Pages

Tuesday, April 5, 2016

நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி

கவனமான பார்வை, ஆர்வம், அக்கறை, புதிய சிந்தனை இவைகள் தான் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகள். இம்மூன்றுக்குமே சிறப்பான பயிற்சிகள் தேவை.

எளிய பயிற்சி முறைகள்:

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,,4,,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாக குறைத்து எண்ணுங்கள். பின்பு நான்கு நான்காக குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி எழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால்,உங்களுடைய நினைவு திறன் நல்ல அளவில் வளர்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் ஒரு பத்தியில் 'எஸ் என்ற எழுத்தையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால்எதனை 'எஸ்' அல்லது 'ஏ' எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை தெரிந்து கொள்ளலாம்.புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.


'டிவி' யில் வரும் விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள். இதே இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை நீகளே ஆறு அறைகளாகப் பிரிததுக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப்போடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையை திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்து நான்கு அறைகளிலும் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்தும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆறு புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனால்லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவு திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஒய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஒய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்து நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.

உறக்கத்தை தரும் உணவு பொருள்


நம்மில் பலர் தூக்கத்தை மறந்து இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருகின்றனர். உண்ணும் உணவும், வாழும் சூழ்நிலையும் ஒருவனின் நிம்மதியான தூக்கத்தை தொலைத்த துரதிர்ஷ்டசாலிகளாய் உள்ளனர்.

உறக்கம் வருவதில் பிரச்சனை இருப்பவர்கள், முதலில் உணவு கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சரியான உணவினை உட் கொள்ளுவதன், மூலம் நல்ல உறக்கத்தைப் பெறலாம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீர் : உறங்கச் செல்வதற்கு முன் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியானைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைபழம் தான். இது அதிக தசை இறுக்கத்தை தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும்  உள்ளது. ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும். 

ஓட்ஸ் : ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம், உறக்கம் வருவதற்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைகின்றன . ஆனால் ஒட்சில் அதிக சீனி சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை  சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

 

பால்: பால், யோகர்ட், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியள்ள கால்சியம், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன், நரம்பிழைகளின் உறுதி தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே உறங்க செல்வதற்கு முன்னர் யோகர்ட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

 

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்கும் போது, ரத்தத்தில் சர்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

செர்ரிபழம்: படுத்தவுடன் உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப் பழரசம் ஜூஸ் அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கைகளை நன்கு கழுவி நோயை 'கை கழுவலாம்'


நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடை பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. கைகளை கழுவுவதாலேயே, பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கலாம். காரணம், காற்றின் மூலமும் நீரின்  மூலமும், மற்றப் பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள் தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5  லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும் போதும், கை கால்களில் பக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.

இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே, அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு, அடிப்படை காரணம், அவர்கள் கைகளை ஒழுங்காகக் சுத்தம் செய்யாமல் இருப்பதே. தவிர ஸ்டேபை 'லோகாக்கஸ் ஆரியஸ்' என்ற கிருமி, நகங்களில் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு, உணவருந்தும் சமயம் உட்சென்று, குடலில் பல்கிப் பெருகி நோயை தோற்றுவிக்கிறது.

கைகழுவும் முறை:
* காலையில் படுக்கையில் எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின், சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட, பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஒட்டி வந்தபின் கைகளை கழுவுவது நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே, கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை, அவர்கள் சீராக கடைபிடிக்கும்படி, செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, 2-3 வினாடிகளில் கழுவக்கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை, பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம்.

தண்ணீர் குடிங்க... ஹெல்த்தியா இருங்க!

வெறும் வயிற்றில்1.5 லிட்டர் தண்ணீரைக் குடித்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இதற்கு பெயர் தான் வட்டார் தெரப்பி. இந்த தெரப்பியில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில் தண்ணீரை குடிப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும், எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரப்பியை கடைபிடிப்பவர்கள், தண்ணீரை குடிப்பதற்கு முந்தய நாள் இரவில் மது அருந்தக் கூடாது. தேவைப்பட்டால், வாட்டர் தெரப்பிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலி 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு, மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். வாட்டர் தெரப்பியை தொடங்கும் போது, முதலில் 4 டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியை தொடங்கும் புதிதில் தண்ணீரை குடித்த 1 மணி நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.


வாட்டர் தெரபியின் நன்மைகள்:
* மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
* நாள் முழுதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* வாட்டர் தெரப்பி உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்று இனிப்பு     ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
* உடல் ஆரோக்கியத்தையும், தொழில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
* உடல் சூட்டை தணிக்கிறது. 
* வாட்டர் தெரபியை முறையாகப் கடைபிடித்து வந்தால், ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ஏழு நாட்களில் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்; இரு நாட்களில் அசிடிட்டியை கட்டுப்படுத்தும்; நான்கு வாரங்களில் புற்றுநோயை கட்டுப்படுத்தும்; நான்கு வாரங்களில் உயர் ரத்தஅழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். மூன்று மாதங்களில் டி.பி. யைக் கட்டுப்படுத்தும்.


தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டு வலி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியால் ஏற்படும் பிரச்சனைகள், காது, மூக்கு, மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.

Saturday, March 19, 2016

நோய் எதிர்ப்புக்கு பீட்ரூட்

பீட்ரூட்

தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது, டாக்டர்கள் கூறும் அறிவுரை. குளிர்காலத்தில் தாகம் அதிகம் எடுக்காததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையே மறந்து விடுகின்றனர். அது பல தீங்குகளை விளைவிக்கும். மலச்சிக்கல், கிட்னி பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதில் மலச்சிக்கலுக்கு பீட்ரூட் சிறந்த உணவாக பயன்படுகிறது.  இதோ பீட்ரூட்டின் மருத்துவக் குணங்கள்.

பீட்ரூட்டில் உள்ள கார்போஹைடிரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் எளிதில் கரைந்து ஜீரணமாகிவிடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் 87.7 சதவீதம் தண்ணீர், கொழுப்பு 0.1 சதவீதம், தாதுக்கள் 0.3 சதவீதம், நார்ச்சத்து 0.9 சதவீதம், கார்போஹைடிரேட் 8.8 சதவீதம் இருக்கிறது. இத்துடன் கால்சியம், பொட்டாசியம், சோடியம்,சல்பர், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. ரத்தம் குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். கல்லிரல் குறைபாடுகளுக்கும் , பித்தத்தினால் ஏற்படும் வந்திக்கும் பீட்ரூட் சிறந்த டானிக்.


பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகளைப்போல் சமைத்துசாப்பிட்டுவந்தால் அல்சர், மற்றும் மஞ்சள்காமாலை போன்ற  நோய்களும் குணமாகும். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் சிரமப்படுபவர்களும், மூல நோயால் பாதிக்கப்படுபவர்களும் பீட்ரூட் சாறை நீருடன் கலந்து இஇரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் பருகி வந்தால் பலன் கிடைக்கும். கிட்னி கற்கள் உருவாவதையும் தடுக்கும்.


சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு மடங்கு பீட்ரூட் சாருடன் ஒரு மடங்கு தண்ணீர் கலந்து தடவினால் விரைவில் குணமாகும். புற்று நோய் உள்ளவர்கள் தினமும்  பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் மேலும் புற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். புற்று நோயின் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

  • பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
  • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் தடுக்க முடியும்.
  • பீட்ரூட் கஷாயம் மூல நோயை குணப்படுத்தும்.
  • பீட்ரூட் சாருடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் சுத்திகரிக்கப்படும்.
  • குழந்தைகளும் இதன் இனிப்பு சுவையை விரும்புவர். 

மன குழப்பமா? வேண்டவே வேண்டாம்


இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை கிடைப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. இதனால் அதிக நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்ளாமல், நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அலுவலக வேலைகளையும், டென்சனையும் அலுவலகத்திலேயே விட்டு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயும், வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக பணியில் சாதிக்கும் நகர்ப்புற பெண்களையே இந்த மன அழுத்தம் அதிகம் பதிக்கிறது.எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொண்டால் வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம். படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, நெஞ்சுவலி, மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு உள்ளன. உடல் நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் ஒருவர் அதிகம் பதிக்கபட்டால் அது மன அழுத்தம் எனலாம். நேரத்தை சரியாக பயன்படுத்தாதது, பணியிடத்தில் சக பணியாருடன் அனுசரித்துப் போகாதது, வேலை மற்றும் இல்லற வாழ்க்கை இரண்டையும் கையாளத் தெரியாதது. தாழ்வு மனப்பான்மை ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. மன அழுத்தத்தால் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டால், தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள 'சிம்பாலிக் நரம்பு' மண்டலம் அதிகம் தூண்டப்படும். 'அட்ரீனல் கார்டி சோல் ஹார்மோன்' அதிகம் சுரக்கும். இந்நிலை தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பதிக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதளவில் மகிழ்ச்சியாக இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மன அழுத்த பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினால் இரண்டு நிமிடம் கண்களை மூடி, மூச்சு காற்றில் கவனம் செலுத்தினால் உடலுக்கு நல்லது. உடலில் மொத்தமாக மன அழுத்தம் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


மணம் வீசும் கூந்தல்

மணம் வீசும் கூந்தல் அழகான நீண்ட கூந்தல் மட்டும் இருந்தால் போதாது. அது நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். அப்படி கூந்தலை நறுமணத்துடன் வைப்பது அவ்வளவு எளிதல்ல.

பொதுவாக கூந்தலை சரியாக அலாசாவிட்டால் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஏனெனில் வியர்வையானது நீண்ட நாட்கள் தலையில் தங்கினால் அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, கூந்தல் நுனியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். 
அதுமட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு ஹேர் பேக்குகள் கூட காரணமாக இருக்கலாம். உதாரணமாக முட்டை கூந்தலுக்கு நல்லது என்று பயன்படுத்தியபிறகு கூந்தலில் இருந்து முட்டையின் துர்நாற்றமானது வீசும்.
ஆகவே இந்த மாதிரி ஹேர் பேக்குகளை போட்ட பிறகு கூந்தலின் நறுமணத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களை கொண்டு கூந்தலின் நறுமணத்தை அதிகரிப்பதுதான் நல்லது.

  • செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதனை தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்க்கால்களும் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணையில் நல்ல நறுமணம் இருப்பதால், கூந்தலின் மனம் அதிகரிக்கும்.
  • ஹென்னா பொடியை பயன்படுத்தினால் நரை முடியானது நிறம் மாறுவதுடன், கூந்தலும் நல்ல நறுமணத்துடன் இருக்கம்.
  • கொதிக்கும் நீரில் தேயிலையை போட்டு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரை கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
  • எலுமிச்சையை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நறுமணமாக இருப்பதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவி ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
  • ரோஸ் வாட்டர் கூந்தலுக்கு பெரிய நன்மையை அளிக்கவிட்டாலும், இதை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். அதோடு ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்தது.
  • நறுமணமிக்க எண்ணையை பயன்படுத்தினால் கூந்தல் வாசனையை அதிகரிக்கலாம். அதிலும் மல்லிகை எண்ணையை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால் கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • வெப்பத்தை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் இருப்பதும் கூந்தல் நறுமணத்திற்கு வழிவகுக்கும்.