Pages

Showing posts with label ஃபேஷியல். Show all posts
Showing posts with label ஃபேஷியல். Show all posts

Monday, February 8, 2016

பால் தரும் பட்டு போன்ற சருமம்


 பால் தரும் பட்டு போன்ற சருமம்
பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் இருப்பதால், அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது. ஆகவே பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்பவர்கள், பாலை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாக்குங்கள்.

* 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

* பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு ஐஸ் கட்டிகளால் 3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 5 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால், சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.

* சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து, முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும். காய்ந்ததும், சிறிது பாலை தொட்டு, அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து, பிறகு கழுவ வேண்டும்.

- பாலை வைத்து ஒரு சில ஃபேஷியல் மற்றும் மாஸ்குகளை செய்து, முகத்தை அழகோடும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள். 

Friday, April 17, 2015

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஸ்கரப்கள்


 
சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். நீங்கள் பளிச்சென காட்சியளிக்க

தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனால் முகம் பொலிவடைவதுடன் செலவும் மிச்சமாகும்.

காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில், தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பளிச்சென மாறும்.

பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று மாறும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

பாதாமை ஒன்றி
ண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.