Pages

Showing posts with label சாலமன். Show all posts
Showing posts with label சாலமன். Show all posts

Tuesday, July 22, 2014

மூட்டுவலிக்கு தீர்வு சத்தான உணவு




மூட்டு வலி

மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் வலி பறந்துவிடும்.

 
சாலமன்: கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேக -3 உள்ளது. அதுவும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.

பெர்ரிஸ்:ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்ப்படும் வழிக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிஷன் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில், அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன.

காய்கறிகள்காய்கறிகள்: உடலில் ஒமேக-3 பேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டுவலிகள் ஏற்ப்படும். ஆகவே அவற்றை சரி செய்ய, கீரை, ப்ரோக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

நட்ஸ்நட்ஸ்: பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேக - 3 பேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலி நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் புட் சாப்பிடுவதை தொடங்குங்கள்.

பால் பொருட்கள்: உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலி, சுளுக்கு ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரழிவு ஏற்ப்படாமலும் தடுக்கலாம்.
ஆலிவ்  ஆயில்
ஆலிவ்  ஆயில்: ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவற்றில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்: அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்ப்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது.