Pages

Friday, January 2, 2015

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பெண்டிங்கின் நினைவைப் போர்டும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டு தோறும் உலக நீரழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோசாக) மாறி, ரத்தத்தில் கலந்து, உடல் இயக்கத்திற்கு தேவையான சக்திய அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாற, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கணையம், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்க வேண்டும்.

இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை  சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்று போனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கி விடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு, குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது.

எப்படி கண்டறிவது?

ஒருவர் சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் காணப்பட்டால், அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக பொருள்.

சர்க்கரை நோய் வகைகள்

முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்கிற இரண்டு வகை நோய்கள் தான், இந்த உபகண்டத்தின் 98 சதவீதமானவர்களை தாக்குகிறது. முதல் ரக சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்பு தன்மையானது. திடீரென கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அளித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இழந்து விடுகிறது.

இது தான் உதல் ரக சர்க்கரை நோய்க்கு காரணமாக கருதப்படுகிறது. முதல் ரக சர்க்கரை நோய்க்கு, ஆயுட்காலம் முழுவதும் இன்சுலின் ஊசி மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி.

இரண்டாவது ரக சர்க்கரை நோய், பெரும்பாலானவர்களை பாதிக்கிறது. பெற்றோர்மூலம் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 80%, கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிக்கலாம். அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்றவற்றையும் முக்கிய காரணங்கள்.

No comments: