Pages

Thursday, July 24, 2014

ரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்


இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவிருத்திக்கு எளிதாகிறது.  
 
ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள்.
-----நாவல் பலத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக பலத்தைக் கொடுப்பதுடன், உடலில் ரத்தம் ஊறவும் உதவி செய்யும். 
 
-----பேரீச்சம் பலத்தை மூன்று நாட்களுக்கு தேனில் ஊற வைத்து பிறகு வேலைக்கு இரண்டு, அல்லது மூன்று சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தியாகும். 
 
-----தினமும் இரவில் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
-----பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மகரந்தத்தை தவிர்த்து அதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் வேட்டை சூடு தீர்ந்து ரத்தம் ஊறும்.
-----முருங்கைகீரையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு முட்டை உடைத்து நெய் சேர்த்து கிளறி 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தம் பெருகும். 
 
-----இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
-----தக்காளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 
 
-----இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.பசியைத் தூண்டும் தன்மை கொண்டது.  
 
-----விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.

நோய் தீர்க்கும் வழி முறைகளே மருத்துவம்

மூலிகை: இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப்  பயன்படுத்திச் செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.
சித்த மருத்துவம்: பண்டைய சித்தர்களால் கண்டறியப்பட்ட மருத்துவ முறை. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த கலையே யோகா கலை. தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு, கலை வேர் ஊன்றி தமிழர்களில் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயர்வேதம்: இந்தியாவில் தோன்றி, மருத்துவ உலகில் முன்னோடியாக திகழ்வது, எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமா வாசனைகளை பயன் பயன்படுத்தும் முறைகளை கொண்டது. நோய்க்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளை சமன்படுத்துதல், செரிமான் சக்திகளை தூண்டுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், உடற்பயிற்சி மூலம் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்: உணவு பொருள்களினால் உடலில் ஏற்படும்  நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலை துய்மைப்  படுத்தி, உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர், வெப்பம், மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

அக்கு பஞ்சர் : சித்தர்கள் வளர்ந்த வர்மா அறிவியலோடு, சீனாவில் தோன்றிய மருத்துவ முறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளை கொண்டு குத்தி, நரம்புகள் மற்றும் தசைகளை தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாக செயல்பட வைத்து, நோயை குணப்படுத்துதல் அக்கு பஞ்சர் முறையாகும். 

அக்குபிரஷர்: இதுவும் அக்குபஞ்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயை குணப்படுத்தும் முறையாகும்.தொடு சிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின் சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான் புள்ளிகளை தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்.

யுனானி மருத்துவம்: மனித உடலில் உள்ள ரத்தம், இரைப்பை, மஞ்சள் மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

ஹோமியோபதி : எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்க கூடிய தன்மை உள்ளதோ, அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு எனும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறை.

அலோபதி எனும் ஆங்கில மருத்துவம்: இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறை. நோய் அறிகுறிகள், காரணிகளை அகற்றுவது இதன் நோக்கம்.

குழந்தைகளின் வளர்ச்சி பத்திரம்!


குழந்தை செல்வம் இல்லதவர்களுக்குதான், குழந்தையின் அருமை தெரியும். அப்பேர்ப்பட்ட குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும்.? குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உடல் சார்ந்த வளர்சிகள், 2. அறிவு சார்ந்த வளர்சிகள்.

உடல் சார்ந்த வளர்ச்சி:

இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்சிப்படிகள். அதாவது குழந்தை பிறந்து  3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்திற்குள் திரும்பி படுத்தல்.

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மதத்தில், உதவியுடன் பிடித்து கொண்டு நின்றால், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல், 11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்சிப்படிகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக (இரண்டு மாதங்கள் kaliththum ) மாதங்கள் கடந்தும் வளர்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர்.அல்லது நமது குடும்பத்தில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:

குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப்படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டுகொள்ள குழந்தையின் சில நடவடிக்கைகள்.

குழந்தையை கூப்பிடும் பொது திரும்பி பார்க்காமல் இருத்தல், குழந்தையிடம் பேசும் போது முகத்தைப் பார்க்காமல் இருத்தல், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருத்தல், தனியாக விளையாடுதல், சில சமயங்களில் அடம்பிடித்தல் , அழுது கொண்டே இருத்தல் ஓரிடத்தில் அமராமல் சுற்றிக்கொண்டே இருத்தல், பொது இடங்களில் சுய கட்டுப்பாடின்றி அழுதல், அடம் பிடித்தல், மற்றவர்களுடன் பழக மறுத்தல், பொருட்களை உடைத்தல்/தூக்கி எறிதல், இயற்கை உபாதையை கட்டுப்பாடின்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல். 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல், தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல். இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக  இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும்.

Wednesday, July 23, 2014

நடப்பதால் இதயத்தை பாதுகாக்கலாம்

தினமும் நடப்பதால் இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும். ரத்த அழுத்தம் சீராகும். மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.மன அழுத்தம் குறையும். நல்ல உறக்கம் கிடைக்கும். சர்க்கரை நோய் குறைகிறது. கெட்ட கொழுப்பு சத்து குறையும். புற்று நோய்க்கான சாத்தியங்கள் குறைவு. மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கும்.

இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏரோபிக் எக்ஸர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், டென்னிஸ், கைப்பந்து போன்றவற்றை செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால் உடனடியாக பயிற்சியின் வேகம் மற்றும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறக் சுவரில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கும்.

Tuesday, July 22, 2014

ஏழைகளின் புரதம் வேர்க்கடலை

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள், வேர்கடலை, கடலை எண்ணெயை பயன்படுத்தினால் ரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்பது பரவலாக உள்ளது. ஆனால் இந்த பயத்திற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு, உடலுக்கு தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை  ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவு புரத சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல 30 விதமான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
 நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்து இருகிறார்கள். அதை கிளைகெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது வேர்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிகாரர்கள் வேர்கடலையை எந்த வித பயமுமின்றி தாராளமாகச் சாப்பிடலாம். வேர்கடலையில் உள்ள மெக்னெசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும், ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியதுக்கு உள்ளது. வேர்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்கடலை சாப்பிடுவதால்  ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்கடலையில் நார்சத்து அதிகம். வேர்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

வேர்கடலை சாப்பிட்டவுடன் "சாப்பிட்டது போதும் என்ற திருப்தி மிக விரைவில் வந்து விடும். எனவே வேர்கடலையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொரித்து உடல் எடையை அதிகரித்து கொள்ளும் பிரச்சனை இல்லை. 

வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்பு கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.  

இளநீர் குடிங்க... குடிங்க குடிச்சுக்கிட்டே இருங்க!


இயற்கை நமக்கு தந்துள்ள கலப்படம் இல்லாத பானம் இளநீர். உடலுக்கு மிகுந்த நன்மை தரும் இளநீரில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்=95% பொட்டசியம் = 310 மி. கிராம், குளோரின் = 180 மி. கிராம், கால்சியம் = 30 மி.கிராம் , பாஸ்பரஸ் = 37 மி. கிராம், சல்பர் = 25 மி. கிராம், இரும்பு = 0.15 மி.கிராம், காப்பர் = 0.15 மி.கிராம், வைட்டமின் ஏ = 20 மி. கிராம் இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.

மருத்துவ குணங்கள்: 

சிறுநீரகப் பணிகள் சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது. காலராவுக்கு அற்புத மருந்து. உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானிக் ஆக வேலை செய்கிறது. விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும். உடல் பருமன் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரால் நல்ல பயன் அடைவர். பொட்டசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் ஏ இதயம், நரம்புகள் ஜீரன உறுப்புகளை பாதுகாக்கிறது. தள்ளாத வயதிலும் இளநீர் புத்துணர்ச்சி தந்திடும். தென்னையில் வேரிலிருந்து குருந்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்கு கேடு. என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பரம்பரிய மருத்துவர்கள்.


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். புரதச் சத்து மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்துவகை பி காம்ளக்ஸ், சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக், தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு )இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதியை குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றிக்கு தென்னக்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுத்தப்படுகிறது.  

சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போரவற்றவற்றுகுத் தேங்காய் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்க் கொண்டு  தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன.



மூட்டுவலிக்கு தீர்வு சத்தான உணவு




மூட்டு வலி

மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் வலி பறந்துவிடும்.

 
சாலமன்: கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேக -3 உள்ளது. அதுவும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.

பெர்ரிஸ்:ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்ப்படும் வழிக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிஷன் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில், அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன.

காய்கறிகள்காய்கறிகள்: உடலில் ஒமேக-3 பேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டுவலிகள் ஏற்ப்படும். ஆகவே அவற்றை சரி செய்ய, கீரை, ப்ரோக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

நட்ஸ்நட்ஸ்: பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேக - 3 பேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலி நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் புட் சாப்பிடுவதை தொடங்குங்கள்.

பால் பொருட்கள்: உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலி, சுளுக்கு ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரழிவு ஏற்ப்படாமலும் தடுக்கலாம்.
ஆலிவ்  ஆயில்
ஆலிவ்  ஆயில்: ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவற்றில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்: அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்ப்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது.