Pages

Friday, December 20, 2013

பாதமே உன்னை ஆதாரிக்கிறேன்


http://www.beautythroughstrength.com/wp-content/uploads/2012/01/Pedicure3.jpg 
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.

*கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும்.

*பாத‌ங்க‌ள் அடி‌க்கடி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படுபவ‌ர்க‌ள் அ‌திக நேர‌ம் ‌நி‌ற்பதோ, அ‌திக நேர‌ம் கா‌ல்களை ‌கீழே தொ‌‌ங்க‌ப்போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு உ‌ட்காருவதோ கூடாது.

*படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

*வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

*உப்பில் ஆலிவ் ஆயில் கலந்து  பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால் பாதங்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும்

*பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

*பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று.

*பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

*கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

No comments: