Pages

Showing posts with label உடல் அழகு. Show all posts
Showing posts with label உடல் அழகு. Show all posts

Wednesday, June 18, 2014

இளமை காக்கும் தேன்

தேன்
அடிக்கடி தேன் உட்கொண்டு வந்தால் இளமை காக்கப்படும் என்பது பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்து. தேன் வழங்கும் பிற நன்மைகளையும் பார்க்கலாம்...

* உடல் ஆரோக்கியத்துக்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச்சதை குறையும், உடல் உறுதி அடையும்.

* தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜல தோஷம், தலைவலி குணமாகும்.

* தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

* தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

* இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

* தேனுடன் மாதுளம் பழச் சாறை சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் தீரும்.

* உடம்பில் ரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

* தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச, கட்டிகள் பழுக்கும்.

* மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறி விடும்.

* கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்துசாப்பிட, கீல் வாதம் போகும்.

Sunday, April 20, 2014

கர்ப்பகால தோல் நோய்கள்!

கர்ப்பம்
கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பிணிகளின் தோலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகத்தில் கருமை படர்வதோடு சில சமயம் பருக்களும் ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தில் இவற்றைப் போக்க ஏதாவது உபயோகித்தால் அதிக அளவில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி விட்டுவிடுவார்கள்.

பிரசவத்திற்குப் பின்னர் இதன் மீது கவனம் செலுத்தினால் கண்டிப்பாக தோல் நோய்களில் இருந்து உடலை பழைய நிலைக்கு மீட்கலாம். கருமை போக்கும் ஆலிவ் எண்ணெய் கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும்.

உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது. குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு கருமை நிறம் தங்கிவிடும். இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதைதேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

ஆலிவ் எண்ணெய் முகத்தின் கருமையை போக்கி பளபளப்பாக்கும். இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பஞ்சை எண்ணெயில் தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 25 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தினசரி இதனை செய்து வர முகத்தின் கருமை முற்றிலும் மாறி முகம் பொலிவடையும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளைப் போக்க சில எண்ணெய்கள் உள்ளன. ஜோஜோபா எண்ணெயை தடவி மசாஜ் செய்தால் வரிகள் மறையும். வரிகள் அழுத்தமாக இருந்தால் ஒரு மாதங்களுக்கு தொடர்ந்து ஜோஜோபா எண்ணெயை பூசி 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இதனால் படிப்படியாக தழும்புகள் மறையும். ஆவகேடோ எண்ணெய் அவகேடோ எண்ணெய் கருமையை போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது. கர்ப்பகால தழும்புகளை போக்கவும் இது சிறந்த எண்ணெய். ஆவகேடோ எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் கருமை உள்ள இடங்களிலும், வரி உள்ள இடங்களிலும் அப்ளை செய்யவும்.

மிருதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒரு மாதம் தொடர்ந்து இதுபோல் செய்து வரலாம். பிரசவ கால தழும்புகள் மறையும்.

Saturday, April 5, 2014

சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்

அழகு
கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.

* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.

* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

Tuesday, March 25, 2014

துரியன் பழம் - சத்து பட்டியல்

துரியன்
பழங்களின் அரசன்' என்ற பெயர் துரியன் பழத்திற்கு உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் துரியன் பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்...

* வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல துரியன் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* சாப்பிட்ட உடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* கொழுப்புச்சத்து நிறைய அளவில் உள்ளது. நிறைவுறா கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி துரியன் பழத்திற்கு உண்டு.

* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கிறது.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான 'வைட்டமின் சி' துரியன் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது நோய்த் தொற்றுகளை தடுக்கும். தீமை தரும் 'பிரீ-ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும்.

* நியாசின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் தயமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

* தாது உப்புக்களான மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மக்னீசியம் துரியன் பழத்தில் குறிப்பிட்ட அளவு உள்ளது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு நொதிகள் துரிதமாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக துணைபுரியும். துடிப்புள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு இன்றியமையாதது இரும்புத்தாது.

* பொட்டாசியம் தாது மிக அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இத யத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

* டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் துரியன் பழத்தில் உள்ளது. இதனை 'உறங்கும் மருந்து' என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும். இவை நரம்புகள் நலமாக இருக்க அவசியமான ரசாயனமாகும். தூக்கத்தை தூண்டுவதி லும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

சாப்பிடும் முறை.......... துரியன் பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம். ஐஸ்கிரீம், மில்க்ஷேக் ஆகியவற்றில் துரியன் பழம் சேர்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் 'சாயர்' எனப்படும் துரியன் சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள துரியன் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படு கிறது. 'துரியன் சாஸ்' செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் 'இகான் பிரெங்கஸ்' என்ற பெயரில் துரியன் சாஸ் பிரபலம்.

பழுக்காத துரியன் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.

Wednesday, March 19, 2014

மேனியை மினு மினுக்க வைக்கும் வழிகள்

ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும். தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

அழகு
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.