Pages

Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Sunday, January 5, 2014

பெண்கள் சாப்பாட்ல சத்து இருக்கா? - 100th Post

பிறந்தது முதல் இறப்பு வரை பெண் உடலமைப்பிலும் மனதளவிலும்  பல கட்டங்களைக்  கடந்து வர வேண்டியிருக்கிறது.


குழந்தைப்பேறு ,ஹார்மோன்கள்  மாற்றம்  உள்ளிட்ட  உடல்நலக் கோளாறுகள், அதற்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என உடலளவிலும்  பெண்கள் சந்தித்தே ஆகவேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அந்தந்த   நிலைகளைக் கடக்க பெண்கள் சத்தான  ஆகாரங்களை எடுத்துக்கொள்வதுடன்  நல்ல மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் பெண்கள் தங்களுக்காக   நேரம் ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதனால், பெண்களின் காலை உணவு என்பது பெரும்பாலாக  இல்லாமலே போய்விடுகிறது  காலையில் குடிக்க வேண்டிய காபியோ, பாலோ கூட குடிப்பதற்கு நேரமில்லாமல்   அல்லாடும்   நிலை பெரும்பாலான பெண்களுக்கு நடுத்தரக் குடும்பங்களில் இருக்கிற உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அம்மாக்கள்  பட்டினி கிடப்பதும்   உண்டு.

கர்ப்பம், குழந்தைப் பராமரிப்பு போன்ற நிலைகளில் பெண்களுக்கு சத்தான   உணவு அவசியம்.  நடுத்தர வயதை எட்டும் போது எலும்பு தேய்மானம், அனிமியா போன்ற நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் 30 வயதைக் கடக்கும் போதே பல சிக்கல்களுக்கும்  ஆளாகிறார்கள்  .உடல்நலக் கோளாறுகளால் பல பெண்கள் மன உளைச்சல், மனச்சோர்வு என மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டிரெஸ், மன அழுத்தம் போன்ற சிக்கல்களில்  சிக்கும் பெண்கள் பலருக்கும்  சரியான தூக்கம், சரிவிகித உணவு  இல்லாததே குறைபாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.            
    
இரும்புச்சத்து  குறைபாடு என்பது பொதுவாக பெண்கள் பலரிடமும்  காணப்படுகிறது.  பெண்களுக்கு அவர்களது உடலில் 500 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கவேண்டும். ஆனால், அவை 150 மில்லிகிராம்  அளவு கூட இருப்பதில்லையாம் அனேக பெண்களுக்கு. ஒரு நாளைக்கு 15  மிகி., அளவு இரும்புச்சத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், 11மிகி., அளவுகூட எடுத்துக் கொள்வதில்லையாம்.

இத்தகைய இரும்புச்சத்துக் குறைபாடுதான் அனிமியா போன்றவற்றிற்குக் காரணமாகிறது. அசதி, மனதளவில் எரிச்சல் தன்மை, முடிகொட்டுதல், மாதவிடாய்   கோளாறு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிகிறது.   பிட்டோ               எலும்புகளில் அடர்த்திக் குறைபாடு என்பதும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில்  முக்கியமானதாகும்.  

இதுதான் மெனோபாஸ் சமயத்தில் பெண்களைப் பாடாய்படுத்தும் காரணியாக இறக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆச்டியோபோட்ரிசிஸ், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களிலிருந்து தப்பலாம். பால் மற்றும் பால் பொருட்கள், சோயா, மீன் போன்ற உணவு வகைகளை அதிகம் சேரத்துக்கொள்ள வேண்டும்

விதவிதமான  காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதும் அவசியம். முழு கோதுமையால் சமைக்கப்பட்ட   உணவுகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை வைட்டமின்கள் பைட்டோ நியூட்டிரியன்ட்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவாகும். முதுமைத் தோற்றத்தை இவை தள்ளிப்போடும் என்பது உறுதி. வைட்டமின் "சி ","இ", பீடா  கெரோடின், பிட்டோ நியூட்டிரியன்ட் போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட்  சத்துகொண்ட பழங்கள், காய்கறிகள், டீ  போன்றவை முதுமையை விரட்ட உதவுகின்றன. சோயா, பிளேக்ஸ் [ஆலி] விதைகள் உடல்ரீதியான பல குறைபாடுகளை களைகின்றனவாம். உணவில் சர்க்கரை, ஈஸ்ட் போன்றவற்றைக்  குறைத்துக்கொள்வது அவசியம். சத்துமிக்க கரையும் தன்மை கொண்ட கொழுப்புச்சத்துகள் மிகுந்த  உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

Monday, December 30, 2013

Is Walking Enough For Weight Loss?

Many people don't consider walking an exercise and often underestimate the health benefits of walking. But can any kind of walking be considered exercise? Can you stroll at a leisurely pace, and still knock off those extra kilos and get fit? Let's find out...  




To make walking an effective exercise for weight loss.....

"Stretch your muscles before and after walking. Muscles like the calf muscle, the quadriceps or the front thigh muscles and the hamstrings situated in the back portion of the thigh, need to be supple while walking. A good stretching session with "Vertical Yoga" can help these muscles give their best performance while walking. Vertical yoga is a set of standing Yoga postures, which can be performed before and after a walk."

"Strengthen your calf muscles by performing weight-training exercises, which will make your walk safe and prevent injuries. Exercises like heel raises, quarter squats, lunges can strengthen the muscles involved in your walk. Strong muscles also prevent degeneration of joints."

"Optimum speed while walking is required for you to reduce weight. The walk needs to be brisk to raise your heart rate to 'training' level. Very often people do not lose weight with walking because they stroll rather than walk with correct intensity. If you can sing a song effortlessly while walking, you need to speed up. If you are gasping for breath while walking, you need to slow down. A pulse monitor often helps you find your ideal speed of walking."

"The style of walking is important for your walk to be efficient and injury free. Correct striding involves touching your heel to the ground first, followed by your mid-foot before toe leaves the ground. Your body needs to be erect without slouching. Arms should be swinging comfortably in tandem with your strides. A good walker makes very little sound while walking. Too much sound while striding means too much impact on your joints."

"Your shoes can be your biggest allies while walking. Good shoes can usher in health, weight loss and happiness and bad shoes can invite knee or back problems. If you are a regular walker, please invest in good pair of shoes. Buy shoes, which are designed for walking. Do not buy "tennis" shoes for walking. Sports footwear companies have invested millions of rupees in making shoes specific for specific activities. So go and buy the best walking shoes, which you can afford. Your feet are worth it!"

"Walking is beyond health and weight reduction. Walking is a holistic experience. Whether it is a trek in the hills or along the seashore,walk transcends tensions and worries and sends me into another world".

Saturday, December 28, 2013

Go Drinking For Beautiful Skin

The way to get gorgeous skin need not involve getting expensive treatments and following fad diets. Your regular beverages can also do more good than you can imagine. Grab that cuppa right away.

Green tea
You have been reading about its numerous benefits. As unbelievable able as it may seem, a cup of green tea goes a long way in keeping problems like pimples, skin aging, inflammation in check. It is extremely high in antioxidants, so you are also protected against damaging free radicals which accelerates premature ageing.

Coffee
Coffee helps to get rid of acne and eczema by free radicals in the skin, which reduces the onset of skin-related problems such as acne and eczema. It further acts as an effective sun block and prevents sunburn and wrinkles. It also helps in treating redness and inflammation of the skin, reduces the appearance of under-eye circles and also helps get rid of cellulite.

Black tea
Worried about digestion? A cup of black tea helps in works with the gastric juices to help the stomach break down certain foods. Black tea is known for balancing the hormone levels in the body and it also has anti-inflammatory properties. 

Aloe Vera
Aloe vera juice helps in detoxify the body which helps clear up the skin.  It is also known to stimulate the growth of red and white blood cells.

Lavendar tea
In case of a stomach ache, a cup of lavender is known to soothe your senses. It can also help to deal with liver and gallbladder problems. One of the important uses of lavender tea is that helps induce sleep and cure insomnia.

Friday, December 27, 2013

தூக்கம் கண்களை தழுவட்டும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4H8EIi4QrJcKOGiWEQxXl15jigNdLXsZKXHGS6XaMJXq_i04hkfpyrKMJ3z4SlYpucazkia-fKZ092YTK_S1V3J_j97eblc1MQexHAK7Nb5o-yxRsNAifOFcL8LuabBCPre4QTrCBTM8/s1600/_72232782841.jpg



இன்றைய இயந்திரத் தனமான உலகில் பலவற்றை பணத்தால் வாங்கும் மனிதர்கள் தூக்கம் என்பதை துரத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் ஆரோக்கியத்தின் முதல் தகுதி சரியான தூக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

தூங்க செல்வதற்கு ஒன்றரை மணி நேரதுக்கு முன்பே சாப்பிட்டு விடவும், சாப்பிட்டவுடன் துங்கினால், நள்ளிரவில் விழிப்பு வரும். உறங்க செல்வதற்கு முன்பு நான்கு மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்ற எதையும் குடிக்க கூடாது. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்க கூடாது. தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள் செய்தல் நன்று. மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும். மதிய நேர தூக்கம் இரவு நேர தூக்கத்தை
பாதிக்காத வண்ணம்  பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்தி கொள்ளவும். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பேசி ஜாலியாக இருக்கலாம். தூங்க செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம். பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப் பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.



படுக்கை அறை காற்றோட்டமாகவும் சத்தமில்லாத அமைதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.படுக்கும் அறையில் நனைந்த உடைகள் இருக்க கூடாது. அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும். படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருத்தல் கூடாது. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம். தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன் படுத்த வேண்டாம். தூக்கம் கண்களை தழுவினால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும். உறக்கம் வர வில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம். நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளை பற்றி சிந்திக்க வேண்டாம்.

மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தாலே எளிதில் தூக்கம் வரும். படுத்தபடியே பார்க்கும் விதத்தில் கடிகாரமோ, டிவியோ வைத்தல் கூடாது. ஒரு நாள் தூக்கம் சரியில்லை என்றால் கவலை வேண்டாம். அதை நமது உடல் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதையே தொடரும் பட்சத்தில் தான் பிரச்னை. படுக்கையில் அமர்ந்து படிப்பது, டிவி, கம்பியூட்டர்  பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவது கூடவே கூடாது.

இ-பிசினஸ் தொடங்கணுமா?


http://www.miproapps.com/wp-content/uploads/2013/10/Internet-Marketing.jpg


இன்று கர்ச்சிப்பிலிருந்து கார் வரை இணையதளத்திலேயே வாங்கிவிட முடியும். இந்த ஈ பிசினஸில் பொருட்கள் விற்பனை, சேவை என்று பல உண்டு. 

ஆன்லைன் பிசினஸ் துவங்க....

நீங்கள் செய்யப்போவது சர்வீசா, பொருள் விற்பனையா தரகு வேலையா என்பதை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப கம்பெனிகள் சட்ட
ப்படி ம்ஸ்மே(மைக்ரோ சமில்ல் மற்றும் மீடியம் என்டர்‌ப்ரைஸஸ்) உடன் பதித்து கொள்ளலாம். வரி முதல் தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை இதற்கு இந்தியச் சட்டங்களே செல்லுபடியாகும்.

டிஜிட்டல் சிக்னேச்சர்...

நமக்கு வரும் மெயில்கள் அளிக்கப்பட மாற்றப்பட வாய்ப்பு உள்ளதால் டிஜிட்டல் சிக்னேச்சர் பயன்படுத்தப் படுகிறது. இச்சேவையை நமக்குச் செய்யும் சர்டிபையிங் அத்தாரிட்டி ஒரு மெயிலின் நம்பகத் த
ன்மையை சில பல டெக்னாலஜி மூலம் (கீஸ்) அறுதியிட்டு ஒப்பமிட்டுத் தருவர். இந்தச் சேவையில் ட்ஸ் சேவை குறிப்பிடத் தகுந்தாக இருக்கிறது.

ப்ரீலான்சர்...

ஆன்லைனிலேயே செய்து முடிக்க கூடிய சில வேலைகளை பகுதி அல்லது முழு நேரமாக எடுத்து செய்ய ஆட்களின் தேவை உலகளவில் இருக்கிறது. பல வளர்ந்த நாடுகளில்  சின்னச் சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதி
ல்லை. இதைக் கணக்கில் கொண்டு வேலை தருபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாலமாக சில தளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு அக்கவுன்ட் உங்களுக்கு இருந்தால் போதும் புகைப் படம் எடுக்க தெரியும், இசை கம்போஸ் செய்வேன் என உங்கள் திறமைகளைப் பட்டியலிடுங்கள். தேவைப்படுபவர்கள். அவர்களுக்குள்ள தொடர்பால் உங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். விலையை நீங்களே நிர்ணயம் செய்யலாம். வேலை முடிந்ததும் சர்வீஸ் சார்ஜ் போக உங்கள் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும். சிலர் கதை எழுதித் தருமாறு அல்லது ஒரு தலைப்பு கொடுத்து அதில் கட்டுரைகள் எழுதிதரச் சொல்வார்கள்.

அது ஓவியமாக இருப்பின் உங்கள் ஓவியத்தை தன் பிராண்ட் பெயரின் கிழ் வெளியிடுவார்கள். இந்த தளங்களில் இணைய கட்டணம் ஏதுமில்லை. ஆனால் நீங்கள் புராஜக்ட் செய்ய ஆரம்பித்ததும் வேலை கொடுத்தவர்கள் அதற்கான பணத்தை அந்த இணையத்தில் கட்டி விடுவார்கள். இந்த இணையதளம் உங்களுடைய அக்கவுன்ட்டில் போட்டு வரும்.

பணம் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அதன் பின் சேரும் தொகையை நீங்கள் எடுத்து கொள்ளலாம். ஒருவர் தன் மெயில் ஐடியை அந்த தளத்தில் போஸ்ட் செய்து இந்த முகவரிக்கு உங்கள் புராஜக்ட்டுகளை நேரடியாக அனுப்பவும் செய்து தருகிறேன் எனச் சொல்லி விட்டால் இந்த ஃப்ரீலான்சர்  நிறுவனங்களுக்கு நட்டம் என்பதால் எங்கெல்லாம் @ எனும் குறியீடு வருகிறதோ அங்கெல்லாம் அந்த வரி முடக்கப்படும். இதற்கு மாற்றாக @ வரும் இடங்களில் அட் எனக் குறிப்பிட்டு தன் முகவரியை சொல்வதால் அந்த மாதிரி சொல்லும் நபர்களின் கணக்கு மொத்தமாக முடக்கப்படும்  வாய்ப்புண்டு.

இலக்கை நிர்ணயுங்கள்.... எடையைக் குறையுங்கள்!


http://kungumamthozhi.files.wordpress.com/2013/12/morning-exercise-3.jpg


வாழ்வதற்காக சாப்பிடுவது என்பது போய் சாப்பிடுவதற்காக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவது அடிக்கடி விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டு கணக்கில்லாமல் சாப்பிடுவது அசைவ வகைகளை அளவில்லாமல் கலந்து கட்டி அடிப்பது என முறையற்றுச் சாப்பிடுபவர்கள் கட்டாயம் பல சிக்கல்களில் சிக்கித் திணறுவதைக் காண முடிகிறது. இப்படி அளவில்லாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதனை ஒட்டி இதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் என உடல் ரீதியான பிரச்சனைகள் எழுவதைத் தடுக்க முடிவதில்லை.


இத்தகைய சிக்கல்களிலிருந்து தப்ப உணவு முறையில் ஒழுக்க நெறியைக் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். இது திட்டமிட  எண்ணும் சிலர் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்கள் முதல் டயட்டை மேற்கொண்டு உடல் இளைக்கப் போவதாக சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. ஆனால் சபதம் எடுத்துக் கொள்ளும் பலரும் அதைப் பின் பற்றுவதில்லை என்பது தான் விசயமே. எனவே உடல் நலனைப் பேண விரும்புவோர் திடமனதுடன் முறையான உணவுக் கட்டுப் பாட்டைக் கடைபிடித்து இலக்கை எட்டுவதே சிறந்தது.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...


உடல் எ
டை கூடிக் கொண்டே போவதற்கான காரணங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இதில் முதல் வகை பலரும் குடும்ப மரபணுப்படி உடல் எடை கூடுவதை நியாயப்படுத்துவது. இத்தகைய காரணங்களைத் தவிர்த்து. முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டைக் கையாண்டு உடல் பருமனைக் குறைக்கலாம்.

குற்ற உணர்ச்சிகள் ஏதுமின்றி செயல் பாட்டில் இறங்குங்கள். புதிதாக மாறுதலாக சமையலுக்கான புத்தகங்களை வாங்கி, டயட் உணவுக்கு மாறுங்கள். புதிதாக அளவு பெரிதான ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து உங்களது பழைய ஆடைகளைத் தேடிப்பிடித்து, அந்த அளவுக்கு உங்கள் எடையைக் குறைக்க உழையுங்கள். கல்யா
வீடு உள்ளிட்ட விருந்துகளில் கலந்து கொள்கையில் சுவை மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் மனதைக் கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

அதிகமாகச் சாப்பிடும் எண்ணம் ஏற்படும் போதெல்லாம் உடல் இளைக்க நீங்கள் எவ்வளவு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் நீங்களே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெற்றி காண ஆரம்பித்து உடல் எடை குறைய ஆரம்பித்ததும் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லி ஊக்குவித்துக் கொள்ளுங்கள். எடைக் குறைப்பில் தீவிரமாய் இறங்க இச்செயல் இன்னும் உதவும்.

உங்களது டயட் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூற முற்படுவார்கள். அவற்றை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் உங்களது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்கள் கூறுவதையே கடை பிடியுங்கள். காரணம் ஒருவருக்கு ஒத்துப்போகும் உணவு முறை அடுத்தவருக்கும் ஒத்துப் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகமாய் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்பதற்காக விளம்பரங்களில் வரும் மாத்திரை மருந்துகளை வாங்கி குறுக்கு வழியிலான எதை குறைப்பில் ஈடுபடாத்தீர்கள். அது பெரும்பாலும் ஆபத்தில் கொண்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tuesday, December 24, 2013

குறையாத உடல் பருமன் காரணம் என்ன தெரியுமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOmNzDkBP1mFLOxZk40snXW3XIjcwHhje7U9H9bDr2lxzekqkdEtJMUHWg1atUpAKFNzT1qfK6Ja_VwDLJmwjd_8AP7n5i7XdM3vcG0EcmH5ZtVWVIx4DmLGaquizQ-qin2PCyNKLYUB8/s1600/weightloss-scale.jpg 
உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடை குறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதை குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? அதற்கான காரணத்தை தெரிந்த கொள்ளுங்கள்.

நீண்ட காலமாக உணவில் வெல்லம் மாவுச் சத்து உணவுகளை உண்டு வந்ததால், தற்போது உடலானது மாவுச் சத்து ஆக்கசிதைவு செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாத நிலையுள்ளது. நமது உணவில் கொழுப்பின் அளவையும் அது தரும் கலோரி சத்தின் அளவையும். வெல்லம் அல்லது மாவுச் சத்து உள்ளெடுத்து விடுகிறது. நமது முன்னோரைக் காட்டிலும் 25 மடங்கு சீனியை அதிகமாக உட்கொள்கிறோம். இவற்றில் பெரும் பான்மையானவை முன் தயாரிக்கப் பட்ட உணவுகளில் ஒளிந்து கிடக்கிறது. அதிகமான சீனி அளவைக் கொண்ட உணவை உண்ணும் போது மிகவும் விரைவாக குருதியில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

திடீரென அதிகரித்த வெல்லத்தின் அளவு உடலின் ஆக்கச்சிதைவு செயல் பாட்டை பாதிப்பதினால் மேலதிகமான சீனி அல்ல்து வெல்லம் அகற்றப் பட முடியாமல் கொழுப்புக் கலங்களில் சேமிக்கப் படுகிறது.  ஏதாவதொரு உணவு மிக விரைவாக குருதியில் வெல்ல குறியீடு கொண்டது என குறிப்பிடலாம். ரத்தத்தில்  வெல்ல அளவு அதிகமாக காணப்படும் போது மேலதிக வெல்லத்தை மாற்றி சேமிப்பு செய்வதற்காக பெருமளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல முறை அதிகமான வெல்ல அளவினை கொண்டவர்களாக இருந்திருப்போம்.

சீனி போட்டு தயாரித்த பானங்கள், கேக் வகைகள், உணவுகள் பின்னர் உண்ணும் இனிப்பு வகைகள் குறியீட்டளவில் உயர்ந்ததாக காணப்படும். வேறு பல உணவுக்களும் உதாரணமாக பிரஞ்ச் பிரைஸ், வெள்ளை அரிசி சோறு, வெள்ளை பிரட் போன்றவை ரத்தத்தில் உயர் வெல்லளவை தரும் குறியீட்டை கொண்டுள்ளன. நமது ரத்தத்தில் பெரும்பாலான நேரங்களில் வெல்லத்தின் அளவு அதிகரிக்கும் போது சதைக்கு மேலதிகமான வெல்லத்தை சக்தி சேமிப்பு கலங்களில் சேமித்து வைக்குமாறு செய்தி சொல்லப்படுகிறது.

இந்த வெல்ல சேமிப்புக்கான மாற்றத்தை நிகழ்த்த சதையிலிருந்து விடுவிக்கப்படும் இன்சுலின் தேவையானதாகும். குருதியில் மிகவும் உயர்ந்தளவு வெல்லத்தின் அளவு இருப்பது உடல் நலனுக்கு ஆபத்தானதாகும். வெல்ல அளவுள்ள உணவுகளும் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பலரின் வெல்ல சேமிப்பு கலங்கள் பொதுவாக நிரம்பியே இருக்கும். இக்கலங்கள் மிகவும் நிரம்பியிருப்பதால் கலங்கள் ஊதிப் போய்விடும். இதனால் உடல் பருமனடைந்ததாக இருக்கும்.

இந்நிலையில் சேமிப்புக் கலங்கள் மேலும் குளுக்கோஸை உள்ளெடுக்க முடியாத நிலையில் மேலதிகமான குளுகோஸ் வெல்ல கற்றோட்டத்தில் சுற்றி செல்லும். இது பொதுவான ஆக்க சிதைவு செயற் பாட்டினை தரம் குறைக்க செய்வதுடன் ரத்தக் குழாய்களில் சிறுநீரகம் விழித்திரை  ஆகியவற்றை பாதிக்கக்கூடும்.

Friday, December 20, 2013

வாங்க மருதாணி வைக்கலாம்

ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம். உடல் சூட்டை தணிக்கும் மருதாணி, உள்ளங்கையில் வைப்பதால் மூளைக்கும் நல்லது.