Pages

Showing posts with label விளாம்பழம். Show all posts
Showing posts with label விளாம்பழம். Show all posts

Thursday, July 24, 2014

ரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்


இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவிருத்திக்கு எளிதாகிறது.  
 
ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள்.
-----நாவல் பலத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக பலத்தைக் கொடுப்பதுடன், உடலில் ரத்தம் ஊறவும் உதவி செய்யும். 
 
-----பேரீச்சம் பலத்தை மூன்று நாட்களுக்கு தேனில் ஊற வைத்து பிறகு வேலைக்கு இரண்டு, அல்லது மூன்று சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தியாகும். 
 
-----தினமும் இரவில் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
-----பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மகரந்தத்தை தவிர்த்து அதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் வேட்டை சூடு தீர்ந்து ரத்தம் ஊறும்.
-----முருங்கைகீரையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு முட்டை உடைத்து நெய் சேர்த்து கிளறி 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தம் பெருகும். 
 
-----இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
-----தக்காளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 
 
-----இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.பசியைத் தூண்டும் தன்மை கொண்டது.  
 
-----விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.