Pages

Sunday, August 30, 2015

பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை


பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை

பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை

கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர். 


பெண்கள் வயதுக்கு வந்ததும், இடுப்பு எலும்பு வலுவாக உளுத்தங்களி, உடல் உஷ்ணத்தைக் குறைக்க மணத்தக்காளி, உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலுவைக் கூட்ட கொள்ளு எனப் பெண்களுக்கு பிரத்யேகமான சமையல் அம்மாவின் கைமணத்தில் மணக்கும். ஆனால், இன்றைய டீன் ஏஜ் பெண்களோ, நம் பாரம்பரிய உணவுச்சத்துக்களின் மகத்துவம் தெரியாமல், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். 



இதனால், இளம் வயதிலேயே ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். நாம் நன்றாக இருந்தால்தான், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க முடியும் என்பதை, ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். மாதவிடாய், கர்ப்பம், தாய்மை, மெனோபாஸ் என, உடலின் மாற்றங்களை எதிர்கொள்ள, பெண்களுக்கு அதிக பலமும் சக்தியும் தேவை. 



அந்த சத்துக்களை உணவின் மூலமே பெற முடியும். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு இவை ஐந்தும், தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடல் நலனுக்கு அவசியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

மூளைக்கு தேவையான சத்து உணவுகள்

மூளைக்கு தேவையான சத்து உணவுகள்

உடலின் அனைத்து பாகங்களைப் போல் மூளை இயங்குவதற்கும் சக்தி தேவை. ‘குளுக்கோஸ்’ எனப்படும் பிரிவே மூளைக்குத் தேவையான முக்கிய சக்தி. முழு தானிய உணவுகளிலிருந்து கிடைக்கும் சக்தி அதிக குளுக்கோஸ் இல்லாமல் அளவான முறையில் மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும். 


* மீன் உணவு மூளைக்கு சிறந்த உணவு. அசைவ உணவுக்காரர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ஓமேகா 3 மூளைக்கு மிகவும் தேவையான ஒன்று. 


* தக்காளியிலுள்ள லைகோபன் எனும் பொருள் மூளையின் திசுக்களை வெகுவாக காக்கின்றது. எனவே தக்காளியை உணவில் நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள். 


* பி காம்ப்ளக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களை மருத்துவர் உதவியோடு அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள். 


* இரண்டு டேபிஸ் ஸ்பூன் அளவு பூசணிக்காய் விதைகளை தினமும் எடுத்துக் கொள்வது மூளைக்கு அவசியமான ‘ஸிங்க்’ நன்றாக கிடைக்கின்றது. இது மூளையின் சிந்திக்கும் திறனை நன்கு தூண்டுகின்றது. 


* ப்ரோகோலி எனப்படும் பச்சை காலிப்ளவர் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள வைட்டமின் கே மூளையின் கவனத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. 


* கொட்டைகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள், தீட்டாத அரிசி இவை மூளைக்கு சிறந்த உணவாகும். வைட்டமின் ஈ சத்து இவைகளிலிருந்து நிறைய கிடைக்கின்றது. 

தம்பதியர்களிடையே அன்பு அதிகரிக்க மனம் விட்டு பேசுங்க


தம்பதியர்களிடையே அன்பு அதிகரிக்க மனம் விட்டு பேசுங்க

மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல… வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான். பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். 


ஆனால் ஒரு சில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, ‘பெண்கள் நம் அடிமைகள்’ என்கிற நினைப்பு இருப்பதால்… பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. 



இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர … உன்னதமான அன்பு இருக்கவே முடியாது! பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்… விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! 



பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்று தான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார்களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திர மயமாகிப் போகிறது. 



அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு. சுவாரஸ்யமான உரையாடல்கள் தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். 



அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும். 



புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது. 



வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது. எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மனஉளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

யோகா செய்தால் உடல் எடை குறையுமா?


யோகா செய்தால் உடல் எடை குறையுமா?

நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. 


மற்ற உடற்பபயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். 



இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும். கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது. 



உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் தொடங்கும். 



நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத் துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.

இருதயத்தையும் வலுப்படுத்தும் ருத்ர முத்திரை


இருதயத்தையும் வலுப்படுத்தும் ருத்ர முத்திரை

இருதயத்தையும் வலுப்படுத்தும் ருத்ர முத்திரை

செய்முறை :


படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி, சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும். இதனை தினமும் பதினைந்து நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை செய்யலாம். 



பயன்கள் :



உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார். பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. 



அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.

Saturday, July 25, 2015

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?


அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளைக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.

உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.

தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

Saturday, July 18, 2015

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்


சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்


சருமத்தை அழகை பராமரிப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 


ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும். ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். 



எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும். அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. 



மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது. பாதத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து, அதில் கால்களை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கால்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். 



குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும். 



3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.