Pages

Saturday, December 7, 2013

அற்புதங்கள் செய்யும் ' அகத்திகீரை'



 தாவரங்களில் மனிதர்கள் உண்ணக்கூடிய கீரை வகைகளில் அதிக சத்துகள் நிறைந்துள்ளது. அந்த வகையில், மனிதனுக்கு தேவையான பல சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது அகத்திக்கீரை. வீட்டு தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாக அகத்திக்கீரை பயிரிடப்படுகிறது.

அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா நாடாகும். அதிக பட்சம் ௧௦ மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்ட அகத்திச்செடி மென்மையான கட்டை வகையாகும். அகத்திச்செடியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன. இலைகள் இரட்டை சிரகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களை கொண்ட அகத்தியை சாதாரண அகத்தி என்றும், சிவப்பு பூக்களை கொண்ட அகத்தியை செவ்வகத்தி என்றும் நடைமுறையில் அழைக்கிறோம். அகத்தி கீரை மற்றும் பூக்களை மனிதர்கள் உட்கொள்ளலாம்.

இவற்றில் ஈரப்பதம் 73 சதவிகிதம், புரதச் சாத்து  83 சதவிகிதம், தாதுஊப்புகள் 3.1 சதவிகிதம், நார்சத்து 2.2 சதவிகிதம், மாவுச்சத்து 12 சதவிகிதம், கொழுப்புச்சத்து 1.4 சதவிகிதம், என்ற அளவில் உள்ளன. தாது உப்புக்களில் சுண்ணாம்பூச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் 'ஏ' தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் 'சி' போன்றவை அடங்கிஉள்ளன. அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் குணங்கள் நிறைந்துள்ளன. இந்த குணங்கள் நச்சை நீக்கும் தன்மையுள்ளதால், அலோபதி மருந்து சாப்பிடும் காலங்களில் அகத்தி கீரை, பூ போன்றவற்றை தவிற்க வேண்டும்.

அகத்தி கீரை பித்தம் போக்கும்; ஜீரண சக்தியை உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுதரும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியை கொடுக்கும்; கண் பார்வை தெளிவாக்கும். அகத்தி கீரையை நறுக்கி, வதக்கி சாப்பிடலாம். பூக்களில் மகரந்த பூக்களை நீக்கி விட்டு, வ
றுத்து சாப்பிடலாம். பூக்களை கசாயமாக்கி குடிக்கலாம். இலைச்சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.

அகத்தி பூவை சமைத்து சாப்பிடும் போது மலச்சிக்கல் நீங்கும். அகத்தி கீரை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி விதம் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு நோய் நீங்கும். அகத்தி கீரை சாறு ஒரு ஸ்பூன் உடன், அதே அளவு தென் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். கீரையை அரைத்து அடிபட்ட புண் மீது வைத்து கட்டினால், காயம் குணமாகும். அகத்தி கீரை பொடியை பால் அல்லது நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

அகத்தி பூ சாறு எடுத்து, நெற்றியில் பூசினால் தலைவலி போகும். அகத்தி கீரை சாறு ஒரு துளியை முக்கில் விட்டால் ஜலதோஷம் நீங்கும். அகத்தி பட்டை கஷாயம் காய்ச்சலின் போது உட்கொள்ளலாம். கீரை உடல் சூட்டை தணித்து, பித்த நோயை நீக்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அகத்தி கீரை அருமருந்து. இது மலத்தை இளக்கி வெளியேற்றும். அகத்தி கீரை மற்றும் பூவை இரவு வேளை உணவில் சேர்த்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும். அகத்தி செடியில் வேர் முதல் நுனி வரை மனித குலத்துக்கு பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அகத்தி செடியை வள்ர்த்தால் ஆரோக்கியம், ஆனந்த வாழ்வும் கிடைக்கும்,

ஐம்பதை கடந்தவரா நீங்கள்?



உணவு விஷயத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்
வேண்டும்? கட்டுப்பாடாக இல்லாவிட்டால் உடலின் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும்?- விளக்குகிறார் காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் டாக்டர் உஷா ஸ்ரீனிவாஸ்:

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், கிடைத்ததையெல்லாம் ஒரு வெட்டு வெட்டுவது என்றால் அவஸ்தைப்பட வேண்டியதுதான். ' இதைச் சாப்பிடு, இதை சாப்பிடாதே' என சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால் நோயாளிகளுக்குக் கேட்கவே வேண்டாம். உதாரணமாக நிரழிவு நோயாளிகள் தங்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்டால், அது வயிற்றிலிலுள்ள காஸ்ட்ரிக் இன்டஸ்டைனைப் பாதிக்கும். வயிற்றுப் போக்கு, வாந்தி என துவங்கிவிடும். இதை 'அட்டானமிக்' நியுரோபதி என்பார்கள் மருத்துவர்கள்.

ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால், தைராய்ட் ஹார்மோன் குறைவாகச் செயல்படும். அப்போது உடல் எடை கூடிவிடும் ஆபத்து இருக்கிறது. லிவரில் கொழுப்புச் சத்து படிந்துவிடும். அப்படி ஆகும்போது, லிவர் இயக்கம் பாதிக்கப்படும். லிவரில் கொழுப்பு அதிக
காலம் தங்கிவிட்டால் அது கான்சரில் கொண்டு விடும். லிவர் பெரிதாவது, வீக்கம் ஏற்படுவது எல்லாம் அதன் இயக்கத்தைப் பாதிக்கும். சுருங்கிப் போனாலும் ஆபத்து தான்.

'சிரோஸிஸ் ஆஃப் த லிவர்' நேரும் அபாயம் இருக்கிறது. ஆசிடிடி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிட் மேலே எதிர்த்து வருவதை 'ரீஃப்ளெக்ஸ்' என்பார்கள். அதனால் உணவுக்குழாய் பாதிக்கப்படும். ஈஸஃபேகஸ் பகுதியில் புண் வந்து அது வருடக்கணக்காக இருந்துவிட்டால், அதற்கும் கேன்சர் தான் முற்றுப் புள்ளி. அதனால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

ஜீரணப்பாதையில் வரும் புற்றுநோய் (டைஜெஸ்டிவ் டிராக் கான்செர்) அந்த பாதையின் மேல் பாகத்தில் உருவாகத் தொடங்கும். உணவுக்குழாய், வயிறு அல்லது பெருங்குடலின் கீழ் பகுதியிலோ மலக்குடலிலோ இது தோன்றும். இந்த வகை நோய்களுக்குச் சிகிச்சை அளித்த பிறகும் கூட, அந்த நோய் நம்மை விட்டு போய் பூரண குணம் அடைந்துவிடுவோம், முன்னெச்சரிக்கையாக என்று எச்செரிக்கை  உணர்வை ஊட்ட, நமது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

உணவுக்குழாயில் வரும் புற்று நோயைத்தான் ஈஸஃபேகஸ் கேன்சர் என்கிறார்கள். இந்த நோய் பொதுவாக தங்குமிடம், உணவுக்குகுழலையும் வயிற்றுப் பகுதியும் சேர்கிற இடமாகும். இதன் அறிகுறியாக உணவு சாப்பிடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கும். நோய் தீவிரமாகிவிட்டால் திரவ வடிவில் இருக்கும் உணவு கூட ஜீரணமாகாமல் அவதியை உண்டாக்கும். இதனால், உடலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காததால் உடல் எடை குறையத் தொடங்கும். வயதானால் வரும் மலச்சிக்கல் இன்னொரு பிரச்னை. உணவில் நார்ச்சத்து குறைந்து விட்டால் வரும்.  நார்ச்சத்து பழங்கள் காய்கறிகள், ஒட்ஸ் மற்றும் கேழ்வரகு பொன்ற தனியங்களில் இருக்கிறது.

ரீபைன்ட் உணவு வகைகள், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, பிட்சா, சீஸ் என நமது வாழ்க்கை முறை மேற்கத்திய பாணிக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அப்படி ஆகும்போது மலச்சிக்கல் பாதிக்கத்தான் செய்யும். அவர்களுக்கு வாரத்தில் மோஷன் ஆச்சு என்றால் அது நார்மல். நமக்கு தினசரி 2 அல்லது 3 வேலை மோஷன் ஆனால் கூட அது நார்மல் தான். மலக்குடல் வேகத்துடன் சுருங்கும்போது, டைவர்ட்டிகுலம் எனப்படும் பகுதி, சின்ன சின்ன பாக்கெட்டுகளாக உருவாகி, கிருமித் தொற்று மற்றும் ரத்தம் கசியும் நிலை ஏற்படும்.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்!



மரங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால், மரத்தின் மகத்துவம் தெரியாமல்,பல்லாண்டுகளாக நம்மோடு உறவாடிய மரங்களை, ஒரு கணத்தில் வெட்டும் செயல் தொடர்கிறது. இச்செயல் நம்மை நாமே புதை குழிக்குள் தள்ளுவதற்கு நிகரானது.

அதனால் மரம் வெட்டுவதை ஒருகாலத்திலும் அனுமதிக்கக்கூடாது. மரம் வெட்டுவதற்கு முன்பு, மரங்களால் மனித இனம் எவ்வாறு சுகமாக வாழ்கிறது என்பதை சிறிது அறிந்தால் போதும். மரம் வெட்டும் எண்ணமே, துளி கூட இல்லாமல் போகும். மனித இனம் மரங்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறது. பயங்களின் பட்டியலில் சிற்சில மட்டும் இங்கே...
  • மரங்கள் உணவை தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கை கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமாக உணவை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராணவாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.
  • வேலை நேரம் தவிர, நாம் பெரும்பாலான நேரத்தை வீட்டில் தான் கழிக்கிறோம். வீட்டை சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர் புறங்களிலும் வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப் படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியை தருகின்றன. மரங்கள் மழையை தருகின்றன. வானில் மழை மேகம் உருவாகும்போது, மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப் படுகிறது. இதனால், அப்பகுதியில் மேகங்கள் மழையை பொழிகின்றன.
  • மரங்கள் மண்ணரிப்பை தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு, ஆறு குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால், ஒருபுறம் வளமான மேல்மண் அரித்து செல்வதும், மறுபுறம் ஆறுகள்,  குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமல் வேர்கள் இறுக பிடித்துக் கொள்கின்றன. இதனால் அடிமண் அடித்து செல்லப் படாமல் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
  • கோடையில் அனல் காற்று வீசும்போது, நிலம் வண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்து செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள், வேர்களில் மண்னை சேகரித்து வைப்பதால், அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் 'அலையாத்தி காடுகள்' என்ற பெயரும் வந்தது.
  • பலமான வேர்களை கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக, எரிபொருளாக பயன்படுகிறது. மரமும் பலவகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன.
  • கட்டுமான பொருட்களில் இருந்து வீட்டு தேவைகள், அலங்கார பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். இன்னும் நிறைய மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.

விமான பைலட் ஆக விருப்பமா?



விமான போக்குவரத்து சேவையில் விமானி(பைலட்), விமானப் பணிப்பெண்கள் (ஏர் ஹாஸ்டஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள், ஒரு விமானத்துக்கு விமானிதான் தலைவராக இருப்பார். அவருக்கு உதவியாக துணை விமானி இருப்பார். விமானம் பறக்கும் பயணத்தை திட்டமிடுவது, வானிலை தகவல்களை அறிக்கைகள் மூலம் அறிவது, ஓட்டுவதற்கேற்ப காற்று நிலைக்கு உகந்து நிலையில் விமானம் இருக்கிறதா என அறிதல், விமானத்தில் உள்ள பொருட்களை கண்காணித்தல், விமானம் ஓட்டுவது தொடர்பான தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அவ்வப்போது தெரிவித்தல் ஆகியவை விமானியின் பணிகள். விமானியாவதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கான உரிமங்களை பெற்றாக வேண்டும்.

மாணவர் பைலட் லைசென்ஸ்:

விமானியாவதற்கு முன் மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். பிளையிங் கிளப் நிறுவனத்தில் சேர்த்து அதற்கான பயிற்சியைப் பெற்றுத் தேர்ச்சியடைய  வேண்டும். லைசென்ஸ் பெற 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும். இதில் 20 மணி நேரம் பயிற்சியாளருடனும் 20 மணி நேரம் தனியாகவும் பறந்திருக்க வேண்டும். 5 மணி நேரம் நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பறக்க வேண்டும்.

அத்துடன், ஏர் ரெகுலேஷன், நேவிகேஷன், ஏவியேஷன் மீட்டிரியாலஜி, ஏர்கிராப்ட், என்ஜின் ஆகியவற்றை கையாளும் பயிற்சியையும் பெறவேண்டும். குறைந்தது 17 வயது நிரம்பியவர் இதில் சேரலாம். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை படித்து, பிளஸ் 2வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ், செக்யூரிட்டி கிளியரன்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

தனியார் பைலட் லைசென்ஸ்:

மாணவர் விமானி உரிமம் பெற்றவர்கள் பயிற்சியாளருடன் சேர்ந்து பறக்கலாம். இது 'டூயல் பிளை' என்று குறிப்பிடப்படுகிறது. இருவராக பறக்கும்போதே பயிற்சியை பெறலாம். 15 மணி நேரம் பயிற்சி பெறுவர். இந்த உரிமத்தைப் பெற மொத்தம் 60 மணி நேரம் பறக்க வேண்டும். இதற்குக் கல்வி தகுதி பிளஸ் 2. டெல்லியிலுள்ள விமானப்படை மத்திய மருத்துவ நிறுவனம் அல்லது பெங்களுருவிலுள்ள நிறுவனத்தில் தகுதிச் சான்றிதழ்  பெறவேண்டும். அத்துடன் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். அதில், ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படும்.

வணிக பைலட்:


வணிக பைல்ட் லைசென்ஸ் பெற, 250 மணி நேரப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ்2 முடித்தவர்கள் தனியார் பைல்ட் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் விமானம் ஒட்டிய அனுபவம் தேவை. உடல் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். விமானம் ஒட்டும் தகுதியைப் பெறுவதற்குப் பி.எஸ்.சி., ஏவியேஷன், பி.இ., ஏர்லைன் இன்ஜ்., அண்ட் மேனேஜ்மென்ட், பி.இ., ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜி., பி.டெக்., ஏரோநாட்டிகல் ஆகிய ஏதாவதொரு படிப்பை முடிக்க வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பது நல்லதா?

உங்களிடம் செல்லப் பிராணி உள்ளதா? வள்ர்ப்பு நாய் உள்ளதா? அப்படியானால் அவை உங்கள்  உடல்நலத்துக்கு பயன் தரலாம். அமெரிக்க உடல்நலக் கழகம் செல்லப்பிராணி வளர்ப்பது நம் உடல்நலத்துக்கு பலன் தருமா என்ற ஆய்வை கலந்த 2008ம் ஆண்டு நடத்தியது.

ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்;

விஞ்ஞானிகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை நோய் ஏற்பட்ட ஓராண்டுக்குப் பின் பரிசோதித்தனர். இவர்களில் மாரடைப்பின் போது தீவிரத்துக்கு பின் செல்ல நாய் வளர்க்காதவர்களை விட, வளர்த்தவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்தது.

மற்றொரு ஆய்வின் படி, 2,000 நடுத்தர வயதினரை பரிசோதித்ததில் சொந்தமாக செல்ல நாய் வளர்த்தவர்களும், நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும்  உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியதுடனும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்தது.

சற்று வயது முதிர்ந்தவர்களை பரிசோதனை செய்ததில் தசை, மூட்டு வலியின்றி ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது. நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வீட்டுக்கு வெளி இடங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டு பேசவும், நட்புறவை நீடிக்கவும், உதவுகிறது.

இது மனதுக்கும், உடலுக்கும் தெம்பளிக்கும் விதமாக இருப்பதால் வயதாவது குறித்து கவலையின்றி நீண்ட நாட்கள் வாழ பிடிப்பை தருகிறது. செல்ல நாய் வளர்ப்பதால் மன அலர்ஜி நீங்குகிறது.

Friday, December 6, 2013

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா தூத்துகுடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

பரோட்டாவின் கதை
ன்தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?


மைதா மாவுல உப்பு போட்டு தண்ணி விட்டு பிசஞ்சு அப்புறம்
எண்ணெய் விட்டு உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி அடித்து, பெரிய கைகுட்டை போல் பறக்கவிட்டு அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிர
ச்சினை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கபடுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உள்பட.

மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?

நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை Benzoyl peroxide என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள் அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த
ரசாயனம் மாவில் உள்ள Protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது. இது தவிர Alloxan என்னும் ராசயினம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial Colors, mineral oils, taste makers, Preservatives, sugar Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.

இதில்
Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையது. நார் சத்து உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த பேக்கரி பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது.

Europe Union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.

மைதா நாம் உட்கொள்ளும் போது
சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை  வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்
ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

சம்பங்கி பூவில் இத்தனை மகத்துவமா!

சம்பங்கி பூ


பூஜைக்கு உகந்த சம்பங்கிப்பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. மயக்கும் நறுமணம் கொண்டது. சம்பங்கி பூவின் இதழ்களுக்கு, தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல்,பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.




சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணையில், 50 கிராம் பூவை போட்டு நான்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணைய்தான் 'சம்பங்கி தைலம்' என அழைக்கப் படுகிறது. இதனை உச்சி முதல் பதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து முழுமுழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

பலன்கள்

நான்கு சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து அரைத்து, சூடு பறக்க நெற்றிப்பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் நீரில் ஐந்து சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண்நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள்  தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் விதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் தெம்பும், பலமும் பெரும்.

200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும். இதில், சிறிது விளக்கெண்ணைய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணைய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து, ரசத்தை ஒரு பத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை மாலை நேரத்தில் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மேன்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாதவலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ இரண்டு, தேங்காய் பால் இரண்டு தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால் முகம் புத்துணர்ச்சி பெரும். இதுபோன்று பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன.