Pages

Tuesday, July 22, 2014

சேலை கட்டும் பெண்ணே!

நம் பாரம்பரியத்தின் அடையாளமாக புடவை விளங்குகிறது. அது சமகலத்தையும் பிரதிபலிக்கிறது. தென்னிந்தியாவில் முழு நீள புடவை அணிவதுபோல வட இந்தியாவில் பாவாடை போலவே தோற்றமளிக்கும் புடவைகள் அணிவார்கள். அனார்கலி போல இருக்கும் கலிதார் பன்ற புடவைகளும் வட இந்தியாவின் பாரம்பரியம்தான். குஜராத்திகளும், பெங்களிகாளிகளும் குர்தி போல இருக்கும் மாஷர்ஸ் புடவைகளை அணிவார்கள். இது போன்ற பாரம்பரிய புடவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்பதால் இதை எங்கேயும் எப்போதும் அணியலாம்.

ஆனால் சமகால புடவைகள்தான் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அந்த மற்றதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப புடவை அணிவதில் தான் நம் திறமை அடங்கி இருக்கிறது.  பட்டு இழைகள், செயற்கை இழைகள் என்றுதான் பலரும் ராகம் பிரித்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் நாம் நினைத்துப் பார்க்காத ராகங்களிலும் புடவைகள் தயாராகின்றன. கிரேப், வெல்வெட், ஜூட் சில்க் போன்ற ரகங்களில் புடவை அணிந்தால் அனைவர் கண்ணும் நம் மீதுதான்.

உடலமைப்புக்கு ஏற்ற ரகங்களில்தான் ஆடை அணிய வேண்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஹெவி சில்க், புரோகேட், காஞ்சிபுரம் பட்டு அணியலாம். இது அவர்களின் கம்பீரத்தைக் கூட்டும். சணல் என்றதுமே சிலருக்கு கட்டைப் பைகளும், மிதியடிகலுமே நினைவுக்கு வரும். ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட சணலில் வரும் புடவைகள் கண்கவரும் விதத்தில் இருக்கும். இவற்றை மாலை நேர விருந்துகளுக்கு அணிந்து சென்றால் அந்த இடத்தில் நாம்தான் சென்டர் ஆப் அட்ராக்சனாக இருப்போம். கொஞ்சம் பூசினார் போல் உடலமைப்பு உள்ளவர்களாக இருந்தால் ஷிபான், ஜார்ஜெட், கிரேப் போன்ற ரகங்களை அணியலாம். 

ஆடை ரகங்களை போலவே நிறங்களும் நம் தோற்றத்தை மாற்றிக் காட்டும். ஒல்லியாக இருப்பவர்கள் அடர் நிறங்களில் புடவை அணிந்து செல்லலாம். இது அவர்களின் தோற்றத்தை பளீச் என்று காட்டும். பூசினார் போல் இருப்பவர்கள் வெளிர் நிறங்களில் புடவை அணிய வேண்டும் . இது அவர்களின் தொப்பையை குறைத்துக் காட்டும். மற்ற குறைபாடுகளும் மறைந்தே போகும். 

ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவை கட்டினால் அவர்கள் தோல் பரப்பை அந்த பார்டரே நிறைத்து விடும். அது அத்தனை எடுப்பாக இருக்காது. அதனால் சின்ன பார்டர் வைத்த புடைவைகளே இவர்களுக்கு பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகள் அணிவதால் இவர்களுக்கு அழகான தோற்றம் கிடைக்கும். பெரிய டிசைன் பிரிண்டட் புடவைகளும் அணியலாம். 

தினமும் அணிகிற புடவையில் வித்தியாசம் தெரியணுமா? அது மிக எளிது. புடவை கட்டும் விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து விட்டால் போதும். பொதுவாக புடவையுடன் வரும் அட்டாச்சுடு பிளவுசைதான் பலரும் அணிகிறார்கள். அதை தவிர்த்து தனித்துத் தெரிகிற அடர் நிற பிளவுஸ் அணிந்தால் பளிச்சென்று இருக்கும். புரகேட், வெல்வெட் போன்ற ரகங்களில் பிளவுஸ் அணிவதும் சிறப்பான தோற்றத்தை தரும். கை வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட பிளவுசும் சாதாரண சேலைகளுக்கும் சிறப்பான தோற்றத்தை தரும்.

நிறங்களுக்கும், நம் மனநிலைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே உற்சாகம் தரும் பளிச் நிறங்களில் புடவை அணியுங்கள். அது எப்போதும் உங்களை உற்சாகமாகவே வைத்திருக்கும். 

Monday, July 21, 2014

தும்பைப்பூவில் ஜலதோஷ மருந்து!


சின்ன சீக்கு வந்தாலும் பரயில்லை... இந்த ஜலதோஷம் மட்டும் வரவே கூடாதுப்பா... ச்சூ! மனுசனை என்ன பாடுபடுத்துது.... மூக்கை கர்ச்சீப்பால் அழுந்த துடைத்தப்படி, இந்த டயலாக்கை கூறதவர்கள் மிக சிலரே. அந்தளவுக்கு ஜலதொஷம் வந்து தங்கி செல்லலும் வரை ஒரு வழி செய்து விடுகிறது.

இப்பேர்பட்ட ஜலதோஷத்தையும், தலைவலியையும் பாடாய் படுத்த ஒரு வழி இருக்கின்றது. தும்பைப்பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பூவை பாலில் போட்டுக்க் காய்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடிவிடும்.

தலைவலி போக்கும் சாறு;

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும். காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப்ப் பூக்களுக்கு உண்டு. தலைவலி போக்கும் சாறு, தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைபூக்களைப் பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும். சகலவிதமான காய்ச்சலுக்கு தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீ ஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேலை கொடுத்து வந்தால், காய்ச்சல் குணமடையும். சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்:

கால் டீஸ்பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிது வெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து, தினம் இருவேளை சாப்பிட்டால் குளிர் ஜுரம், வாத ஜுரம் குணமடையும்.

பாம்புக்கடி குணமடையும்:

பம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு, உடனடியாக தும்பைபூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன் பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.
கண்கோளாறுகளுக்கு மருந்து:

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப்பூவை  சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து, தேக்கரண்டியளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் குணமடையும்.

மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்

மழையில் நனைந்து வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு பொடி சிறந்த நிவாரணம் தரும். வீட்டிலேயே  நிலவேம்பு பொடி வங்கி வைத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

மழைக்காலத்தில் நாம் உண்ணும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த நெய், வெண்ணை, தயிர், போன்றவற்றை சாப்பிடக்கூடாது. மோர் சாப்பிடலாம். உணவில் காரம்,துவர்ப்பு, கசப்பு உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

இரவில் துங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது.நீர் சத்து நிறைந்த பூசணி, பீர்க்கன், சுரைக்காய், வெள்ளரி, புடலை போன்ற கைகளை தவிர்ப்பது நல்லது. உணவில் மிளகு பொடியை சேர்த்து சமைப்பது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு,கேழ்வரகு, கீரை ஆகியவை சேர்க்காமல் இருப்பது நல்லது.

மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாம். எல்லா காலத்துக்கும் ஏற்ற வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றை மற்ற பழங்களுடன் சாப்பிடுவது நல்லது.

மழைக்காலத்தில் அசைவ உணவுகளான கறி, மீன், முட்டை, சிக்கன் சாப்பிடலாம். ஆனால் அவை புதியதாக இருக்க வேண்டும். மழை சீசனில் அதிகம் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பஜ்ஜி, போண்டா இவற்றுக்கு பதிலாக இட்லி, உப்புமா, தோசை என சாப்பிடலாம். குறிப்பாக நன்கு கொதிக்கவைத்து ஆறிய நீரை மட்டுமே பருக வேண்டும்.

Saturday, July 19, 2014

காரசார உணவுகள் தொண்டைக்கு எதிரி

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்ப்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்ப்பட்டு மிகுந்த தொந்தரவை தரும். குறிப்பாக தொண்டையில் புண் வந்தால்,அரிப்பு எரிச்சல் வந்து பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால் தொண்டை புண்ணை விரைவில் சரி செய்யலாம்.

நா ஊற வைக்கும் உணவுகள் 

நா ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பலன்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலியும்ஏற்ப்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.

காரமான உணவுகள்

நிறைய பேர், சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைகின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட்டு விடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். ஆகவே மிளகாய், கிராம்பு,மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்ந்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பால்

தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு, அதிகமான் வலியையும் ஏற்படுத்தும். எனவே நட்ஸ் பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்ப்படாமலும்  இருக்கும்.

காபைன்

சூடான காப்பி குடித்தால் தொண்டைக்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காபைனில் உள்ள பொருள், தொண்டையில் அரிப்பை ஏற்ப்படுத்தி, வழியை உண்டாக்கும். ஆகவே காபைனால் ஆன பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக டீயை போட்டுக் குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.




சமையல் செய்யும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்!

பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.

பச்சை மிளகாயை  கம்பை கிள்ளி விட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. 

பித்தளை பாத்திரங்களை கழுவிய பின் தோல் சீவிய உருளைகிழங்கை அந்த பாத்திரத்தின் மேல் தேய்க்க பளபளப்பு கூடும்.

முட்டையோடு, தக்காளி சாற்றையும் சேர்த்து ஆம்லெட் செய்யும் போது மிகவும் சுவையாக இருப்பதோடு, முட்டை வாசம் சிறிதும் வராது.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
சாம்பார் வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு உருளைகிழங்கை வெட்டிப் போட சரியாகிவிடும்.

மட்டன், நன்றாக வேகவேண்டும் என்றால் சிறிய பப்பாளித்துண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்கும் போது அதன் நிறம் காய்கறி கலவையில் இறங்காமளிருக்க வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை மட்டும் சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு செய்தால் காய்களின் நிறம் மாறாது.

காலிப்பிளவரை அரைவேக்காடாக வேக வைத்து, அதில் சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்துள், உப்பு சேர்த்து, ஊற வைத்து பின் பொரித்து எடுத்தால்.எண்ணெய் குடிக்காத காலிப்பிளவர் சில்லி ரெடி. 

Friday, July 18, 2014

டென்ஷன்... டென்ஷன்... குறைக்க என்னதான் வழி?

இன்று வேலைக்கு செல்வோரில் பெரும்பாலனவர்கள் டென்ஷனால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு மற்றும் வேலையை திட்டமிட்டு செய்யாமல் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டவதோடு, எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்யமுடியாமல் தவிப்பர்.

மன அழுத்தம், வேலை பளுவால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரியும் நபர்கள் செய்யும் சில வெறுக்கத்தக்க செயல்கள்,எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மூத்த அதிகாரிகளாலும் ஏற்ப்படுகிறது. அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி கொண்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும். மேலும் டென்ஷன் ஏற்படும் போது அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அதை மெதுவாக வெளியே விட வேண்டும். இதனால் மனமும் உடலும் அமைதியாகும். ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை பளு இருக்கும் போது, பதற்றத்துடன் இருக்காமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது தூரம் வாக்கிங் சென்று வரலாம். நல்ல இசை மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு பிடித்த இசையை, உங்கள் மொபைல் போனில் கேளுங்கள் அல்லது விடியோவை பாருங்கள். டென்ஷன் குறைய வேண்டுமானால், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. காபி குடிப்பது டென்ஷனை குறைக்கும் என்பது தவிறு.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் டென்ஷனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை, தியானம் கண்டிப்பாக குறைக்கும். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் அமைதியடைகிறது. மனம் அமைதி இழந்து காணப்படும் போது, உங்கள்ளுக்குப்பிடித்த நல்ல உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம், ஆரஞ்சு உள்ளிட்டவை டென்ஷனை குறைக்கும் உணவுகள் என்று கூறலாம். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.


குறிப்பாக ஆரஞ்சு,சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் ரக பழங்களை, வேலையின் போது உண்ணலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இது , உடலில் உள்ள தசைகளை அமைத்யடயச் செய்கிறது. இது தவிர, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாகவும், நல்ல வாசனை இருக்கக் கூடியதாகவும் அமைத்துக் கொள்ளவதால்,நமக்கே நம் மீது நம்பிக்கை பிறக்கும். டென்ஷன் தானாக விலகும்.

Tuesday, July 15, 2014

எந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்

பழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

சில பழங்களை தேவையான் காலங்களை மட்டுமே உண்ண வேண்டும். வைட்டமின், பாஸ்பரஸ் , பொட்டாசியம் போன்ற சத்துக்கள், ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களில் மட்டுமல்லாது, நம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை போன்ற பழங்களிலும் சத்துகள் நிறைந்துள்ளது. எந்ததெந்த பழங்களில் எத்தனை சத்துகள் நிறைந்துள்ளது என்பதி பார்ப்போம்.

எழுமிச்சப்பழம்: தினமும் எழுமிச்ச பழச் சாற்றினை நீருடன் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பருகி வர உடல் சூடு குறையும். முகம் பொலிவு பெரும். எழுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளிப்பது, பற்களை வலுவாக்குகிறது. ஈறுகளை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. எழுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்து முழுமையாக உள்ளது.
வாழைப்பழம்வாழைப்பழம்: பழங்களில் பழத்திற்கென்றே தனிச் சிறப்பு உள்ளது. இவற்றில் பல வகை உண்டு. மஞ்சள் வாழை மலச்சிகளை போக்கவல்லது. செவ்வாழைபழம் கல்லிரல் வீக்கத்தை குறைப்பதுடன் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை போக்குகிறது. பச்சை வாழைபழம் உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. ரஸ்தாளி, கண் நோய்களை குணமாக்குகிறது. உடலை வலுப்படுத்துகிறது. கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. நேந்திரன் பழம் இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க சிறந்தது.

பொதுவாக வாழைப்பழங்களில் புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால் உடலிற்கு நன்மை பயக்கும்.
பப்பாளிப்பழம்: ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.மிகச் சிறந்த சத்துள்ள உணவான பப்பளியினை தினசரி 100 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவு பெரும். ரத்தசோகை, மலச்சிக்கல், போன்றவற்றை அறவே நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் இப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழம்: வைட்டமின் சி சத்து உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் பல விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை  உடலுக்கு அளிக்கிறது. கண்பார்வை குறைப்பட்டினை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் ஏற்ப்படும் வியர்வை நாற்றத்தை போக்குகிறது.


இவற்றில் அனைத்து பழங்களையும் சாப்பிடாவிட்டாலும், ஏதேனும் ஒரு பழத்தை நாள்தோறும் உண்டு வந்தால் உடல்நலம் சீராகும்.