Pages

Tuesday, March 11, 2014

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்

முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்கள் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், ப்ளீச்சிங் செய்யும் போது அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு சில சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ப்ளீச்சிங் அனைவருக்குமே சரியானதாக இருக்காது.

ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள், வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே எப்போது முகத்தை அழகுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், செயற்கை முறையை கடைபிடிக்காமல், இயற்கை முறையில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ப்ளீச்சிங் செய்தால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. 

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்


• ஆலிவ் ஆயிலில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளன. எப்படி அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ, அதே போல், சருமத்திற்கும் சிறந்தது. அதற்கு அந்த ஆலிவ் ஆயிலில், சிறிது சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கு முகம் பொலிவடையும்.

• சிட்ரஸ் பழத்தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது சருமத்தைப் பொலிவாக்க மிகவும் சிறந்தது. எனவே சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பளிச்சென மாறுவதை பார்க்கலாம்.

• தக்காளி போன்ற நிறம் வேண்டுமென்றால், தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் பொன்று மின்னும்.

• வெள்ளரிக்காயின் சிறிது துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

• சருமம் மந்தமாக எந்த ஒரு பொலிவுமின்றி பருக்களுடன் காணப்பட்டால், அதற்கு வெள்ளை வினிகர் ப்ளீச் சிறந்ததாக இருக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளிச்சென்று, எந்த ஒரு பிரச்சனையுமின்றி பொலிவாக்கும். அதற்கு வினிகரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்க வேண்டும். இதனால் சருமம் இயற்கையாக பக்கவிளைவுகளின்றி பொலிவாகும்.

Sunday, March 9, 2014

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்

உணவு
உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.
ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.
ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்.

Friday, March 7, 2014

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று பார்க்கலாம்.

• கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 - 20  நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

• முகப்பரு இருப்பவர்களுக்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்கள் படிப்படியாக குறைய தொடங்கும். 

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை
• வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

• சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பால், எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.

Tuesday, March 4, 2014

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...

சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழந்துவிடும். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம்.  சுகாதாரமான வாழக்கைக்கு எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருக்கலாம்.

சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், அலர்ஜி சோப், வெப்பம் ஆகியவற்றிலிருந்து மாய்ஸரைஸ் சருமத்தை பாதுகாக்கும். குளியலுக்கு பிறகுதான் ப்ரதயேக க்ரீமையோ எண்ணையையோ தடவவேண்டும்.

கை, முகத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புற சூழல்னாலும சருமம் பாதிப்படையலாம். சருமத்துக்கு பொருத்தமான டை மற்றும பெர்பீயூமை உபயோகிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். சருமம் நன்றாக இருப்பதோடு உடற்பயிற்சியினால் வயதும் தெரியாது.

உடற்பயிற்சி உடலை வலமைப்படுத்தும், சருமம் சுருக்கமடையாமல் நன்றாக இருக்கும். தட்பவெப்ப மாற்றத்தாலும் சருமம் பாதிப்படையும. சருமத்துக்கேற்ற சூடான மற்றும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். மேலும், வேகமாக எடை குறைப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாக எடை குறைப்பதால் சருமம் பாதிப்படையும்.

தேவையில்லாத டயட் மொத்த உடலையும் பாதிக்கச் செய்யும். குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதன் மூலம் சருமம் சுருக்கமடையத் தொடங்கும். சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் புரோட்டின் சத்து கட்டாயம் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகளிலும் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் கொழுப்பை சேர்க்கும்.

 சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

ஆனால் உடலுக்கு தேவையான புரோட்டின், வைட்டமின் மற்ற தாதுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது தோல்செல் பெருக்கத்துக்கு உதவும். தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கும்.

தண்ணீர் தான் நமக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேனீர், இயற்கை குளிர்பானம் மற்றும் பழச்சாறு, காய்கறிகள் சூப் குடிக்கலாம். ஆனால், காபி மற்றும் மதுபானம் குடித்தால் உடலிலுள்ள தண்ணீர் சத்தை குறைத்துவிடும்.

புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த தூக்கமின்மையும் அதிக கவலையும் சருமத்தை பாதிக்கும். முதலில் முகத்தைத்தான் பாதிக்கும்.

உடலை விரும்பி பார்த்துக்கொண்டாலே உங்களது தோற்றம் பளபளபளப்பாக இருக்கும். முகத்தை பிரஷ் ஆக வைத்திருப்பதற்கு இப்போது நவீன பேஷ்வாஸ் நிறைய வந்துள்ளன. அதிலும் லெமன், ஆப்பிள், ஸ்ட்ராபெரி உட்பட பல்வேறு பழச்சாறு வாசனையுடன் லோசன் வந்துள்ளன. அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் முகம் எந்த நேரமும் பிரஷ்சாக இருக்கும். முகத்தில் சுருக்கங்களும் வராது.

Monday, March 3, 2014

நகங்கள் எளிதில் உடைகிறதா?

முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

நகங்களைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்........

* நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

* சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.

* விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.

* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
நகங்கள் எளிதில் உடைகிறதா?

* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

* மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.

Sunday, March 2, 2014

விஸ்கி ஃபேஸ் பேக்

விஸ்கி ஒரு கிருமி நாசினி என்பது நிறைய பேருக்கு தெரியாத சேதி. விஸ்கி சருமத்தில் தழும்புகளை அகற்றவல்லது. முகத்தில் பருத்தொல்லையால் அவதிப்படுவோருக்கு விஸ்கி பேஷியல் சர்வரோக நிவாரணி. விஸ்கி ஃபேஸ் பேக் செய்ய...

முட்டை வெள்ளைக்கரு - 1 ஸ்பூன்
பால் பவுடர்
எலுமிச்சை சாறு
விஸ்கி - 1 ஸ்பூன்

இவை அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். கலவை கெட்டிப்பட்டு இருக்கும். விஸ்கி பேஷியலை அப்படியே முகத்தில் தடவுங்கள். சருமத்தில் எரிச்சல்கள் அகன்று குளிர்ச்சி பரவுவதை நீங்களே உணரலாம்.
ஃபேஸ் பேக்

சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி அழுத்த துடைத்துவிட்டு கண்ணாடியில் பாருங்ளேன். உங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாது.

அழகிற்கு அழகு சேர்க்கும் குளிர் கண்ணாடிகள்

கண்களை பாதுகாக்கவும் முகத்திற்கு அழகையும், கவர்ச்சியையும் கூட்டவும், ஆண், பெண் இரு பாலருக்கும் உதவுவது குளிர் கண்ணாடிகள். குளிர் கண்ணாடிகளை வெயில் காலங்களுக்கு மட்டுமின்றி குளிர் காலங்களிலும் வாகனப் பயணிகளின் போதும் கூட உபயோகப்படுகிறது, நம் தமிழக தட்பவெப்ப நிலைக்கு கிட்டத்தட்ட வருடத்தின் முக்கால் பங்க மாதங்களும் வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது என்தால் எப்பொழுதும் குளிர் கண்ணாடிகளின் தேவை இருக்கிறது.

குளிர் கண்ணாடிகளின் உபயோகங்கள் என்று பார்க்கையில் அது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள்குளிர்ச்சி அளிக்கிறது. சூரிய கதிர்களின் யுவி அலைகளின் தாக்கத்திலிருந்து கண்களின் அடியில் உள்ள பூந்தசைகளைச் காக்கிறது. இக்கண்ணாடிகள் முகத்தின் பாதி இடத்தை மறைப்பதால் முகத்தையும் பாதுகாக்கிறது.

குளிர் கண்ணாடிகள் பல வித நிறங்களில் கிடைக்கிறது. சில நிறங்கள்

சரியான கண்ணாடியை நமக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்க சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வட்டமான முகம் உள்ளவர்கள் நீண்ட வடிவமோ, சதுரமோ அல்லது செவ்வக வடிவத்திலோ கண்ணாடியை தேர்ந்தேடுக்கலாம். வட்டமோ, நீள்வட்டமோ கூடாது. இவர்கள் பெரிய அளவு கண்ணாடி அணியும் போது கண்ணங்களின் உருண்டை வடிவம் மறைந்து அழகாக தோற்றமளிப்பர்.

நீள் வட்ட வடிவ முகம் கொண்டவர்கள் எந்நத மாதிரி வடிவமுள்ள கண்ணாடியையும் அணியலாம். நெற்றியிலும், தாடையிலும் குறுகி, காதுப்புறம் அகன்ற டைமன்ட் வடிவமுகம் கொண்டவர்கள் நீள் வட்டம், செவ்வகம் என்று இரு வடிவங்களிலும் சிறிய அளவுள்ள கண்ணாடியை அணியலாம். கண்ணங்களுக்கு மேலே கண்ணாடி முடிவடைந்தால் தான் முகம் நீண்டு தெரியும்.

அகன்ற நெற்றியும், கூம்பிய கீழ் தாடையும் கொண்ட இதய வடிவமுகம் கொண்டவர்கள் எவியேட்டர்,ராப் காக்கின்ஸ் போன்ற ஃப்ரேம் நெற்றிப் பொட்டு வரை நீண்டிருக்கக் கூடியதை அணிவது அழகாய் இருக்கும். சதுர முகம் கொண்டவர்கள் வட்டம், நீள் வட்டம் வடிவ கண்ணாடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓரங்கள் மடிந்து சற்றே பெரிய அளவு இவர்களுக்கு அழகாய் இருக்கும். நீண்ட முகம் கொண்டவர்கள் அகலமான ஃப்ரேமும், ஓரங்கள் அலங்கரிக்கப்பட்டதாகவும், கண்ணாடியின் காதுகள் நல்ல அகலமாக இருப்பதாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதனால் முகம் அகண்டும், சிறியதாகவும் தோன்றும், வடிவத்தை விட அளவே மிகவும் முக்கியம்.

சிறிய வடிவமே இவர்களின் முக நீளத்தை குறைக்க உதவும். இன்றைக்கு பல குளிர் கண்ணாடிகள் யுவி அலைகளை தடுக்கும் வகையில் கிடைக்கிறது. 60 சதவீதத்திற்கு குறையாத யுவி பாதுகாப்பிளிக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குவது நல்லது. 

ஆடைகளின் நிறத்திற்கு பொருந்தும் படியாக அணியும் போது ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல கம்பீரத்தையும் மிடுக்கையும் அளிக்கிறது. சில நேரங்களில் ஆடை அணிகலன்களின் குறைகளையும் இக்கண்ணாடிகள் ஈடுகட்டக் கூடியவை. கண்ணாடி வாங்கும் போது ஏதோ கடைக்கு போனோம். பிடித்ததை வாங்கினோம் என்று இருக்கக்கூடாது.