Pages

Saturday, January 3, 2015

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி


 இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை.

எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன.  


இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். 

கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும். இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். 

பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 20 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30  முறை செய்யலாம்.

கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்


 கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்

`ஆவணி பொறக்கட்டும்' என்று காத்திருக்கும் கல்யாணப் பெண்களுக்கு ஒரு நற்செய்தி, மணப்பெண் அலங்காரத்துக்காக என்ன செய்வது என்று மண்டையை கசக்க வேண்டாம்.

உங்களை மேலும் அழகாக்கி, மண மேடையில் ஜொலிக்க வைக்க, இதோ இருக்கிறது பீட்ரூட்! கீழே உள்ள 2 சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். `எப்படி வந்தது இந்தப் புது மெருகு' என்று ஊரே விசாரிக்கும்.

1. கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை தோல் அரைத்த விழுது - டேபிள் ஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை... 


இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணையை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.  


இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுவதும் நன்றாகப் பூசி, குளித்தால்... முரடு தட்டிப்போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.

2. தலையில் ஒன்றிரண்டு வெள்ளி முடிகள் மின்னுகின்றவா? அதற்கும் பீட்ரூட் வசம் தீர்வு இருக்கிறது. ஒரு பிடி அவுரி இலையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பீட்ரூட் சாறில் ஊற வைத்து அரையுங்கள்.

இதை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். நரைமுடி கருநீலமாக மாறும். முடியும் பளபளப்பாகும். இந்த 3 சிகிச்சைகளையும் திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

பிற்கென்ன? ஒட்டு மொத்த அழகையும் கொட்டித் தந்ததுபேல் மேனி தகதகக்கிற மாயாஜாலத்தைக் கண்டு மயங்கிப் போவார்கள் மாப்பிள்ளை வீட்டினர்.

Friday, January 2, 2015

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பெண்டிங்கின் நினைவைப் போர்டும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டு தோறும் உலக நீரழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோசாக) மாறி, ரத்தத்தில் கலந்து, உடல் இயக்கத்திற்கு தேவையான சக்திய அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாற, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கணையம், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்க வேண்டும்.

இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை  சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்று போனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கி விடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு, குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது.

எப்படி கண்டறிவது?

ஒருவர் சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் காணப்பட்டால், அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக பொருள்.

சர்க்கரை நோய் வகைகள்

முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்கிற இரண்டு வகை நோய்கள் தான், இந்த உபகண்டத்தின் 98 சதவீதமானவர்களை தாக்குகிறது. முதல் ரக சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்பு தன்மையானது. திடீரென கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அளித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இழந்து விடுகிறது.

இது தான் உதல் ரக சர்க்கரை நோய்க்கு காரணமாக கருதப்படுகிறது. முதல் ரக சர்க்கரை நோய்க்கு, ஆயுட்காலம் முழுவதும் இன்சுலின் ஊசி மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி.

இரண்டாவது ரக சர்க்கரை நோய், பெரும்பாலானவர்களை பாதிக்கிறது. பெற்றோர்மூலம் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 80%, கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிக்கலாம். அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்றவற்றையும் முக்கிய காரணங்கள்.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம்


 நீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில் அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியும்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  


உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் - தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்...

நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.

முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம். 

மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல... எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.  


Tuesday, December 9, 2014

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

35 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள். 

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு. 

நோய் தீர்க்கும் வாழைப்பழம்

வாழைப்பழம்


வாழைப்பழம், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மருத்துவர்களை சந்திக்காமல் இருப்பதற்கு உதவும். வாழையின் பூ, தண்டு, இலை முதல் நார் வரை அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம்.

இன்றும் நமது இல்லங்களில் சாதாரணமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. வாழையால்  உடல் பருமன் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் இந்த வாழையின் பக்கம் போவதில்லை. ஆனால், வாழை பல நோய்களை தீர்க்கும் குணமுள்ளது.

வாழைப்பழத்தில், சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுகோஸ், என மூன்று இயற்க்கை சர்க்கரை உள்ளது. இதில் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமான பைபரும் பெருமளவு இணைந்துள்ளது. ஒரு வாழை ஏராளமான ஆற்றல் உடையது. இரண்டு வாழைப்பழங்கள், விறுவிறுப்பான 90 நிமிட நடைபயிற்சிக்கு போதுமான ஆற்றலை கொடுக்கவல்லது. ஆனால், வாழைப்பழத்திலிருந்து நமக்கு கிடைப்பது ஆற்றல் மட்டுமல்ல. அன்றாட வாழ்வுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொண்டுள்ளதுடன், சில நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள்  மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சமீபத்திய  ஆய்வின்படி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதற்கு காரணம், வாழைப்பழங்களில் உள்ள டிரிப்தோபன் என்ற புரதம் ஆகும். இது நம் உடலில், உடலை  நிலைப்படுத்தும்  தன்மை  கொண்ட , செரொடொனினாக மாறுகிறது.

ரத்த சோகை
வாழையில் அதிகமாக மற்றொரு சத்துப் பொருள், இரும்பு, இது ரத்த ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுவதுடன், ரத்த சோகைக்கு பெரும் நிவாரணம் தரக்கூடியது. எனவே ரத்த சோகைக்காக பேரிச்சையை மட்டும் நாடாமல், எளிதாக கிடைக்கும் வாழையையும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்


வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு உப்பும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வளரும் இளம் மூளையை மேம்படுத்துவதில் இன்றியமையாதது. எனவே, வாழைப்பழம் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப்பழமாகும்.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழங்கள் இயற்கையான ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது. எனவே அடுத்த முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வெறும் வாழைப்பழம் போதும்.

Saturday, November 29, 2014

தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு கெடுதியா?


தேங்காய் ஆபத்தானது என்று பலர் தவிர்க்கின்றனர். தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகின்றோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

தினசரி 30 முதல் 40 கிராம் வரை தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சினையே இல்லை. துருவி பால் எடுத்து கொதிக்கவைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள், கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரயாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடியவரை கொப்பரையை சமையலில்  சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காய் எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயை தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோக்கிறபோது அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம். வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சி இருக்கும்.

தேங்காய் வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால் தான் வாயில் புண் வந்தால் கூட, தேங்காயை மென்று சாப்பிடச் சொல்கிறார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய்பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதின் பின்னணியும் இதுதான்.

சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் எனப்படும். கெட்ட கொழுப்பு அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெள்ளமும் அதிகம் தரலாம்.