Pages

Showing posts with label Beauty Tips. Show all posts
Showing posts with label Beauty Tips. Show all posts

Friday, December 20, 2013

பாதமே உன்னை ஆதாரிக்கிறேன்


http://www.beautythroughstrength.com/wp-content/uploads/2012/01/Pedicure3.jpg 
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.

*கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும்.

*பாத‌ங்க‌ள் அடி‌க்கடி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படுபவ‌ர்க‌ள் அ‌திக நேர‌ம் ‌நி‌ற்பதோ, அ‌திக நேர‌ம் கா‌ல்களை ‌கீழே தொ‌‌ங்க‌ப்போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு உ‌ட்காருவதோ கூடாது.

*படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

*வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

*உப்பில் ஆலிவ் ஆயில் கலந்து  பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால் பாதங்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும்

*பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

*பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று.

*பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

*கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuXLbDNc9o60eOYufy_XW6jVVpKCgPpIEIBgj6C80krVgXzKURB6qQNF91DA9_M4pjTwTWo4YOYlmPFTx-ybzteJ9scXnhzk-HHyU0ch12FXt1j8_2tgMm9MSVFBT52jqB58Ds17HjW-8/s1600/Acne.jpg 
**முகம் பிரகாசிக்க முதலில் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி பின்னர் பப்பாளி பழச்சாறு, தேன் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

**ரோஸ் வாட்டர்  மற்றும் ஓட்ஸ் கலந்து
முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

**வேப்ப தூள், துளசி பொடி, ரோஜா இதழ் பொடி, முல்தானி
மெட்டி கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்துகொள்ளுங்கள். இந்த கலவையை தேவையான அளவு எடுத்து  1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேக் போல தடவி 20 நிமிடம் வைத்து பின்னர் மென்மையான வட்ட மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



**உலர் திராட்சையை எடுத்து தோல் நீக்கி காய்ச்சாத பால் பயன்படுத்தி அரைத்து அதில் எலுமிச்சை சாறு, பன்னீர், தேன் துளிகள் மற்றும் கோதுமை மாவு இரண்டு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் 20 நிமிடம் அப்லை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

** தினமும் ஆரஞ்சு பழத்தை 2 துண்டுகளாக வெட்டி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் 1 மாதத்திற்குள் முகம் பளபளப்பாகவும்  பொலிவுடனும் இருக்கும்

**சில துளசி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதில்  எலுமிச்சை சாறு கலந்து 10-15 நிமிடங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

**தயிர் மற்றும் தக்காளி சாறு, ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி  20 நிமிடங்கள் அதை வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

**முள்ளங்கி சாறு 2 டீஸ்பூன், தக்காளி சாறு 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், கலந்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் வைத்து கழுவவும்.

Wednesday, December 18, 2013

குளிர்காலத்திற்கான சரும பாதுகாப்பு


உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் சருமத்திறுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவேhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGbxUHKGUhSasPQw7mXy5sxHOrBKY9EkaeluBG6u2VdgyF1rSXaO_9W1fRjtq45NS-jzct7u5EopCNatlu9QBK6K99RHguv6Ye2Lip09NuCGShG8iAUBvkSzavhNxP3Bu1U0upjFQWpwU/s1600/Skin-care-in-Winter-Season.jpg அதை பாதுகாப்பது மிகவும் அவசியம். பனிக்காலத்தில் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு செல்கிறது.

அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால், தோலில் வறட்சி ஏற்படுகிறது. சோப்பு போட்டு குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள் உருவாகிறது. வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது போன்ற தொல்லைகளை தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணைய் பசை உள்ள ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு தொடர்ந்து தண்ணீரில் வேலை செய்வது பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும்.  சிறிய அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.

சிறிய அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும் பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப் பகுதியில் உள்ள தோலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்னை அதிகமாகி அது உதிரத் தொடங்கும். இதனால் தலை முடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும்.

குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தோல் பகுதியில் அரிப்புடன் புண் ஆகியவை ஏற்படலாம். இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம்.

சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள் குளித்து ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில் தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன் பத்து நிமிடங்கள் மிதமான சுடுதண்ணீரில் கல்உப்பு சேர்த்து கால்களை வைத்திருக்கலாம். பின் சுத்தமாக துடைத்து விட்டு வெடிப்பு மறைவதற்கான கிரீம்களை பயன்படுத்தலாம்.

பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம் தலைக்கு குளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இப்பிரச்னை உள்ளவர்களின் துண்டு, சீப்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக தோல் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக் காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. டாக்டரின் ஆலோசனைகளுடன் கொசு தடுப்பு கிரீம்களை பயன்படுத்தலாம்.

பற்களை பராமரிப்பது எப்படி?

 http://www.yarljothy.com/wp-content/uploads/2013/12/dental-9.jpg
உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகுக்கும் முக பொலிவுக்கும் பேசவும் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவு வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்களை வராமல் ருக்க வழி செய்யும்.

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக் கூடியது பற்களை சுற்றியுள்ள ஈறு தான். பொதுவாக ஈறு நோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பால் ஈறுக்கும், பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெரும் அளவு ஆழமாகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளியேறும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழகிய சில பாகங்களும், உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் போல் ஆகிறது.

அதில், உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் போது ரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ்நீர் ஒரு திரவம் போல், சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவையாகும். பொதுவாக பிளேக் என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப் படலம் முழுவதும் விஷக் கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து கெட்டியாகி கறையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை:
வருடத்துக்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்கரை அகற்றி பற் களை பாதுகாக்க வேண்டும் 'அல்ட்ராசோனிக் ஸ்கேலர்' என்ற நவீன கருவி மூலம் பற் களை சுத்தம் செய்து கொள்ளலாம். பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வழி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை:
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருந்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்டால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல் அழகு பாதுகாக்கப்படும்.

பல் சீரமைப்பு:
பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்கு காரணம் குழந்தை சிறு வயதில் உள்ள போது விரல் சுப்புவதாலும் பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பற்பல விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக கிளிப்புகள்  மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்துக்கு தள்ளப் படுவதால் பல்வரிசை சீராக அமையும். பல் சொத்தை பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.

Friday, December 13, 2013

நீக்கலாம்... தடுக்கலாம்!



நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களுக்கு ஒரு விஷயத்தில் அதை வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்!

பெண்மைக்குப் பெரிய சவாலான இந்தப் பிரச்சனைக்கு வாக்சிங், திரேடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழகுத் துறையில். அத்தனையும் பாதுகாப்பானவையா என்பது தான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்கவும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

" பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னை தான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல் போவதே முக்கிய காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை என வேறு காரணங்களும் இதன் பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

**பியூமிஷ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஷ் ஸ்டோனில் தடவி வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். கடலை மாவு, பார்லி பவுடர், தேன் மூன்றும் தலா 1 டீஸ்பூன் அளவு எடுத்து சில துளிகள் தண்ணீர் வீட்டுக் கெட்டியாகக் குழைத்து ரோமம் நீக்க வேண்டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரை தெளித்து சந்தனம் தடவி வைத்த பியூமிஷ் ஸ்டோனால், மிக மென்மையாக ரோமத்தின் எதிர் திசையில் தேகாவும். பிறகு அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம் குறைந்து, வேர்க்கால்கள் பலவீனம் அடையும்.

**விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து சம அளவு எடுத்து கலந்து நீர் விட்டு பேஸ்ட் போலச் செய்து உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

**பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும் போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன் வெல்லத் தண்ணீர் கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும் மேன்மையாக உரித்தெடுத்து விடலாம். தொடர்ந்து இப்படிச் செய்தால் பெண் குழந்தைகள் பருவமடையும் போது ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

**சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள் எல்லாம் சம அளவு கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித்தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை....

**சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாமலிருப்பது உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

**கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரோமங்களை நீக்கிய இடம் தடித்து கருப்பதுடான் ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்.

**கெமிக்கல் கலந்த ஹேர் ரிமுவிங் கிரீம்களை உபயோக்கிப்பதும் ரோம வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

**ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி நின்று விடும். 

**பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத் தெரியாமல் தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால் பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய அதாவது நான்கைந்து நாள்களில் மறுபடி ரோமங்கள் தம் பழைய நிறத்துக்குத் திரும்பும் . கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.

Friday, December 6, 2013

சம்பங்கி பூவில் இத்தனை மகத்துவமா!

சம்பங்கி பூ


பூஜைக்கு உகந்த சம்பங்கிப்பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. மயக்கும் நறுமணம் கொண்டது. சம்பங்கி பூவின் இதழ்களுக்கு, தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல்,பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.




சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணையில், 50 கிராம் பூவை போட்டு நான்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணைய்தான் 'சம்பங்கி தைலம்' என அழைக்கப் படுகிறது. இதனை உச்சி முதல் பதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து முழுமுழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

பலன்கள்

நான்கு சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து அரைத்து, சூடு பறக்க நெற்றிப்பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் நீரில் ஐந்து சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண்நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள்  தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் விதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் தெம்பும், பலமும் பெரும்.

200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும். இதில், சிறிது விளக்கெண்ணைய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணைய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து, ரசத்தை ஒரு பத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை மாலை நேரத்தில் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மேன்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாதவலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ இரண்டு, தேங்காய் பால் இரண்டு தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால் முகம் புத்துணர்ச்சி பெரும். இதுபோன்று பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன.

Sunday, December 1, 2013

பளீச் முகம் வேண்டுமா?


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழ சாறு ஒரு ஸ்பூன், கேரட் சாறு ஒரு ஸ்பூன், ஈஸ்டர் தூள் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பளபளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு  அல்லது பால்  ஏடு எடுத்து கால்  ஸ்பூன் மஞ்சள் கலந்து பூசி, நல்ல மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் / பாதாம்பருப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் என எல்லாவற்றையும் கலந்து, நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஸாஜ்  செய்து வந்தால் கரும்புள்ளி நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

இரவு படுக்க போகும் முன்பு புதினா சாறை  முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Saturday, November 9, 2013

Home Remedies For Beautiful Skin

Here are a few quick beauty regimes you can follow at home to look your best this season.

Home Made Face Packs:

A natural way to get smooth and supple skin is home made face packs, and what's more all the ingredients you need are readily available at your disposal in your house. Try a Tomato face pack if you have oily skin. Mash up a tomato and leave it on your face for 10-15 minutes, then wash it off with lukewarm water. To get the elusive glow, apply the honey mask in your skin.

Keep Yourself Hydrated:

Drinking at least 8-10 glasses of water per day will give it that healthy glow. Your skin tends to get dull and dry in this season and its imperative to keep it hydrated and water acts as a natural moisturizer. 

Home Made Moisturizers:

Try some home made moisturizers like yogurt and lemon juice. Papaya pulp and banana mash also work wonders for your skin. Since they're all natural, there's no harm in applying them on a daily basis. Take it off with plain water and see your skin glow with that home made nourishment.