Pages

Friday, December 20, 2013

உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuXLbDNc9o60eOYufy_XW6jVVpKCgPpIEIBgj6C80krVgXzKURB6qQNF91DA9_M4pjTwTWo4YOYlmPFTx-ybzteJ9scXnhzk-HHyU0ch12FXt1j8_2tgMm9MSVFBT52jqB58Ds17HjW-8/s1600/Acne.jpg 
**முகம் பிரகாசிக்க முதலில் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி பின்னர் பப்பாளி பழச்சாறு, தேன் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

**ரோஸ் வாட்டர்  மற்றும் ஓட்ஸ் கலந்து
முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

**வேப்ப தூள், துளசி பொடி, ரோஜா இதழ் பொடி, முல்தானி
மெட்டி கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்துகொள்ளுங்கள். இந்த கலவையை தேவையான அளவு எடுத்து  1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேக் போல தடவி 20 நிமிடம் வைத்து பின்னர் மென்மையான வட்ட மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



**உலர் திராட்சையை எடுத்து தோல் நீக்கி காய்ச்சாத பால் பயன்படுத்தி அரைத்து அதில் எலுமிச்சை சாறு, பன்னீர், தேன் துளிகள் மற்றும் கோதுமை மாவு இரண்டு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் 20 நிமிடம் அப்லை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

** தினமும் ஆரஞ்சு பழத்தை 2 துண்டுகளாக வெட்டி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் 1 மாதத்திற்குள் முகம் பளபளப்பாகவும்  பொலிவுடனும் இருக்கும்

**சில துளசி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதில்  எலுமிச்சை சாறு கலந்து 10-15 நிமிடங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

**தயிர் மற்றும் தக்காளி சாறு, ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி  20 நிமிடங்கள் அதை வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

**முள்ளங்கி சாறு 2 டீஸ்பூன், தக்காளி சாறு 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், கலந்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் வைத்து கழுவவும்.

No comments: