Pages

Friday, December 6, 2013

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா தூத்துகுடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

பரோட்டாவின் கதை
ன்தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?


மைதா மாவுல உப்பு போட்டு தண்ணி விட்டு பிசஞ்சு அப்புறம்
எண்ணெய் விட்டு உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி அடித்து, பெரிய கைகுட்டை போல் பறக்கவிட்டு அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிர
ச்சினை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கபடுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உள்பட.

மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?

நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை Benzoyl peroxide என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள் அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த
ரசாயனம் மாவில் உள்ள Protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது. இது தவிர Alloxan என்னும் ராசயினம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial Colors, mineral oils, taste makers, Preservatives, sugar Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.

இதில்
Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையது. நார் சத்து உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த பேக்கரி பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது.

Europe Union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.

மைதா நாம் உட்கொள்ளும் போது
சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை  வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்
ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

No comments: