Pages

Friday, April 17, 2015

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

 

முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதுக்கு சில வைத்தியம் சொல்றேன், கேளுங்க. கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும்.

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணிவழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்சனை சரியாகும். அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இதுகளைவிட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சணும்.

இதை தினமும் தலைக்கு தேய்ச்சுட்டு வந்தா... நரை விழுறது சரியாகும். மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் ஒண்ணரை லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கி தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும், அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

கூந்தல் ஆரோக்கியத்தை காக்கும் சீகைக்காய்


 கூந்தல் ஆரோக்கியத்தை காக்கும் சீகைக்காய்

சீகைக்காய் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருள். இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தல் மென்மையாக, அழகாக, பொலிவோடு மற்றும் அடர்த்தியாக இருக்கும். சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது.

இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும். சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.

சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும். தலையில் பேன் தொல்லை இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும். சீகைக்காயை ஷாம்பு போன்றும் பயன்படுத்தலாம்.

அதற்கு சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம். இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.

சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடிக்கு நல்ல வலிமை கிடைக்கும். விரைவில் உடையாது. 

வறட்சியான சருமத்தை போக்கும் வாழைப்பழ ஃபேஸ் பேக்


 வறட்சியான சருமத்தை போக்கும் வாழைப்பழ ஃபேஸ் பேக்

சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்கி, சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, சருமம் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக சிலருக்கு கோடையில் உதடு வெடிப்புகள் ஏற்படும்.

கோடையில் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புக்களில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

• வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றம் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

• நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றி இருக்கும்.

• வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை, வறட்சி போன்றவை நீங்கி, முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும். இதனை தினமும் கூட செய்து வரலாம். 

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா


 kathirikai murungakkai masala க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் 
முருங்கைக்காய்
குடைமிளகாய்
மிளகு தூள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தனியா தூள்
தேங்காய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்
புளி கரைசல்
வெங்காயம் - 1 கைப்பிடி
தக்காளி இஞ்சி பூண்டு விழுது
கடுகு காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி

செய்முறை :

* காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* தக்காளியை சேர்த்து நன்கு கிளரவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய், முருங்கைக்காய், குடை மிளகாய், போட்டு கிளரி மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.     

* சிறிது  தண்ணீர் சேர்த்து கிளறவும்.

* புளி கரைசல் சேர்க்கவும்.

* காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேங்காய விழுதை சேர்க்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஸ்கரப்கள்


 
சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். நீங்கள் பளிச்சென காட்சியளிக்க

தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனால் முகம் பொலிவடைவதுடன் செலவும் மிச்சமாகும்.

காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில், தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பளிச்சென மாறும்.

பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று மாறும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

பாதாமை ஒன்றி
ண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 

Wednesday, April 15, 2015

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்


 lips க்கான பட முடிவு

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு  உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி  அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினிஷ்  லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் நெய் அல்லது வெண்ணெயை  உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம்  பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்,  மென்மையாகவும் மாறும். கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

பழஞ்சோறு (பழைய சோறு / பழைய சாதம்)

 pazhaya satham க்கான பட முடிவு

பலர் நேற்றைய சாதம் அதிகமாகிவிட்டால் அதை வீண் எனவும் உடலுக்கு கெடுதல் எனவும்  கருதுகிறார்கள். ஆனால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அபாரமான நோய் எதிர்ப்பு (B6, B12) சக்தி உள்ளது. 
கிராமப்புறங்களில் இன்றும் நேற்றைய சோற்றை வீணாக்குவதில்லை. 

எப்படி பழைய சோற்றை சாப்பிடுவது?
இரவு சோறு அதிகமாகி மீதம் வந்துவிட்டால் கவலைப்படாமல் அச்சோறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கிளறி மூடி வைத்துவிடவும். (வெந்நீர் வேண்டாம். பச்சைத்தண்ணீர் போதும்)அடுத்த நாள் காலையில் இதை தாராளமாக உண்ணலாம். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இச்சோற்றில் குடலுக்கு ஆரோய்க்கியம் தரும் நிறைய உயிர் சத்துகள் உள்ளன. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இச்சோற்றுடன் தொட்டுக்க நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எந்த கூட்டும் சாப்பிடலாம் என்றாலும் கிராமப்புறங்களில் கூட்டு இல்லை என்றால் பச்சை மிளகாயையோ, சின்ன உள்ளியை உப்புடன் சேர்த்தோ, மோர் சேர்த்தோ, அல்லது உப்பும் புளியும் கலவை செய்தோ சாப்பிடுவார்கள்.