Pages

Showing posts with label மூளை. Show all posts
Showing posts with label மூளை. Show all posts

Friday, October 7, 2016

மூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்? மூளையை பாதுகாப்பது எப்படி?



பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும் போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, நிரந்தர ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.

மூளையை பாதுகாத்தல்: அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் அன்றாட உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் தவிர்த்தல், புகை புகையிலை போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.

தலை சுற்றல், மயக்கம் வந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.

Wednesday, July 13, 2016

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலுக்குள் ஆயிரத்துக்கு அதிகமான உறுப்புகள், சத்தமில்லாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறுப்புகளில் ஒன்று தன் பணியை செய்ய மறுத்தால் மனிதனுக்கு சிக்கல் தான். முதலில் நம் உடலில் உள்ள நமக்கு தெரியாத உறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நமது மூக்கு 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலை விட இரவில் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம் பட்டால் வலி தெரியாது.

சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் நான்கு கனவுகள். நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன. நம் கண் விழியின் சராசரி எடை 28 கிராம். தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்கு துவாரங்களை மூடிக்கொண்டு முனங்க முடியாது. நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனாச்மிய எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியர் என்கிறார்கள்.

நமது உடலில் உவுலா என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? 

அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறு தசையே உவுலா எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான். பிறக்கும் போது நமது உடலில், 300 எலும்புகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

எலும்பின் வெளிப்புறமே கடினமானது. உட்புறம் எலும்புகள் மென்மையானதாக இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதம். நமது ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு அடர்த்தியானது. ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது. நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் இருக்கும்.

சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு மனிதனின் கைரேகையை போலவே கால் ரேகை மற்றும் நாக்குரேகைகள் தனித் தன்மை வாய்ந்தவை.