Pages

Tuesday, April 5, 2016

நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி

கவனமான பார்வை, ஆர்வம், அக்கறை, புதிய சிந்தனை இவைகள் தான் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகள். இம்மூன்றுக்குமே சிறப்பான பயிற்சிகள் தேவை.

எளிய பயிற்சி முறைகள்:

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,,4,,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாக குறைத்து எண்ணுங்கள். பின்பு நான்கு நான்காக குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி எழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால்,உங்களுடைய நினைவு திறன் நல்ல அளவில் வளர்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் ஒரு பத்தியில் 'எஸ் என்ற எழுத்தையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால்எதனை 'எஸ்' அல்லது 'ஏ' எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை தெரிந்து கொள்ளலாம்.புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.


'டிவி' யில் வரும் விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள். இதே இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை நீகளே ஆறு அறைகளாகப் பிரிததுக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப்போடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையை திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்து நான்கு அறைகளிலும் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்தும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆறு புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனால்லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவு திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஒய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஒய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்து நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.

No comments: