Pages

Showing posts with label கரும்புள்ளி. Show all posts
Showing posts with label கரும்புள்ளி. Show all posts

Tuesday, December 9, 2014

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

35 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள். 

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு. 

Sunday, December 1, 2013

பளீச் முகம் வேண்டுமா?


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழ சாறு ஒரு ஸ்பூன், கேரட் சாறு ஒரு ஸ்பூன், ஈஸ்டர் தூள் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பளபளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு  அல்லது பால்  ஏடு எடுத்து கால்  ஸ்பூன் மஞ்சள் கலந்து பூசி, நல்ல மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் / பாதாம்பருப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் என எல்லாவற்றையும் கலந்து, நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஸாஜ்  செய்து வந்தால் கரும்புள்ளி நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

இரவு படுக்க போகும் முன்பு புதினா சாறை  முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.