Pages

Wednesday, July 23, 2014

நடப்பதால் இதயத்தை பாதுகாக்கலாம்

தினமும் நடப்பதால் இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும். ரத்த அழுத்தம் சீராகும். மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.மன அழுத்தம் குறையும். நல்ல உறக்கம் கிடைக்கும். சர்க்கரை நோய் குறைகிறது. கெட்ட கொழுப்பு சத்து குறையும். புற்று நோய்க்கான சாத்தியங்கள் குறைவு. மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கும்.

இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏரோபிக் எக்ஸர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், டென்னிஸ், கைப்பந்து போன்றவற்றை செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால் உடனடியாக பயிற்சியின் வேகம் மற்றும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறக் சுவரில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கும்.

No comments: