Pages

Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Thursday, December 19, 2013

கோதுமை மகத்தான பயன்கள்!


http://www.koodal.com/contents_koodal/health/images/2011/wheat19-594.jpg 
கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப் பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன் மகரந்த சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு இனங்கள் காணப் படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை  தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராயிச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரும்பாலான இடங்களில் கோதுமை பயிர் செய்யப்படுகிறது. உலக வணிகத்தில் கோதுமை வாணிபம் ஏனைய அனைத்து பயிர் வாணிபங்களின் மொத்த தொகையிலும் அதிகமாகும். உலகளவில் மனித உணவில் தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாக கோதுமை விளங்குகிறது. அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவு பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பெரிய பரப்பளவில் எளிதாக பயிரிடக்  கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு களஞ்சியப் படுத்தி வைக்கக் கூடியதாகவும் இருப்பதே கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.

கோதுமையின் பயன்கள்:

**முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

**வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

**கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு  பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

**கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

**வேர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர் உடல் பலம் அதிகரிக்கும்.

**கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊறவைத்து காலையில் அடித்து பசையாக்கி அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகிற பால் கோதுமை பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி சித்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும் வேறு வகை நோயினால் அவதிப் பட்டு தெளிந்தவர்களும் விரைவில் உடல் நலம் தேறுவார்கள்.

Wednesday, December 18, 2013

பழங்கால உணவே சிறந்தது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVzWQPIDYZFrRjjOBl_ULgM6s0odmDNlPYTeumWhpaM0fyp5osNByXAVulnvfeFmpfYcnR0PK4xe7NslcyCudFEZMGMbv7MMuNDqJFo_6T9UWV4r7W_lTBLrH7bSLstgLWMB3DKP085gA/s1600/whole+grains.jpgஉணவே மருந்து அன்றைககு நம் முன்னோர் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரணமாக விளங்குகிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான். அதிலும் இப்போது பாஸ்ட் புட் கலாசாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க, பழங்கால உணவு முறைக்கு மாறினால் தான் நல்லது.

பசுமை புரட்சிக்கு பின் தான் அனைவரும் நெல்லரிசியை முதன்மையாக கொண்டு தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டனர். இதனால் சிறு தானியங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. நெல், கோதுமை என்ற பசுமைப் புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு வரகு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி போன்ற சிறு தானியங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்நோய் அறிகுறிகளுடன் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெல், கோதுமை, வாழை, கரும்பு ஆகியவற்றை காட்டிலும் சிறு தானிய பயிர்களே பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக உள்ளன. வரகு, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, திணை ஆகியவற்றை தேடி உன்ன வேண்டும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய்மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒததுக்கொள்ளாது. வரகில் புரதம், இரும்பு, மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ்வரகு, ராகி என்றும் இதை அழைப்பர். புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் குடலுக்கு வலிமை அளிக்கும், நிரழிவு நோயாளிகள் கூட கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது, மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகரிக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். சம்பா வகையில் சீரகச் சம்பா அரிசி, ஆரம்ப நிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா  அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச் சம்பா, கோரைச் சம்பா, கடைச் சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. அரிசியை விட கோதுமையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக்  போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

தெம்பு தரும் கம்பு!

http://i00.i.aliimg.com/photo/v0/126955954/Indian_Bajara.jpg_250x250.jpg 
அது ஒரு கனாக்காலம். நிச்சயமாக சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றைய தலைமுறையினரின் நாகரீகம் ரொம்பவும் பரந்து விரிந்து விட்டது. உணவுகளில் துவங்கி உடை வரை நிச்சயமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. பொங்கல் சாப்பிடும் நாக்குகள் இன்று பீசாவை ருசி காண துடிப்பதால் அழையா விருந்தாளியாக வந்து ட்டிக் கொள்கின்றன வியாதிகள்.

எதனால் வியாதி வந்தது என்று தெரியாமல் குழம்பிப் போய் மருத்துவரிடம் சென்றா
ல் அரை வயிறு தான் சாப்பிட வேண்டும். கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறு காலியாக வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மருந்து, மாத்திரைகள் எழுதி தருவார்கள். இயற்கைக்கு ஒத்துழைக்கும் நம் உடல் செயற்கை மருந்துகளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டால் பல பின் விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் மருந்துகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்த்து ஆதி காலத்து உணவுகளை எடுத்துக் கொண்டோமேயானால் எளிதாக மூச்சு விடுவதில் துவங்கி இனிமையான தூக்கம் வருவது வரை எல்லாம் சிறப்பாக நடந்தேறும் அதில் குறிப்பிடத்தக்க  ஒன்று தான் 'கம்பு'.

கம்பு தானியத்தில் அதிகமாக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ரிபோபுளோவின், தயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச் சத்து, பி வைட்டமின், காரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பால் உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. தோலுக்கும், கண் பார்வைக்கும் அவசியமான வைட்டமின் 'ஏ' உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின்  அதிகளவில் கம்பில் மட்டுமே உள்ளது.

அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களை காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள் வெயிலில் அதிகம் அலைபவர்கள் அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள். இரவு நேர வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும்.

கம்பு உணவை காலை மதியவேலைகளில் உண்டு வந்தால் உடல் சூடு குறையும். நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்பு சாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். பின்னர் கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்டினி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டு பிடித்து மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.

குளிர்காலத்திற்கான சரும பாதுகாப்பு


உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் சருமத்திறுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவேhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGbxUHKGUhSasPQw7mXy5sxHOrBKY9EkaeluBG6u2VdgyF1rSXaO_9W1fRjtq45NS-jzct7u5EopCNatlu9QBK6K99RHguv6Ye2Lip09NuCGShG8iAUBvkSzavhNxP3Bu1U0upjFQWpwU/s1600/Skin-care-in-Winter-Season.jpg அதை பாதுகாப்பது மிகவும் அவசியம். பனிக்காலத்தில் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு செல்கிறது.

அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால், தோலில் வறட்சி ஏற்படுகிறது. சோப்பு போட்டு குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள் உருவாகிறது. வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது போன்ற தொல்லைகளை தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணைய் பசை உள்ள ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு தொடர்ந்து தண்ணீரில் வேலை செய்வது பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும்.  சிறிய அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.

சிறிய அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும் பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப் பகுதியில் உள்ள தோலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்னை அதிகமாகி அது உதிரத் தொடங்கும். இதனால் தலை முடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும்.

குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தோல் பகுதியில் அரிப்புடன் புண் ஆகியவை ஏற்படலாம். இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம்.

சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள் குளித்து ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில் தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன் பத்து நிமிடங்கள் மிதமான சுடுதண்ணீரில் கல்உப்பு சேர்த்து கால்களை வைத்திருக்கலாம். பின் சுத்தமாக துடைத்து விட்டு வெடிப்பு மறைவதற்கான கிரீம்களை பயன்படுத்தலாம்.

பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம் தலைக்கு குளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இப்பிரச்னை உள்ளவர்களின் துண்டு, சீப்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக தோல் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக் காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. டாக்டரின் ஆலோசனைகளுடன் கொசு தடுப்பு கிரீம்களை பயன்படுத்தலாம்.

Friday, December 13, 2013

நீரின்றி அமையாது உலகு! மனிதனோ, மரமோ.... புல்லோ, புழுவோ...


 
எந்த உயிருக்கும் தண்ணீரே ஆதாரம். உணவு, உறக்கம் இல்லாமல் கூட ஒருவரால் உயிர் வாழ்ந்து விட முடியும். தண்ணீர் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. மனித வாழ்க்கை சீராக இயங்க இன்றியமையாத திரவம் தண்ணீர். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அவசியம். 1 கிராம் உணவு செரிக்க 5மி.லி. தண்ணீர்  தேவை. தோராயமாக ஒரு நாளைக்கு 500 கிராம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம். அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரீட்டென்ஷன்) என்றும், குறைவதை உடலில் நீர் வறட்சி நிலை என்றும் சொல்கிறோம்.
நீர்கோர்ப்புக்கான காரணங்கள்...

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது மசாலா அதிகமுள்ள உணவு அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில் உட்காருவது, கர்ப்பம்...

சிலருக்குத் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும். களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம் உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனைக்கான அறிகுறிகள் சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள், பருமனானவர்கள் ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது அவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்து பிறகே எதையும் செய்ய வேண்டும். மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால், அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஒட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தனதோ அதே மாதிரி தான் நீர் அற்ற வறட்சி நிலையும். ௨௦ நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்சனை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு, தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் தண்ணீர் வற்றும் போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்த பிறகுதான் அந்த தலைவலி நீங்கும்.

அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய இரு விசயங்களினால் தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும். நாக்கு வறண்டு போவது, உதடுகள் வெடிப்பது, இதயத் துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே... நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா? தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன் பிரச்னை ரொம்ப கலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்று நோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு.

எப்படி குடிப்பது?
** தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும் எல்லோராலும் வெறும் தண்ணீரைக் குடிக்க முடியாது. சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய? ஒரு லிட்டர் தண்ணீரில் கால் முடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அவ்வப்போது குடிக்கலாம்.

** 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு நீர் மோர் ஆக்கி அடிக்கடி சிறிது சிறிதாக குடிக்கலாம்.

** சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது.

** உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்ற மகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.

சத்து?
இத்தனை மகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால் தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ள சத்துக்களும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளிலும் தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர் அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வறட்சியும் போகும்.வைட்டமின் சி சத்தும் சேரும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?


அப்படியெல்லாம் இல்லை, குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும். அதை நம் உடல் தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித் தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால் கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்ச்சியை  மாற்ற இயக்கம் அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு தங்குவதில்லை.

யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கும் குறைவானால்) நாள் ஒன்றுக்கு 1000 மி.லி தண்ணீர் மட்டுமே அனுமதி அது அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ள சமைக்க என எல்லாம் அடங்கியது. அளந்து அளந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்னி பாதித்தவர்களுக்கு, பாதிப்பின் தீவிரம் பொறுத்து தண்ணீரின் அளவு 500 மி.லி வரை குறைக்கப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குத் தண்ணீர்?
பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள் பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப் பயந்து சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு தண்ணீரே குடிக்காமலும் சிறுநீரை அடக்கியும் பழகினால் மிக இளம் வயதிலேயே யூரினரி இன்ஃபெக்ஷன் வரும். சிறுநீர் கழிக்கும் போது வழி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகள். அந்த அளவுக்குப் போக விடாமல் முன் கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழகுவது ஆரோக்கியமானது.

Wednesday, December 11, 2013

என் சமயலறையில்

*பனீர் பட்டர் மசாலா தயாரிக்கும் போது இஞ்சி, வெங்காயம் விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஒரு ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்துக் கிளறினால் சுவை ஹோட்டலை தோற்கடிக்கும்!

*சூப் தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் பார்லி வாட்டர் கலந்தால் தனிச் சுவை... உடலுக்கும் ஆரோக்கியம்!

*பனீரை சமையலில் பயன்படுத்துவதற்கு முன் மிதமான சூடுள்ள எண்ணையில் அரை நிமிட்ம் பொரித்து தண்ணீரில் போட்டு எடுத்து பயன்படுத்தினால் மிருதுவாகவும் புளிப்பில்லாமலும் இருக்கும்.

*வெஜிடபுள் புலாவ் அல்லது ஃபிரைடு ரைஸ் செய்யும் போது ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். அந்த நீரை வடி கட்டி புலாவ் அரிசியை வேக வைக்கும் போது ஊற்றினால் புலாவ் மணக்கும் சாப்பிட சுலபமாக இருக்கும்.

*பாலக் கீரையோ, அரைக்கீரையோ எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து விட்டு சர்க்கரை போட்டு நீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் ருசியாக இருக்கும்.

*பூண்டு, வெங்காயம், மீன் ஆகியவற்றைக் கையாளும் போது கைகளில் இருந்து ஒருவிதமான வாசனை வரும். வேலை முடிந்ததும் கைகளில் சிறிது டுத் பேஸ்ட்டை தடவி தேய்த்துக் கழுவினால் வாடை நீங்கிவிடும்.

*முந்திரிப் பருப்பை வறுக்கும் போது நெய் சுட ஆரம்பித்த உடனேயே பருப்பைப் போட்டு விட வேண்டும். அப்போது தான் உள்ளேயும் வெளியேயும் ஒரே சீராக வறுபடும்.

*பிரெட் டோஸ்ட் செய்யும் போது நெய் ஊற்றினால் தோசைக் கல் தீயும். வெண்ணைய் போட்டால் தீயாது. கமகம வாசனை தூள் பறக்கும்.

*பூரி இடுகிற போது மாவைத் தொட்டு இட்டு எண்ணையில் பொரிப்பது வழக்கம். மாவுத் துகள்கள் எண்ணையில் படிந்து அடியில் கசடு  படிவது தவிர்க்க முடியாமல் போகும். அதைத் தவிர்க்க பூரி இடுகிற மனையிலும், குழவியிலும் சிறிது எண்ணை தடவி விட்டு பிறகு பூரியை இட்டு எண்ணையில் பொரித்தால், எண்ணையில் கசடு சேராமல் அப்படியே பளிச் சென இருக்கும்.

*பக்கோடாவில் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைகோஸ் அல்லது கேரட் அல்லது முள்ளங்கியை துருவிச் சேர்க்கலாம். மொறு மொறுப்பாக இருக்கும்.

*உளுந்து வடை மாவு நீர்த்துப் போய் விட்டதா? பாசிப்பாருப்பு மாவையோ, வேர்க்கடலைப் பொடியையோ கொஞ்சம் கலக்கலாம். சுவையும் கூடும்.

*முறுக்கு, தட்டை போன்றவை செய்யும் போது மாவை வெறும் கடாயில் வ
றுத்து விட்டுப் பயன் படுத்தினால் மொறு மொறுப்பாக இருக்கும். சீக்கிரம் நமத்துப் போகாமலும் இருக்கும்.

*உளுந்து வடைக்கு அறைக்கும் போது அதனுடன் 2-3 அவித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். அந்த மாவில் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை தேவையான அளவு சேர்த்து வடையாகத் தட்டவும். எண்ணையில் பொறிக்கவும். புதுவிதமான 'கட்லெட் வடை' தயார்.

*2 ஸ்பூன் உளுத்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து செய்தால் புதுச்சுவை கிடைக்கும்.

*பக்கோடா செய்யும் போது, மாவில் சிறிது நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்தால் பக்கோடா மொறு மொ
றுப்பாக இருக்கும்.

*பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் போது ஒரு டீஸ்பூன் எண்ணையை காய்ச்சி ஊற்றி பிறகு கரைத்தால் பஜ்ஜி அதிகம் எண்ணையை உறிஞ்சாது.

*வடை, பக்கோடவுக்கு சமையல் சோடாவை சேர்க்க சிலர் விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதற்குப் பதிலாக சிறிது ரவையைக் கலந்து செய்தால் அதே மொறுமொ
றுப்பு கிடைக்கும்.

*பாதாம், முந்திரி வைத்திருக்கும் டப்பாவில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால் எப்போதும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

*இஞ்சி கைவசம் இல்லை என்றால் சுக்கைத் தட்டி சூடான தண்ணீரில் ஊறப் போட்டு அதற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.

*விருந்து முடிந்த பிறகு பீடா, வெற்றிலை, சோம்பு ஆகியவற்றைக்குப் பதிலாக வெள்ளரித் துண்டுகளை சாப்பிட தரலாம். சாப்பிட்ட மசாலா வாசனை இருக்காது. புத்துணர்ச்சி பிறக்கும்.

*சன்னா மசாலாவோ, வேறு எந்த சுண்டல் வகையாகவோ இருந்தாலும் அதன் மீது பீட்ரூட், கேரட் துருவலை தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை.

*ஜாங்கிரிக்கான மாவை கிரைண்டரில் அரைக்காமல் ஆட்டுரலில் அரைத்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

*ஏலக்காயை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பிறகு எடுத்து பொடித்தால் தோல் இல்லாமல் நன்றாகப் பொடிக்க வரும்.

Tuesday, December 10, 2013

குழந்தைகளை தனியறையில் தூங்க வைக்கலாமா?

பிறந்தது முதலே தாயின் அரவணைப்பில் இருப்பதற்கு ஒவ்வொரு குழந்தையும் விரும்புகின்றது. தனது உறக்கமும் தாயுடன் இருக்க விரும்பும் குழந்தைகள் அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்து கூட தெரிந்து கொண்டு விடுகிறது. தொடக்கம் முதல் தாயுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் இப்பழக்த்தை 16,17 வயது வரையில் தொடர விரும்பும் போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட ' வளர்ந்த பிள்ளைகள்' எல்லா செயல்பாடுகளிலும் அம்மா பிள்ளைகளாகவே இருந்து ம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்துவிடுவார்கள் என்று குடும்பநல ஆலோசகர் மகேஷ் கூறுகிறார் மேலும் அவர் கூறியதாவது:

சில குழந்தைகள் தாய்பால் குடித்து வயிறு நிரம்பியதும் உறங்கிவிடுவார்கள். அப்படி தூங்கி ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருப்பார்கள். இது அன்னிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்து கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணரவைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு மேம்பாட்டுக்கும்
துவாகின்றது.

சின்னக்குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைக
ள் பகல் நேரத்தில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்கார பெண்ணின் நேரடி பார்வையிலோ தான் இருப்பார்கள். அதே நேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனியாக இருந்த நேரங்கள் ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்தி கொள்வார்கள்.

2வது குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தையின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 2வது குழந்தை பிறக்கும் பொழுது தனிமையை உணரத் தொடங்கும் முதல் குழந்தை. 2வது குழந்தையை எதிரியாக பார்க்கத் துவங்கிவிடும். இத்தகைய மனக்கசப்பு முதல் குழந்தைக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு குழந்தை தாயிடம் படுத்துக்கொண்டால், 2வது குழந்தை தந்தையிடம் படுத்துக்கொள்ள வைக்க வேண்டும். தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடம் குழந்தைகள் ஓட்டிக்கொள்ளும்.

ஏழு மற்றும் எட்டு வயதில், குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளிஇடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இந்நிலையில், தனியறையில் தூங்கும் அளவிற்கு அவர்களுக்குள் மாற்றம் நேரிடுகிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்ல விதமாய் பெற்றோரே எடுத்து சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும். திகில் கதைகள் கேட்பது படங்கள் பார்ப்பதன் மூலம் தனியறையில் படுக்க பயப்படலாம்.

இப்படி பயக்கும் குழந்தைகள் பெற்றோர் தூங்கும் அறையிலே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக பயப்படுபவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும் வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாக தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

Saturday, December 7, 2013

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்!



மரங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால், மரத்தின் மகத்துவம் தெரியாமல்,பல்லாண்டுகளாக நம்மோடு உறவாடிய மரங்களை, ஒரு கணத்தில் வெட்டும் செயல் தொடர்கிறது. இச்செயல் நம்மை நாமே புதை குழிக்குள் தள்ளுவதற்கு நிகரானது.

அதனால் மரம் வெட்டுவதை ஒருகாலத்திலும் அனுமதிக்கக்கூடாது. மரம் வெட்டுவதற்கு முன்பு, மரங்களால் மனித இனம் எவ்வாறு சுகமாக வாழ்கிறது என்பதை சிறிது அறிந்தால் போதும். மரம் வெட்டும் எண்ணமே, துளி கூட இல்லாமல் போகும். மனித இனம் மரங்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறது. பயங்களின் பட்டியலில் சிற்சில மட்டும் இங்கே...
  • மரங்கள் உணவை தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கை கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமாக உணவை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராணவாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.
  • வேலை நேரம் தவிர, நாம் பெரும்பாலான நேரத்தை வீட்டில் தான் கழிக்கிறோம். வீட்டை சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர் புறங்களிலும் வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப் படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியை தருகின்றன. மரங்கள் மழையை தருகின்றன. வானில் மழை மேகம் உருவாகும்போது, மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப் படுகிறது. இதனால், அப்பகுதியில் மேகங்கள் மழையை பொழிகின்றன.
  • மரங்கள் மண்ணரிப்பை தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு, ஆறு குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால், ஒருபுறம் வளமான மேல்மண் அரித்து செல்வதும், மறுபுறம் ஆறுகள்,  குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமல் வேர்கள் இறுக பிடித்துக் கொள்கின்றன. இதனால் அடிமண் அடித்து செல்லப் படாமல் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
  • கோடையில் அனல் காற்று வீசும்போது, நிலம் வண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்து செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள், வேர்களில் மண்னை சேகரித்து வைப்பதால், அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் 'அலையாத்தி காடுகள்' என்ற பெயரும் வந்தது.
  • பலமான வேர்களை கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக, எரிபொருளாக பயன்படுகிறது. மரமும் பலவகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன.
  • கட்டுமான பொருட்களில் இருந்து வீட்டு தேவைகள், அலங்கார பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். இன்னும் நிறைய மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.

விமான பைலட் ஆக விருப்பமா?



விமான போக்குவரத்து சேவையில் விமானி(பைலட்), விமானப் பணிப்பெண்கள் (ஏர் ஹாஸ்டஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள், ஒரு விமானத்துக்கு விமானிதான் தலைவராக இருப்பார். அவருக்கு உதவியாக துணை விமானி இருப்பார். விமானம் பறக்கும் பயணத்தை திட்டமிடுவது, வானிலை தகவல்களை அறிக்கைகள் மூலம் அறிவது, ஓட்டுவதற்கேற்ப காற்று நிலைக்கு உகந்து நிலையில் விமானம் இருக்கிறதா என அறிதல், விமானத்தில் உள்ள பொருட்களை கண்காணித்தல், விமானம் ஓட்டுவது தொடர்பான தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அவ்வப்போது தெரிவித்தல் ஆகியவை விமானியின் பணிகள். விமானியாவதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கான உரிமங்களை பெற்றாக வேண்டும்.

மாணவர் பைலட் லைசென்ஸ்:

விமானியாவதற்கு முன் மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். பிளையிங் கிளப் நிறுவனத்தில் சேர்த்து அதற்கான பயிற்சியைப் பெற்றுத் தேர்ச்சியடைய  வேண்டும். லைசென்ஸ் பெற 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும். இதில் 20 மணி நேரம் பயிற்சியாளருடனும் 20 மணி நேரம் தனியாகவும் பறந்திருக்க வேண்டும். 5 மணி நேரம் நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பறக்க வேண்டும்.

அத்துடன், ஏர் ரெகுலேஷன், நேவிகேஷன், ஏவியேஷன் மீட்டிரியாலஜி, ஏர்கிராப்ட், என்ஜின் ஆகியவற்றை கையாளும் பயிற்சியையும் பெறவேண்டும். குறைந்தது 17 வயது நிரம்பியவர் இதில் சேரலாம். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை படித்து, பிளஸ் 2வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ், செக்யூரிட்டி கிளியரன்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

தனியார் பைலட் லைசென்ஸ்:

மாணவர் விமானி உரிமம் பெற்றவர்கள் பயிற்சியாளருடன் சேர்ந்து பறக்கலாம். இது 'டூயல் பிளை' என்று குறிப்பிடப்படுகிறது. இருவராக பறக்கும்போதே பயிற்சியை பெறலாம். 15 மணி நேரம் பயிற்சி பெறுவர். இந்த உரிமத்தைப் பெற மொத்தம் 60 மணி நேரம் பறக்க வேண்டும். இதற்குக் கல்வி தகுதி பிளஸ் 2. டெல்லியிலுள்ள விமானப்படை மத்திய மருத்துவ நிறுவனம் அல்லது பெங்களுருவிலுள்ள நிறுவனத்தில் தகுதிச் சான்றிதழ்  பெறவேண்டும். அத்துடன் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். அதில், ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படும்.

வணிக பைலட்:


வணிக பைல்ட் லைசென்ஸ் பெற, 250 மணி நேரப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ்2 முடித்தவர்கள் தனியார் பைல்ட் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் விமானம் ஒட்டிய அனுபவம் தேவை. உடல் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். விமானம் ஒட்டும் தகுதியைப் பெறுவதற்குப் பி.எஸ்.சி., ஏவியேஷன், பி.இ., ஏர்லைன் இன்ஜ்., அண்ட் மேனேஜ்மென்ட், பி.இ., ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜி., பி.டெக்., ஏரோநாட்டிகல் ஆகிய ஏதாவதொரு படிப்பை முடிக்க வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பது நல்லதா?

உங்களிடம் செல்லப் பிராணி உள்ளதா? வள்ர்ப்பு நாய் உள்ளதா? அப்படியானால் அவை உங்கள்  உடல்நலத்துக்கு பயன் தரலாம். அமெரிக்க உடல்நலக் கழகம் செல்லப்பிராணி வளர்ப்பது நம் உடல்நலத்துக்கு பலன் தருமா என்ற ஆய்வை கலந்த 2008ம் ஆண்டு நடத்தியது.

ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்;

விஞ்ஞானிகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை நோய் ஏற்பட்ட ஓராண்டுக்குப் பின் பரிசோதித்தனர். இவர்களில் மாரடைப்பின் போது தீவிரத்துக்கு பின் செல்ல நாய் வளர்க்காதவர்களை விட, வளர்த்தவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்தது.

மற்றொரு ஆய்வின் படி, 2,000 நடுத்தர வயதினரை பரிசோதித்ததில் சொந்தமாக செல்ல நாய் வளர்த்தவர்களும், நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும்  உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியதுடனும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்தது.

சற்று வயது முதிர்ந்தவர்களை பரிசோதனை செய்ததில் தசை, மூட்டு வலியின்றி ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது. நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வீட்டுக்கு வெளி இடங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டு பேசவும், நட்புறவை நீடிக்கவும், உதவுகிறது.

இது மனதுக்கும், உடலுக்கும் தெம்பளிக்கும் விதமாக இருப்பதால் வயதாவது குறித்து கவலையின்றி நீண்ட நாட்கள் வாழ பிடிப்பை தருகிறது. செல்ல நாய் வளர்ப்பதால் மன அலர்ஜி நீங்குகிறது.

Friday, December 6, 2013

ஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா!

'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்‌வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப் பொலிவு உள்ள ஈரப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் இம்மரம் அதிகம் வளர்கிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தக்காண பீடபூமி பகுதிகளில் அதிகம் உள்ளன. தமிழகத்தில் கோவை, ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை மற்றும் நீலகிரி மாவட்டங்‌களில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ளன.

தமிழகத்தில் பரவலாக மலை மற்றும் வனப்பகுதியில் மட்டும் வளர்கிறது. இம்மரம் மிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 35 மீட்டருக்கு மேல் வளரும். நன்றாக வளர்ந்த மரத்தின் சுற்றளவு 6 மீட்டர் வரை இருக்கும்.

25 மீட்டர் உயரம் வளர 80 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மரமாக தோதகத்தி  விளங்குகிறது. உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகள் முன்பாகவே இம்மரம்
இருந்துள்ளது என,  புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி மற்றும் ஹராப்பா அகழ்வாராய்ச்சியின் போது வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பழங்‌காலத்தில்
கடல் வாணிப் பொருளாக இம்மரம் இடம் பெற்றுள்ளது.

ஆங்‌கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் என்ற வணிக குழுவினர். 4.8 மீட்டர் நீளம் 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஈட்டி மரப் பலகையில் அழகிய வேலைப்பாடு உள்ள மேசை ஒன்று தயாரித்து, வெல்லிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்துள்ளனர். அந்த மேசை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இம்மரத்தின் சிவந்த நிறமும், உறுதித்தன்மையும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஆடம்பரமான வீட்டு  உபயோக பொருட்கள் தயாரிக்க இம்மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டன. 

அதனால், அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1963ல் வனச்சட்டத்தின் படி, ஈட்டி தேசிய மரமாக அறிவிக்கப்பட்டது. ஈட்டி, தேக்கு மரத்தை விட அதிகம் உறுதியானது என்பதால் இதன் விலை மதிப்பும் அதிகம். அதனால், விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட மேசை, நாற்காலிகள், கட்டில், பிரோ மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க இம்மரம் பயன்படுகிறது. இன்றைக்கு இதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து 30 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதில்லை. 

ஆனால் மரப்பொருட்கள் மற்றும் பிளைவுட்டுகளாக தயாரிக்கப்பட்டு எற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போதுமான அளவு எற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோதகத்தி மரத்தை 500 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பயிரிட முடியும். குறைந்து பட்சம் 1000 மில்லி மீட்டர் மழை உள்ள இடங்களில் மட்டுமே இம்மரம் வளரும். வற்றாத ஆற்றங்கரை ஓரங்களில் நடலாம். தேக்கு மரக்காடுகள் ஊடே நடலாம். ஆரம்பத்தில் தோதகத்தி, தேக்கு மரத்தைவிட குறைவாக வளரும். நன்றாக வளர்ந்த பிறகு தேக்கை விட வேகமாக வளரும். ஈட்டி மரத்தை பிற மரங்களோடு சேர்த்து   இரண்டு, மூன்று மரங்களை வளர்க்கலாம்.