Pages

Friday, February 21, 2014

டை அடிப்பது எப்படி?

முதலில் தலை முடியைச் சுத்தமாக நன்றாக அலச வேண்டும். ஷாம்பூ போட்டு தலையை அலசினால், முடியிலிருக்கும் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் போய்விடும். முடி நன்கு காய்ந்த பின், சீப்பு மற்றும் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, டை அடிக்க வேண்டும்.

டை அடித்தபின், குறைந்தது இருபது நிமிடம் தலையைக் காய விட வேண்டும். தலை, விரைவாக காய வேண்டும் என்பதற்காக, டிரையர் போடக் கூடாது. மின் விசிறி மூலம் காய விடுங்கள்.

தலை முடியை கண்டிஷனர் ஷாம்பூ மூலம் அலச வேண்டும். அலசும் பொது, டையின் பிசிறுகள் போய் விடும். ஷாம்பூக்குப் பதிலாக சோப்பை பயன்படுத்தி தலையை அலசக் கூடாது.

நரை பரவுவதைத் தடுக்க...

நெல்லிக்காய் மற்றும் சீயக்காயை காய வைத்து, போடி செய்து, தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், நாளாக நாளாக நரை பரவுவது நீங்கும்.

No comments: