற்றும் கொழுப்புப் பொருட்களையும் ஜீரணிக்கின்றன. மண்ணீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. கல்லீரல் அதை சுத்தம் செய்து இதயத்திற்கு அனுப்புகிறது. எனவே, நாம் சாப்பிடுவதற்கு முன், கை, கால், காது, முகம் ஆகியவற்றை நன்கு கழுவ வேண்டும். வெளியே செல்லும் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். நோய், தொற்றுக்கு காரணமான இடங்களை நம்மை அறியாமலே தொடுகிறோம். சாப்பிடுவதற்கு முன் கைகளையும், முகத்தையும் சுத்தமாக கழுவுவதன் வாயிலாக, நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Tuesday, January 28, 2014

பிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க

 பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிக்கு தரும் கவனம் குழந்தை பிறந்த பின்னும் தொடர வேண்டும். பிரசவத்துக்குப் பின் பெண்கள் குண்டாகி விடுவது சகஜம். அதை தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்கு பின் பெண்கள் குண்டாவதற்கு முதல் காரணம் - "நார்மல்" பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக கொழுப்பு, ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் தருவது. குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்ட பலவீனத்தை போக்க இது தான் வழி என்று பெற்றோர்கள் அதிக ஊட்டச்சத்து உணவை பிரசவமான பெண்களுக்கு திணிக்கிறார்கள். சில பெண்கள் பிரசவத்துக்குப் பின் "ஒய்விலேயே" இருக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னும் லகுவான, சிரமமில்லாத உடல் உழைப்பு (அல்லது) உடற்பயிற்சி தேவை. இதை தாயின் பெற்றோர் கவனிக்க வேண்டும். நமது நாட்டில், பிரசவமான பெண்ணை வீட்டில் வேலை செய்யவே மற்ற குடும்பத்தினர் விடவே மாட்டார்கள். இந்த அதீத அன்புத் தொல்லையால் உடல் எடை கூடும்.

"சிசேரியன்" செய்து பிரசவித்த பெண்களால் உடனடியாக நார்மல் செயல்களை செய்ய முடியாது. உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது. அதனால் அவர்களின் கர்பப்பை நார்மல் நிலைக்கு சுருங்குவது தாமதமாகும். இதனால் அடிவயிறு பெருத்து விடும். கூடவே போஷாக்கான, கொழுப்பு / இனிப்பும் சேர்ந்த உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதனால் 'ஓபிசிடி' உண்டாகும்.

சில பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றால் மனோரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எல்லோரிடமும் எரிந்து விழுதல், அநாவசியமாக கோபப்படுதல் போன்ற குணமாற்றங்கள் ஏற்படுவது அதிசயமல்ல. பிரசவ பாதிப்புகளில் இதுவும் ஒரு அங்கம். மனபாதிப்பினால் இத்தகைய பெண்கள் அதிகம் உண்ணத் தொடங்கி, உடல் எடையை கூட்டிக் கொள்கின்றனர்.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

1. உணவு கட்டுப்பாடு - உங்களின் செல்லக் குழந்தை பிறந்த பின் ஏறும் எடையை குறைக்கலாம். அதற்கு முதல் தேவை "பத்தியம்" அல்ல. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு சத்தான உணவு தேவை. எனவே அவசரப்பட்டு "டயட்" டில் இறங்கி விடாதீர்கள். உங்கள் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையின்றி "எக்ஸ்ட்ரா" கலோரிகளை ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

2. நிறைய தண்ணீர் குடிக்கவும். உணவுடனும் குடிக்கவும். தண்ணீர் அதிகமாக குடிக்க, உணவு குறைவாகும்.

3. உணவில் நார்ச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து சாப்பிட்ட பின் சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதை தாமதப்படுத்தும். நார்ச்சத்தினால் வயிறு சீக்கிரமே நிறைந்தது போல் உணர்வீர்கள். பழங்கள், காய்கறி, பீன்ஸ், பழுப்பு அரிசி (கைக்குத்தல் அரிசி, முழுத்தானியங்கள், பார்லி, ஓட்ஸ்) முதலியவை நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

4. சர்க்கரையை கூடிய வரையில் தவிர்க்கவும். சர்க்கரையில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்தலாம்.

5. கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

6. உணவு உண்ணும் போது நன்றாக மென்று விழுங்கவும்.

7. ஆயுர்வேதம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ற வாசனை திரவியங்கள் கலந்த உணவை வலியுறுத்துகிறது. உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். ஈரப்பசை உடையதாக இருக்க வேண்டும். இளம் சூட்டுடன் பரிமாறப்பட வேண்டும். சீரகம், கருஞ்சீரகம், இஞ்சி, கடுகு, துளசி, மஞ்சள், வெந்தயம், இலவங்கப்பட்டை, பூண்டு (வறுத்து உபயோகிக்க வேண்டும் பச்சையாக அல்ல) முதலியவை உணவில் இடம் பெற வேண்டும். மாமிசம் இரு வாரங்களுக்கு ஒரு முறை போதும். காப்பி, டீ, வெள்ளை சீனி, பச்சை காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

8. காய்கறிகளின் பயன்கள் கரட், தக்காளி வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெற உதவும் காய்கறிகள்.
பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி போன்றவை உடலின் கொழுப்பை கரைக்கின்றன.

9. நெய்யை தவிர்க்காதீர்கள். சிறிதளவு பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. உணவைத் தவிர நிறைய இளம்சூடான சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்து இளம் சூட்டுக்கு ஆறின பால் இவற்றை நாள் முழுவதும் குடித்து வரலாம்.



இதர டிப்ஸ்

1. இளம் சூடான நல்லெண்ணையால் உடல் மசாஜ் செய்து கொண்டு குளிப்பது நல்லது.
2. ஒரு பருத்திப் புடவை எடுத்து வயிற்றை சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டால் வாயு சரிநிலையில் இருக்கும். வயிறு சாதாரண நிலைக்கு திரும்பும். இதை 42 நாட்கள் செய்யவும். தற்போது இதற்கென பிரத்யேக பெல்ட்டுகள் கிடைக்கின்றன.
3. ஆயுர்வேத திரிபால கஷாயம் உடல் எடை குறைய உதவும். 20 கிராம் த்ரிபாலா சூரணத்தை 200 மி.லி. நீருடன் கலந்து, நீர் 50 மி.லி. அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும்.
4. கடுக்காய் வயிற்றை சுத்திகரிக்கும் குணமுடையது. உடல் கொழுப்பையும் குறைக்கும். கடுக்காய் தோலின் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் படுக்கும் முன்பு எடுத்துக் கொள்ளவும்.

கடைசியாக, லேசான உடற்பயிற்சி எடை குறைக்க மிகவும் உதவும். இதை டாக்டரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

உலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை காரத்தன்மையாக (Alkaline) மாற்றவல்லது. உணவின் அதிக அமிலத்தன்மை, சருமநோய்கள், கட்டிகள், ஆர்த்தரைடீஸ், கவுட், முடி இழப்பு, இதய நோய்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

திராட்சையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் இவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்டியோத பொராசிஸ் (Osteo porosis) எனும் எலும்பு பலவீனம், உலர் திராட்சையில் உள்ள போரான் (Boron) தாதுப்பொருளால் குறைக்கப்படுகிறது.

ரத்த சோகைக்கு உலர் திராட்சையில் உள்ள செம்பு, இரும்பு, விட்டமின் பி12 நல்லவை. இவை ரத்தம் உண்டாக உதவுகின்றன.

உலர் திராட்சையில் உள்ள Polyphenolic phyto - nutrients என்ற சத்துக்கள் பேக்டீரியா உள்பட எல்லா தொற்று நோய்களிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.


Free radical உடலை காப்பது உலர் திராட்சையின் ஆன்டி- - ஆக்சிடான்ட் குணங்கள் தான். கண்புரை, குருடு - இவைகள் தவிர்க்கப்படுகின்றன.

குழந்தை உண்டாக உதவுகிறது உலர் திராட்சை. இதில் உள்ள ஆர்ஜினைன் (Arginine) என்ற அமினோ அமிலம், பாலியல் பலவீனத்தை போக்கி பாலியல் ஆர்வத்தை தூண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு (ஏன், பெரியவர்களுக்கு கூட) இனிப்புகள் சாப்பிட்டால் பற்களில் சொத்தை உண்டாகும். உலர் திராட்சை இனிப்பானாலும் பற்களை பாதிக்காது. அதில் உள்ள ஓலியோநாலிக் (Oleanolic) அமிலம் பற்களை பற்சிதைவு, சொத்தை, ஈறுநோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது.

உலர் திராட்சையில் ஃப்ரூக்டோஸ் (Fructose) மற்றும் குளூகோஸ் (Glucose) அதிகமாக உள்ளது.

மேலும் உலர் திராட்சை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். புற்றுநோயை தடுக்கும்.

உலர் திராட்சையில் விட்டமின் 'சி' மிகவும் குறைவு.

Friday, January 24, 2014

க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)

Green Tea

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.


* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

Thursday, January 23, 2014

Home Remedies To Cure Dandruff

  • The Use Of Fenugreek Seeds Is One Of The Most Important Remedies In The Treatment Of Dandruff.
  • A Valuable Prescription For Removal Of Dandruff Is The Use Of Green Gram Powder. The Hair Should Be Washed Twice A Week With Two Tablespoons Of This Powder Mixed With Half A Cup Of Curd.
  • Create A Mixture Of Curd, Lime Juice, Cider, Vinegar, And Amla Juice And Apply To Hair.
  • Apply Warmed Coconut Oil With The Juice Of Two Lemons, And Leave In Hair For Two Hours Before Shampooing Out.
  • Exposure Of The Head To The Rays Of The Sun Is Also Useful Measure In The Treatment Of Dandruff.
  • Rinse The Hair After Soaking Some Neem Leaves In Water And Then Filtering.
  • Soak Two Tablespoons Of Fenugreek ‘Methi’ Seeds In Water Overnight. Grind Into A Fine Paste In The Morning, Apply On The Scalp And Leave For Half An Hour. Wash Off, Preferably With A Soap-Nut ‘Ritha’ Solution. Use The Water In Which The Seeds Were Soaked As An After-Shower Hair Tonic. Follow This Regimen Twice A Week For The First Two Weeks And Once A Week For Another Two Weeks.
  • Squeeze A Teaspoon Of Fresh Lime Juice Into The Last Rinse While Washing Your Hair.
  • Make A Paste Of Lemon Juice And Fuller's Earth And Apply This Mixture To The Scalp Once A Week.
  • Keep Curd In The Open For Three Days And Massage Your Hair With It For Half An Hour Before Washing.
  • Mix Cider Vinegar With Equal Quantities Of Water And Dab Onto The Scalp With Cotton Wool Before Washing.
Prevention Of Dandruff:
  • Washing Your Hair At Least Three Times A Week.
  • Avoiding The Use Of Chemicals On The Scalp, Such As Those Used In Hair Colouring.
  • Making Sure That You Have Enough Vitamins Such As Zinc, Beta-Carotene, B6, B12 And Selenium In Your Diet.
  • Regular Daily Brushing.
  • Sunlight May Be Good For Dandruff. But Because Exposure To Ultraviolet Light Damages Your Skin And Increases Your Risk Of Skin Cancer, Don't Sunbathe.

Home Remedies For Dandruff

  • Soak 2 tablespoon fenugreek seeds, methi dana in water overnight. In the morning grind into a fine paste. Apply all over scalp and leave for ½ an hour. Wash with Shikakai or mild shampoo.   
  • Boil a handful of neem leaves in 4 teacups of water. After cooling and filtering use for rinsing hair.
  • To treat dandruff, mix 1 tbsp of lemon juice and 2 tbsp of coconut oil and massage it into the scalp. Leave it on for about 2 hours, then wash your hair with warm water. Dry it well with a soft towel before brushing the hair.
  • Keep the rice water also called kanji after straining the cooked rice. If kept overnight and applied on the scalp next day, it will remove dandruff from the hair.

home remedies for dandruff

  • Put About 21 Leaves Of Tulsi And 10 Gms. Of Amla Powder In A Big Bowl. Add A Little Of Water To Make A Paste Of It. Apply It Evenly On Your Head And Allow It To Dry. Then Wash It With Cold Water. This Will Prevent Hair Loss And Clear Dandruff Also.
  • Mix Equal Quantities Of Dried Curry Leaves Lime Peel, Shikakai, Fenugreek Seeds And Green Gram ‘Moong Saboot’ And Grind Them Finely. Store And Use As A Substitute For Soap Or Shampoo.
  • Apply Fenugreek Seeds, Grind With Some Water And Paste It On The Head. Allow It To Soak At Least For 40 Minutes Before Washing. Use Every Morning For A Month.
  • Soak 2 Tablespoon Fenugreek Seeds In Water Overnight. In The Morning Grind Into A Fine Paste. Apply All Over Scalp And Leave For 1/2 An Hour. Wash With Shikakai Or Mild Shampoo.
  • Boil A Handful Of Neem Leaves In 4 Teacups Of Water. After Cooling And Filtering Use For Rinsing Hair.
  • Fresh Limejuice Is Considered Valuable As A Part Of Home Remedy For Dandruff. All You Need To Do Is To Apply 1 Tsp Limejuice On Your Scalp For The Last Rinse. It Will Not Only Aid In Removing Stickiness And Getting Rid Of Dandruff, But Also Lend A Glow To Your Hair.
  • Soak 2 Tablespoons Fenugreek Seeds In Water Overnight. In The Morning Grind Into A Fine Paste. Apply All Over Scalp And Leave For 1/2 An Hour. Wash With Mild Shampoo.
  • Beat Two Eggs And Add Two Tablespoons Of Water To It. Wet The Hair And Apply The Egg Mixture Over The Hair. Now Massage Your Scalp And Let The Mixture On For Ten Minutes To Fifteen Minutes. Then Rinse The Hair With Lukewarm Water. This Will Keep Both Dandruff And Hair Fall Problem Away From You.
  • Beets Can Be Used To Your Advantage In Treating Dandruff. Boil Its Tops And Roots In Water And Then Massage Your Scalp With This Water Every Night.
  • Boil The Water And Soak Rosemary Leaves In It. Let It Stand For One Night. Strain And Add Vinegar To It. After Shampooing Wash Your Hair With This Preparation. It Treats The Hair Very Fast.

Monday, January 20, 2014

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)


பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை  தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். தண்ணீர் கூட தர தேவை இல்லை.


இதற்க்கு EXCLUSIVE BREAST  FEEDING  என்று பெயர். கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை. ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது.

இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING  என்று பெயர்.

WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to  the baby (UNICEF)


WEANING  என்றால் முற்றிலும்  தாய்ப்பாலை  நிறுத்திவிட்டு  உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால்  தற்போது COMPLEMENTARY  FEEDING  என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது.

நான்கு மாதங்களுக்கு  பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை  செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன.

தலை நன்கு நிமிர்ந்து  நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு  பிறகே

குழந்தையின் எடை 5  மாதத்தில் பிறந்ததை போல்  இரு மடங்காக  அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும்.  மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும்  இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும்.

குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும்  4 -5  மாதங்களில்தான்.

எனவே 180 நாட்கள் முடிந்தபிறகே இணை உணவுகளை  ஆரம்பிப்பது  நல்லது.

முதலில் ஏதேனும் ஒரு  தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது  பழகிய பிறகே  இரண்டு அல்லது  மூன்று  தானிய  கலவைகளை  சேர்த்து அரைத்து  தர வேண்டும்.

அரிசி சாதம் மிகவும் எளிதில் ஆரம்பிக்க சிறந்தது. ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்  மட்டும் தரவேண்டும். படிப்படியாக  இந்த அளவை அதிகரிக்க வேண்டும்.

தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும்.

ஒரு வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை  போல் நூறு மடங்கு கலோரி  தேவை.  அதாவது  6 கிலோ  குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு  தேவை. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக  பாலும்  இணை உணவும்  தரவேண்டும்.

ஐஸ் போடாத வீட்டில் செய்த  பழச்சாறு  6  மாதம் முதல் தரலாம்.  ஆரஞ்சு , ஆப்பிள்  சிறந்தது.

நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6  மாதம் முதல் தரலாம்.

முட்டை - 7  -9  மாதங்களில் தரலாம்.  முதலில்  மஞ்சள் கருவும்  பின்பே வெள்ளை  கரு தரவேண்டும்.  ஏனெனில் வெள்ளை  கரு சில குழந்தைகளுக்கு  ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம்.

6 -8  மாதங்களில் மசித்த  உருளை கிழங்கு , மசித்த பருப்பு  ஆகியவற்றை தரலாம்.

மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி  ) 9 -12  மாதங்களில்  தரவேண்டும்.

ஒரு வயது ஆகும்போது  வீட்டில்  செய்யும் எல்லா   உணவுகளையும்  தரலாம்.

அசைவ  உணவை  ஒரு வயதுக்கு  பின்பே ஆரம்பிப்பது  நல்லது.  (முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய  குழந்தை  அம்மா சாப்பிடும்  அளவில் பாதி அளவு  உணவு சாப்பிடவேண்டும்.  (மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி  தேவை.

தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன்  சேர்த்தே தரவேண்டும். இரண்டு வயது வரை தருவது கட்டாயம். அதற்க்கு மேல் கொடுப்பது  தனிப்பட்ட விருப்பம். ,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர். )

Sunday, January 5, 2014

பெண்கள் சாப்பாட்ல சத்து இருக்கா? - 100th Post

பிறந்தது முதல் இறப்பு வரை பெண் உடலமைப்பிலும் மனதளவிலும்  பல கட்டங்களைக்  கடந்து வர வேண்டியிருக்கிறது.


குழந்தைப்பேறு ,ஹார்மோன்கள்  மாற்றம்  உள்ளிட்ட  உடல்நலக் கோளாறுகள், அதற்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என உடலளவிலும்  பெண்கள் சந்தித்தே ஆகவேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அந்தந்த   நிலைகளைக் கடக்க பெண்கள் சத்தான  ஆகாரங்களை எடுத்துக்கொள்வதுடன்  நல்ல மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் பெண்கள் தங்களுக்காக   நேரம் ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதனால், பெண்களின் காலை உணவு என்பது பெரும்பாலாக  இல்லாமலே போய்விடுகிறது  காலையில் குடிக்க வேண்டிய காபியோ, பாலோ கூட குடிப்பதற்கு நேரமில்லாமல்   அல்லாடும்   நிலை பெரும்பாலான பெண்களுக்கு நடுத்தரக் குடும்பங்களில் இருக்கிற உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அம்மாக்கள்  பட்டினி கிடப்பதும்   உண்டு.

கர்ப்பம், குழந்தைப் பராமரிப்பு போன்ற நிலைகளில் பெண்களுக்கு சத்தான   உணவு அவசியம்.  நடுத்தர வயதை எட்டும் போது எலும்பு தேய்மானம், அனிமியா போன்ற நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் 30 வயதைக் கடக்கும் போதே பல சிக்கல்களுக்கும்  ஆளாகிறார்கள்  .உடல்நலக் கோளாறுகளால் பல பெண்கள் மன உளைச்சல், மனச்சோர்வு என மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டிரெஸ், மன அழுத்தம் போன்ற சிக்கல்களில்  சிக்கும் பெண்கள் பலருக்கும்  சரியான தூக்கம், சரிவிகித உணவு  இல்லாததே குறைபாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.            
    
இரும்புச்சத்து  குறைபாடு என்பது பொதுவாக பெண்கள் பலரிடமும்  காணப்படுகிறது.  பெண்களுக்கு அவர்களது உடலில் 500 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கவேண்டும். ஆனால், அவை 150 மில்லிகிராம்  அளவு கூட இருப்பதில்லையாம் அனேக பெண்களுக்கு. ஒரு நாளைக்கு 15  மிகி., அளவு இரும்புச்சத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், 11மிகி., அளவுகூட எடுத்துக் கொள்வதில்லையாம்.

இத்தகைய இரும்புச்சத்துக் குறைபாடுதான் அனிமியா போன்றவற்றிற்குக் காரணமாகிறது. அசதி, மனதளவில் எரிச்சல் தன்மை, முடிகொட்டுதல், மாதவிடாய்   கோளாறு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிகிறது.   பிட்டோ               எலும்புகளில் அடர்த்திக் குறைபாடு என்பதும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில்  முக்கியமானதாகும்.  

இதுதான் மெனோபாஸ் சமயத்தில் பெண்களைப் பாடாய்படுத்தும் காரணியாக இறக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆச்டியோபோட்ரிசிஸ், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களிலிருந்து தப்பலாம். பால் மற்றும் பால் பொருட்கள், சோயா, மீன் போன்ற உணவு வகைகளை அதிகம் சேரத்துக்கொள்ள வேண்டும்

விதவிதமான  காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதும் அவசியம். முழு கோதுமையால் சமைக்கப்பட்ட   உணவுகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை வைட்டமின்கள் பைட்டோ நியூட்டிரியன்ட்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவாகும். முதுமைத் தோற்றத்தை இவை தள்ளிப்போடும் என்பது உறுதி. வைட்டமின் "சி ","இ", பீடா  கெரோடின், பிட்டோ நியூட்டிரியன்ட் போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட்  சத்துகொண்ட பழங்கள், காய்கறிகள், டீ  போன்றவை முதுமையை விரட்ட உதவுகின்றன. சோயா, பிளேக்ஸ் [ஆலி] விதைகள் உடல்ரீதியான பல குறைபாடுகளை களைகின்றனவாம். உணவில் சர்க்கரை, ஈஸ்ட் போன்றவற்றைக்  குறைத்துக்கொள்வது அவசியம். சத்துமிக்க கரையும் தன்மை கொண்ட கொழுப்புச்சத்துகள் மிகுந்த  உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

Friday, January 3, 2014

தேங்காய் எண்ணெயில் இருக்கு ஆரோக்கியம்

தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம்  எண்ணெய்  884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் 85 சதவீதம் பூரிதமான கொழுப்பு சத்து உள்ளது. நீண்ட காலம்  கெட்டு போகாத ஆயுள் கொண்டது.

தென்னையின் வேரில் இருந்து குருத்து வரை எல்லா பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புரத சத்து , மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை 'பி' காம்ப்ளெக்ஸ் சத்துக்கள், நார்ச் சத்து என உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காய் எண்ணெயில் உள்ளன. தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது.



லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்  வெள்ளை நிறத்தை தருகிறது. வேறு பல உண்ணக் கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தர வல்லவை. 232 டிகிரி வெப்ப நிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

லூரிக் அமிலம், கார்பாரிக் அமிலம், காப்பிரிலிக்  அமிலம், காப்ரோயிக்  அமிலம் போன்றவை பூரிதமாக கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது. ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும், குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின் இ குறைந்த அளவு உள்ளது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் ஆறும். கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்படும்போது, அதிக உதிரப்போக்கு கட்டுப்பட, தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.

வெள்ளைபடுதலுக்கு தென்னம் பூ மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்குடன், கருஞ்சீரகத்தையும் சேர்த்து, தோல் நோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.

தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றிற்கு தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறுபட்ட புண்களை குணப்படுத்துகின்றன. 'மீடியம் செயின் பேட்டி ஆசிட்' தேங்காயில் அதிகம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கார்பாரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளது. 

Monday, December 30, 2013

Is Walking Enough For Weight Loss?

Many people don't consider walking an exercise and often underestimate the health benefits of walking. But can any kind of walking be considered exercise? Can you stroll at a leisurely pace, and still knock off those extra kilos and get fit? Let's find out...  




To make walking an effective exercise for weight loss.....

"Stretch your muscles before and after walking. Muscles like the calf muscle, the quadriceps or the front thigh muscles and the hamstrings situated in the back portion of the thigh, need to be supple while walking. A good stretching session with "Vertical Yoga" can help these muscles give their best performance while walking. Vertical yoga is a set of standing Yoga postures, which can be performed before and after a walk."

"Strengthen your calf muscles by performing weight-training exercises, which will make your walk safe and prevent injuries. Exercises like heel raises, quarter squats, lunges can strengthen the muscles involved in your walk. Strong muscles also prevent degeneration of joints."

"Optimum speed while walking is required for you to reduce weight. The walk needs to be brisk to raise your heart rate to 'training' level. Very often people do not lose weight with walking because they stroll rather than walk with correct intensity. If you can sing a song effortlessly while walking, you need to speed up. If you are gasping for breath while walking, you need to slow down. A pulse monitor often helps you find your ideal speed of walking."

"The style of walking is important for your walk to be efficient and injury free. Correct striding involves touching your heel to the ground first, followed by your mid-foot before toe leaves the ground. Your body needs to be erect without slouching. Arms should be swinging comfortably in tandem with your strides. A good walker makes very little sound while walking. Too much sound while striding means too much impact on your joints."

"Your shoes can be your biggest allies while walking. Good shoes can usher in health, weight loss and happiness and bad shoes can invite knee or back problems. If you are a regular walker, please invest in good pair of shoes. Buy shoes, which are designed for walking. Do not buy "tennis" shoes for walking. Sports footwear companies have invested millions of rupees in making shoes specific for specific activities. So go and buy the best walking shoes, which you can afford. Your feet are worth it!"

"Walking is beyond health and weight reduction. Walking is a holistic experience. Whether it is a trek in the hills or along the seashore,walk transcends tensions and worries and sends me into another world".

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை பொருட்கள்

முட்டை : முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

பப்பாளி : பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.


கடலை மாவு : கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை : கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை : வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம் : சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை : பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் : பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட் :
கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில் : 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத் தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

Saturday, December 28, 2013

Go Drinking For Beautiful Skin

The way to get gorgeous skin need not involve getting expensive treatments and following fad diets. Your regular beverages can also do more good than you can imagine. Grab that cuppa right away.

Green tea
You have been reading about its numerous benefits. As unbelievable able as it may seem, a cup of green tea goes a long way in keeping problems like pimples, skin aging, inflammation in check. It is extremely high in antioxidants, so you are also protected against damaging free radicals which accelerates premature ageing.

Coffee
Coffee helps to get rid of acne and eczema by free radicals in the skin, which reduces the onset of skin-related problems such as acne and eczema. It further acts as an effective sun block and prevents sunburn and wrinkles. It also helps in treating redness and inflammation of the skin, reduces the appearance of under-eye circles and also helps get rid of cellulite.

Black tea
Worried about digestion? A cup of black tea helps in works with the gastric juices to help the stomach break down certain foods. Black tea is known for balancing the hormone levels in the body and it also has anti-inflammatory properties. 

Aloe Vera
Aloe vera juice helps in detoxify the body which helps clear up the skin.  It is also known to stimulate the growth of red and white blood cells.

Lavendar tea
In case of a stomach ache, a cup of lavender is known to soothe your senses. It can also help to deal with liver and gallbladder problems. One of the important uses of lavender tea is that helps induce sleep and cure insomnia.

Friday, December 27, 2013

தூக்கம் கண்களை தழுவட்டும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4H8EIi4QrJcKOGiWEQxXl15jigNdLXsZKXHGS6XaMJXq_i04hkfpyrKMJ3z4SlYpucazkia-fKZ092YTK_S1V3J_j97eblc1MQexHAK7Nb5o-yxRsNAifOFcL8LuabBCPre4QTrCBTM8/s1600/_72232782841.jpg



இன்றைய இயந்திரத் தனமான உலகில் பலவற்றை பணத்தால் வாங்கும் மனிதர்கள் தூக்கம் என்பதை துரத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் ஆரோக்கியத்தின் முதல் தகுதி சரியான தூக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

தூங்க செல்வதற்கு ஒன்றரை மணி நேரதுக்கு முன்பே சாப்பிட்டு விடவும், சாப்பிட்டவுடன் துங்கினால், நள்ளிரவில் விழிப்பு வரும். உறங்க செல்வதற்கு முன்பு நான்கு மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்ற எதையும் குடிக்க கூடாது. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்க கூடாது. தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள் செய்தல் நன்று. மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும். மதிய நேர தூக்கம் இரவு நேர தூக்கத்தை
பாதிக்காத வண்ணம்  பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்தி கொள்ளவும். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பேசி ஜாலியாக இருக்கலாம். தூங்க செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம். பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப் பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.



படுக்கை அறை காற்றோட்டமாகவும் சத்தமில்லாத அமைதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.படுக்கும் அறையில் நனைந்த உடைகள் இருக்க கூடாது. அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும். படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருத்தல் கூடாது. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம். தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன் படுத்த வேண்டாம். தூக்கம் கண்களை தழுவினால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும். உறக்கம் வர வில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம். நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளை பற்றி சிந்திக்க வேண்டாம்.

மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தாலே எளிதில் தூக்கம் வரும். படுத்தபடியே பார்க்கும் விதத்தில் கடிகாரமோ, டிவியோ வைத்தல் கூடாது. ஒரு நாள் தூக்கம் சரியில்லை என்றால் கவலை வேண்டாம். அதை நமது உடல் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதையே தொடரும் பட்சத்தில் தான் பிரச்னை. படுக்கையில் அமர்ந்து படிப்பது, டிவி, கம்பியூட்டர்  பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவது கூடவே கூடாது.

இலக்கை நிர்ணயுங்கள்.... எடையைக் குறையுங்கள்!


http://kungumamthozhi.files.wordpress.com/2013/12/morning-exercise-3.jpg


வாழ்வதற்காக சாப்பிடுவது என்பது போய் சாப்பிடுவதற்காக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவது அடிக்கடி விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டு கணக்கில்லாமல் சாப்பிடுவது அசைவ வகைகளை அளவில்லாமல் கலந்து கட்டி அடிப்பது என முறையற்றுச் சாப்பிடுபவர்கள் கட்டாயம் பல சிக்கல்களில் சிக்கித் திணறுவதைக் காண முடிகிறது. இப்படி அளவில்லாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதனை ஒட்டி இதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் என உடல் ரீதியான பிரச்சனைகள் எழுவதைத் தடுக்க முடிவதில்லை.


இத்தகைய சிக்கல்களிலிருந்து தப்ப உணவு முறையில் ஒழுக்க நெறியைக் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். இது திட்டமிட  எண்ணும் சிலர் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்கள் முதல் டயட்டை மேற்கொண்டு உடல் இளைக்கப் போவதாக சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. ஆனால் சபதம் எடுத்துக் கொள்ளும் பலரும் அதைப் பின் பற்றுவதில்லை என்பது தான் விசயமே. எனவே உடல் நலனைப் பேண விரும்புவோர் திடமனதுடன் முறையான உணவுக் கட்டுப் பாட்டைக் கடைபிடித்து இலக்கை எட்டுவதே சிறந்தது.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...


உடல் எ
டை கூடிக் கொண்டே போவதற்கான காரணங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இதில் முதல் வகை பலரும் குடும்ப மரபணுப்படி உடல் எடை கூடுவதை நியாயப்படுத்துவது. இத்தகைய காரணங்களைத் தவிர்த்து. முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டைக் கையாண்டு உடல் பருமனைக் குறைக்கலாம்.

குற்ற உணர்ச்சிகள் ஏதுமின்றி செயல் பாட்டில் இறங்குங்கள். புதிதாக மாறுதலாக சமையலுக்கான புத்தகங்களை வாங்கி, டயட் உணவுக்கு மாறுங்கள். புதிதாக அளவு பெரிதான ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து உங்களது பழைய ஆடைகளைத் தேடிப்பிடித்து, அந்த அளவுக்கு உங்கள் எடையைக் குறைக்க உழையுங்கள். கல்யா
வீடு உள்ளிட்ட விருந்துகளில் கலந்து கொள்கையில் சுவை மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் மனதைக் கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

அதிகமாகச் சாப்பிடும் எண்ணம் ஏற்படும் போதெல்லாம் உடல் இளைக்க நீங்கள் எவ்வளவு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் நீங்களே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெற்றி காண ஆரம்பித்து உடல் எடை குறைய ஆரம்பித்ததும் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லி ஊக்குவித்துக் கொள்ளுங்கள். எடைக் குறைப்பில் தீவிரமாய் இறங்க இச்செயல் இன்னும் உதவும்.

உங்களது டயட் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூற முற்படுவார்கள். அவற்றை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் உங்களது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்கள் கூறுவதையே கடை பிடியுங்கள். காரணம் ஒருவருக்கு ஒத்துப்போகும் உணவு முறை அடுத்தவருக்கும் ஒத்துப் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகமாய் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்பதற்காக விளம்பரங்களில் வரும் மாத்திரை மருந்துகளை வாங்கி குறுக்கு வழியிலான எதை குறைப்பில் ஈடுபடாத்தீர்கள். அது பெரும்பாலும் ஆபத்தில் கொண்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Thursday, December 26, 2013

Deal With Hair Fall Now!


There are currently only two approved drugs to tackle hair loss—Minoxidil which is sold as a scalp leave-on lotion or mousse formulation and Finasterise, a prescription-only drug that inhibits an enzyme that is responsible for modification of testosterone. But to ensure that the problem of hair fall from the root is eradicated from the root, you must follow an all-round approach that makes your hair healthy and strong. We ask hair experts and doctors for advice to help you deal with all your hair fall woes.

Cosmetic care
From natural herbal extracts to cellular metabolism and blood flow promoters, there are many formulations available in the market that claim to control hair loss. However, if these products actually did what they said, they would be classified as drugs, since they would be modifying a physiological function. Go for these products only after discussing with your doctor as they may not suit you or may have other side-effects on your body.

Shampoo and conditioner
These products deliver a higher wet and dry lubrication to the hair fibre by depositing silicone and other lubricating materials to the fibre while washing. This, in turn reduces the force required to detangle fibres during combing and brushing, thus controlling hair loss. Ask your hairdresser or beauty consultant to lead you on to a shampoo and conditioner suitable for your hair type. Do get this consultation done from time to time. If a shampoo and conditioner suited you last summer, it does not mean that it will continue to suit you now as well. Hormonal upheavals, weather changes, health issues and many other factors guide what will suit your hair at a given point in time.

A hair fall rescue system worth trying
Proteolytic enzymes break down the protein links and ‘glue’ in our hair that keeps it fixed to the scalp. Dove Hair Fall Rescue System has developed a technology containing Trichazole which reduces the activity of the proteolytic enzymes that contribute to hair fall. Studies also showed that the application of the Trichazole Leave-on Intensive Root Treatment increased the force required to remove hair from the skin model, indicating the product can increase the anchoring strength of a hair fibre. This is one product that is definitely worth a try.

Diet for your tresses
Products and medication can help address the problem but for long-term health of your hair, providing nutrition to your hair through a correct diet is also important. You are what you eat, after all. So if you want healthy hair, putting some food on your plate especially for your hair may not be a bad idea. Consider adding these foods to your daily diet

  1. Salmon: For omega 3, Vitamin B12 and iron
  2. Dark green vegetables: For vitamins A and C
  3. Beans: For iron, zinc and biotin
  4. Eggs: For biotin and vitamin B12
  5. Carrots: For vitamin A

Tuesday, December 24, 2013

5 Beauty Benefits Of Olive Oil!

Olive oil is known as the elixir of the Mediterranean. But few recognise its beneficial effects on beauty, having been popularised in India on platforms of nutrition and health only. While it’s great to sprinkle over salads and meats, if used regularly on your skin and hair, you can be transformed into someone with a well toned, soft and glowing demeanour.

To moisturise your skin:
If you have dry skin, a massage once a week with olive oil is perfect as it penetrates deep into the skin layer and nourishes it. It has got an ingredient called squalene that improves the elasticity of your skin. Soaps that contain olive oil have less Ph levels as compared to others, and are gentle for the skin. Baby massages can also be done using olive oil.

Nourish your hair:
Nourishing your hair with a mix of egg yolks and olive oil would help renew damaged hair cells, and deep condition them, making them shiny and lustrous. The hydroxytyrosol has anti ageing properties and this makes the hair shaft and root strong.

Nail care:
If you have brittle toenails, the best remedy is a smear of olive oil before you sleep at night. Like castor oil, which has similar benefits, olive oil soothes, heals and nourishes nails and cuticles around the nail bed making them grow stronger. If you have time, you can also soak your feet in a bowl of warm water with a few spoons of olive oil, lemon juice and any other fragrant aromatherapy oil (just a drop).

Tending to eyes:
Olive oil applied around the eyes will help reduce dark circles. You can also use it to remove eye makeup instead of a chemical based cream or astringent, as the oil will be nourishing too. You can find polyphenols in olive oil that have anti ageing and anti inflammatory properties that nourishes the skin.

Soft lips:
For those who want to avoid chapped or dark lips, dab olive oil, especially if you are going out in the sun. Olive oil has essential vitamin E that helps protect dry lips and skin from strong UV rays.

உடல் பருமனை குறைக்க அற்புத வழிகள்



**எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

**பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

**நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

**இஞ்சி  சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்

**பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்

**சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

** தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

**கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

**கம்பு, சோளம், வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது.