Pages

Showing posts with label இளம் பெண்கள் கவனத்துக்கு. Show all posts
Showing posts with label இளம் பெண்கள் கவனத்துக்கு. Show all posts

Monday, February 1, 2016

இளம் பெண்கள் கவனத்துக்கு

இன்றைய காலத்தில் சிறுமிகள் 11-14 வயதில் பருவம் அடைகின்றனர். இது 9-15 வயது வரையிலும் கூட மாறுபடுகின்றது. இதுவே சிறுமி பெண்ணாகும் காலமாக குறிக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் சிறுமியின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பருவம் எய்துவது அப்பெண்ணின் மனநிலை, சூழ்நிலை கொண்டு சற்று சீக்கிரமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள்:-

* குழந்தையிலிருந்தே குண்டாயிருத்தல்
* அப்பா அருகில் இல்லாமல் வளரும் குழந்தை பருவம்
* குடும்பத்தில் உறவினர்களிடையே மோதல்
* பிறக்கும் பொழுதே மிகக் குறைந்த எடை
* அதிகம் சிகரெட் புகை சூழலில் வளர்ந்தவர்கள்
* தாய் பால் போதுமான காலம் பெறாத குழந்தை
* ஓடி ஆடி விளையாடாத குழந்தை ஆகியவை ஆகும்.

முறையான காலத்தில் பருவம் எய்துபவர்களுக்கு ஆய்வுகள் கூறும் காரணங்கள்:-

* பெரிய குடும்பம்
* குடும்பத்தினரிடையே சுமூகமான உறவுகள்
* வீட்டில் உள்ள மூத்த சகோதரிகள் ஆகியவை ஆகும்.

நம் நாட்டில் பெண் பருவமடைவதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கொண்டாடுவதைப் போல் ஜப்பான் போன்ற வேறு சில நாடுகளிலும் பெண் பருவமடைவதை வீட்டு உறுப்பினர்கள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.