Pages

Showing posts with label தேன். Show all posts
Showing posts with label தேன். Show all posts

Wednesday, November 23, 2016

பிசுபிசு தோல் பாதுகாப்பிற்கு......

ஒரு சிறிய பவுலில் 3 டீஸ்பூன், அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1
டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முதல் நாள் இரவு 10 பாதாமை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் ஆக செய்து, சிறிது தேன் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தக்காளி சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Wednesday, April 1, 2015

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!


 sukku க்கான பட முடிவு

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் 

சுக்கு ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.


Thursday, March 5, 2015

முகப் பொலிவுக்கான சூட்சமம்

அழகு நிலையத்தில் போய் அழகு படுத்திக் கொள்ள பணம் இல்லை, நேரம் இல்லை என நினைப்பவர்களுக்கு சமயலறையிலேயே அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடப்பது தெரியுமா உங்களுக்கு?
   

  1. வெள்ளரிச்சாரு-பன்னீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

2. மஞ்சள்,எலுமிச்சை சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் அழுந்தத் தேய்த்து சற்று பொறுத்து கழுவினால் முகம் முழுக்க பிரகாசிக்கும்.

3. மோரில் ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவினால் அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று ஆகும்.

4. தேங்காய்த் தண்ணீரில் முகத்தைக் கழுவினால் முகம் மென்மையாகும்.

5. அதிக வெயிலால் முகம் கருத்து விட்டதா? பால் பவுடர், எலுமிச்சைசாறு, பாதம் எண்ணெய், தேன் கலந்து முகத்தில் பூசி பூசினால் கருமை நீங்கும்.
எழுமிச்சைசாருடன் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

சமயலறையிலேயே பொலிவுக்கான சூட்சமம் இருக்குது.அதை பயன்படுத்தினாலே உங்களுக்கு இயற்கை அழகு கிடைக்கும்.