Pages

Friday, April 17, 2015

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஸ்கரப்கள்


 
சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். நீங்கள் பளிச்சென காட்சியளிக்க

தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனால் முகம் பொலிவடைவதுடன் செலவும் மிச்சமாகும்.

காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில், தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பளிச்சென மாறும்.

பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று மாறும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

பாதாமை ஒன்றி
ண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 

No comments: