Pages

Wednesday, December 18, 2013

பற்களை பராமரிப்பது எப்படி?

 http://www.yarljothy.com/wp-content/uploads/2013/12/dental-9.jpg
உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகுக்கும் முக பொலிவுக்கும் பேசவும் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவு வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்களை வராமல் ருக்க வழி செய்யும்.

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக் கூடியது பற்களை சுற்றியுள்ள ஈறு தான். பொதுவாக ஈறு நோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பால் ஈறுக்கும், பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெரும் அளவு ஆழமாகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளியேறும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழகிய சில பாகங்களும், உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் போல் ஆகிறது.

அதில், உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் போது ரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ்நீர் ஒரு திரவம் போல், சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவையாகும். பொதுவாக பிளேக் என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப் படலம் முழுவதும் விஷக் கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து கெட்டியாகி கறையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை:
வருடத்துக்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்கரை அகற்றி பற் களை பாதுகாக்க வேண்டும் 'அல்ட்ராசோனிக் ஸ்கேலர்' என்ற நவீன கருவி மூலம் பற் களை சுத்தம் செய்து கொள்ளலாம். பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வழி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை:
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருந்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்டால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல் அழகு பாதுகாக்கப்படும்.

பல் சீரமைப்பு:
பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்கு காரணம் குழந்தை சிறு வயதில் உள்ள போது விரல் சுப்புவதாலும் பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பற்பல விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக கிளிப்புகள்  மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்துக்கு தள்ளப் படுவதால் பல்வரிசை சீராக அமையும். பல் சொத்தை பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.

No comments: