Pages

Monday, February 1, 2016

பிரசவ காலத்தில் வயிற்றில் வரும் சுருக்கங்கள்


பிரசவ காலத்தில் வயிற்றில் வரும் சுருக்கங்கள்

பெண்ணை தாயாக்கும் கார்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.

ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொன்னால் ஒழிய மூன்று மாதங்கள் வரை வயிற்றுப்பகுதியில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. நான்காவது மாதத்தில்தான் வயிறு பெரிதாவது தெரியும். வயிற்றின் தசைகளும், தோலும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகின்றன. ஒவ்வொரு மாதமும் இது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

குழந்தை பிறந்த பின், தோல் மறுபடியும் சுருங்கத் தொடங்கும். வயிறு விரிந்து, சுருங்குவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடி வயிற்றுப்பகுதியில் நரம்புகள் போல் கோடுகள் நிரந்தரமாக விழுவதுண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த வெள்ளை தழும்புகளை வரவிடாமல் தவிர்க்கலாம். கோகோ பட்டர், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடி வயிறு முழுக்க தடவி, அரை மணி நேரத்திற்குப் பின் குளித்தால் வயிற்றில் அதுபோன்ற கோடுகள் விழாது.

அதே போல் சமையலுக்கு பயன்படும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தடவலாம். வயிற்றில் எண்ணெய் தடவும் இந்த முறை வயிறு விரிவடையத்தொடங்கும் நான்காவது மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விடுவது நல்ல பலனை தரும். வயிறு போன்றே இந்த காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு மார்பகம் கூட சராசரி அளவை விட பெரிதாகி பின்னர் சிறிதாகும். இதனால் மார்பக பகுதிகளிலும் கூட இந்த வெள்ளைக்கோடுகள் தென்படத் தொடங்கும்.

அதற்கும் இதே வழியைப் பின்பற்றலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் ரீதியாக தொல்லை இன்றி சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டமும் இந்த நான்காவது மாதம்தான். சாப்பிட முடியாமல் தலைச்சுற்றி மயக்கம் வருவதெல்லாம் முதல் 3 மாதங்களோடு சரியாகிவிடும்.

நான்காவது மாதத்தில் இருந்து ஓரளவுக்கு நன்கு சாப்பிட முடியும். ஊட்டமான சாப்பாடு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பூரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறையாத தன்மை ஆக இந்த 3 காரணங்களும் ஒன்றாக சேர நான்காவது மாதத்தில் இருந்து 6-வது மாதம் இறுதி வரை பெண்களின் முகம் பளிச்சென்று பூரிப்போடு பிரகாசிக்கும்.

இளம் பெண்கள் கவனத்துக்கு

இன்றைய காலத்தில் சிறுமிகள் 11-14 வயதில் பருவம் அடைகின்றனர். இது 9-15 வயது வரையிலும் கூட மாறுபடுகின்றது. இதுவே சிறுமி பெண்ணாகும் காலமாக குறிக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் சிறுமியின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பருவம் எய்துவது அப்பெண்ணின் மனநிலை, சூழ்நிலை கொண்டு சற்று சீக்கிரமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள்:-

* குழந்தையிலிருந்தே குண்டாயிருத்தல்
* அப்பா அருகில் இல்லாமல் வளரும் குழந்தை பருவம்
* குடும்பத்தில் உறவினர்களிடையே மோதல்
* பிறக்கும் பொழுதே மிகக் குறைந்த எடை
* அதிகம் சிகரெட் புகை சூழலில் வளர்ந்தவர்கள்
* தாய் பால் போதுமான காலம் பெறாத குழந்தை
* ஓடி ஆடி விளையாடாத குழந்தை ஆகியவை ஆகும்.

முறையான காலத்தில் பருவம் எய்துபவர்களுக்கு ஆய்வுகள் கூறும் காரணங்கள்:-

* பெரிய குடும்பம்
* குடும்பத்தினரிடையே சுமூகமான உறவுகள்
* வீட்டில் உள்ள மூத்த சகோதரிகள் ஆகியவை ஆகும்.

நம் நாட்டில் பெண் பருவமடைவதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கொண்டாடுவதைப் போல் ஜப்பான் போன்ற வேறு சில நாடுகளிலும் பெண் பருவமடைவதை வீட்டு உறுப்பினர்கள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

Friday, January 29, 2016

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்


மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்

மார்பகப் புற்றுநோயின் தாக்கம் பெண்களுக்கே அதிகம். அதற்காகவே அரசு தற்போது 40 வயது ஆன பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோய்க் கோளாறுகள் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகத்தில் கட்டியிருக்கிறதா என்பதை தங்களுக்குத் தாங்களே பரிசோதனை செய்து கொள்வது எப்படி?
இதோ சில எளிய வழிமுறைகள்: 

உள்ளங்கையால் மார்பை அழுத்தவும். அப்போது அந்தக் கட்டி அசைந்தாலோ, நகர்ந்தாலோ, உருவமாக இருந்தாலோ அவை பெரும்பாலும் சாதாரண கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லாமல் அக்கட்டியானது உருவமே (வடிவமாக உருண்டையாகவோ) இல்லாமல் இருந்தாலோ, நகராமல் இருந்தாலோ அவை கேன்சர் கட்டியாக வாய்ப்புள்ளது.

மேலும் இந்தச் சோதனையும் செய்து பார்க்கலாம். ஒரு கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கும்போது மார்புக் காம்புகள் நேர்கோட்டிலே இருக்க வேண்டும். மேலும் கீழுமாக இருந்தால் அவை பரிசோதனை செய்ய வேண்டியவையே.

பரிசோதனை காலம் வரையிலும் பசுமாட்டின் கோமியமும் தேனும் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. கோமியம் என்பது பல பெரிய நோயையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.

கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியமா?


கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.  இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. 



தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர்.  சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 


அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கர்ப்ப காலத்தில்  அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. 

எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை. மேலும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் யோகா, தியானம் செய்யலாம். எனவே கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகளவில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் குழந்தையின் ஆரோக்கியமும், தாயின் ஆரோக்கியமும் இதில் அடங்கியுள்ளது. 

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி


வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி


காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.  பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. பிறகு மதிய உணவு சமச்சீர் உணவாக சாப்பிட வேண்டும்.

மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும். ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு கலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும்.

நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும். அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணெயில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணெய் தடவி வறுத்து சாப்பிடலாம்.

எலும்புகளுக்கு வலிமை தரும் முருங்கைக்காய்

murungaikai க்கான பட முடிவு


பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்

சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.
 
எலுமிச்சை இலைகளை எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால்  சுளுக்கு, வலி குறையும்.
 
சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.
 
சம அளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் நன்கு தடவி வந்தால் சுளுக்கு குறையும்.
 
முட்டைகோஸின் வெளிப்புறத்தில் இருக்கும் கடின பகுதியை உரித்து நீர் விட்டு மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக காய்ச்சி பிறகு அந்த முட்டைகோஸை எடுத்து பருத்தி துணியில் வைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் 3 மணி நேரம் கட்டி வந்தால் சுளுக்கு குறையும்.
 
பாதாம் எண்ணெய் எடுத்து அதனுடன் பூண்டை அரைத்து அதன் சாறை சேர்த்து நன்றாக கலந்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் நன்றாக தேய்த்து விட்டால் சுளுக்கு குறையும்.