Pages

Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Thursday, July 24, 2014

நோய் தீர்க்கும் வழி முறைகளே மருத்துவம்

மூலிகை: இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப்  பயன்படுத்திச் செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.
சித்த மருத்துவம்: பண்டைய சித்தர்களால் கண்டறியப்பட்ட மருத்துவ முறை. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த கலையே யோகா கலை. தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு, கலை வேர் ஊன்றி தமிழர்களில் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயர்வேதம்: இந்தியாவில் தோன்றி, மருத்துவ உலகில் முன்னோடியாக திகழ்வது, எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமா வாசனைகளை பயன் பயன்படுத்தும் முறைகளை கொண்டது. நோய்க்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளை சமன்படுத்துதல், செரிமான் சக்திகளை தூண்டுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், உடற்பயிற்சி மூலம் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்: உணவு பொருள்களினால் உடலில் ஏற்படும்  நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலை துய்மைப்  படுத்தி, உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர், வெப்பம், மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

அக்கு பஞ்சர் : சித்தர்கள் வளர்ந்த வர்மா அறிவியலோடு, சீனாவில் தோன்றிய மருத்துவ முறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளை கொண்டு குத்தி, நரம்புகள் மற்றும் தசைகளை தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாக செயல்பட வைத்து, நோயை குணப்படுத்துதல் அக்கு பஞ்சர் முறையாகும். 

அக்குபிரஷர்: இதுவும் அக்குபஞ்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயை குணப்படுத்தும் முறையாகும்.தொடு சிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின் சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான் புள்ளிகளை தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்.

யுனானி மருத்துவம்: மனித உடலில் உள்ள ரத்தம், இரைப்பை, மஞ்சள் மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

ஹோமியோபதி : எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்க கூடிய தன்மை உள்ளதோ, அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு எனும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறை.

அலோபதி எனும் ஆங்கில மருத்துவம்: இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறை. நோய் அறிகுறிகள், காரணிகளை அகற்றுவது இதன் நோக்கம்.

Thursday, April 3, 2014

மூலிகை மருத்துவ குறிப்புகள்

மூலிகை மருத்துவம்
பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம்.

சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது.

மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.

திப்பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.

தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.

துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.

இருமலை மட்டுபடுத்தும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரம் இருமுறை உண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.